19/07/2026
📢 முதல்வரின் முகவரிக்கு அனுப்பியும் நடவடிக்கை இல்லை! Chief Minister of Tamil Nadu
சென்னை மாநகராட்சி எப்போது செயல்படும்?
மண்டலம் 6-க்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள 3 முக்கிய மக்கள் பிரச்சினைகள் குறித்து 'முதல்வரின் முகவரி' (CM Cell) போர்ட்டல் மூலமாகச் சென்னை மாநகராட்சிக்குச் சமூக ஆர்வலர்கள் சார்பாகப் புகார்கள் அனுப்பப்பட்டன. ஆனால், இதுவரை எந்தவொரு முறையான பதிலோ அல்லது நிரந்தரத் தீர்வோ கிடைக்கவில்லை! ❌
📌 புகார்களின் விவரங்கள்:
1. அவல நிலையில் சாலைகள்! 🛣️
ஹைதர் கார்டன், ஈடன் கார்டன், கிருஷ்ணதாஸ் சாலை, பெரம்பூர் நெடுஞ்சாலை மற்றும் டாங்க் பண்ட் ரோடு பகுதிகளில், குடிநீர் மற்றும் கழிவுநீர்க் குழாய் பணிகளுக்காகத் தோண்டப்பட்ட சாலைகளில் வெறும் 'பேட்ச் ஒர்க்' (Patch Work) மட்டுமே செய்யப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
(புகார் எண்: 18270418)
2. அகற்றப்படாத ஆக்கிரமிப்புகள்! 🛑
பெரம்பூர் நெடுஞ்சாலையில் (தபால் நிலையம் அருகே) உள்ள ஆக்கிரமிப்புகள் இன்னும் முழுமையாக அகற்றப்படவில்லை. மாநகராட்சியின் அனுமதியோடுதான் இந்த பழைய மரக்கடைகள் மற்றும் நடைபாதை கடைகள் செயல்படுகின்றனவா?
(புகார் எண்: 17897611)
3. பள்ளிக்கு அருகில் குப்பைத் தொட்டிகள்! 🚯
வார்டு 74, கிருஷ்ணதாஸ் சாலை 4-வது தெருவில் உள்ள சென்னை பள்ளி மற்றும் நூலகத்திற்கு மிக அருகில் 4 பெரிய குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. இதனால் ஏற்படும் துர்நாற்றத்தால் பள்ளி மாணவர்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது!
(புகார் எண்: 18276165)
முதல்வரின் முகவரி திட்டத்தில் பதிவு செய்யப்படும் புகார்களுக்கு சென்னை மாநகராட்சி () மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாகக் களத்தில் இறங்கி உரிய தீர்வு காண்பார்களா ?
- சாலமன் மெமோரியல் டிரஸ்ட்