IUML Tamil Nadu State

IUML Tamil Nadu State Official Page for Indian Union Muslim league Tamil Nadu.

த.வெ.க. அரசின் முதல் நிதிநிலை அறிக்கைஎதிர்கால நம்பிக்கையை விதைக்கும் தொலைநோக்குப் பட்ஜெட்!சென்னை | ஆகஸ்ட் 5, 20262026–27...
05/08/2026

த.வெ.க. அரசின் முதல் நிதிநிலை அறிக்கை
எதிர்கால நம்பிக்கையை விதைக்கும் தொலைநோக்குப் பட்ஜெட்!
சென்னை | ஆகஸ்ட் 5, 2026
2026–27ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை இன்று தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. புதிதாகப் பொறுப்பேற்றுள்ள த.வெ.க. அரசு தனது முதல் நிதிநிலை அறிக்கையை காகிதமில்லா (Paperless) தொலைநோக்கு பட்ஜெட்டாக தாக்கல் செய்துள்ளது.
இன்று காலை 10 மணிக்கு நிதியமைச்சர் திரு. மரிய வில்சன் அவர்கள் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து, பல்வேறு முக்கியமான மக்கள் நல அறிவிப்புகளை வெளியிட்டார். சுமார் இரண்டரை மணி நேரம் நடைபெற்ற பட்ஜெட் உரை மதியம் 12.30 மணியளவில் நிறைவடைந்தது.
🔹 முக்கிய அம்சங்கள்
₹1.5 டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கு
2036ஆம் ஆண்டிற்குள் தமிழ்நாட்டை 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக உயர்த்தும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் புத்தாக்க நகரமான “அறிவகம்” அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
🎓 பள்ளிக் கல்விக்கு முக்கியத்துவம்
பள்ளிக் கல்வித்துறைக்கு ₹44,527 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கான இலவச மடிக்கணினி, மிதிவண்டி, ஹெல்மெட் உள்ளிட்ட நலத்திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்பட உள்ளன.
குறிப்பாக, “காமராஜர் காலை உணவுத் திட்டம்” 6 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
🏥 மக்கள் நல அறிவிப்புகள்
அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
திருமண உதவித் திட்டத்தில் தங்க நாணயம் மற்றும் பட்டுப்புடவை வழங்கும் திட்டமும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
🛣️ சாலை மற்றும் சமூக நலத்துறை
சாலை மற்றும் நெடுஞ்சாலை மேம்பாட்டிற்கு ₹21,524 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
சமூக நலத்துறைக்கு ₹9,818 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
🏆 இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு
இளைஞர்களின் திறன் மற்றும் வேலைவாய்ப்பை மேம்படுத்தும் வகையில் “வெற்றி திறன் பயிற்சி திட்டம்” அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறைக்கு ₹1,051 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
🚫 போதை இல்லா தமிழ்நாடு
“போதை இல்லா தமிழ்நாடு” என்ற இலக்கை நோக்கி மறுவாழ்வு பணிகளுக்காக ₹70 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
பள்ளிகளில் போதைப்பொருள் எதிர்ப்பு அமைப்புகள் உருவாக்கப்படுவதுடன், பொதுமக்கள் ரகசியமாக தகவல் தெரிவிக்கும் வகையில் 10581 உதவி எண் மற்றும் “DrugsFreeTamilNadu” செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
🏠 “வெற்றி வீடு” திட்டம்
“வெற்றி வீடு” திட்டத்தின் மூலம் கூரையில்லா தமிழ்நாடு என்ற இலக்கை நோக்கி, அனைவருக்கும் உறுதியான கான்கிரீட் வீடுகள் கட்டும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
வீட்டு அலகுத் தொகை ₹3.10 லட்சத்திலிருந்து ₹5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
முதல் ஆண்டிலேயே 70,000 வீடுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, ₹3,500 கோடி மதிப்பீட்டில் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
🏅 கண்ணியமிகு காயிதே மில்லத் பெயரில் விருது
இந்த நிதிநிலை அறிக்கையின் சிறப்பம்சங்களில் ஒன்றாக, கண்ணியமிகு காயிதே மில்லத் அவர்களின் பெயரில் விருது ஆண்டுதோறும் திருவள்ளுவர் திருநாளன்று வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
காயிதே மில்லத் அவர்களின் வரலாற்றுப் பெருமையையும், தமிழ்மொழி மீதான அவருடைய பற்றையும் போற்றும் வகையில் அமைந்துள்ள இந்த அறிவிப்பு, ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தினராலும் வரவேற்கத்தக்க ஒன்றாகும்.
☪️ சிறுபான்மையினர் நலனுக்கு முக்கியத்துவம்
சிறுபான்மையினர் நலனுக்காகவும் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.
தமிழ்நாடு ஹஜ் கமிட்டி மூலம் முதன்முறையாக ஹஜ் பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கான மானியம் ₹25,000-லிருந்து ₹35,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் மகளிர் உதவும் சங்கங்களுக்கு ₹105 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
கபர்ஸ்தான்கள் மற்றும் கல்லறைத் தோட்டங்களின் உட்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு ₹34 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறைக்கு மொத்தம் ₹1,700 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
🌟 மனமார்ந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும்!
எதிர்கால வளர்ச்சிக்கு வலுவான அடித்தளமிடும் வகையில், அனைத்து தரப்பு மக்களையும் அரவணைத்துச் செல்லும் தொலைநோக்குப் பார்வையுடன் இந்த நிதிநிலை அறிக்கை அமைந்துள்ளது.
மக்களின் எதிர்பார்ப்புகளையும், தமிழ்நாட்டின் எதிர்கால வளர்ச்சியையும் கருத்தில் கொண்டு இந்த நிதிநிலை அறிக்கையை வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சர் வெற்றி தலைவர் திரு. சி. ஜோசப் விஜய் அவர்களுக்கும், நிதியமைச்சர் திரு. மரிய வில்சன் அவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளையும், பாராட்டுகளையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
பேராசிரியர் கே. எம். காதர் மொகிதீன், Ex. MP
தேசியத் தலைவர்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்...

05/08/2026

அமைச்சர் ஷாஜகான் செய்தியாளர் சந்திப்பு.

செங்கல்பட்டு மாவட்ட ஆய்வுக் கூட்டம் மற்றும் நலத்திட்டங்கள் வழங்கும் விழா......மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜ...
04/08/2026

செங்கல்பட்டு மாவட்ட ஆய்வுக் கூட்டம் மற்றும் நலத்திட்டங்கள் வழங்கும் விழா......

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களின் அறிவுறுத்தல் அடிப்படையில் ஆய்வு கூட்டங்கள் அனைத்து துறையின் சார்பிலும் நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் செங்கல்பட்டு மாவட்ட சிறுபான்மையினர் நலத்துறை ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் வீரப்பன் ஐஏஎஸ் அவர்கள் தலைமையில் இன்று (04-08-2026) காலை நடைபெற்றது. மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சரவணன் வரவேற்புரை ஆற்றினார்.

மாண்புமிகு தமிழ்நாடு சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஏ.எம். ஷாஜஹான் அவர்கள் பங்கேற்று ஆய்வுகளை மேற்கொண்டார்.

மாண்புமிகு மனித வள மேலாண்மைத் துறை அமைச்சர் சரத்குமார் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்.

செங்கல்பட்டு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் தியாகராஜன் அவர்கள், திருப்போரூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் விஜயராஜ் அவர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

துறை அலுவலர்கள் நலத்திட்டங்கள் மற்றும் துறை சார்ந்த பணிகள் குறித்து விளக்கி கூறினர். சிறுபான்மை சமுதாயத்தை சார்ந்த பிரதிநிதிகள் தங்களது கோரிக்கைகளை எடுத்துரைத்தனர்.

தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்ட முஸ்லிம் உதவும் சங்கம் சார்பில் 400க்கும் அதிகமானோருக்கு சிறுதொழில் தொடங்கவும், கல்வி உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு நலத் திட்ட உதவிகளை மாண்புமிகு அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் வழங்கினர்.

செங்கல்பட்டு மாவட்ட முஸ்லிம் உதவும் சங்க செயலாளர் முகம்மது பெய்க் அவர்கள் நன்றியுரை ஆற்றினார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அறிக்கை தங்கத் தமிழகத்தில் பொங்குப் புகழ் பெற்று ...
04/08/2026

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர்
பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அறிக்கை

தங்கத் தமிழகத்தில் பொங்குப் புகழ் பெற்று வரும் மக்கள் முதல்வராகத் திகழ்பவர் மாண்புமிகு தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்கள் ஆவார். தமிழ்பண்பாடும் ஜனநாயக மரபும், அரசியல் நாகரிகமும் தமிழர்களுக்குக் கற்பித்திருக்கும் பாடமும் படிப்பினையும் மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்பதாகும். தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் மக்கள் முதல்வரும் நாடும் ஏடும் போற்றிவரும் மாண்புமிகு ஜோசப் விஜய் அவர்கள் மீது அநாகரிக வார்த்தைப் பிரயோகங்களைப் பயன்படுத்தி மக்கள் மனம் நோகச் செய்யும் பண்பாடற்ற முறையில் திமுகவின் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பேசியிருப்பது மிகுந்த கண்டனத்திற்குரியதாகும்.

“ஒழுக்கம் உடையவர்க்கு ஒல்லாவே தீய வழுக்கியும் வாயாற் சொலல்” என்பது ஐயன் திருவள்ளுவர் போதித்த பொன்மொழியாகும். வள்ளுவர் வழியில் நின்று நாடாண்ட முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் குடும்பத்தில் இருக்கும் உதயநிதி, உதிர்த்திருக்கும் தரமற்ற சொல் பிரயோகம் கலைஞர் அவர்களின் பெயரையும் புகழையும் கெடுக்கும் வகையில் வெளிவந்திருக்கிறது. இது மிகுந்த வேதனையும் வருத்தமும் தருகிறது.

ஜனநாயக முறையில் எதிர்க்கட்சியின் தலைவராகத் திகழ்பவர் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் ஆளும் கட்சிக்கு அறிவுரைகளைச் சுட்டிக்காட்டுவதும் சில நேரங்களில் குத்திக்காட்டுவதும் ஜனநாயக வழிமுறையாகும். தமிழகத்திற்கு அரசியல் வழிகாட்டிய முன்னோர்கள் அந்த நன்முறையைத் தொடர்ந்து பின்பற்றி மக்களின் நன்மதிப்பைப் பெற்றவர்களாகவும் திகழ்ந்திருக்கிறார்கள். அத்தகைய நன்முறையே நாட்டு மக்கள் விரும்பி ஏற்கும் உயர்ந்த பண்பாட்டு முறையாகும். தமிழகத்தில் இதுகாறும் நடைமுறையில் இருந்து வரும் இந்த ஜனநாயக பண்பாட்டு நன்முறை என்றும் தொடர்ந்து நெடித்து நிலைத்து தமிழகத்திற்கு பேரும் புகழும் சேர்க்க அனைவரும் பாடுபட வேண்டும் என்பதே எங்களின் பணிவான வேண்டுகோள் ஆகும்.

தமிழக மாண்புமிகு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் மனம் புண்படும்படி உதயநிதி ஸ்டாலின் உதிர்த்த வார்த்தைகளைத் தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்கவில்லை என்பதை மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்குத் தமிழ் மக்கள் தெரிவிக்கிறார்கள் - இவ்வாறு தனது அறிக்கையில் கூறியிருக்கிறார்.

Chief Minister of Tamil Nadu | Prof K.M.Kader Mohideen | |

பள்ளிவாசல்கள் மற்றும் தர்ஹாக்கள் பெரிய பழுதுபார்ப்பு மற்றும் சீரமைப்பு பணிகளுக்காக தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் மானியத்...
03/08/2026

பள்ளிவாசல்கள் மற்றும் தர்ஹாக்கள் பெரிய பழுதுபார்ப்பு மற்றும் சீரமைப்பு பணிகளுக்காக தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் மானியத் தொகைக்கு விண்ணப்பிக்கவும்.

தமிழ்நாடு வக்ஃபு வாரிய தலைவர் கே நவாஸ்கனி MP அறிவிப்பு.
--
கண்ணியமிக்க வக்ஃபு முத்தவல்லிகள் மற்றும் நிர்வாகிகள் கவனத்திற்கு,

வக்ஃபு நிறுவணங்களுக்கான பெரிய பழுதுபார்ப்பு மற்றும் சீரமைப்பு திட்டத்தின் கீழ் தமிழ்நாடு வக்ஃபு வாரியத்தின் மூலமாக வழங்கப்படும் தமிழ்நாடு அரசின் மானிய தொகை பெறுவதற்கான,
2026 – 2027ம் ஆண்டிற்கான விண்ணப்பங்கள் பதிவு துவங்கப்பட்டுள்ளது.

தேவையுடைய வக்ஃபு நிறுவணங்கள் தமிழ்நாடு வக்பு வாரியத்தின் tnwb.tn.gov.in என்ற இனையதளத்தில் உரிய ஆவணங்கள் மற்றும் அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விபரங்களையும் பதிவு செய்து பயனடையுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

பதிவு செய்ய கடைசி நாள் : 17.08.2026
--
கே நவாஸ்கனி MP
தலைவர்- தமிழ்நாடு வக்ஃபு வாரியம்.

2027 ஆம் ஆண்டு புனித ஹஜ் பயணத்திற்கு தமிழ்நாட்டிற்கான ஒதுக்கீட்டை உயர்த்தி வழங்கிட வேண்டும்.ஒன்றிய சிறுபான்மை நலத்துறை அ...
03/08/2026

2027 ஆம் ஆண்டு புனித ஹஜ் பயணத்திற்கு தமிழ்நாட்டிற்கான ஒதுக்கீட்டை உயர்த்தி வழங்கிட வேண்டும்.

ஒன்றிய சிறுபான்மை நலத்துறை அமைச்சரிடம் நவாஸ்கனி எம்பி கோரிக்கை.

இது குறித்து ஒன்றிய சிறுபான்மை நலன் மற்றும் நாடாளுமன்ற விவகார துறை அமைச்சர் திரு கிரண் ரிஜிஜூ அவர்களிடம் இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் கே நவாஸ்கனி எம்பி விடுத்துள்ள கோரிக்கையில் குறிப்பிட்டிருந்ததாவது.,

தமிழ்நாடு ஹஜ் கமிட்டியின் வாயிலாக, 2027 ஆம் ஆண்டு புனித ஹஜ் பயணம் மேற்கொள்ள 13,830 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. அவற்றில் 5,313 பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், 8,517 பேர் காத்திருப்பு பட்டியலில் உள்ளனர்.

எனவே, தேசிய ஒதுக்கீடு உள்ளிட்ட பிற ஒதுக்கீடுகளிலிருந்து தமிழ்நாட்டிற்கு கூடுலாக தமிழ்நாட்டிற்கு ஒதுக்கீடு வழங்கி, மேலும் பலர் ஹஜ் கடமையை நிறைவேற்றிட வழிவகை செய்திட வேண்டுமென அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ்நாடு வக்ஃபு வாரிய தலைவரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநில துணை தலைவருமான நவாஸ் கனி எம்பி ஒன்றிய சிறுபான்மை நலத்துறை அமைச்சரிடம் விடுத்துள்ள கோரிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

கடையநல்லூர் பைஜுல் அன்வார் அரபிக் கல்லூரியில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி.....தென்காசி மாவட்டம், கடையநல்லூர் பைஜுல்...
03/08/2026

கடையநல்லூர் பைஜுல் அன்வார் அரபிக் கல்லூரியில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி.....

தென்காசி மாவட்டம், கடையநல்லூர் பைஜுல் அன்வார் அரபிக் கல்லூரியில் சனிக்கிழமை (01-08-2026) இரவு சங்கை மிகு உலமா பெருமக்கள் மற்றும் ஜமாஅத் நிர்வாகிகள் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மாண்புமிகு சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஏ.எம்.ஷாஜஹான் கலந்து கொண்டார்.

பைஜுல் அன்வார் அரபிக் கல்லூரி முதல்வரும், தென்காசி மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபையின் செயலாளருமான மௌலவி முகைதீன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மாவட்ட மற்றும் வட்டார ஜமாஅத்துல் உலமா சபை நிர்வாகிகள், மாவட்ட மற்றும் வட்டார ஐக்கிய ஜமாஅத் நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணைச் செயலாளர் ஜமால் முஹம்மது இப்ராஹிம், மாநில துணைத் தலைவர் விடிஎஸ்ஆர். முகம்மது இஸ்மாயில், தென்காசி மாவட்ட தலைவர் அப்துல் அஜீஸ், மாவட்ட செயலாளர் செய்யாது பட்டாணி, மாவட்ட பொருளாளர் செய்யது மசூத், கடையநல்லூர் நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தென்காசி மாவட்டத்தில் முஸ்லிம் உதவும் சங்கம் சார்பில் 130 பெண்களுக்கு கல்வி உதவித் தொகை மற்றும் சிறு தொழில் தொடங்க உதவி....
02/08/2026

தென்காசி மாவட்டத்தில் முஸ்லிம் உதவும் சங்கம் சார்பில் 130 பெண்களுக்கு கல்வி உதவித் தொகை மற்றும் சிறு தொழில் தொடங்க உதவி.......

தென்காசி மாவட்டத்தில் சிறுபான்மை சமுதாயத்தை சேர்ந்த 130 பெண்களுக்கு கல்வி உதவித் தொகை மற்றும் சிறு தொழில் தொடங்க வழி செய்யும் வகையில் தையல் இயந்திரம், மாவு அரைக்கும் இயந்திரம் மற்றும் நிதி உதவி முஸ்லிம் உதவும் சங்கம் சார்பில் இன்று (01-08-2026) மாலை தென்காசி ஆட்சியர் அலுவலகத்தில் அளிக்கப்பட்டது.

மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு தமிழ்நாடு சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஏ.எம். ஷாஜஹான் அவர்கள், மாண்புமிகு தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் ராஜீவ் அவர்கள், கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் ராஜேந்திரன் அவர்கள் உள்ளிட்டோர் பயனாளிகளுக்கு அரசு சார்பில் உதவிகளை வழங்கினர்.

வஃபாத் அறிவிப்புஇந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர்கே.எம்.காதர் மொகிதீன் அவருடைய மூத்த மகனார்மருத்துவர...
02/08/2026

வஃபாத் அறிவிப்பு
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர்
கே.எம்.காதர் மொகிதீன் அவருடைய மூத்த மகனார்
மருத்துவர் கே.எம்.கே. கலீலூர் ரஹ்மான்
இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக், தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அவர்களுடைய மூத்த மகளார். கே.எம்.கே.ஹபீபுர் ரஹ்மான். கே.எம்.கே.பைஜீர் ராஜ்மான் ஆகியோரின் மூத்த சகோதரர், மருத்துவர் கே.எம். கே.கலீலுர் ரஹ்மான் அவர்கள் (01.08.2026 ) சனிக்கிழமையன்று உடல் நலக் குறைவு காரணமாக இறைவனடி சேர்ந்தார் என்பதனை ஆழ்ந்த வருத்தத்தோடு தெரிவித்துக் கொள்கிறோம்.

அன்னாரது ஜனாஸா இன்று
02.08.2026 ஞாயிற்றுக்கிழமை மாலை திருச்சி, காஜாநகர், அன்வாருல் உலூம் அரபிக் கல்லூரியில் அஸ்ர் தொழுகைக்கு பின் ஜனாஸா தொழுகையும் அதனை தொடர்ந்து காஜாமலை அடிவாரம் அருகில் உள்ள கபர்ஸ்தானில் நல்லடக்கம் நடைபெறும் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
மௌத் இருப்பிடம் :
நெ.16, காயிதே மில்லத் தெரு, காஜா நகர், திருச்சி -20.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் வஃபாத் அறிவிப்புஇந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் ...
01/08/2026

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் வஃபாத் அறிவிப்பு
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அவருடைய மூத்த மகனார்
மருத்துவர் கே.எம்.கே.கலீலூர் ரஹ்மான்
அவர்கள் சற்று முன் உடல்நலவு குறைவு காரணமாக வஃபாத்தனார்கள் என்பதனை ஆழ்ந்த வருத்தத்தோடு தெரிவித்துக் கொள்கிறோம்.
ஜனாஸா நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும்.

Address

Indian Union Muslim League
Chennai
600001

Alerts

Be the first to know and let us send you an email when IUML Tamil Nadu State posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to IUML Tamil Nadu State:

Shortcuts

Share