28/07/2026
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,
தென் சென்னை மாவட்டம் சார்பாக
26.07.2026 அன்று
அண்ணல் நபியே அழகிய முன்மாதிரி பத்து மாத செயல்திட்டத்தின்
ஜூலை மாத செயல்திட்டமான
பெண்ணுரிமை போற்றிய பெருமானார் செயல்திட்டத்தை முன்னிட்டு மாபெரும் பெண்களுக்கான கருத்தரங்கம்
மற்றும் அல்புஷ்ரா பெண்கள் இஸ்லாமிய கல்வியகத்தின் நான்காம் ஆண்டு பட்டமளிப்பு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
இதில்
இஸ்லாம் கூறும் பெண்ணியம் என்ற தலைப்பின் கீழ் TNTJ மேலாண்மை குழு தலைவர் சகோ. M.ஷம்சுல்லுஹா ரஹ்மானி அவர்கள் உரையாற்றினார்கள்.
இந்த நிகழ்ச்சியை தென் சென்னை மாவட்ட தலைவர் சகோ. சாதிக் அலி அவர்கள் தலைமை தாங்கி துவங்கி வைத்தார்கள்.
இந்நிகழ்ச்சியின் ஒரு அம்சமாக மதியம் 2:30 மணி முதல் மாலை 4:30 மணி வரை பல்வேறு தலைப்புகளின் கீழ் மார்க்க விளக்க கண்காட்சி நடைபெற்றது. இந்த கண்காட்சிகளை மாவட்ட பொருளாளர் சகோ. நூர் முகமது அவர்கள் துவங்கி வைத்தார்கள்.
அதைத்தொடர்ந்து, அல்புஷ்ரா பெண்கள் இஸ்லாமிய கல்வியக்கத்தில் நான்காம் ஆண்டு பட்டம் பெற்ற சகோதரி. ஆலிமா ஆசியா (D.A.I.S) அவர்கள் பெண்களும், இறை வணக்கமும் என்ற தலைப்பின் கீழ் உரை நிகழ்த்தினார்கள்.
மேலும், பெண்கள் வழி தவறதற்கு பெரிதும் காரணம் சமூகமா? குடும்பமா? என்ற தலைப்பில் சிறப்பு பட்டிமன்றம் நடைபெற்றது.
இதை அடுத்து, அல் புஷ்ரா பெண்கள் இஸ்லாமிய கல்வியகத்தின் நான்காம் ஆண்டு பட்டமளிப்பு நிகழ்ச்சியை மாவட்ட துணைத் தலைவர் மற்றும் அல்புஷ்ரா கல்வியாகத்தின் முதல்வர் சகோ. முகமது ஃபயாஸ் அவர்கள் தொகுத்து வழங்கினார்கள். இதில், ஆலிமாக்களுக்கு பட்டங்களும், விருதுகளும் வழங்கப்பட்டது.
மேலும், கிளைகள் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கண்காட்சிகளை நடுவராக கலந்து கொண்ட சகோ. தவ்ஹீத் MISc அவர்கள் அனைத்து கிளைகளின் அரங்கங்களையும் பார்வையிட்டு பல்வேறு பிரிவுகளின் கீழ் மதிப்பெண்களும் வழங்கப்பட்டு அதில் முதல் மூன்று இடங்களை பிடித்த கிளைகளுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.
இறுதியாக, நன்றியுரை மாவட்ட துணை செயலாளர் சகோ. முகமது சர்பராஸ் அவர்கள் பேசினார்கள்.
இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பெண்கள், ஆண்கள், குழந்தைகள், தாவா குழு உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
நிகழ்ச்சி மிகச்சிறப்பாக நடக்க அருள் புரிந்த அல்லாஹ்விற்கே எல்லா புகழும்...!
அல்ஹம்துலில்லாஹ்...