தமிழ்த்தேச மக்கள் முன்னணி ThamizhNational People's Front

  • Home
  • India
  • Chennai
  • தமிழ்த்தேச மக்கள் முன்னணி ThamizhNational People's Front

தமிழ்த்தேச மக்கள் முன்னணி  ThamizhNational People's Front தமிழ்த்தேச மக்கள் முன்னணி

ஊடகச் செய்திமழைக்கால கூட்டத் தொடரில் தொகுதி மறுசீரமைப்பு சட்டத்தை நிறைவேற்ற மோடி அரசு திட்டம்! எதிர்க்கட்சிகள் உறுதியுடன...
17/07/2026

ஊடகச் செய்தி

மழைக்கால கூட்டத் தொடரில் தொகுதி மறுசீரமைப்பு சட்டத்தை நிறைவேற்ற மோடி அரசு திட்டம்! எதிர்க்கட்சிகள் உறுதியுடன் நின்று முறியடிக்க வேண்டும் !
கூட்டறிக்கை

ஜூலை 20 ஆம் நாள் நாடாளுமன்றத்தில் மழைக்கால கூட்டத் தொடர் தொடங்க இருக்கிறது. இக்கூட்டத் தொடரில் தொகுதி மறுசீரமைப்பு, பொது சிவில் சட்டம், ஒரே தேசம், ஒரே தேர்தல் ஆகிய சட்டங்களை நிறைவேற்றும் நோக்கத்தில் மோடி அரசு செயல்பட்டு வருகிறது.

கடந்த ஏப்ரல் 17 ஆம் நாள் மோடி அரசு முன்வைத்த தொகுதி மறுசீரமைப்புக்கான சட்ட வரைவு மக்களவையில் தோற்கடிக்கப்பட்டது. அன்று மக்களவையில் வாக்களித்த 528 உறுப்பினர்களில் 298 பேர் ஆதரித்தும் 230 பேர் எதிர்த்தும் வாக்களித்தனர். அதை நிறைவேற்றுவதற்கு தேவையான 3 இல் 2 பெரும்பான்மை இல்லாத காரணத்தால் அதை நிறைவேற்ற முடியவில்லை.

இந்நிலையில் எதிர்க்கட்சி உறுப்பினர்களை மிரட்டியும் ஆசை காட்டியும் தன் பக்கம் வளைக்கும் வேளையில் தீவிரம் காட்டி வருகிறது பாசிச மோடி அரசு.

மாநிலங்களவையில் இன்றளவில் உள்ள 242 இடங்களில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ( தேஜகூ ) 141 இடங்கள் இருக்கின்றன. நியமனம் செய்யப்பட்ட, தனி நபர் உறுப்பினர்கள் 10 பேரை கணக்கில் கொண்டால் 151 என்ற எண்ணிக்கையை தேஜகூ தொட்டுவிடும்.

மாநிலங்களவையில் மொத்த எண்ணிக்கை 245

3 இல் 2 பெரும்பான்மைக்கு தேவையான எண்ணிக்கை 164

தே ஜ கூ 151

பிஜூ ஜனதாதளம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரசு – 9

மேற்கு வங்கத்தில் உள்ள 3 காலி இடங்கள் நிரப்பப்பட்டால் அதுவும் தேஜ கூட்டணிக்கே போகும் – 163

மாநிலங்களவையில் 3 ல் 2 பெரும்பான்மை பெறுவதற்கு கூடுதலாக இன்னும் ஒருவர் வாக்களித்தால் போதுமானது.

மோடி அரசு திரினாமுல் காங்கிரசு, சிவசேனா உள்ளிட்ட கட்சிகளை உடைத்துக் கொண்டிருக்கும் நிலையில் அவர்களில் யாராவது ஒருவரை ஆதரிக்க வைப்பது கடினமானது இல்லை.

மக்களவையில் நிலை என்ன?

தேஜகூ – 293 வாக்குகள்.

திரினாமுல் காங்கிரசுக்கு இருந்த 29 எம்.பிக்களில் 20 பேர் அக்கட்சியில் இருந்து வெளியேறி Nationalist Citizen Party of Inida ( NCPI ) கட்சியில் இணைவதாக தெரிவித்துவிட்டனர். உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவ சேனாவில் இருந்து வெளியேறியவ எம்.பி.க்களில் 6 பேர் தேஜகூ வை ஆதரிப்பதாக அறிவித்துவிட்டனர். . இப்போது சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரசு தேஜ கூட்டணியில் இணையப்போவதாக செய்திகள் வருகின்றன. இதன் மூலம் கூடுதல் எட்டு எம்.பி. களின் ஆதரவு கிடைக்கும். இவற்றின் மூலம் 327 இடங்கள் ( 293 + 20 + 6 + 8 ) தேஜகூ க்கு கிடைத்துவிடும் 3 இல் 2 பெரும்பான்மையை எட்டுவதற்கு இன்னும் 35 வாக்குகள் தேவை. ஒ.எஸ்.ஆர். காங்கிரசு, பிஜு ஜனதா தளம் போன்ற கட்சிகள் தேஜகூ வில் இல்லாவிட்டாலும் முக்கிய திருத்தங்களின் போது அவற்றை ஆதரித்தே வந்துள்ளன.

இத்தகைய நிலையில் 22 மக்களவை உறுப்பினர்களை வைத்திருக்கும் திமுக, வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமலோ அல்லது தொகுதி மறுசீரமைப்பு சட்டத்தை ஆதரித்து வாக்களித்தோ அச்சட்டத்தை வெற்றி பெறச் செய்யக்கூடும் என்று ஊடகங்களிலும் இந்துத்துவ வட்டாரங்களிலும் பேசப்படுகிறது.

மேலே குறிப்பிட்ட சட்டங்கள் இயற்றப்பட்டு அவை அரசமைப்புச் சட்டத்தின் பகுதியாக மாறும் நிலையில் அதை இந்துராஷ்டிரத்திற்கான அரசமைப்புச் சட்டமாகவே கருத முடியும். எனவே இச்சட்டங்களை இயற்றவோ அல்லது செயல்படுத்தவோ விடக் கூடாது.

மக்களவையிலும் மாநிலங்களவையிலும் இடம்பெற்றுள்ள திமுக மட்டுமின்றி, தேஜகூ க்கு வெளியே இருக்கும் காங்கிரசு, சிபிஐ, சிபிஐ ( எம்), விசிக , ஐ.யு.எம்.எல்., மதிமுக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளிலும் தேசிய ஜனநாயக கூட்டணியில் பங்குபெற்றுள்ள அதிமுகவின் தமிழ்நாட்டை சேர்ந்த உறுப்பினர்கள் வாக்கெடுப்பின் போது கட்டாயம் கலந்துகொள்ள வேண்டும். சட்டத் திருத்தங்களை எதிர்த்து வாக்களிக்க வேண்டும்.

இதற்கு மாறாக வாக்கெடுப்பு நடக்கும் நாளில் அவைக்கு செல்லாமல் விடுப்பு எடுப்பது, வாக்களிப்பில் கலந்துகொள்ளாமல் அவையில் இருந்து வெளியேறுவது ஆகிய நகர்வுகளை செய்தால் அது மோடி அரசின் சட்டத் திருத்த முயற்சிகளுக்கு துணை நிற்பதே ஆகும்.

மாநிலத்தில் ஆட்சியில் இருப்பதை மட்டுமே முதன்மை பிரச்சனையாக மாற்றிக் கொண்டு தவெக எதிர் திமுக என்ற இரு முனை அரசியலில் தமிழ்நாடு மூழ்கடிக்கப்பட்டு இருக்கிறது. தேர்தல் முடிவுகள் வெளிவந்த நாளில் இருந்து பாசிச பாசக எதிர்ப்பு என்பது முதன்மை அற்றதாக மாறிப் போயுள்ளது. இந்த போக்கு நீடித்தால் பாசிச பாசக வின் தாக்குதலை எதிர்த்து நின்று முறியடிப்பதற்கான போராட்டம் இல்லாமலே போய்விடும்.

வரவிருக்கும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் மோடி அரசு நடத்தவுள்ள தாக்குதல்களை முறியடிப்பதற்கு எதிர்க்கட்சிகள் அணியமாக வேண்டும். குறிப்பாக, தொகுதி மறுசீரமைப்பு, பொதுசிவில் சட்டம், ஒரே தேசம், ஒரே தேர்தல் ஆகிய சட்டங்களை இயற்றத் துடிக்கும் மோடி அரசின் திட்டத்தை எதிர்க்கட்சிகள் உறுதியுடன் நின்று முறியடிக்க வேண்டும்

இப்படிக்கு,

தியாகு,
பொதுச்செயலாளர்,
தமிழ்த்தேசிய விடுதலை இயக்கம்

செந்தில்,
ஒருங்கிணைப்பாளர்,
தமிழ்த்தேச மக்கள் முன்னணி

மனோகரன்,
மாநில செயலாளர்,
சிபிஐ (எம்-எல்) ரெட் ஸ்டார்

மணி,
மாநில அமைப்பாளர்,
பாட்டாளி வர்க்க சமரன் அணி
தொடர்புக்கு: 9941931499

23/06/2026
19/06/2026
01/06/2026

Enjoy the videos and music you love, upload original content, and share it all with friends, family, and the world on YouTube.

அமர்நாத் ராமகிருஷ்ணன் அவர்களது கீழடி அகழாய்வு அறிக்கையை உடனே வெளியிடுக!                     கூட்டறிக்கை                 ...
29/05/2026

அமர்நாத் ராமகிருஷ்ணன் அவர்களது கீழடி அகழாய்வு அறிக்கையை உடனே வெளியிடுக!

கூட்டறிக்கை
(29/05/2026)

2014 - 2016 காலகட்டத்தில் இந்தியத் தொல்லியல் ஆய்வகம் ( Archeological Survey of India - ASI ) சார்பாகக் கீழடி அகழாய்வு, தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் அவர்களால் மேற்கொள்ளப்பட்டது. கீழடியில் கிடைக்கப் பெற்ற பொருட்கள் மற்றும் தொல்லியல் சான்றுகளின் அடிப்படையில் 982 பக்கங்கள் கொண்ட அறிக்கையினை அமர்நாத் ராமகிருஷ்ணன் அவர்கள் இந்தியத் தொல்லியல் ஆய்வகத்திற்கு 2023 ஜனவரி மாதத்தில் முறைப்படி சமர்ப்பித்துள்ளார். அறிவியல் அடிப்படையில் மேற்கொண்ட ஆய்வின் முடிவில் கீழடியின் காலம் கி.மு.800 - 500 வரை என்பதாக அவர் வரையறுத்துள்ளார்.

ஆனால், போதிய உண்மையான காரணங்களோ, மதிப்புயர் நியாயங்களோ இன்றி அமர்நாத் அவர்கள் சமர்ப்பித்த ஆய்வறிக்கையினை மறுத்து,
அவரின் ஆய்வறிக்கையை
மேம்படுத்தி அனுப்புமாறு இந்தியத் தொல்லியல் ஆய்வகம் அவருக்கே திருப்பி அனுப்பியது. இந்த அறிக்கையை அனுப்பிய இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் உறுப்பினர் குழுவில் உள்ள எவரும் கீழடிக்கு வந்ததே இல்லை என்பது குறிப்பிடத் தக்கது. மேலும் இந்தியத் தொல்லியல் ஆய்வகம் தனக்கு அனுப்பிய அறிக்கை செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்ப அடிப்படையில் உருவாக்கப் பட்டதாக அமர்நாத் அவர்கள் தெளிவு படுத்துகிறார்.

பல்வேறு தரவுகளின் அடிப்படையில் கீழடியின் தொன்மையைக் கணித்த அமர்நாத் அவர்களின் காலத்தை இந்தியத் தொல்லியல் ஆய்வகம் ஏற்கத் தயாராக இல்லை. அதை மாற்ற வேண்டும் என அது வலியுறுத்துகிறது. இதுதான் இச்சிக்கலின் சாரம்.

ஆனால், எவ்விதப் புறச் செல்வாக்கிற்கும் உள்ளாகாமல், உண்மையான மற்றும் சரியான அறிக்கையைக் கடமை உணர்வோடும் மனச்சாட்சியோடும் சமர்ப்பித்ததாகக் கூறி, தனது ஆய்வறிக்கையை மாற்றி அமைக்கும் பேச்சுக்கே இடமில்லை என அமர்நாத் அவர்கள் திட்டவட்டமாக எழுத்து வடிவில் தெரிவித்து விட்டார். ஆனால் இந்தியத் தொல்லியல் ஆய்வகம் அறிக்கையைத் திருத்துமாறு தொடர்ந்து வலியுறுத்தி வருவதை ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

துறைவாரியான கடிதப் போக்குவரத்தோடு இந்த முக்கியமான செய்தி முடங்கி விடுவது ஏற்புடையதல்ல! அமர்நாத் அவர்கள் தனது ஆய்வறிக்கையைச் சமர்ப்பித்து மூன்று ஆண்டுகளாகியும் கீழடி ஆய்வறிக்கையை வெளியிடாமல் இருப்பது பெரும் ஐயத்தை உண்டாக்குகிறது. இதனால் உண்மை நிலை என்ன என்பதை அறிய முடியாமலும் இருக்கிறது.
எனவே இத்தகைய குழப்பத்தைப் போக்கும் வகையில், அமர்நாத் ராமகிருஷ்ணன் அவர்களின் கீழடி ஆய்வறிக்கையின் மூலப்பிரதியை இந்தியத் தொல்லியல் ஆய்வகம் உடனடியாகப் பொதுவெளியில் வெளியிட்டு, அனைவரின் ஐயத்தையும் போக்க வேண்டும்.

மேலும், அமர்நாத் ராமகிருஷ்ணன் அவர்களின் நிலைப்பாட்டை ஆதரித்தும், இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் தொல்லியல் அறம், விதிகள், விழுமியங்களுக்கு எதிராகத் தமிழர் நாகரிகத்தின் தொன்மையை ஏற்க மனமின்றிச் செயல்படும் போக்கினைக் கண்டித்தும்
முந்தைய மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான தமிழ்நாடு அரசு, தனது நிலைப்பாட்டை வெளிப்படையாக அறிவித்திருந்தது.

தமிழகத்தின் தொன்மையை அறிவியல் வழியில் நிறுவும் அமர்நாத் ராமகிருஷ்ணன் அவர்களின் கீழடி அகழாய்வு அறிக்கையை வெளியிட இன்றைய மாண்புமிகு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களின் அரசும் உரிய அனைத்து வழிகளிலும் முன்னெடுப்புகளை மேற்கொள்ள வேண்டுகிறோம்.

கூட்டறிக்கை ஒருங்கிணைப்பு --

கண. குறிஞ்சி
(தமிழ்நாடு மக்கள் உரிமைப் பேரவை)

############xx


பழ. நெடுமாறன்
(உலகத் தமிழர் பேரவை)

அரி.பரந்தாமன்
(மேனாள் உயர்நீதிமன்ற நீதிபதி)

எஸ்.வி.ராஜதுரை
( மார்க்சிய-பெரியாரிய அறிஞர்)

ச.தமிழ்ச்செல்வன்
(சாகித்திய அகாதமி விருதாளர்)

தேவி பாரதி
(சாகித்திய அகாதமி விருதாளர்)

ஆர்.பாலகிருஷ்ணன்
(சிந்து வெளி ஆய்வாளர்)

மதுக்கூர் இராமலிங்கம்
(தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்)

டிராட்ஸ்கி மருது
(ஓவியர்)

களப்பிரன்
(தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்)

ப.பா.ரமணி
(தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்)

கோவன்
(மக்கள் கலை இலக்கியக் கழகம்)

பிரளயன்
(நாடகவியலாளர்)

ஆழி செந்தில்நாதன்
(மொழிச்சமன்மைக்கும் உரிமைகளுக்குமான பரப்பியக்கம்)

சாவித்திரி கண்ணன்
( பத்திரிகையாளர்)

அய்யநாதன்
(ஊடகவியலாளர்)

கொளத்தூர் மணி
(திராவிடர் விடுதலைக் கழகம்)

கு.இராமகிருஷ்ணன்
(தந்தை பெரியார் திராவிடர்கழகம்)

தோழர் தியாகு
(தமிழ்த்தேசிய விடுதலை இயக்கம்)

ப.பா. மோகன்
(மூத்த வழக்கறிஞர்)

பொழிலன்
(தமிழக மக்கள் முன்னணி)

வாலாசா வல்லவன்
(மார்க்சியப் பெரியாரியப்
பொதுவுடைமைக் கட்சி)

திருமுருகன் காந்தி
(மே 17 இயக்கம்)

கார்முகில்
(தமிழ்நாடு மார்க்சிய லெனினியக் கட்சி)

கே.பாலகிருஷ்ணன்
(ஐக்கிய விவசாயிகள் முன்னணி - SKM)

ஓவியா
(புதிய குரல்)

த.செயராமன்
(தமிழ்மண் தன்னுரிமை இயக்கம்)

ச.பாலமுருகன்
(மக்கள் சிவில் உரிமைக் கழகம்)

பாலன்
(தமிழ்நாடு கம்யூனிஸ்டுக் கட்சி (மா.லெ.மா.)

மீ.த.பாண்டியன்
(தமிழக மக்கள் பண்பாட்டுக் கழகம்)

சுப.உதயகுமாரன்
(பச்சைத் தமிழகம்)

வீ.அரசு
(பேராசிரியர்)

பேரா. இரா.முரளி
(மக்கள் கல்விக் கூட்டியக்கம்)

பேரா.பிரபா கல்விமணி
(தாய்த் தமிழ்ப்பள்ளி, திண்டிவனம்)

ப.சிவக்குமார்
(பேராசிரியர்)

க.பஞ்சாங்கம்
(பேராசிரியர்)

அ.மங்கை
(பேராசிரியர்)

நா.மணி
(பேராசிரியர்).

கோச்சடை
(பேராசிரியர்)

பிரின்சு கஜேந்திர பாபு
(பொதுக் கல்விக்கான மாநில
மேடை)

சு.மூர்த்தி
(கல்வி மேம்பாட்டுக் குழு)

ரெங்கையா முருகன்
(வ.உ.சி. அறக்கட்டளை)

திருப்பூர் சிவகாமி
(தமிழ்நாடு அறிவியல் மன்றம்)

அறிவுமதி
(கவிஞர்)

இந்திரன்
(எழுத்தாளர்)

ஆதவன் தீட்சண்யா
(எழுத்தாளர்)

பாமரன்
(எழுத்தாளர்)

சுப்ரபாரதி மணியன்
(எழுத்தாளர்)

அழகிய பெரியவன்
(எழுத்தாளர்)

ஜீவசுந்தரி
(எழுத்தாளர்)

அப்பண்ணசாமி
(எழுத்தாளர்)

குட்டி ரேவதி
(எழுத்தாளர்)

கவின்மலர்
(எழுத்தாளர்)

சமந்தா
(எழுத்தாளர்)

ஜமாலன்
(எழுத்தாளர்)

நக்கீரன்
(சூழலியல் எழுத்தாளர்)

மோகனரங்கன்
(கவிஞர்)

கவிதா பாரதி
(திரைக்கலைஞர்)

மு.சுந்தரன்
(ஓவியர்)

வே.மு. பொதியவெற்பன்
(தமிழியல் ஆய்வறிஞர்)

பொ.வேல்சாமி
(ஆய்வறிஞர்)

தமிழ் காமராசன்
( ஆய்வாளர்)

ஆர்.ஆர். சீனிவாசன்
(ஆவணப்பட இயக்குநர்)

வி.முத்தையா
(காக்கைச் சிறகினிலே இதழாசிரியர்)

க.சந்திரசேகரன்
(வையம் இதழாசிரியர்)

மா.பூங்குன்றன்
(தென்மொழி இதழாசிரியர்)

தங்க .செங்கதிர்
(மானுடம் இதழாசிரியர்)

வாஞ்சிநாதன்
(வழக்கறிஞர்)

பானுமதி
(வழக்கறிஞர்)

ஆத்மநாதன்
(வழக்கறிஞர்)

தமிழ் இராசேந்திரன்
(வழக்கறிஞர்)

பாவேந்தன்
(வழக்கறிஞர்)

விஜய் தரணிஸ்
(வழக்கறிஞர்)

கி.வே. பொன்னையன்
(தற்சார்பு விவசாயிகள் சங்கம்)

செந்தில்
(இளந்தமிழகம்)

நிலவன்
(நீரோடை)

அருள்தாஸ்
(மக்கள் இயக்கங்களின் தேசியக் கூட்டணி - NAPM)

சங்கரலிங்கம்
(சுயாட்சி இயக்கம்)

அரசெழிலன்
(நாளை விடியும் இதழ்)

_____________

நக்சல்பாரிக் கம்யூனிஸ்ட் போராளி பேராசிரியர் தோழர் மு. திருமாவளவன் மறைந்தார். கடந்த  35 ஆண்டுகளுக்கும் மேலாக தோழமையாக இயங...
28/05/2026

நக்சல்பாரிக் கம்யூனிஸ்ட் போராளி பேராசிரியர் தோழர்
மு. திருமாவளவன் மறைந்தார்.

கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக தோழமையாக இயங்கினோம்...எங்கள் தமிழக மக்கள் பண்பாட்டுக் கழகம் செயல்பாடுகளுக்கு தொடர்ந்து உற்சாகமளித்தவர்...

இகக (மா-லெ) விடுதலை அமைப்பில் உட்கட்சிப் போராட்டம் எங்களை இணைத்தது. 2007 மக்கள் விடுதலை உருவாக்கத்தில் எங்களோடு உற்சாகமாக, 2014 கட்சிகள் இணைப்பில் தோழர் அண்ணாதுரை அவர்களுடன் மகிழ்ச்சியடைந்த மூத்தவர்...சென்னை சுகாதாரப் பணியாளர்கள் போராட்டக் களத்தில் மகள் ஆ.பா.வானவில் கலைப் பங்களிப்பைப் பார்த்து என்னோடு மகிழ்ச்சியாகப் பகிர்ந்து கொண்டார்...

மூத்த பத்திரிகையாளர் தோழர் இரா.ஜவஹர் அவர்களின் திருவான்மியூர் வீட்டில் அவ்வப்போது சந்திப்போம்..இன்று அவரது நினைவு நாள்!

தமிழ்நாடு அரசுக் கல்லூரி ஆசிரியர் கழக பொறுப்பாளராக, மார்க்சிய லெனினிய (விடுதலை) கட்சியில் பேராசிரியர் தோழர் ப.சிவக்குமார் அவர்களோடு இயங்கியவர்...

மார்க்சிய லெனினிய (மக்கள் விடுதலை) அமைப்பில் இறுதி வரை இயங்கிய தோழர்...

அவர் தன் உடலை ஓமந்தூரார் மருத்துவ மனைக்குக் கொடையாக அளிக்க விண்ணப்பித்திருந்தார்...

நாளை 29-05-2026 காலை 9 மணி அளவில் உடற்கொடை.

முகவரி: Bhaggyam Aura Mills
Flat No: A 401 (A Block)
New No: 3/178, Old Mahabalipuram Road,
Muttukuppam, Okkiyam Thoraipakkam,
Chennai - 600096.

தோழருக்கு எமது செவ்வணக்கம்!
மீ.த.பாண்டியன் - MDPandian
தலைவர் மற்றும் தோழர்கள்
தமிழக மக்கள் பண்பாட்டுக் கழகம்

Address

எண் 6, 70 அடிச் சாலை, சுப்புத் தோட்டம், கண்ணம்மா பேட்டை
Chennai

Alerts

Be the first to know and let us send you an email when தமிழ்த்தேச மக்கள் முன்னணி ThamizhNational People's Front posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to தமிழ்த்தேச மக்கள் முன்னணி ThamizhNational People's Front:

Shortcuts

Share