04/08/2026
*த.வெ.க. ரீல்ஸ் அரசின் எதேச்சதிகார போக்கு, உதயநிதி கைது*
முக்குலத்தோர் புலிப்படைத்தலைவர் *சேது.கருணாஸ்* கண்ட அறிக்கை
=======================================================================
திமுக சார்பில் 3.8.2026 அன்று தஞ்சையில் நடைபெற்ற காவிரி ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகளின் நலன் காக்கும் கருத்துகளை ஆக்கப்பூர்வமாக ஆர்ப்பாட்டத்தி முன் வைத்தார் சட்டமன்ற எதிர்க்கட்சித்தலைவர் திரு உதய நிதி ஸ்டாலின் அவர்கள்!
நாளை 5.8.2026 சட்டசபை நடைபெறவிருக்கும் சூழலில் இந்த ஆட்சியின் ரீல்ஸ் தகிடுத்தித்தங்களை உதயநிதி சட்டமன்றத்தில் அம்பலப்படுத்திவிடுவார் என்ற அச்சத்தில் பொய்வழக்குப் புனைந்து கைது செய்திருக்கிறது த.வெ.க. ரீல்ஸ் மாடல் அரசு. இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
ஆர்ப்பாட்டத்தில் உதயநிதி அவர்கள் பேசிய பேச்சில் எந்தவிதமான ரெட்டை அர்த்த பேச்சோ, அல்லது உள்நோக்கம் நிறைந்த அவதூறோ இல்லை. ஆனால் அதை வெட்டி ஒட்டி ரீல்ஸ் பரப்பி பொய்வழக்காக புனைந்துள்ளனர்.
திமுக ஆட்சியில் காவிரி உரிமை நிலைநாட்டப்பட்டது. இன்றைய ஆட்சியில் காவிரி கால் ஒடிந்து கிடக்கிறது. இந்த கையாகத தனத்தை சுட்டிக் காட்டினால் கைது என்றால், மக்கள் உரிமைக்காக முதல்வர்தான் வாய்திறக்க மறுக்கிறார். நாங்களும் வாயை மூடிக்கொண்டு இருக்கவேண்டுமா? வாய்திறந்து மக்கள் உணர்வுகளை வெளிப்படுத்தினால் கைது நடவடிக்கையா?
பேசுவதற்கெல்லாம் கைது என்பது கருத்தியல் உரிமை மீது கைவைக்கும் எதேச்சதிகாரப் போக்கு. தொடர்ந்து இது போன்ற கைது நடவடிக்கைகளில் ஈடுபடும் த.வெ.க. அரசை நீதிமன்றங்கள் பல முறை எச்சரித்திருக்கிறது. த.வெ.க. அரசு நீதிமுன்றங்கள் முன் அசிங்கப்பட்டிருக்கிறது.
இன்று உதயநிதி கைதிலும் த.வெ.க. அரசு மக்கள் முன் வெட்கி தலைகுனியபோகிறது. அவர் அவதூறாகப் பேசினார் என்று கருதினால், வழக்குப்போடுங்கள், அதை சட்டபடி தி.மு.க. எதிர்கொள்ளும். எதற்கெடுத்தாலும் கைது என்றால் இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
இங்ஙனம்
*சேது. கருணாஸ் BA., Ex.M.L.A.,*
தலைவர், முக்குலத்தோர் புலிப்படை
Sethu Karunaas
முக்குலத்தோர் புலிப்படை
MPK ITWing