CITU Tamilnadu

CITU Tamilnadu Official page of Centre of Indian Trade Unions - TamilNadu State Committee
(1)

06/08/2026
05/08/2026

EXCLUSIVE | TVKBudget2026 | DMK | TVK | CMVijay | TVK அரசின் முதல் ...

பெரம்பலூர் எம்ஆர்எப் 32 நாள் வேலை நிறுத்தம் வெற்றிகரமாக முடிவுக்கு வந்தது தொழிலாளர்கள் வென்றார்கள் ---------------------...
04/08/2026

பெரம்பலூர் எம்ஆர்எப் 32 நாள் வேலை நிறுத்தம் வெற்றிகரமாக முடிவுக்கு வந்தது
தொழிலாளர்கள் வென்றார்கள்
--------------------------_----------
பெரம்பலூர் எம்ஆர்எப் தொழிற்சாலையில் ஊதிய உயர்வு பொது கோரிக்கைகளை வலியுறுத்தி 3-7- 2026 முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்

733 நிரந்தர தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கெடுத்தனர்

34 மாதமாக ஊதிய உயர்வு கிடைக்கவில்லை 30க்கும் மேற்பட்ட பேச்சு வார்த்தைகள் நடந்தது சுமுக ஏற்படாததால் முறிவறிக்கை பதிவு செய்து அரசுக்கு அனுப்பியது தொழிலாளர் துறை

நீதிமன்றத்தில் பேசிக் கொள்ளலாம் என்று நிர்வாகமும் ஒருதலைபட்சமாக நடந்து கொண்டது

தொழிற்சங்கம் இதை ஏற்றுக் கொள்ளவில்லை
பேச்சுவார்த்தைக்கு சட்டத்தில் இடமில்லை என்று சொன்னாலும் தொழிலாளர்களுக்கு பணரீதியான நிவாரணங்கள் இல்லாமல் வேலை நிறுத்தத்தை திரும்ப பெற முடியாது என்று சங்கம் முடிவெடுத்து வேலை நிறுத்தத்தை தொடர்ந்தது

போராட்டங்கள் தீவிரமானது
வேலை நிறுத்த கோரிக்கை பேச்சுவார்த்தை நிலுவையில் இருக்கும் போது அதன் மீது ஒரு இடைக்கால தீர்வை ஏற்படுத்த முடியும் என்று புதிய ஆலோசனையை சிஐடி யூ முன் வைத்தது

தமிழக அரசு சிஐடியூ ஆலோசனைகளை ஏற்று மீண்டும் பேச்சு வார்த்தைக்கு ஏற்பாடு செய்தது

3-8- 2026 அன்று சென்னை தலைமை செயலகத்தில் தமிழக தொழிலாளர் துறை செயலாளர் திரு வீரராகலு
தொழிலாளர் துறை கூடுதல் ஆணையர்கள் தமிழரசி -தங்கவேலு முன்னிலையில் பேச்சுவார்த்தை நேற்று நடைபெற்றது

பேச்சுவார்த்தையில் எம்ஆர்எப் நிறுவனம் சார்பாக எம் ஆர் எப் துணைத் தலைவர்திரு தீபக் மேத்யூ கலந்து கொண்டார்
சிஐடியூ சார்பில் அ.சவுந்தர்ராஜன் சிறப்புத் தலைவர்
இ.முத்துக்குமார்
கௌரவ தலைவர்
சுதாகர் சங்கத் தலைவர்
கலந்து கொண்டனர்

4 மணி நேரம் நடைபெற்ற இந்த பேச்சு வார்த்தையில்

கீழ்கண்ட முடிவுகள் இரு தரப்புக்கும் உடன்பாடு ஏற்பட்டது

அதிகபட்சம் பத்தாயிரம் ரூபாய் மட்டுமே சம்பளம் வழங்கப்படும் என்று நிர்வாகம் சொன்ன நிலையில்

இந்த சம்பளத்தை இடைக்கால நிவாரணமாக ஏற்றுக் கொள்ளப்படும் சங்கம் கோரிய ரூபாய் 16,000 சம்பள உயர்வு
மற்றும் பஞ்சப்பாடி உள்பட அனைத்து கோரிக்கைகளையும் தொழிலாளர் நீதிமன்றம் வழங்கக்கூடிய தீர்ப்புக்கு இருதரப்பும் கட்டுப்பட உடன்பாடு ஏற்பட்டது

வேலை நிறுத்த காலத்தில் 24 தொழிலாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்
93 பேர் மீது ஒழுங்க நடவடிக்கை எடுக்க குற்றப்பத்திரிக்கை வழங்கப்பட்டன அனைத்து நடவடிக்கைகளும் திரும்ப பெறசங்கம் கேட்டு கொண்டதை நிர்வாகம் ஏற்றுகொண்டது

வேலை நிறுத்த போராட்ட த்திற்காக யார் மீதும் பழிவாங்கல் கூடாது என்ற தொழிற்சங்க கோரிக்கையை நிர்வாகம் ஒப்புக்கொண்டது

4-8-2026 முதல் பணிக்கு திரும்ப சங்கம் ஒப்புக்கொண்டது

வேலைநிறுத்தும் சுமுக முடிவுக்கு வர பெருமளவில் உதவி செய்த தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் மாண்புமிகு ஆதவ் அர்ஜுனா அவர்களுக்கும்

போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நேரடியாக களத்திற்கு சென்று ஆதரவு தெரிவித்த மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர் p. சண்முகம் அவர்களுக்கும் களத்திற்கு சென்றதோடு இல்லாமல்
தமிழக அமைச்சர்களிடம் நேரடியாக தலையிட்டு பேச்சுவார்த்தைகளுக்கு உதவி செய்த அவர்களின் முயற்சிக்கும் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில குழு தீர்மானம் நிறைவேற்றியதற்கும்
வேலை நிறுத்த போராட்ட குழு நன்றியை தெரிவித்துக் கொள்கிறது

சுமூகத் தீர்வு காண சட்ட ரீதியாகவும் சமரச நடவடிக்கையில் நல்ல முயற்சிகள் எடுத்த தொழிலாளர் துறையின் செயலாளர் அவர்களுக்கும் கூடுதல் ஆணையர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்

அரசையும் நிர்வாகத்தையும் பேச்சுவார்த்தைக்கு இணங்க வைக்க பெரும் உதவியாக அமைந்ததுஆதரவு போராட்டங்கள்

அந்தப் போராட்டங்களை நடத்திய அப்போலோ டயர்ஸ் ஜேகேடயர் உள்ளிட்ட அனைத்து தொழிலாளர்களுக்கும்

போராட்டம் நடைபெற்ற பெரம்பலூர் மாவட்டத்தில் வேலை நிறுத்த காலம் முழுவதும் போராட்டத்தை களத்தில் நின்று தொழிலாளருக்கு ஆதரவாக நின்ற பெரம்பலூர் சிஐடி யூ மாவட்ட குழுவிற்கும்
திருச்சி மாவட்ட குழுவிற்கும்

நிதி உதவி வழங்கிய சாம்சங் உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கங்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்

மாநில முழுவதும் தொழிலாளர் கவனத்தை ஈற்க அரசை தலையிட வைக்க ஆதரவு அறிக்கை பிரச்சாரங்கள் மூலம் வர்க்க உணர்வை வெளிப்படுத்திய சிஐடியூ தமிழ் மாநில குழுவிற்கு போராட்டக் குழு நன்றி தெரிவித்துக் கொள்கிறது

ஒரு நெடிய போராட்டம் தாவேக அரசு ஆட்சி பொறுப்புக்கு வந்த பிறகு நடைபெற்ற முதல் தொழிற்சாலை போராட்டம் என்கிற முறையில்

அந்த போராட்டம் பல புதிய நெருக்கடிகளை சந்தித்தாலும் நிறைவாக தொழிலாளர்களின் சங்கம் வெல்லும் என்கிற அந்த நம்பிக்கையோடு முடிவுக்கு வந்து பழிவாங்கல் எதுவும் இல்லாமல் நிறைவு பெற்றது போராட்டத்தின் மகத்தான வெற்றியாகும்

இப்படிக்கு
பெரம்பலூர் எம்ஆர்எப் தொழிலாளர்கள் சங்கம் போராட்டக் குழு
சிஐடியூ

ஊதிய நிர்ணயம் கோரி நரசுஸ் நூற்பாலைத் தொழிலாளர்கள் தொடர் வேலைநிறுத்தம், சிஐடியு மாவட்டக் குழு, ஆர்.சி. செட்டிப்பட்டி, 04....
04/08/2026

ஊதிய நிர்ணயம் கோரி நரசுஸ் நூற்பாலைத் தொழிலாளர்கள் தொடர் வேலைநிறுத்தம், சிஐடியு மாவட்டக் குழு, ஆர்.சி. செட்டிப்பட்டி, 04.08.2026. ஆர்ப்பாட்டம்

பெண்களை இழிவுபடுத்தும் ஆணாதிக்க அரசியலை வன்மையாகக் கண்டிக்கிறோம்.தஞ்சாவூரில் நடைபெற்ற காவிரி நீர் உரிமை ஆர்ப்பாட்டத்தில்...
04/08/2026

பெண்களை இழிவுபடுத்தும் ஆணாதிக்க அரசியலை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

தஞ்சாவூரில் நடைபெற்ற காவிரி நீர் உரிமை ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பேசிய விதம் தமிழக மக்களையும், குறிப்பாக பெண்களையும் மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. அரசியல் மேடையில் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் அவர் பேசியிருப்பது கடுமையான கண்டனத்திற்குரியது.
இது வெறும் தரம் தாழ்ந்த பேச்சு மட்டுமல்ல. நமது சமூகத்தில் நூற்றாண்டுகளாக புரையோடிப் போயிருக்கும் ஆணாதிக்க, அசமத்துவ குப்பையில் இருந்து வெளிப்படும் முடை நாற்றமெடுத்த சிந்தனையின் வெளிப்பாடாகும். பெண்களை ஒரு சமமான மனிதராக அல்லாமல், கேலிக்கும், பாலியல் நையாண்டிக்கும் உரிய பொருளாகக் கருதும் பிற்போக்குச் சிந்தனையின் அரசியல் வெளிப்பாடாகவே இதைப் பார்க்க வேண்டியுள்ளது.

அரசியல் என்பது கருத்துக்களாலும், கொள்கைகளாலும் மக்களை அணிதிரட்ட வேண்டிய களம். ஆனால் பெண்களை இழிவுபடுத்தும் வார்த்தைகள் மூலம் கைதட்டல் பெற முயல்வது அரசியல் நாகரிகத்தின் வீழ்ச்சியையே காட்டுகிறது.

ஒரு மாநிலத்தின் எதிர்க்கட்சித் தலைவர் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் ஆயிரக்கணக்கான கட்சித் தொண்டர்களுக்கும், இளைஞர்களுக்கும் அரசியல் பண்பாட்டைப் போதிக்கிறது. தலைவர்களே பெண்களை இழிவுபடுத்தும் மொழியைப் பயன்படுத்தும்போது, அவர்களைப் பின்பற்றும் தொண்டர்கள் பெண்களை சமமான மனிதர்களாக மதிக்கும் பண்பை எவ்வாறு வளர்த்துக் கொள்வார்கள்? பெண்களை அவமதிப்பதும், பாலியல் ரீதியாக கேலி செய்வதும் அரசியல் கலாச்சாரமாக மாறிவிடும் அபாயம் இல்லையா?
பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள், இணையவழி அவதூறுகள், பொது இடங்களில் பாலின அடிப்படையிலான இழிவுகள் அதிகரித்து வரும் இந்தச் சூழலில், அரசியல் தலைவர்கள் மிகுந்த பொறுப்புணர்வுடன் பேச வேண்டியது அவசியம். மாறாக, இத்தகைய பேச்சுகள் பெண்களுக்கு எதிரான வன்முறை மனநிலைக்கு சமூக அங்கீகாரம் வழங்கும் ஆபத்தை ஏற்படுத்துகின்றன.எனவே இதை சாதாரண அரசியல் சர்ச்சையாகக் கடந்து செல்ல முடியாது.
திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தமிழக பெண்களிடம் வெளிப்படையாக வருத்தம் தெரிவிக்க வேண்டும். அதே நேரத்தில், அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களது தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே பெண்களை மதிக்கும் ஜனநாயக, சமத்துவ, பாலின நீதி சார்ந்த அரசியல் பண்பாட்டை உருவாக்குவதற்கான தொடர்ச்சியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பெண்களை இழிவுபடுத்தும் இந்த அருவருக்கத்தக்க பேச்சை வன்மையாகக் கண்டிக்கிறது.

இத்தகைய பேச்சுக்களை யார் பேசினாலும், அவர்கள் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், அந்தந்த அரசியல் கட்சிகள் மௌனம் காக்கக் கூடாது. சம்பந்தப்பட்ட தலைவரை வெளிப்படையாகக் கண்டிப்பதுடன், இத்தகைய பேச்சுகள் மீண்டும் நிகழக்கூடாது என்று கடுமையாக எச்சரித்து, உரிய ஒழுங்கு நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். பெண்களின் கண்ணியத்தை இழிவுபடுத்தும் பேச்சுகளை அரசியல் கலாச்சாரமாக கருதி எந்தக் கட்சியும் அனுமதிக்கக் கூடாது.
அதேவேளையில், திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பொறுப்பற்ற பேச்சுக்கு எதிர்வினை என்ற பெயரில் சமூக வலைதளங்களில் அவரது குடும்பத்தைச் சேர்ந்த பெண்களை இலக்காகக் கொண்டு ஆபாசமான, பாலியல் வக்கிரம் நிறைந்த பதிவுகளை வெளியிட்டு வரும் தமிழக வெற்றி கழகத்தின் இணையதள பிரிவின் செயல்பாடுகளும் கடும் கண்டனத்திற்கு உரியது.

அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களது தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே பெண்களை மதிக்கும் ஜனநாயக, சமத்துவ, பாலின சமத்துவம் சார்ந்த அரசியல் பண்பாட்டை உருவாக்குவதற்கான தொடர்ச்சியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

ஹோட்டல் அசோகா தொழிலாளர் சங்கப் பெயர் பலகை திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றதுசிஐடியு (CITU) இணைப்பில் செயல்பட்டு வரும் ஹோட்...
03/08/2026

ஹோட்டல் அசோகா தொழிலாளர் சங்கப் பெயர் பலகை திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது
சிஐடியு (CITU) இணைப்பில் செயல்பட்டு வரும் ஹோட்டல் அசோகா தொழிலாளர் சங்கம் (பதிவு எண்: 3189/1961) சார்பில் சங்கத்தின் புதிய பெயர் பலகை திறப்பு விழா இன்று (03.08.2026) சென்னை எழும்பூரில் சிறப்பாக நடைபெற்றது.

விழாவிற்கு சங்கத் தலைவர் தோழர் ஜி. ரமேஷ் தலைமை வகித்தார். சங்கச் செயலாளர் தோழர் என். பாண்டியன் வரவேற்புரையாற்றினார்.

சிஐடியு மாநில பொதுச் செயலாளர் தோழர் எஸ். கண்ணன் சங்கத்தின் பெயர் பலகையை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். முன்னதாக சிஐடியு மத்திய சென்னை மாவட்ட துணைத் தலைவர் தோழர் எம்.வி. கிருஷ்ணன் சங்கக் கொடியை ஏற்றி வைத்தார்.

விழாவில் சிஐடியு மத்திய சென்னை மாவட்டத் தலைவர் தோழர் எஸ். பாலசுப்பிரமணியம், மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் தோழர் எஸ்.கே. முருகேஷ், மத்திய சென்னை மாவட்ட பொருளாளர் தோழர் பி. சுந்தரம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

மேலும், ஆட்டோ தொழிலாளர் சங்க மாவட்ட நிர்வாகிகள் தோழர் சீனிவாசன், தோழர் செல்வகுமார் உள்ளிட்டோர் மற்றும் ஹோட்டல் அசோகா தொழிலாளர்கள் திரளாக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

இறுதியாக, சங்கப் பொருளாளர் தோழர் ஏ. பிரபாகரன் நன்றியுரை வழங்கினார்.

Address

A Nallasivam Ninaivagam, 13, Mosque Street Chepauk
Chennai
600005

Alerts

Be the first to know and let us send you an email when CITU Tamilnadu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to CITU Tamilnadu:

Shortcuts

Share