Tamil Maanila Congress - Moopanar

Tamil Maanila Congress - Moopanar Official Page of Tamil Maanila Congress | Prosperous Tamil Nadu. Stronger India

தமிழக த.வெ.க அரசின் முதல் வேளாண் பட்ஜெட் வரவேற்கத்தக்கது.தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் திரு G.K.Vasan  அவர்கள் ...
06/08/2026

தமிழக த.வெ.க அரசின் முதல் வேளாண் பட்ஜெட் வரவேற்கத்தக்கது.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர்
திரு G.K.Vasan அவர்கள் #அறிக்கை

2026-2027 ஆம் நிதி ஆண்டுக்கான தமிழகத்தின் வேளாண் பட்ஜெட் விவசாயிகளுக்கு முக்கியத்தும் கொடுக்கும் வகையில், வேளாண் தொழிலை மேம்படுத்தும் வகையில் அமைந்துள்ளது

தமிழக த.வெ.க அரசின் முதல் வேளாண் பட்ஜெட் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது.

2026-2027 ஆம் ஆண்டிற்கான வேளாண் பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம் பெற்றிருக்கின்றன. குறிப்பாக 100% பயிர் காப்பீடு, உழவர்களுக்கு ஏக்கருக்கு ரூ. 4,000 ஊக்கத்தொகை கொடுப்பது, விளைபொருட்களை பாதுகாக்க ரூ.10 கோடியில் 43,500 தார்ப்பாய்களை வழங்குவது, 3 இலட்சம் சதுர மீட்டரில் பசுமைக் குடில்கள் அமைப்பது, விவசாய வருமான மேம்பாட்டு ஆணையம் அமைக்க நடப்பு ஆண்டுக்கு 5.20 கோடி நிதி ஒதுக்கியிருப்பது, 35 லட்சம் மரக்கன்றுகள் நடப்படும் என்பது மற்றும் நெல் விவசாயிகளின் ஊக்கத்தொகைக்கு ரூ. 917 கோடி நிதி ஒதுக்கியிருப்பது ஆகியவை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பெரும் பலன் அளிக்கும்.

விவசாயிகளின் இலவச மும்முனை மின்சாரத் திட்டத்திற்காக மின்வாரியத்திற்கு ரூ. 7432.58 கோடி, குறுவை தொகுப்பு திட்டத்திற்கு ரூ. 132 கோடி, மண்வள பாதுகாப்பு இயக்க அறிமுகத்திற்காக ரூ. 122.51 கோடி, நெல்விதை உற்பத்தி விநியோக மானியத்திற்கு ரூ. 34.72 கோடி, பலம் குறைந்த நிலத்தை மீட்டெடுக்க ரூ. 2 கோடி, பருத்தி உற்பத்தியை பெருக்கிட ரூ. 27.21 கோடி, சீமை கருவேல மரங்கலை அகற்றிட ரூ. 4 கோடி, மக்காச்சோள உற்பத்தி மேம்பாட்டுக்கு ரூ. 36 கோடி, ஒருங்கிணைந்த 8 வேளாண்மை விரிவாக்க மையங்கள் அமைக்க ரூ. 27.82 கோடி, கரும்பு சாகுபடி மேம்பாடு திட்டத்திற்கு ரூ. 9 கோடி, இல்லத்தரசி வீட்டுத் தோட்டம் திட்டத்திற்கு ரூ. 10 கோடி, தென்னை மரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க ரூ. 16 கோடி, உயர்மதிப்பு பழ உற்பத்திக்கு ரூ. 1.87 கோடி, வெங்காய சேமிப்பு கிடங்குகளுக்கு ரூ. 22.80 கோடி, வேளாண் கருவிகளின் மானியத்திற்கு ரூ. 227.20 கோடி, ஆழ்துளை அல்லது குழாய் கிணறுகள் அமைக்க ரூ. 6 கோடி, சூரியசக்தி பம்ப் செட்டுகள் மானிய விலையில் கொடுக்க ரூ. 23 கோடி, உழவர் சந்தைகளை மேம்படுத்த ரூ. 20 கோடி, பயிர்க்கடன் வழங்க ரூ. 17,000 கோடி, பயிர்க்கடன் தள்ளுபடிக்கு ரூ. 5,267 கோடி, ஆறு, கால்வாய்களை தூர்வார ரூ. 125 கோடி மற்றும் 12,000 விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த பணிகள் மேற்கொள்ள ரூ. 1,500 கோடி என விவசாயிகளுக்கும், விவசாயத்திற்கும் நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது தமிழக அரசு. இந்த வேளாண் பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் விவசாயிகளுக்கும், விவசாயத்திற்கும் பெரும் பயனளிக்கும்.

அதே நேரத்தில் தமிழக அரசு விவசாயிகள் எதிர்பார்த்த விவசாயக்கடன் தள்ளுபடியை கவனத்தில் கொண்டு அதனை பூர்த்தி செய்ய வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) சார்பில் வலியுறுத்துகிறேன்.

தமிழக அரசு தாக்கல் செய்துள்ள முதல் வேளாண் பட்ஜெட்டை தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) சார்பில் வரவேற்று, தமிழக அரசு விவசாயிகளுக்கு துணை நின்று, விவசாயத்தை மேம்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

#ஜி_கே_வாசன்
#தமிழ்_மாநில_காங்கிரஸ்





#உழவர்நலபட்ஜெட்
#வேளாண்பட்ஜெட்
#விவசாயபட்ஜெட்




தமிழக த.வெ.க அரசின் முதல் பட்ஜெட் வரவேற்கத்தக்கது.தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் திரு G.K.Vasan  அவர்கள்  #அறிக்...
05/08/2026

தமிழக த.வெ.க அரசின் முதல் பட்ஜெட் வரவேற்கத்தக்கது.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர்
திரு G.K.Vasan அவர்கள் #அறிக்கை

2026-2027 ஆம் நிதி ஆண்டுக்கான தமிழகத்தின் முழுமையான பொது பட்ஜெட்டில் தமிழக மக்கள் நலன் காக்கும், தமிழ்நாட்டின் உயர்வுக்கு வழிவகுக்கும் பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம்பெற்றிருக்கின்றன

தமிழக த.வெ.க அரசின் முதல் பட்ஜெட் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது.

2026-2027 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம் பெற்றிருக்கின்றன. குறிப்பாக 2036ஆம் ஆண்டுக்குள் மாநிலத்தின் பொருளாதாரத்தை 1.5 டிரில்லியன் டாலர் அளவுக்கு உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறைக்கு ரூ.9,818 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதும் முக்கியத்துவம் வாய்ந்தது.

வேளாண்துறைக்கு ரூ. 14,984 கோடி, பெருந்தலைவர் காமராசர் சிறப்பு பள்ளிகள் திட்டத்திற்கு ரூ. 125 கோடி, கல்லுரி மாணவர்களுக்கு மடிக்கணினி திட்டத்திற்கு ரூ. 2,000 கோடி, உயர்கல்வித்துறைக்கு ரூ. 8,393 கோடி, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறைக்கு 2,022 கோடி, சிறப்பு திட்ட செயலாக்கத்துறைக்கு ரூ. 17,150 கோடி, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறைக்கு ரூ. 1,700 கோடி, கால்நடை, பால்வளம் மற்றும் மீன்வளத் துறைக்கு ரூ. 4,880 கோடி, கூட்டுறவுத்துறைக்கு ரூ. 8,028 கோடி, கைத்தறித்துறைக்கு ரூ. 1,678 கோடி, நீர்வளத்துறைக்கு ரூ. 9,264 கோடி, போக்குவரத்துத்துறைக்கு ரூ. 13,561 கோடி, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறைக்கு 14,830 கோடி என பல்வேறு துறைகளுக்கு நிதியை ஒதுக்கீடு செய்து பட்ஜெட் தாக்கல் செய்திருப்பது பாராட்டுக்குரியது.

பள்ளிகளில் போதைப்பொருள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த ரூ. 7 கோடி நிதி, மதுரையில் சிறப்பு சட்டக்கல்லூரி, இளைஞர்களின் திறன் பயிற்சி திட்டத்திற்கு ரூ. 150 கோடி நிதி, 10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள் அமைக்க ரூ. 50 கோடி நிதி மற்றும் ஹஜ் பயணத்திற்கான மானியம் ரூ. 25,000 லிருந்து ரூ. 35,000 மாக உயர்வு, அனைவருக்கும் வீடு, ஸ்மார்ட் மின் மீட்டர், செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்பம், பெண்களின் சுயஉதவிக்குழுக்களுக்கு மானியம் உயர்வு, ரேசன் கடைகளில் பாக்கெட் கோதுமை மாவு, 150 நாள் வேலைத்திட்டம், விபத்துக்கான நிவாரணம், சாலைப் பாதுகாப்பு பணி, நதிகள் இணைப்பு என அறிவித்த அனைத்து திட்டங்களும் பெரும் பயன் தரும்.

ஏழை, எளிய, நடுத்தர மக்கள், பெண்கள், மாணவர்கள், முதியோர் என அனைத்து தரப்பினருக்குமான பட்ஜெட்டாக இந்த பட்ஜெட் அமைந்துள்ளது.

பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ள நிதியானது முறையாக, முழுமையாக பயன்படுத்தப்பட்டு மக்களுக்கானப் பயன்கள் முழுமையாக சென்றடைய வேண்டும். தமிழ்நாட்டு மக்களையும், தமிழ்நாட்டையும் முன்னேற்ற வேண்டும் என்பதற்காக தொலைநோக்குப் பார்வையோடு தமிழக அரசு தயாரித்துள்ள இந்த பட்ஜெட்டை தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) சார்பில் வரவேற்று, தமிழக அரசின் நல்ல முயற்சிக்கு பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

#ஜி_கே_வாசன்
#தமிழ்_மாநில_காங்கிரஸ்

பொறுப்புள்ள தலைவர்கள் பொறுப்பற்ற முறையிலே பேசக்கூடாது.பொதுவாழ்வில் பொறுப்புள்ள தலைவர்கள் பொறுப்போடு பேசுவதையே மக்கள் ஏற்...
04/08/2026

பொறுப்புள்ள தலைவர்கள் பொறுப்பற்ற முறையிலே பேசக்கூடாது.

பொதுவாழ்வில் பொறுப்புள்ள தலைவர்கள் பொறுப்போடு பேசுவதையே மக்கள் ஏற்றுக்கொள்வார்கள்.

குறிப்பாக மகளிர் குறித்து பொது இடத்தில் பேசும்போது, கருத்து கூறும்போது அநாகரிகமாகப் பேசக்கூடாது.

சட்டத்தின் முன் எல்லோரும் சமம்.

சட்டம் தனது கடமையைச் செய்யும்.

#ஜி_கே_வாசன்
#தமிழ்_மாநில_காங்கிரஸ்



சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவு நாளான இன்று 03.08.2026 பொள்ளாச்சியில்,  தீரன் சின்னமலையின் திருவுருவப...
03/08/2026

சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவு நாளான இன்று 03.08.2026 பொள்ளாச்சியில், தீரன் சின்னமலையின் திருவுருவப் படத்திற்கு

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர்
திரு G.K.Vasan அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

#ஜி_கே_வாசன்
#தமிழ்_மாநில_காங்கிரஸ்

காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவின்படி காவிரி நீரை கர்நாடக அரசு உரிய நேரத்தில் திறக்காததால் தமிழகம் முழுவதும் சுமார் 7 லட்சம்...
03/08/2026

காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவின்படி காவிரி நீரை கர்நாடக அரசு உரிய நேரத்தில் திறக்காததால் தமிழகம் முழுவதும் சுமார் 7 லட்சம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி நடைபெறவில்லை.

வாழ்வாதாரத்தை இழந்து வாடும் விவசாயிகளுக்கு தமிழக அரசு அறிவித்த குறுவை சாகுபடி இழப்பீட்டுக்கான ரூ.134.83 கோடி சிறப்புத் தொகுப்பை உயர்த்தி வழங்க வேண்டும்.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர்
திரு G.K.Vasan அவர்கள் #அறிக்கை

தமிழக விவசாயிகளின் நியாயமான எதிர்பார்ப்பை கர்நாடகாவில் பெய்த தொடர் மழையின் மூலம் இயற்கை அண்ணையே பிரதிபலித்திருக்கிறது.

நம்முடைய தண்ணீர் உரிமையை, காவிரி மேலேண்மை ஆணையத்தின் உத்தரவை மறுத்து வருகிறது கர்நாடக அரசு. கடந்த ஆண்டில் தமிழ்நாட்டில் 12.48 லட்சம் ஏக்கர் பரப்பளவில் நடைபெற்ற சாகுபடியானது நடப்பு ஆண்டில் தண்ணீர் பற்றாக்குறையால் 5.32 லட்சம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி நடைபெற்றுள்ளது. சுமார் 7 லட்சம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்ய முடியவில்லை.

குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் 5.32 லட்சம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி நடைபெறும் வேளையில் நடப்பு ஆண்டில் தண்ணீர் பற்றாக்குறையால் 4.39 லட்சம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி நடைபெற்றது. சுமார் 1 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்ய முடியவில்லை.

அதாவது காவிரி நீரை கர்நாடகா திறக்காததால், தமிழகம் முழுவதும் இந்த ஆண்டு குறுவை சாகுபடி சுமார் 7 லட்சம் ஏக்கர் பரப்பளவு வரை குறைந்துள்ளது.

இதனையெல்லாம் கர்நாடக அரசு கவனத்தில் கொள்ளாமல் தன்னிச்சையாக முடிவு எடுத்து தமிழக விவசாயத்திற்கும் குடிநீருக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இது நீடிக்கக்கூடாது என்பது தான் ஒட்டு மொத்த தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

காவிரி நதிநீர் உடன்பாடு, மேகதாது அணைத்திட்டம் ஆகியவற்றில் தமிழக அரசு ஆக்கப்பூர்வமாக செயல்பட்டு தமிழக விவசாயத்தையும், விவசாயிகளையும் காப்பாற்ற வேண்டும். காவிரி நதிநீர் தொடர்பாக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தை நாடுவது சரியான அணுகுமுறையாக அமைகிறது என த.மா.கா(மூ) கருதுகிறது.

குறுவை சாகுபடி பாதித்த விவசாயிகளுக்கு தமிழக அரசு அறிவித்த ரூ.134.83 கோடி சிறப்புத் தொகுப்பை உயர்த்தி வழங்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

#ஜி_கே_வாசன்
#தமிழ்_மாநில_காங்கிரஸ்

காவிரி நதிநீர் திறப்பு, மேகதாது அணைப்பிரச்சனை மற்றும் மலைவாழ் மக்களின் நலன் ஆகியவற்றிற்காக புதிய தமிழகம் கட்சி கூட்டிய அ...
01/08/2026

காவிரி நதிநீர் திறப்பு, மேகதாது அணைப்பிரச்சனை மற்றும் மலைவாழ் மக்களின் நலன் ஆகியவற்றிற்காக புதிய தமிழகம் கட்சி கூட்டிய அனைத்துக் கட்சி கூட்டம் தமிழக மக்கள் நலன் காக்க வேண்டும்.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர்
திரு G.K.Vasan அவர்கள் #அறிக்கை

மேகதாது அணைப்பிரச்சனை, காவிரி நதிநீர் திறப்பு தொடர்பாக புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் கே. கிருஷ்ணசாமி அவர்கள் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டியிருக்கிறார்கள்.

மேகதாது அணைப்பிரச்சனை என்பது தமிழகத்தின் ஜீவாதாரப் பிரச்சனை. டெல்டா விவசாயிகளின் உயிர்நாடிப் பிரச்சனை.
காவிரி நதிநீர் பிரச்சனையில் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய நியாயமான தண்ணீரை உடனடியாகப் பெறுவதற்கும், மேகதாது அணைப்பிரச்சனையை அரசியலைக் கடந்து கர்நாடகாவில் அனைத்து தரப்பினரும் ஒன்றுபட்டு நிற்பது போல் தமிழகத்திலும் அனைத்து தரப்பினரும் ஒன்றுபட்டு நின்று தமிழகத்தின் கோரிக்கையை வென்றெடுக்க வேண்டும்.

மலைவாழ் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான குடியிருப்பு பிரச்சனையில் அவர்களின் நலன் காக்க, தமிழக அரசோடு பேச்சு வார்த்தை நடத்த, தீர்வு காண தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) துணை நிற்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

#ஜி_கே_வாசன்
#தமிழ்_மாநில_காங்கிரஸ்

தமிழக அரசு – டெங்கு காய்ச்சல் பரவலைத் தடுக்கவும், பொது மக்களின் சுகாதாரமான பாதுகாப்பான வாழ்க்கைக்கு துணை நிற்கவும் நடவடி...
01/08/2026

தமிழக அரசு – டெங்கு காய்ச்சல் பரவலைத் தடுக்கவும், பொது மக்களின் சுகாதாரமான பாதுகாப்பான வாழ்க்கைக்கு துணை நிற்கவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர்
திரு G.K.Vasan அவர்கள் #அறிக்கை

தமிழக அரசு – பொது மக்களுக்கான சுகாதாரத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

கடந்த 2025-ஆம் ஆண்டில் மட்டும் 23 ஆயிரத்து 407 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டது. இவர்களில் 12 பேர் உயிரிழந்ததாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

பருவநிலை மாற்றம் மற்றும் விட்டுவிட்டு பெய்யும் மழை, வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களில் தண்ணீர் தேங்குவது, ஏடிஸ் வகை கொசுக்கள் பகல் நேரங்களில் மனிதர்களைக் கடிப்பது, பழைய டயர்கள், தேங்காய் ஓடுகள் மற்றும் திறந்த தொட்டிகளில் நீர் தேங்குதல் ஆகிய காரணங்களால் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது.

குறிப்பாக தமிழ்நாட்டில் நடப்பாண்டில் டெங்கு பாதிப்பு 9 ஆயிரத்தை கடந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இப்போது தமிழ்நாடு உட்பட 8 மாநிலங்களில் 4 வகையான டெங்கு வைரஸ் காய்ச்சல் பரவல் கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய அரசு எச்சரித்துள்ளது.

டென்வி-1 மற்றும் டென்வி-3 ஆகிய இரு வகையான டெங்கு காய்ச்சல் தாக்கம் தமிழகத்தில் அதிகமாக உள்ளது எனவும் டெங்கிஆல் என்ற தடுப்பூசி விரைவில் பயன்பாட்டுக்கு வரும் எனவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிவித்திருக்கிறது.

இந்நிலையில் தமிழக அரசு டெங்கு பாதுகாப்பு குறித்த அதிகாரப்பூர்வ மருத்துவ வழிகாட்டுதல்களில் ஈடுபட வேண்டும்.

டெங்கு பரவுவதைத் தடுக்க தமிழக அரசு தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் 24 மணிநேரமும் காய்ச்சல் சிகிச்சை மையங்கள் அமைக்க வேண்டும்.

மேலும் டெங்கு மற்றும் காய்ச்சல் போன்ற பருவகால நோய்களை பரிசோதனை செய்ய, சிகிச்சை அளிக்க தொடர் கண்காணிப்பு அவசியம்.
எனவே தமிழக அரசு கிராமம் முதல் பெருநகரம் வரை டெங்கு பரவலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு பொது மக்களின் சுகாதாரமான பாதுகாப்பான வாழ்க்கைக்கு துணை நிற்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

#ஜி_கே_வாசன்
#தமிழ்_மாநில_காங்கிரஸ்

#டெங்கு_காய்ச்சல்
#டெங்கு_விழிப்புணர்வு




தமிழகத்தின் சம்பா சாகுபடிக்கு தற்போதைய உடனடி தேவை, அவசியத் தேவை காவிரி தண்ணீர்.கர்நாடக அரசு அனைத்துக்கட்சி கூட்டத்தைக்கூ...
31/07/2026

தமிழகத்தின் சம்பா சாகுபடிக்கு தற்போதைய உடனடி தேவை, அவசியத் தேவை காவிரி தண்ணீர்.

கர்நாடக அரசு அனைத்துக்கட்சி கூட்டத்தைக்கூட்டி தண்ணீர் திறக்க மறுக்காமல் காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவுப்படி தமிழகத்திற்கு உடனடியாக காவிரி நீரைத் திறந்துவிட வேண்டும்.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர்
திரு G.K.Vasan அவர்கள் #அறிக்கை

தமிழக விவசாயிகளின் உணர்வைப் புரிந்து அவர்களின் தேவையைக் கவனத்தில் கொண்டு தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறக்க வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்திருப்பது நியாயமானது.

அதாவது காவிரியில் வினாடிக்கு 3,500 கன அடி வீதம் அடுத்த 15 நாட்களுக்குத் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் (CWMA) அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்திற்கு மொத்தம் 4 டி.எம்.சி. தண்ணீர் கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக காவிரி மேலாண்மை ஆணையம் ஏற்கனவே கொடுத்த உத்தரவின்படி தண்ணீர் திறக்க மறுத்து மேல்முறையீடு செய்த கர்நாடக அரசின் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. இது கர்நாடக அரசின் நியாயமற்ற போக்கை வெளிப்படுத்தியிருக்கிறது.

தமிழகத்திற்கான காவிரி நீர் தமிழக விவசாயிகளின் பயிர் தேவைக்கும், குடிநீர் தேவைக்கும் மிக மிக அவரசரமானது மட்டுமல்ல அவசியமானதும் கூட.
ஏற்கனவே குறுவை சாகுபடிக்கு தண்ணீர் கிடைக்காமல் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ள சூழலில் தற்போதைய சம்பா சாகுபடிக்கு காவிரி நீர் உடனடி தேவையாக இருக்கிறது.

இந்நிலையில் காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவை கர்நாடக அரசு கடைபிடிக்க வேண்டுமே தவிர அனைத்துக்கட்சி கூட்டத்தைக் கூட்டி ஒத்த கருத்து என்று கூறி தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க மறுக்கக்கூடாது.

எனவே தமிழக விவசாயிகள், கர்நாடக விவசாயிகள் எனப்பிரித்துப் பார்க்காமல் விவசாய வர்க்கம் என எண்ணி அவர்களைப் பாதுகாக்கக்கூடிய நிலையை கர்நாடக அரசு மேற்கொள்ள வேண்டும். தமிழகத்தின் நியாயமான உரிமையை கர்நாடக அரசு கவனத்தில் கொண்டு நடைமுறைப்படுத்த வேண்டும்.

மேலும் நேற்றைய தினம் கர்நாடக அரசின் மேகதாது அணைக்கான விரிவான திட்ட அறிக்கையை மத்திய அரசு திருப்பி அனுப்பியுள்ளது கர்நாடக அரசின் வீன்முயற்சியை, பின்னடவை வெளிப்படுத்தியுள்ளது.

எனவே கர்நாடக அரசு காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவுப்படி தமிழகத்திற்கு காவிரி நீரை உடனடியாக திறந்துவிட வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) சார்பில் வலியுறுத்துகிறேன்.

#ஜி_கே_வாசன்
#தமிழ்_மாநில_காங்கிரஸ்

#காவிரி #காவிரிநீர் #காவிரிஒழுங்காற்றுக்குழு #கர்நாடகஅரசு #தமிழ்நாடுஅரசு

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை நகர தலைவர் திரு. ஏ .கே. குமார் அவர்களின்  மனைவி சமீபத்தில் காலமானதை முன்னிட்டுதமிழ் மாநில ...
30/07/2026

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை நகர தலைவர் திரு. ஏ .கே. குமார் அவர்களின் மனைவி சமீபத்தில் காலமானதை முன்னிட்டு

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர்
திரு G.K.Vasan Ex MP அவர்கள்

நேற்று 29.07.2026 அவர்களது இல்லத்திற்கு சென்று அம்மையாரது திருவுருவப் படத்திற்கு மலரஞ்சலி செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய நிகழ்வு.

#ஜி_கே_வாசன்
#தமிழ்_மாநில_காங்கிரஸ்

தமிழ் மாநில காங்கிரஸ் (மூ) மாநில கொள்கை பரப்பு செயலாளர் வடுவூர் திரு. கரிகாலன் அவர்களின் தாயார் காலமானதை முன்னிட்டு தமிழ...
30/07/2026

தமிழ் மாநில காங்கிரஸ் (மூ) மாநில கொள்கை பரப்பு செயலாளர் வடுவூர் திரு. கரிகாலன் அவர்களின் தாயார் காலமானதை முன்னிட்டு

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர்
திரு G.K.Vasan அவர்கள்

நேற்று 29.07.2026 இரவு, அவர்களது இல்லத்திற்கு சென்று அம்மையார் அவர்களின் உடலுக்கு மலரஞ்சலி செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்கள்.

#ஜி_கே_வாசன்
#தமிழ்_மாநில_காங்கிரஸ்

Address

No: 4, Ashoka Road, Alwarpet
Chennai
600018

Alerts

Be the first to know and let us send you an email when Tamil Maanila Congress - Moopanar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Tamil Maanila Congress - Moopanar:

Shortcuts

Share