Ahamed Navavi

Ahamed Navavi S.அகமது நவவி,
மாநில பொதுச்செயலாளர்,
SDPI கட்சி, தமிழ்நாடு.

தமிழ் சுடர் விருதுகள் 2026நெஞ்சை நெகிழ வைத்த ஒரு மறக்க முடியாத அனுபவம்!"தமிழ்ச்சுடர் 2026" விருது வழங்கும் விழாவை தொகுத்...
02/08/2026

தமிழ் சுடர் விருதுகள் 2026

நெஞ்சை நெகிழ வைத்த ஒரு மறக்க முடியாத அனுபவம்!

"தமிழ்ச்சுடர் 2026" விருது வழங்கும் விழாவை தொகுத்து வழங்கிய வாய்ப்பு எனக்கு கிடைத்தது பெருமையும் பொறுப்பும் கலந்த ஒரு அனுபவமாக இருந்தது.

சமூகத்தின் பல்வேறு துறைகளில் சாதனை படைத்த ஆளுமைகளை கௌரவிக்கும் இந்த நிகழ்வை சிறப்பாக ஏற்பாடு செய்த நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள், நிர்வாகிகள், தன்னார்வலர்கள் மற்றும் மறைவில் உழைத்த அனைத்து உள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

விருதாளர்களின் சாதனைகள் மேலும் பலருக்கு உந்துசக்தியாக அமையட்டும். தமிழின் சுடர் என்றும் பிரகாசிக்கட்டும்; சமூகச் சேவையின் ஒளி தலைமுறைகள் தாண்டி பரவட்டும்.

இந்த அருமையான வாய்ப்பை வழங்கிய அனைவருக்கும் மீண்டும் என் மனமார்ந்த நன்றிகள்.

- S.அகமது நவவி, மாநில பொதுச் செயலாளர், SDPI.

01/08/2026

SDPI கட்சியின் 10வது தமிழ்ச்சுடர் விருதுகள் வழங்கும் விழா! - சிறந்த ஆளுமைகளுக்கு விருதுகள் வழங்கி கெளரவிப்பு!

எஸ்டிபிஐ கட்சியின் சார்பாக சிறந்த ஆளுமைகளை கௌரவிக்கும் விதத்திலும், ஊக்குவிக்கும் வகையிலும் கடந்த 9 ஆண்டுகளாக உரியவர்களை தேர்வு செய்து, தேர்ந்தெடுக்கப்பட்ட ஆளுமைகளுக்கு தமிழ்ச்சுடர் விருதுகள் வழங்கி கெளரவித்து வருகின்றது. அந்த வரிசையில் இந்த ஆண்டும் (2026) சிறந்த ஆளுமைகளுக்கு தமிழ்ச்சுடர் விருதுகள் வழங்கி கெளரவிக்கும் விழா சென்னை புரசைவாக்கம் ஒய்எம்சிஏ அரங்கில் இன்று (ஆக.01) நடைபெற்றது.

எஸ்டிபிஐ கட்சியின் மாநில துணைத் தலைவர் அச.உமர் பாரூக் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆளுமைகளுக்கு எஸ்டிபிஐ கட்சியின் தமிழ்ச்சுடர் விருதுகளை வழங்கி கெளரவித்தார். இந்நிகழ்ச்சியில் கோஸ்டல் எனர்ஜி பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும், யுனைடெட் எகனாமிக் ஃபோரத்தின் தலைவருமான திரு. ஏ.ஆர்.அகமது புஹாரி அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார்.

மேலும், எஸ்டிபிஐ கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் ரவிச்சந்திரன், மாநில பொதுச்செயலாளர்கள் நிஜாம் முகைதீன், அகமது நவவி, அபுபக்கர் சித்திக், ஏ.கே.கரீம், மாநில செயலாளர்கள் ஏ.எஸ்.ஷபீக் அஹம்மது, பாஸ்டர் மார்க், நஜ்மா பேகம், வழ,ஹஸ்ஸான், மாநில பொருளாளர் முஸ்தபா, வர்த்தகர் அணி மாநில தலைவர் அமீர் ஹம்ஸா, மாநில செயற்குழு உறுப்பினர்கள் ரத்தினம், பஷீர் சுல்தான், முகமது ரஷீத், அஸ்கர் அலி, மகளிரணி மாநில தலைவர் பாத்திமா கனி, வழக்கறிஞர் அணி மாநில செயலாளர் ராஜா முகமது, எஸ்டிடியூ மாநில தலைவர் ஹசன் பாபு, யங் டெமாக்ரட்ஸ் மாநில ஒருங்கிணைப்பாளர் அபுபக்கர் சித்தீக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அதேபோல், மத்திய சென்னை மாவட்ட தலைவர் இஸ்மாயில், சென்னை மேற்கு மாவட்ட தலைவர் செய்யது அஹமது, வடசென்னை வடக்கு மாவட்ட தலைவர் பூட்டோ மைதீன், வடசென்னை தெற்கு மாவட்ட தலைவர் கோல்டு ரபிக், வடசென்னை மேற்கு மாவட்ட தலைவர் சீனி முகமது, தென்சென்னை வடக்கு மாவட்ட தலைவர் அப்துல் ரசாக், தென்சென்னை தெற்கு மாவட்ட தலைவர் முகமது பிலால், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட தலைவர் சாதிக், திருவள்ளூர் மேற்கு மாவட்டத் தலைவர் முகம்மது சலீம், செங்கல்பட்டு வடக்கு மாவட்ட தலைவர் மாலிக், செங்கல்பட்டு தெற்கு மாவட்ட தலைவர் ஜூபைர் அலி, காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் ஜாபர் ஷெரீப் ஆகியோரும் முன்னிலை வகித்தனர்.

இவ்விழாவின் முக்கிய நிகழ்வாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆளுமைகளுக்கு எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் தமிழ்ச்சுடர் விருதுகளை வழங்கி கெளரவித்தார். அதன்படி கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் விருது அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்டவாரியத்தின் நிறுவன உறுப்பினர்களில் ஒருவரும், ஜமாத்தே இஸ்லாமி முன்னாள் மாநில தலைவருமான திரு. அப்துர் ரகீப் அவர்களுக்கும், மெளலானா அபுல் கலாம் ஆசாத் விருது சத்யபாமா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் வேந்தர் டாக்டர் திருமதி மரியஸீனா ஜான்சன் அவர்களுக்கும், டாக்டர் அம்பேத்கர் விருது மொழி அரசியல் ஆய்வாளர் முனைவர் சபுர் அலி அவர்களுக்கும், தந்தை பெரியார் விருது தமிழ்த் திரைக்கலைஞர் புரட்சித்தமிழன் திரு.சத்யராஜ் அவர்களுக்கும், பேரறிஞர் அண்ணா விருது மொழி உரிமைச் செயற்பாட்டாளர் திரு. ஆழி செந்தில்நாதன் அவர்களுக்கும், எஸ்டிபிஐ முன்னாள் தேசிய தலைவர் அறிவுக்கடல் சயீத் சாஹிப் விருது எஸ்டிபிஐ தேசிய செயலாளர் திரு.யாமுகைதீன் அவர்களுக்கும், வணிகமேதை பி.எஸ்.அப்துர் ரஹ்மான் விருது பிளாக் துலிப் குழுமத் தலைவர் திரு. முகமது யஹ்யா அவர்களுக்கும், புரட்சியாளர் பழனிபாபா விருது இந்திய தவ்ஹீத் ஜமாத் நிறுவனத் தலைவர் மறைந்த எஸ்.எம்.பாக்கர் அவர்களுக்கும், கவி கா.மு.ஷெரீப் விருது பன்னூலாசிரியர் திரு. சேயன் இப்ராகிம் அவர்களுக்கும், அன்னை தெரேசா விருது சமூகச் செயற்பாட்டாளர் ஜாஸ்மின் அபுபக்கர் அவர்களுக்கும் எஸ்டிபிஐ மாநில தலைவர் நெல்லை முபாரக் வழங்கி கெளரவித்தார்.

விருதுகளை வழங்கிப் பேசிய எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் அவர்கள் தெரிவித்ததாவது:

"கடந்த 2017-ஆம் ஆண்டு முதல், பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் சிறந்த ஆளுமைகள் மற்றும் சமூகச் சேவையாளர்களைக் கண்டறிந்து, தலைவர்களின் பெயரிலான விருதுகளை வழங்கி எஸ்டிபிஐ கட்சி கௌரவித்து வருகிறது. எவ்வித அரசியல் உள்நோக்கமும் இன்றி, இவர்களது பணி சமூகத்திற்கு மிக அத்தியாவசியமானது என்பதை உணர்ந்தே இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. தற்போதைய நாட்டின் சூழ்நிலையில், இத்தகைய சான்றோர்களின் சேவை நாட்டிற்கு இன்னும் அதிகமாகத் தேவை என்பதையும், அவர்கள் ஆற்ற வேண்டிய சமூகக் கடமையை நினைவூட்டும் விதமாகவுமே இந்த அங்கீகாரத்தை அளிக்கிறோம். அந்த எதிர்பார்ப்பை அவர்கள் சிறப்பாக நிறைவேற்றுவார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. விருது பெற்ற அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்." என்றார்.

இவ்விழாவில் எஸ்டிபிஐ கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள், பொதுமக்கள் உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

#தமிழ்ச்சுடர்2026

31/07/2026

SDPI கட்சியின் 10 வது தமிழ்ச்சுடர் விருதுகள் வழங்கும் விழாவில், தொழிலதிபர் உயர்திரு A.R அகமது புஹாரி அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்.

31/07/2026


#தமிழ்ச்சுடர்2026

30/07/2026

தேசபக்தியை சிறைத் தண்டனையால் திணிக்க முடியாது: SDPI

'வந்தே மாதரம்' சட்டத்திருத்தம் கடுமையான அரசியல்சாசனக் கவலைகளை எழுப்புகிறது!

வந்தே மாதரம் பாடலை அவமதித்தால் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை வழங்க வழி வகுக்கும் 'தேசிய கௌரவ அவமதிப்பு தடுப்பு திருத்த மசோதா 2026’ நாடாளுமன்றத்தில் குறுக்கு வழியில் நிறைவேற்றப்பட்டிருப்பது குறித்து எஸ்டிபிஐ கட்சியின் தேசியப் பொதுச்செயலாளர் முகம்மது அஷ்ரஃப் தனது ஆழ்ந்த கவலையை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த சட்டத் திருத்தம் பேச்சுரிமை, தனி மனித சுதந்திரம் மற்றும் வழிகாட்டு உரிமையை வழங்கும் அரசியல் சாசன பிரிவுக்கு எதிரானது. தேசபக்தியைச் சட்டங்கள் மூலமாகவோ, சிறைத்தண்டனைக்கு பயமுறுத்தியோ திணிக்க முடியாது. தாய்நாட்டின் மீதான பற்று என்பது தண்டனைக்குரிய பயத்தால் வருவதல்ல; அது மனதார, உணர்வுபூர்வமாக எழ வேண்டும்.

இந்தியா பன்முகத்தன்மையும் மதச்சார்பின்மையும் கொண்ட ஒரு குடியரசு நாடு. இங்கே எந்தவொரு குடிமகனும் தனது மனசாட்சி சார்ந்த கருத்துகளுக்காகக் குற்றவாளியாக்கப்படக் கூடாது. பொது அமைதியைப் பாதுகாக்க ஏற்கனவே போதுமான சட்டங்கள் இருக்கும்போது, இந்த புதிய குற்றவியல் சட்டப்பிரிவு தேவையற்றது. மேலும், இது மாற்றுக்கருத்து தெரிவிப்பவர்களுக்கு எதிராகத் தவறாகப் பயன்படுத்தப்படவும் வாய்ப்புள்ளது.

வெறும் அடையாளப்பூர்வமான குற்றவியல் சட்டங்களை உருவாக்குவதை விட்டுவிட்டு, வேலையில்லாத் திண்டாட்டம், விலைவாசி உயர்வு, கல்வி மற்றும் மக்கள் நலன் சார்ந்த அத்தியாவசியப் பிரச்சினைகளில் நாடாளுமன்றம் கவனம் செலுத்த வேண்டும். எனவே, ஒன்றிய அரசு இந்தச் சட்டத்திருத்தத்தைத் திரும்பப் பெற்று, அரசியல்சாசன உரிமைகளையும் ஜனநாயக மதிப்பீடுகளையும் நிலைநிறுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

28/07/2026

BriyaniPhopia Janata party

பிரியாணி சாப்பிட்டாலும் குற்றம்...
பிரியாணி கொடுத்தாலும் குற்றம்...

பிரியாணியை வைத்து வெறுப்பு அரசியல் செய்வதுதான் சங்கி கூட்டத்தின் முழுநேர வேலையாகிவிட்டது.

இப்படியே போனால் BJP மாற்றி "BriyaniPhopia Janata Party" என்று வைத்துக்கொள்ளலாம்!

27/07/2026

2026 தமிழ் சுடர் விருது
வாருங்கள் வாழ்த்துங்கள்

27/07/2026

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா:

ஆளுநரின் அறிவுறுத்தல் கூட்டாட்சிக்கு விரோதமானது: எஸ்டிபிஐ கட்சி கண்டனம்!

இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில பொதுச் செயலாளர் நிஜாம் முகைதீன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பல தசாப்தங்களாகப் பின்பற்றப்பட்டு வரும் பண்பாட்டு மரபுகளைக் காலில் போட்டு மிதிக்கும் வகையில், தமிழ்த்தாய் வாழ்த்தைப் பின்னுக்குத் தள்ளி புதிய வரிசையைப் பின்பற்ற வலியுறுத்தியுள்ள ஆளுநரின் நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது.

மாநிலத்தின் பல்கலைக்கழகங்கள், சட்டமன்றம் மற்றும் அரசு விழாக்களில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்தும், நிகழ்வின் நிறைவில் தேசிய கீதமும் இசைக்கப்படுவதே தமிழ்நாட்டின் மரபும் சட்டப்பூர்வ நடைமுறையும் ஆகும். தமிழ்த்தாய் வாழ்த்து இயற்றிய மனோன்மணியம் சுந்தரனார் பெயரிலமைந்த பல்கலைக்கழகத்திலேயே, அந்தத் தமிழ்த்தாய் வாழ்த்தைப் புறந்தள்ளத் துணிவது தமிழ் மக்களின் உணர்வை உரசிப் பார்க்கும் செயலாகும்.

ஒன்றிய அரசால் நியமிக்கப்படும் ஆளுநர்கள், மாநில அரசுகளின் இறையாண்மையையும் பண்பாட்டு உரிமைகளையும் மதித்துச் செயல்பட வேண்டுமே தவிர, தங்களின் அதிகார எல்லையை மீறி மாநில மொழிக்கும் உணர்வுக்கும் எதிராகத் தன்னிச்சையாக முடிவெடுப்பது கூட்டாட்சித் தத்துவத்திற்கு முற்றிலும் விரோதமானது. மாநில மொழிகளுக்கும் பண்பாடுகளுக்கும் முன்னுரிமை அளிப்பதே இந்திய நாட்டின் பன்முகத்தன்மையைப் பாதுகாக்கும். அதைச் சிதைக்கும் வகையில் செயல்படும் ஆளுநரின் இந்த உரிமை மீறல் போக்கை எஸ்டிபிஐ கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.

பல்கலைக்கழக நிர்வாகமும் மாநில அரசும் ஆளுநரின் இந்தத் தன்னிச்சையான உத்தரவுக்குப் பணியாமல், மாநிலத்தின் பாரம்பரிய மரபையும் தமிழ்த்தாய் வாழ்த்தின் முதன்மைத்துவத்தையும் உறுதியோடு நிலைநிறுத்த வேண்டும் என எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

26/07/2026

The Flag Leads. 💚❤️

Address

SDPI H. O, NO. 4/7 IBRAHIM SAHIB Street , MANNADY CHENNAI/1
Chennai
600001

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ahamed Navavi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Ahamed Navavi:

Shortcuts

Share