01/08/2026
SDPI கட்சியின் 10வது தமிழ்ச்சுடர் விருதுகள் வழங்கும் விழா! - சிறந்த ஆளுமைகளுக்கு விருதுகள் வழங்கி கெளரவிப்பு!
எஸ்டிபிஐ கட்சியின் சார்பாக சிறந்த ஆளுமைகளை கௌரவிக்கும் விதத்திலும், ஊக்குவிக்கும் வகையிலும் கடந்த 9 ஆண்டுகளாக உரியவர்களை தேர்வு செய்து, தேர்ந்தெடுக்கப்பட்ட ஆளுமைகளுக்கு தமிழ்ச்சுடர் விருதுகள் வழங்கி கெளரவித்து வருகின்றது. அந்த வரிசையில் இந்த ஆண்டும் (2026) சிறந்த ஆளுமைகளுக்கு தமிழ்ச்சுடர் விருதுகள் வழங்கி கெளரவிக்கும் விழா சென்னை புரசைவாக்கம் ஒய்எம்சிஏ அரங்கில் இன்று (ஆக.01) நடைபெற்றது.
எஸ்டிபிஐ கட்சியின் மாநில துணைத் தலைவர் அச.உமர் பாரூக் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆளுமைகளுக்கு எஸ்டிபிஐ கட்சியின் தமிழ்ச்சுடர் விருதுகளை வழங்கி கெளரவித்தார். இந்நிகழ்ச்சியில் கோஸ்டல் எனர்ஜி பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும், யுனைடெட் எகனாமிக் ஃபோரத்தின் தலைவருமான திரு. ஏ.ஆர்.அகமது புஹாரி அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார்.
மேலும், எஸ்டிபிஐ கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் ரவிச்சந்திரன், மாநில பொதுச்செயலாளர்கள் நிஜாம் முகைதீன், அகமது நவவி, அபுபக்கர் சித்திக், ஏ.கே.கரீம், மாநில செயலாளர்கள் ஏ.எஸ்.ஷபீக் அஹம்மது, பாஸ்டர் மார்க், நஜ்மா பேகம், வழ,ஹஸ்ஸான், மாநில பொருளாளர் முஸ்தபா, வர்த்தகர் அணி மாநில தலைவர் அமீர் ஹம்ஸா, மாநில செயற்குழு உறுப்பினர்கள் ரத்தினம், பஷீர் சுல்தான், முகமது ரஷீத், அஸ்கர் அலி, மகளிரணி மாநில தலைவர் பாத்திமா கனி, வழக்கறிஞர் அணி மாநில செயலாளர் ராஜா முகமது, எஸ்டிடியூ மாநில தலைவர் ஹசன் பாபு, யங் டெமாக்ரட்ஸ் மாநில ஒருங்கிணைப்பாளர் அபுபக்கர் சித்தீக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அதேபோல், மத்திய சென்னை மாவட்ட தலைவர் இஸ்மாயில், சென்னை மேற்கு மாவட்ட தலைவர் செய்யது அஹமது, வடசென்னை வடக்கு மாவட்ட தலைவர் பூட்டோ மைதீன், வடசென்னை தெற்கு மாவட்ட தலைவர் கோல்டு ரபிக், வடசென்னை மேற்கு மாவட்ட தலைவர் சீனி முகமது, தென்சென்னை வடக்கு மாவட்ட தலைவர் அப்துல் ரசாக், தென்சென்னை தெற்கு மாவட்ட தலைவர் முகமது பிலால், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட தலைவர் சாதிக், திருவள்ளூர் மேற்கு மாவட்டத் தலைவர் முகம்மது சலீம், செங்கல்பட்டு வடக்கு மாவட்ட தலைவர் மாலிக், செங்கல்பட்டு தெற்கு மாவட்ட தலைவர் ஜூபைர் அலி, காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் ஜாபர் ஷெரீப் ஆகியோரும் முன்னிலை வகித்தனர்.
இவ்விழாவின் முக்கிய நிகழ்வாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆளுமைகளுக்கு எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் தமிழ்ச்சுடர் விருதுகளை வழங்கி கெளரவித்தார். அதன்படி கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் விருது அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்டவாரியத்தின் நிறுவன உறுப்பினர்களில் ஒருவரும், ஜமாத்தே இஸ்லாமி முன்னாள் மாநில தலைவருமான திரு. அப்துர் ரகீப் அவர்களுக்கும், மெளலானா அபுல் கலாம் ஆசாத் விருது சத்யபாமா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் வேந்தர் டாக்டர் திருமதி மரியஸீனா ஜான்சன் அவர்களுக்கும், டாக்டர் அம்பேத்கர் விருது மொழி அரசியல் ஆய்வாளர் முனைவர் சபுர் அலி அவர்களுக்கும், தந்தை பெரியார் விருது தமிழ்த் திரைக்கலைஞர் புரட்சித்தமிழன் திரு.சத்யராஜ் அவர்களுக்கும், பேரறிஞர் அண்ணா விருது மொழி உரிமைச் செயற்பாட்டாளர் திரு. ஆழி செந்தில்நாதன் அவர்களுக்கும், எஸ்டிபிஐ முன்னாள் தேசிய தலைவர் அறிவுக்கடல் சயீத் சாஹிப் விருது எஸ்டிபிஐ தேசிய செயலாளர் திரு.யாமுகைதீன் அவர்களுக்கும், வணிகமேதை பி.எஸ்.அப்துர் ரஹ்மான் விருது பிளாக் துலிப் குழுமத் தலைவர் திரு. முகமது யஹ்யா அவர்களுக்கும், புரட்சியாளர் பழனிபாபா விருது இந்திய தவ்ஹீத் ஜமாத் நிறுவனத் தலைவர் மறைந்த எஸ்.எம்.பாக்கர் அவர்களுக்கும், கவி கா.மு.ஷெரீப் விருது பன்னூலாசிரியர் திரு. சேயன் இப்ராகிம் அவர்களுக்கும், அன்னை தெரேசா விருது சமூகச் செயற்பாட்டாளர் ஜாஸ்மின் அபுபக்கர் அவர்களுக்கும் எஸ்டிபிஐ மாநில தலைவர் நெல்லை முபாரக் வழங்கி கெளரவித்தார்.
விருதுகளை வழங்கிப் பேசிய எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் அவர்கள் தெரிவித்ததாவது:
"கடந்த 2017-ஆம் ஆண்டு முதல், பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் சிறந்த ஆளுமைகள் மற்றும் சமூகச் சேவையாளர்களைக் கண்டறிந்து, தலைவர்களின் பெயரிலான விருதுகளை வழங்கி எஸ்டிபிஐ கட்சி கௌரவித்து வருகிறது. எவ்வித அரசியல் உள்நோக்கமும் இன்றி, இவர்களது பணி சமூகத்திற்கு மிக அத்தியாவசியமானது என்பதை உணர்ந்தே இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. தற்போதைய நாட்டின் சூழ்நிலையில், இத்தகைய சான்றோர்களின் சேவை நாட்டிற்கு இன்னும் அதிகமாகத் தேவை என்பதையும், அவர்கள் ஆற்ற வேண்டிய சமூகக் கடமையை நினைவூட்டும் விதமாகவுமே இந்த அங்கீகாரத்தை அளிக்கிறோம். அந்த எதிர்பார்ப்பை அவர்கள் சிறப்பாக நிறைவேற்றுவார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. விருது பெற்ற அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்." என்றார்.
இவ்விழாவில் எஸ்டிபிஐ கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள், பொதுமக்கள் உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
#தமிழ்ச்சுடர்2026