07/08/2026
செங்கல்பட்டு மாவட்ட ஆய்வுக் கூட்டம் மற்றும் நலத்திட்டங்கள் வழங்கும் விழா......
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களின் அறிவுறுத்தல் அடிப்படையில் ஆய்வு கூட்டங்கள் அனைத்து துறையின் சார்பிலும் நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் செங்கல்பட்டு மாவட்ட சிறுபான்மையினர் நலத்துறை ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் வீரப்பன் ஐஏஎஸ் அவர்கள் தலைமையில் இன்று (04-08-2026) காலை நடைபெற்றது. மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சரவணன் வரவேற்புரை ஆற்றினார்.
மாண்புமிகு தமிழ்நாடு சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஏ.எம். ஷாஜஹான் அவர்கள் பங்கேற்று ஆய்வுகளை மேற்கொண்டார்.
மாண்புமிகு மனித வள மேலாண்மைத் துறை அமைச்சர் சரத்குமார் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்.
செங்கல்பட்டு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் தியாகராஜன் அவர்கள், திருப்போரூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் விஜயராஜ் அவர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
துறை அலுவலர்கள் நலத்திட்டங்கள் மற்றும் துறை சார்ந்த பணிகள் குறித்து விளக்கி கூறினர். சிறுபான்மை சமுதாயத்தை சார்ந்த பிரதிநிதிகள் தங்களது கோரிக்கைகளை எடுத்துரைத்தனர்.
தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்ட முஸ்லிம் உதவும் சங்கம் சார்பில் 400க்கும் அதிகமானோருக்கு சிறுதொழில் தொடங்கவும், கல்வி உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு நலத் திட்ட உதவிகளை மாண்புமிகு அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் வழங்கினர்.
செங்கல்பட்டு மாவட்ட முஸ்லிம் உதவும் சங்க செயலாளர் முகம்மது பெய்க் அவர்கள் நன்றியுரை ஆற்றினார்.