IUML Kanchipuram

IUML Kanchipuram IUML IT WING KANCHIPURAM DISTRICT

07/08/2026

செங்கல்பட்டு மாவட்ட ஆய்வுக் கூட்டம் மற்றும் நலத்திட்டங்கள் வழங்கும் விழா......

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களின் அறிவுறுத்தல் அடிப்படையில் ஆய்வு கூட்டங்கள் அனைத்து துறையின் சார்பிலும் நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் செங்கல்பட்டு மாவட்ட சிறுபான்மையினர் நலத்துறை ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் வீரப்பன் ஐஏஎஸ் அவர்கள் தலைமையில் இன்று (04-08-2026) காலை நடைபெற்றது. மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சரவணன் வரவேற்புரை ஆற்றினார்.

மாண்புமிகு தமிழ்நாடு சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஏ.எம். ஷாஜஹான் அவர்கள் பங்கேற்று ஆய்வுகளை மேற்கொண்டார்.

மாண்புமிகு மனித வள மேலாண்மைத் துறை அமைச்சர் சரத்குமார் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்.

செங்கல்பட்டு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் தியாகராஜன் அவர்கள், திருப்போரூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் விஜயராஜ் அவர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

துறை அலுவலர்கள் நலத்திட்டங்கள் மற்றும் துறை சார்ந்த பணிகள் குறித்து விளக்கி கூறினர். சிறுபான்மை சமுதாயத்தை சார்ந்த பிரதிநிதிகள் தங்களது கோரிக்கைகளை எடுத்துரைத்தனர்.

தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்ட முஸ்லிம் உதவும் சங்கம் சார்பில் 400க்கும் அதிகமானோருக்கு சிறுதொழில் தொடங்கவும், கல்வி உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு நலத் திட்ட உதவிகளை மாண்புமிகு அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் வழங்கினர்.

செங்கல்பட்டு மாவட்ட முஸ்லிம் உதவும் சங்க செயலாளர் முகம்மது பெய்க் அவர்கள் நன்றியுரை ஆற்றினார்.

04/07/2026

காயல்பட்டினம் நகராட்சி வார்டு
மறுவரையறை: தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையருடன் சந்திப்பு!

தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் நகராட்சி வார்டு
மறுவரையறை தொடர்பாக அனைத்து அரசியல் கட்சிகள், பொதுநல அமைப்புகள் ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில்
இன்று 3.7. 2026 வெள்ளி மாலை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் திருமதி ஜோதி நிர்மலா சாமி ஐஏஎஸ் அவர்களை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலாளர் கே. ஏ.எம் முகம்மது அபூபக்கர் எக்ஸ் எம்எல்ஏ தலைமையிலான குழுவினர் சந்தித்து கோரிக்கை மனு அளித்து உரையாடினர்.

காயல்பட்டினம் நகர அனைத்து அரசியல் கட்சிகள், அனைத்து பொது நல அமைப்புகள் கலந்து கொண்டு 29. 6. 2026 அன்று நிறைவேற்றிய தீர்மானத்தை தேர்தல் ஆணையரிடம் அளித்து விளக்கம் அளித்தனர்.

காயல்பட்டினம் நகராட்சியில் வார்டு எண்ணிக்கை பேரூராட்சியாக இருந்த காலம் தொட்டு 18 ஆக மட்டுமே இருந்து வருகிறது; மக்கள் தொகையும், வாக்காளர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ள நிலையிலும் இது மாற்றம் செய்யப்படவில்லை. இம்மாவட்டத்தின் பிற நகராட்சிகளில் வார்டு எண்ணிக்கை உயர்த்தப்பட்ட நிலையிலும் காயல்பட்டினத்தில் மட்டும் உயர்த்தப்படவில்லை.
சமீபத்தில் எடுக்கப்பட்ட எஸ் ஐ ஆர் என்ற வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்தின்படி 36540 வாக்காளர்கள் இருந்தும் காயல்பட்டினம் நகராட்சியின்வார்டுஎண்ணிக்கை மாற்றி அமைக்கப்படவில்லை. காயல்பட்டினம் நகராட்சியின் வார்டு எண்ணிக்கையை இன்றைய காலச் சூழ்நிலைக்கு ஏற்ப 36 வார்டுகளாக உயர்த்தி தர வேண்டும் என்ற கோரிக்கையை அப்போது அவர்கள் வலியுறுத்தினர்.

இதனைக் கேட்ட மாநிலத் தேர்தல் ஆணையர், நாட்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2011 க்கு பிறகு மீண்டும் நடைபெற இருப்பதால் 31.12.2025க்குப்பின் வார்டு மறு வரையறை செய்யக்கூடாது என மத்திய அரசின் தடை உத்தரவு இருப்பதால் உங்கள் கோரிக்கையின் முந்தைய கோப்புகளை பார்த்து ஆவண செய்வதாக குறிப்பிட்டார் .

காயல்பட்டினத்தில் வார்டு எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு தமிழ்நாடு அரசின் உறுதிமொழியின் அடிப்படையில் உரிய உத்தரவு பெறப்பட்டுள்ளதை குழுவினர் சுட்டிக்காட்டினர். இதனை கவனமாக கேட்ட மாநில தேர்தல் ஆணையர் தமிழ்நாடு அரசின் நகராட்சி செயலாளரை தொடர்பு கொண்டு கலந்து ஆலோசித்து ஆவன செய்வதாக உறுதி அளித்தார்.

இந்த சந்திப்பின்போது இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில செயலாளர் காயல் மகபூப், மாநில துணைச் செயலாளர் எஸ். ஏ. இப்ராஹிம் மக்கி, சமூக ஆர்வலர் ஏ.கே. முகம்மது யாசின் ஆகியோர் உடன் இருந்தனர். இக்குழுவினர் அடுத்து தமிழ்நாடு அரசு நகராட்சித்துறை செயலாளர் அவர்களை சந்தித்து பேச உள்ளனர் .

04/07/2026
04/07/2026
04/07/2026

வாணியம்பாடியில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி மையம் திறப்பு.

வாணியம்பாடி, ஜூன்.29- திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி சித்திகாபாத் பகுதியில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி மையத்தை சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பி. பாரூக் பாஷா ரிப்பன் வெட்டியும், குத்து விளக்கு ஏற்றி திறந்து வைத்தார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு கட்டி முடிக்கப்பட்ட இந்த மையத்தின் திறப்பு விழா நடைபெற்றதாக கூறப்பட்ட நிலையில், தற்போது சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பி. பாரூக் பாஷா ரிப்பன் வெட்டி மையத்தை திறந்து வைத்து, குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சிக்கு நகராட்சி பொறியாளர் சந்திரசேகர் தலைமை வகித்தார்.இதில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகரத் தலைவர் நரி முஹம்மது நயீம், துணை செயலாளர் சனாவுல்லா, கவுரவத் தலைவர் ஷமா ஷகீல் அஹ்மத் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

புதிய குழந்தை வளர்ச்சி மையம் மூலம் அப்பகுதி குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டது.

Address

Chennai

Alerts

Be the first to know and let us send you an email when IUML Kanchipuram posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share