16/06/2026
*மாண்புமிகு அமைச்சர் ஏ.எம். ஷாஜஹான் துரித நடவடிக்கையால் ஒரு வருடமாக துபாயில் சிக்கியிருந்த இராஜகிரி காதர் மீரான் தாயகம் திரும்பினார்*
ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் பகுதியில் பாபநாசம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ராஜகிரியை சேர்ந்த காதர் மீரான் என்பவர் பாஸ்போர்ட் பிரச்சினை காரணமாக ஒரு வருடமாக நாடு திரும்ப முடியாமல் தவித்து வந்துள்ளார். கடந்த ஒரு ஆண்டாக பல்வேறு தரப்பினரிடம் உதவி கோரியும் எந்தவித பலனும் கிடைக்காத நிலையில் கடந்த 01.06.2026 அன்று சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சரும், பாபநாசம் சட்டமன்ற உறுப்பினருமான மாண்புமிகு ஏ.எம். ஷாஜஹான் அவர்களை சந்தித்து காதர் மீரான் அவர்களின் தாயார் தனது மகனை மீட்டு தரக்கோரி கோரிக்கை மனு ஒன்றை அளித்தார்.
மனுவை பெற்றுக்கொண்ட அமைச்சர் அவர்கள் உடனடியாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் அயலக அமைப்பான அமீரக காயிதே மில்லத் பேரவை நிர்வாகிகளை தொடர்புகொண்டு தேவையான உதவிகளை மேற்கொள்ள அறிவுறுத்தியதுடன், அமீரக தூதரக அதிகாரிகளுடனும் பேசி மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தினார்.
அமைச்சர் அவர்களின் தீவிர முயற்சியாலும், இறைவனின் கிருபையாலும் இராஜகிரி காதர் மீரான் அவர்கள் இன்று (16.06.2026) பாதுகாப்பாக தாயகம் திரும்பினார்.
துபாயில் ஒரு வருடமாக உதவிகள் இன்றி சிக்கித் தவித்த தனது மகனை மீட்டுக் கொண்டு வந்த அமைச்சர் ஏ.எம். ஷாஜஹான் அவர்களுக்கு காதர் மீரானின் தாயார் மற்றும் குடும்பத்தினர்கள் நன்றி தெரிவித்தனர்.