அஇஅதிமுக கடலூர் கிழக்கு மாவட்டம்

  • Home
  • India
  • Chidambaram
  • அஇஅதிமுக கடலூர் கிழக்கு மாவட்டம்

அஇஅதிமுக கடலூர் கிழக்கு மாவட்டம் அஇஅதிமுக கடலூர் கிழக்கு மாவட்டம்

05/09/2026
03/09/2026

சிதம்பரம் நடராஜர் கோயில் நான்கு மாட வீதிகளில் புதைவட மின்பாதை திட்டம் அண்ணன் கேஏ_பாண்டியன்_MA அவர்களின் தொடர் முயற்சிக்கு வெற்றி!

உலகப் பிரசித்தி பெற்ற #சிதம்பரம் அருள்மிகு #நடராஜர் திருக்கோயிலின் பாரம்பரியத்தைப் பாதுகாக்கவும், ஆனித் திருமஞ்சனம் மற்றும் மார்கழி ஆருத்ரா தரிசன தேரோட்ட விழாக்களின் போது பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் முன்னெடுக்கப்பட்ட மிக முக்கியமான திட்டம் நான்கு மாட வீதிகள் புதைவட மின்கம்பி திட்டம் ஆகும்.

கழகப் பொதுச்செயலாளர், மாண்புமிகு புரட்சித் தமிழர் #எடப்பாடியார் அவர்களின் தலைமையிலான பொற்கால அதிமுக ஆட்சியில் (2020–2021), அப்போதைய சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் உயர்திரு #கேஏ_பாண்டியன்_MA அவர்களின் தீவிர முயற்சியால் இத்திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு பெறப்பட்டது. முதற்கட்டமாக தெற்கு வீதி மற்றும் மேல வீதிகளில் புதைவட மின்கம்பி அமைக்கும் பணிகள் வெற்றிகரமாக முடிக்கப்பட்டன.

2023 ஆம் ஆண்டில் சிதம்பரம் தொகுதி மக்களால் இரண்டாவது முறையாக சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அண்ணன் கே.ஏ_பாண்டியன்_MA அவர்கள், விடுபட்ட புதைவட மின்கம்பி திட்டத்தை கீழ வீதி மற்றும் வடக்கு வீதிகளிலும் பணிகளை உடனே தொடங்கிட அப்போதைய மின்சாரத் துறை அமைச்சரிடம் நேரடி கோரிக்கை விடுத்தார். அதனடிப்படையில் பணிகளை விரைந்து முடிப்பதாகத் துறைரீதியான உத்தரவாதமும் அளிக்கப்பட்டது.

சிதம்பரம் தொகுதி மக்களின் நலனுக்காகவும், நடராஜர் கோயிலின் பாதுகாப்புக்காகவும் அண்ணன் கே.ஏ_பாண்டியன்_MA அவர்கள் தொடர்ந்து முன்னெடுத்த மக்கள் நலப் பணிகளின் தொடர்ச்சியாக, தற்போது மீதமுள்ள பணிகளுக்கான நிதி ஒதுக்கீட்டு நடவடிக்கைகள் அதிகாரப்பூர்வமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

சிதம்பரம் மண்ணின் பாரம்பரியத்தைக் காக்க அயராது பாடுபடும் மக்கள் தலைவர் அண்ணன் கே.ஏ_பாண்டியன்_MA அவர்களுக்கு சிதம்பரம் தொகுதி மக்களின் சார்பாகவும் பக்தகோடிகளின் சார்பாகவும் நெஞ்சார்ந்த நன்றிகள்!


⚫⚪🔴 ⬛⬜🟥
்_தொழில்நுட்ப_பிரிவு🌱 #கடலூர்_கிழக்கு_மாவட்டம்🏴🏳🚩

11/06/2026

My heartfelt congratulations to the Hon’ble Prime Minister of India,
Thiru. Narendra Modi avl, on achieving a historic milestone by serving the nation and contributing to its development for 4,399 days as Prime Minister.

Having earned the overwhelming mandate of the people in three consecutive general elections,
Our Hon’ble Prime Minister has emerged as a globally respected statesman and a leader admired by nations across the world.

I extend my sincere best wishes to him for his continued dedicated service towards the growth, progress, and prosperity of our beloved motherland.

PMO India All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK)


இந்திய வரலாற்றில் புதியதோர் சாதனையாக அதிக நாட்கள் (4,399) பிரதமராக நாட்டின் வளர்ச்சிக்கு பணியாற்றி வரும் பாரத பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.

தொடர்ந்து மூன்று தேர்தல்களாக நாட்டு மக்களின் பெருவாரியான ஆதரவைப் பெற்று, உலக நாடுகள் போற்றும் ஆளுமையாகத் திகழும் மாண்புமிகு இந்தியப் பிரதமர் அவர்கள், தொடர்ந்து நமது தாய்த்திருநாட்டின் வளர்ச்சிக்கு அரும்பணியாற்றிட எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

எளிய மக்களின் கண்ணீரைத் துடைக்க,  #புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களால் தோற்றுவிக்கப்பட்டு,  #புரட்சித்தலைவி அம்மா அவர்க...
11/06/2026

எளிய மக்களின் கண்ணீரைத் துடைக்க, #புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களால் தோற்றுவிக்கப்பட்டு, #புரட்சித்தலைவி அம்மா அவர்களால் எஃகு கோட்டையாக வளர்க்கப்பட்டு புரட்சித் தமிழர் எடப்பாடி யார் அவர்களால் வழிநடத்தப்படும் இயக்கம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்.

நடைபெற்ற தேர்தல் பின்னடைவுகளைத் தொடர்ந்து, கழகத்தின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு, அதிகாரத்தின் உச்சங்களைச் சுவைத்துவிட்டு, சுயநலத்திற்காகத் தமிழக வெற்றிக் கழகம் போன்ற மாற்று முகாம்களில் தஞ்சம் புகுந்துள்ள சில முன்னணி நிர்வாகிகளின் செயல்பாடு, உண்மைத் தொண்டர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்று விலகிச் சென்றவர்கள் அடைந்த பதவிகளும் புகழும் அவர்கள் தனிமனிதராகச் சம்பாதித்தவை அல்ல; அவை #இரட்டைஇலை என்னும் மந்திரச் சின்னமும், கோடிக்கணக்கான தொண்டர்களின் ஓயாத உழைப்பும் தந்த பிச்சை.

தேர்தல் களத்தில் ஒரு வேட்பாளரின் வெற்றிக்காகத் தன் குடும்பத்தையும் பாராமல், வெயிலிலும் மழையிலும் சுவரொட்டி ஒட்டி, வீதி வீதியாக வாக்குச் சேகரிக்கும் எளிய தொண்டனை மதிக்காமல், சுயநலப் போக்கோடு கட்சி மாறுவது அப்பட்டமான #துரோகம்.

கழகத்தின் ஆட்சிக் காலத்தில் வாரியத் தலைவர் பதவிகளையும், அமைச்சர் நாற்காலிகளையும் அலங்கரித்துவிட்டு, சோதனையான நேரத்தில் ஓடி ஒளிபவர்களைக் காலம் ஒருபோதும் #மன்னிக்காது.

#பதவி சுகத்திற்காகவும், கடந்த காலத்தில் செய்த தவறுகளில் இருந்து தங்களைக் காத்துக் கொள்ள மாற்று முகாம்களில் தஞ்சம் புகும் சுயநலவாதிகள் அங்கிருந்து நாளை வேறு முகமிருக்கு செல்ல மாட்டீர்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்.

சுயநலத்திற்காக கட்சி மாறும் நீங்கள் வெறும் ‘அரசியல் அகதிகளாகவே’ நடத்தப்படுவீர்கள்.

தமிழ்நாட்டின் ஒவ்வொரு குக்கிராமத்திலும் கிளைக் கழக அமைப்பைக் கொண்டுள்ள ஒரே இயக்கம் அண்ணா திமுக மட்டுமே.

சுயநலவாதிகள் ஓடலாம்; ஆனால் இரட்டை இலைக்கான பாரம்பரிய வாக்கு வங்கியும், கொடிக்கணக்கான கழகத் தொண்டர்களின் பலமும் இன்னும் கழகத்தின் பக்கமே உள்ளது.

பதவி சுகத்தை அனுபவித்தவர்கள் கட்சியை விட்டு செல்வதால் கட்சிக்கு நஷ்டமில்லை மாறாக கட்சிக்காக உழைக்கும் அடிமட்டத் தொண்டர்களுக்குப் புதிய தலைமைப் பொறுப்புகள் கிடைக்க இதுவே வாய்ப்பாக அமையும்.
தற்போது கழகத்தை எஃகுக் கோட்டையாக நின்று வழிநடத்தி வரும் மாண்புமிகு கழக பொதுச்செயலாளர், புரட்சித்தமிழர் எடப்பாடியார் அவர்களின் தலைமைத்துவமே கழகத்தின் மாபெரும் பலம்.

#எடப்பாடியார் அவர்கள் ஒரு சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்து, கிளைக் கழகச் செயலாளராகத் தன் அரசியல் வாழ்வைத் தொடங்கி, படிப்படியாக உயர்ந்தவர்.

அதிகாரப் பதவிகளில் இருப்பவர்களின் சுயநலப் போக்குகளையும், அடிமட்டத் தொண்டனின் மனக்குமுறல்களையும் அவரளவுக்கு அறிந்தவர் எவரும் இல்லை.

2017 முதல் 2021 வரையிலான அவரது ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட உள்கட்டமைப்புத் திட்டங்கள், குடிமராமத்துத் திட்டங்கள், விவசாயக் கடன்கள் தள்ளுபடி மற்றும் 7.5% மருத்துவ உள்ஒதுக்கீடு போன்றவை மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளன. தற்போதைய அரசின் நிர்வாகத் திறமையின்மையோடு ஒப்பிட்டுப் பார்க்கும் போது, மக்கள் எடப்பாடியாரின் பொற்கால ஆட்சியையே மீண்டும் விரும்புகின்றனர்.

எத்தனையோ சவால்கள், அரசியல் சூழ்ச்சிகளைத் தாண்டி கட்சியை ஒற்றைத் தலைமையின் கீழ் ஒருங்கிணைத்த பெருமை புரட்சித் தமிழர் எடப்பாடி யார் அவர்களுக்கு மட்டுமே உண்டு.

துரோகிகளின் வெளியேற்றத்தால் கழகத்தின் வேர்களை அசைக்க முடியாது.

கோடிக்கணக்கான தொண்டர்கள் இருக்கும் வரை அண்ணா திமுகவை எந்தக் கொம்பனாலும் வீழ்த்த முடியாது!

நடந்து முடிந்த தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை மதிப்போம்; அதே வேளையில் மக்களின் உண்மையான காவலர்களாகத் தொடர்ந்து களத்தில் நிற்போம்.

சவால்களைச் சாதனைகளாக்குவதே அண்ணா திமுக-வின் ரத்தம்.

எதிர்வரும் நாடாளுமன்ற மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களில் முழுமையான வெற்றியைப் பெற்று, புரட்சித்தமிழர் எடப்பாடியார் அவர்களின் தலைமையில் புதிய சரித்திரம் படைப்போம்!

#நாளை_நமதே!
#கழகத்தின்_வெற்றியே_நமது_இலக்கு!

சிதம்பரம் சட்டமன்றத் தொகுதி மக்கள் அளித்துள்ள தீர்ப்பை நாங்கள் முழு மனதுடன், தலைவணங்கி ஏற்றுக் கொள்கிறோம்.தேர்தல் முடிவு...
04/05/2026

சிதம்பரம் சட்டமன்றத் தொகுதி மக்கள் அளித்துள்ள தீர்ப்பை நாங்கள் முழு மனதுடன், தலைவணங்கி ஏற்றுக் கொள்கிறோம்.

தேர்தல் முடிவுகள் நமக்கு ஒரு தற்காலிக பின்னடைவை ஏற்படுத்தியிருக்கலாம்.

ஆனால், நம்முடைய உழைப்பும், நாம் கொண்ட லட்சியமும் எக்காலத்திலும் தோற்காது.

மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் ஏற்பட்ட இந்த முடிவை நாம் ஒரு பாடமாக எடுத்துக் கொண்டு, இரட்டிப்பு வேகத்துடன் மக்கள் பணியைத் தொடர வேண்டிய தருணம் இது.

அஇஅதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வாக்களித்த சிதம்பரம் தொகுதி வாக்காளப் பெருமக்கள் அனைவருக்கும் எனது சிரம் தாழ்ந்த நன்றிகளைச் சமர்ப்பிக்கிறேன்.

மக்களின் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு. உங்கள் ஒவ்வொருவரின் வாக்கும் எங்களுக்கு அளிக்கப்பட்ட அங்கீகாரம் மட்டுமல்ல, எதிர்காலத்தில் நாங்கள் செய்ய வேண்டிய பணிகளுக்கான கட்டளையும் ஆகும்.

வெயிலையும், மழையையும் பொருட்படுத்தாது, சிதம்பரம் தொகுதியின் மூலைமுடுக்கெல்லாம் இரட்டை இலைச் சின்னத்தைக் கொண்டு சேர்த்த கழகத்தின் ரத்தத்தின் ரத்தங்களான உடன்பிறப்புகளுக்கும், கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நீங்கள் சிந்திய வேர்வையும், காட்டிய விசுவாசமும் என்றென்றும் எனது இதயத்தில் நிலைத்திருக்கும்.

உங்களின் கடின உழைப்பு வீண் போகாது. மீண்டெழுவோம் பீனிக்ஸ் பறவையாய்.

"எனக்குப் பின்னாலும் இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மக்களுக்காகவே இயங்கும்" என்ற புரட்சித் தலைவி அம்மாவின் வைர வரிகளே நமது தாரக மந்திரம்.

தோல்விகள் நமக்கு ஒன்றும் புதியதல்ல. சரித்திரத்தில் பலமுறை சோதனைகளைச் சாதனைகளாக்கி பீனிக்ஸ் பறவையாய் மீண்டெழுந்த இயக்கம் நமது இயக்கம்.
நம்முடைய மக்கள் பணி இங்கிருந்துதான் இன்னும் வலுவாகத் தொடங்குகிறது. மீண்டும் வருவோம்... வெற்றிப் பாதையில் பீடு நடை போடுவோம்!

⚫⚪🔴
⬛⬜🟥
்_தொழில்நுட்ப_பிரிவு🌱
#கடலூர்_கிழக்கு_மாவட்டம்🏴🏳🚩

 ⚫⚪🔴 ⬛⬜🟥 ்_தொழில்நுட்ப_பிரிவு🌱 #கடலூர்_கிழக்கு_மாவட்டம்🏴🏳🚩
01/05/2026

⚫⚪🔴
⬛⬜🟥
்_தொழில்நுட்ப_பிரிவு🌱
#கடலூர்_கிழக்கு_மாவட்டம்🏴🏳🚩

உதிரத்தை உழைப்பாக்கி
உலகத்தை உயர்த்திடும்
உண்மை தொழிலாளியை
உள்ளத்தால் வணங்குவோம்
அனைவருக்கும் இனிய
உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்...

 #சிதம்பரம் சட்டமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையமான சி. முட்லூர் அரசு கலைக் கல்லூரியில் உள்ள கண்காணிப்பு கேமரா...
24/04/2026

#சிதம்பரம் சட்டமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையமான சி. முட்லூர் அரசு கலைக் கல்லூரியில் உள்ள கண்காணிப்பு கேமரா அறையில் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்ட அறையின் கேமரா பதிவினை சட்டமன்ற உறுப்பினரும் சிதம்பரம் தொகுதி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக வேட்பாளர் அண்ணன் #கேஏ_பாண்டியன்_MA அவர்கள் பார்வையிட்டார்.

⚫⚪🔴
⬛⬜🟥
்_தொழில்நுட்ப_பிரிவு🌱
#கடலூர்_கிழக்கு_மாவட்டம்🏴🏳🚩

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் நல்வாசிகளுடன்,கழகப் பொதுச் செயலாளர், தமிழகத்தின் நாளைய விடியல...
23/04/2026

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் நல்வாசிகளுடன்,
கழகப் பொதுச் செயலாளர், தமிழகத்தின் நாளைய விடியல், #புரட்சித்தமிழர் மாண்புமிகு அண்ணன் எடப்பாடியார் அவர்களின் ஆசியோடு, அ.இ.அண்ணா தி.மு.கழகத்தின் தலைமையிலான கூட்டணியின் சார்பில், சிதம்பரம் சட்டமன்றத் தொகுதி வேட்பாளராகப் போட்டியிட்ட எனக்கு, "இரட்டை இலை" சின்னத்திற்கு வாக்கு சேகரித்து, எழுச்சியுடன் நேரில் வந்து பிரச்சாரம் மேற்கொண்ட மாண்புமிகு அண்ணன் #எடப்பாடியார் அவர்களுக்கும்;
எங்களது வெற்றிக்காகத் தோள் கொடுத்து உழைத்த பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் டாக்டர் #அன்புமணி இராமதாஸ் எம்.பி. அவர்களுக்கும், மற்றும் கூட்டணி கட்சிகளின் மதிப்புமிக்க மாநில, மாவட்டத் தலைவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தேர்தல் களம் கண்ட நாள் முதல், வாக்குப்பதிவு நாளான இன்று வரை, சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாது அயர்வின்றி உழைத்த கழக உடன்பிறப்புகளுக்கும், கூட்டணி கட்சிகளின் நிருவாகிகளுக்கும், செயல் வீரர்களுக்கும், ரத்தத்தின் ரத்தமான தொண்டர்களுக்கும் எனது நன்றிகள்.

மேலும், ஜனநாயகக் கடமையை ஆற்றிய பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்கும், தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கும், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகளுக்கும் எனது பாராட்டுக்கள்.

எல்லாவற்றிற்கும் மேலாக, என் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த #சிதம்பரம் தொகுதி வாக்காளப் பெருமக்களுக்கும், நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த #நன்றி ஐ பணிவுடன் சமர்ப்பிக்கின்றேன்.

என்றென்றும் உங்கள் சேவையில்,
#கேஏ_பாண்டியன்_MA சிதம்பரம் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர்,
அ.இ.அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்.

செய்தி வெளியீடு:
⚫⚪🔴
⬛⬜🟥
்_தொழில்நுட்ப_பிரிவு🌱
#கடலூர்_கிழக்கு_மாவட்டம்🏴🏳🚩

22/04/2026

மக்களின் வேட்பாளர்! மண்ணின் மைந்தன்!

வெறும் வார்த்தைகள் அல்ல, கட்சிப் பாகுபாடின்றி அனைத்து தரப்பு மக்களின் பாராட்டுகளைப் பெற்ற ஒரே வேட்பாளர் நம் அண்ணன் #கேஏ_பாண்டியன்_MA அவர்கள்.

தகுதி உள்ளவருக்கு வாக்களிப்போம்!
தன்னலமற்ற தலைவரைத் தேர்ந்தெடுப்போம்!

#தொடரட்டும்_மக்கள்_பணி
#வெல்லட்டும்_இரட்டை_இலை
#சிதம்பரம் #மக்கள் #இரட்டை_இலை
#

Address

Chidambaram
608001

Website

Alerts

Be the first to know and let us send you an email when அஇஅதிமுக கடலூர் கிழக்கு மாவட்டம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share