25/12/2024
இன்று,
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நிர்பயா போன்றதொரு சம்பவம் அரங்கேறி, பெண்கள் பாதுகாப்பே கேள்விக்குறியாகியுள்ளது...
டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் திமுக அரசின் கபடநாடகம் மத்திய அரசின் விளக்கத்தால் அம்பலப்பட்டு இருக்கிறது...
இப்படி மக்கள் பிரச்சனைகள் எதைப்பற்றியும் பேசாமல், வழக்கம் போல, அறிவாலய முதலாளிகள் எழுதிக் கொடுத்த "அஇஅதிமுக- இரட்டை இலை" ஸ்க்ரிப்ட்டை ஒருசேர கையில் எடுத்துள்ளன ஊடகக் கைப்பாவைகள்.
"நடுநிலை" என்ற வார்த்தையைச் சொல்லக் கூட இன்றைய ஊடகங்களுக்கு நா கூசவேண்டும்.
ஊடக அறத்தை ஒட்டுமொத்தமாக திமுகவிற்கு விற்றுவிட்ட ஊடக வியாபாரிகள்!