06/04/2024
வரும் பாராளுமன்ற தேர்தல் 2024 முடிவுகள் எப்படியும் தாமரையின் பக்கம் தான் என்று சாமானியரும் உணர தொடங்கியுள்ளனர். இந்நிலையில் பாரத பிரதமர் உயர்திரு நரேந்திர மோடி சில நாட்களுக்கு முன்பே ஒளிபரப்பான தொலைக்காட்சி நிகழ்ச்சியில் "எனது இலக்கு 2047ல் பாரதத்தை வல்லரசாக்க தேவையான அனைத்து அடித்தளங்களும் வரும் ஆட்சியில் உருவாக்க உள்ளேன்" என சூளுரைத்தார். எனவே இது பல தலைமுறைகளின் தலைவிதியை நிர்ணயிக்கும் தேர்தலாகும்.
இன்னும் பாஜகவின் தேர்தல் அறிக்கை வெளியிட சில நாட்களே உள்ள நிலையில். ஓரளவிற்கு இந்து மக்கள் கட்சியானது பாரத பிரதமர் நரேந்திர மோடியின் சில முக்கியமான கனவு திட்டங்களை மக்களிடம் சேர்ப்பதில் பெருமை கொள்கிறது.
பாரதப் பிரதமரின் மாபெரும் பாரத கனவான அடுத்த ஐந்து வருட ஆட்சி பின்வரும் பல நூறு தலைமுறைகள் வல்லரசான பாரதத்தில் வாழ வழிவகை செய்கிறது.
அதனில் மிகவும் முதன்மையானது மக்களின் மின் கட்டண சுமையை தகர்த்தெறிவதே ஆகும். பிரதம மந்திரி சூரிய ஒளி ஆற்றல் திட்டம், சாமானிய மக்களும் தங்களது வீட்டுக்கு கூரையின் மீது சூரிய மின்னாற்றல் உற்பத்தி செய்யும் சூரிய ஒளிவாங்கி (solar panel) மற்றும் ஒளிமின்னழுத்தக்கலம் (photovoltaic cell) பொறுத்த 75% மானியம் மத்திய அரசு அளிக்க உள்ளது.
இது பெருகிவரும் மின் கட்டணத்திலிருந்து மக்களை காக்கும் மாபெரும் வரம் ஆகும். வீட்டு பயன்பாட்டிற்கு பின் உபரியாகும் ஒவ்வொரு யூனிட் மின்சாரத்தை அரசாங்கமே எடுத்துக் கொள்வது இத்திட்டத்தின் மணிமகுடமாகும்.
இதனால் மாசில்லா, தடையில்லா, கட்டணமில்லா மின்சாரத்தை மக்கள் தங்கு தடை இன்றி சுய சார்பாக தங்களது இல்லங்களிலேயே உற்பத்தி செய்வது மட்டுமல்லாமல் தேசமும் மின்மிகு வல்லரசாக மக்கள் மிகப்பெரும் பங்கு வகிப்பர்.
மாபெரும் பாரத கனவில் இரண்டாவது மிகப்பெரிய திட்டம். வாகன எரிபொருள்களில் அரிசி, கோதுமை, கரும்பு முதலியவற்றின் உப பயன்களை கணிசமான அளவு கலந்து விநியோகிப்பது. இதனால் வாகன சாரிகளுக்கு மாசு குறைவான விலை மலிவான பெட்ரோல் டீசல் கிடைக்க வழிவகை உண்டாகும்.
விவசாயிகள் மேற்கண்ட திட்டத்தினால் மாபெரும் லாபம் அடைவர். பாரதம் போன்றதொரு நாட்டிற்கு எரிபொருள் அன்றாடம் மாபெரும் அளவு தேவைப்படுகிறது. துணைப் பயன்கள் தயாரிக்க தேவையான அரிசி, கோதுமை மற்றும் கரும்பு அதிக அளவில் விவசாயிகளிடமிருந்து அரசே கொள்முதல் செய்வதனால் அவர்களின் வாழ்வாதாரம் பெருமளவு உயரும் வாய்ப்பு பிரகாசமாக மிளிர்கிறது.
மத்திய அரசின் எரிவாயு மற்றும் எண்ணெய் நிறுவனமானது 2030 ஆம் ஆண்டிற்குள் 20% எத்தனால் கலந்த எரிபொருள் விநியோகிக்க தொலைதூர இலக்கு நிர்ணயித்துள்ளது. இதனால் இயற்கையும், விவசாயமும், எரிபொருள் விலை கட்டுப்பாடும் பெருமளவில் பேணப்படும்.
மூன்றாவதாக பல்லாண்டு சர்ச்சைக்குரிய, பாரதம் பரி கொடுத்த கச்சத்தீவு, பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீர், அக்ஷய் சீன் ஆகிய இடங்களை மீண்டும் பாரதத் தாயிடம் இணைக்க வழிவகை செய்வது.
சுதந்திரத்திற்கு முன்பும் பின்பும் பல்வேறு சூழ்ச்சியினாலும் ஸ்திரமில்லா ஆட்சியினாலும் பல்வேறு பாரதத்தின் நிலப்பரப்புகள் அண்டை நாட்டவர்களால் பறிக்கப்பட்டன.
இதனில் எந்த நிபந்தனைகளோடு மேற்கண்ட நிலப்பரப்புகளை நாம் தாரை வார்த்தோமோ அந்நிபந்தனைகளின் படி எந்த அண்டை நாட்டவரும் நம்மிடம் நடந்து கொள்வதில்லை.
லட்சம் கோடி லட்சம் கோடியாக உயரும்
பயன்கள் இல்லாவிட்டாலும் தீமை இல்லாத நிலையாவது அண்டை நாட்டாரிடம் நிலவ வேண்டும். தற்போது சர்வதேச அளவில் உயர்ந்துள்ள பாரதத்தின் மதிப்பினால், இழந்த பகுதிகளை மீட்கும் சாத்தியக்கூறு மிகவும் அருகாமையில் உள்ளது.
அதிகரித்துள்ள பாரத ராணுவத்தின் வலிமை மற்றும் வெளியுறவு துறையின் செயல்பாடுகள் நமக்கு இப்பகுதிகளை நமதாக்கிக் கொள்ளும் நம்பிக்கையை பெருக்குகிறது.
மூன்றாம் மிகப் பெரும் பாரத கனவு பாரதத்தை முதலாம் மிகப்பெரிய பொருளாதார சக்தியாக உயர்த்துவது. 2014 ஆம் ஆண்டு பாரதப் பிரதமர் மோடி ஆட்சி அமைந்ததிலிருந்து இன்று வரை அவரது உழைப்பு பாரதத்தை மூன்றாம் மிகப்பெரிய பொருளாதார சக்தியாக உயர்த்தி உள்ளது.
பல சர்வதேச பொருளாதார நிறுவனங்கள் பாரத பொருளாதாரத்தின் வளர்ச்சியை கணித்து கூறுவது என்னவென்றால், 2034 ஆம் ஆண்டு பாரதம் ரூபாய் 364 லட்சம் கோடி பொருளாதாரம் உருப்பெறுமென்பதே.
பாரத பிரதமர் நரேந்திர மோடி வரப்போகும் ஐந்து வருட ஆட்சியில் இதனை கண்டிப்பாக செய்து முடிப்பார் என்பது கண்கூடு. வரிவசூல், வங்கி கட்டமைப்பு, தொழில் சட்டங்கள் போன்றவை கடந்த 10 ஆண்டுகளில் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.
இதனால் அந்நிய முதலீடு மற்றும் சுய தொழில் தொடங்கும் சூழ்நிலைகள் மிகப்பெரும் மாற்றத்தை சந்திக்கும். பொருளாதார வல்லரசாக பாரதம் 2047ல் வடிவெடுப்பதற்க்கு கண்டிப்பாக வரும் ஐந்து வருட ஆட்சி அடித்தளமாக அமையும்.
எனவே வாக்காளர்கள் கண்டிப்பாக தங்களது வாக்கை தாமரைக்கு அளித்து தங்களது வருங்கால தலைமுறை நன்கு முன்னேறிய தேசத்தில் வசிக்க வழிவகை செய்ய வேண்டும்.
இத்தேர்தலானது பாரதத்தின் நல்வாழ்வினை பல நூறு ஆண்டு நீடிப்பதற்கு நிர்ணயிக்கும் ஒரு மாபெரும் வாய்ப்பாகும். எனது சிந்தித்து வாக்களிப்போம்.