ஒருங்கிணைந்த கல்வி தொகுப்பூதிய பணியாளர்கள் நலச் சங்கம் - Sscswa

  • Home
  • India
  • Cuddalore
  • ஒருங்கிணைந்த கல்வி தொகுப்பூதிய பணியாளர்கள் நலச் சங்கம் - Sscswa

ஒருங்கிணைந்த கல்வி தொகுப்பூதிய பணியாளர்கள் நலச் சங்கம் - Sscswa ஒருங்கிணைவோம்...! உரிமை வெல்வோம்..!!!

*பத்திரிகை செய்தி*ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டப் பணியாளர்களுக்கு ரூ.25,000 குறைந்தபட்ச ஊதியம் வழங்கக் கோரிக்கை: முதலமை...
21/08/2026

*பத்திரிகை செய்தி*

ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டப் பணியாளர்களுக்கு ரூ.25,000 குறைந்தபட்ச ஊதியம் வழங்கக் கோரிக்கை: முதலமைச்சர் நேரடி தலையீடு செய்ய மனு!

​சென்னை:

தமிழ்நாடு சமக்ரா சிக்ஷா திட்டத்தில் 12 முதல் 20 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி வரும் Data Entry Operator மற்றும் Accountant உள்ளிட்ட தொகுப்பூதியப் பணியாளர்களுக்குக் குறைந்தபட்ச ஊதியமாக ரூ.25,000 நிர்ணயிக்க வேண்டும் என்றும், அடிப்படைப் பணி நலன்களை வழங்க முதலமைச்சர் நேரடியாகத் தலையிட வேண்டும் என்றும் கோரி முதலமைச்சருக்கு விரிவான மனு அனுப்பப்பட்டுள்ளது.
​முக்கியக் கோரிக்கைகள் மற்றும் அம்சங்கள்:

​ஊதிய முரண்பாடு:

இத்திட்டத்தில் முழுநேரமாகப் பணியாற்றும் தொகுப்பூதியப் பணியாளர்கள் பலர் இன்றளவும் மாதம் ரூ.14,000 முதல் ரூ.17,000 வரை மட்டுமே பெறுகின்றனர். முழுநேரப் தொகுப்பூதியப்பணியாளர்களுக்குக் குறைவான ஊதியம் வழங்கப்படும் பணியாளர்கள் இடையே ஊதிய முரண்பாடு களையப்பட வேண்டும்.

​ரூ.25,000 குறைந்தபட்ச ஊதியம்:

தற்போதைய விலைவாசி உயர்வுக்கு ஏற்ப, அடிப்படை வாழ்வாதாரத்தை உறுதி செய்ய உடனடியாக ரூ.25,000 மாத ஊதியமாக மறுநிர்ணயம் செய்ய வேண்டும்.

​தொழிலாளர் நலன்கள்:

பல ஆண்டுகளாகப் பணியாற்றி வரும் இவர்களுக்கு ESI மருத்துவப் பாதுகாப்பு, ஊதியத்துடன் கூடிய மருத்துவ விடுப்பு, அகவிலைப்படி (DA), மற்றும் ஆண்டு ஊதிய உயர்வு போன்ற அடிப்படைப் பலன்கள் உடனடியாக வழங்கப்பட வேண்டும்.

​நிதி ஒதுக்கீடு & நேரடி ஆய்வு:

"நிதி பற்றாக்குறை" என்ற காரணத்தைக் கூறாமல் முன்னுரிமை அடிப்படையில் நிதி ஒதுக்க வேண்டும். மேலும், வட்டார வள மையங்களில் (BRC) பணிபுரியும் பெரும்பான்மையான பெண் ஊழியர்களின் பணிச்சூழலை முதலமைச்சர் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் நேரில் ஆய்வு செய்து பணிப் பாதுகாப்பு வழங்க வேண்டும்.
​நீண்டகாலமாக நிலுவையில் உள்ள இக்கோரிக்கைகளை அரசு உடனடியாகப் பரிசீலித்து நியாயமான தீர்வு காணவேண்டும் எனப் பணியாளர்கள் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
Raj Mohan
Chief Minister of Tamil Nadu
Cuddalore Rajkumar

மாண்புமிகு வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சி துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள அன்பு அண்ணன் Cuddalore Rajkumar  அவர்கள...
22/05/2026

மாண்புமிகு வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சி துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள அன்பு அண்ணன் Cuddalore Rajkumar அவர்களுக்கு, ஒருங்கிணைந்த கல்வி தொகுப்பூதிய பணியாளர்கள் நலச் சங்கம் (SSCSWA) சார்பாக மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்."
ஒருங்கிணைந்த கல்வி தொகுப்பூதிய பணியாளர்கள் நலச் சங்கம் - Sscswa Chief Minister of Tamil Nadu Raj Mohan Actor Vijay ராஜ்குமார் கடலூர்

நெஞ்சார்ந்த வாழ்த்துகள்! 💐✨​தமிழக அரசின் மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் Raj Mohan   அவர்களுக்கு எங்களது ஒருங்கி...
16/05/2026

நெஞ்சார்ந்த வாழ்த்துகள்! 💐✨

​தமிழக அரசின் மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் Raj Mohan அவர்களுக்கு எங்களது ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் தொகுப்பூதிய பணியாளர்கள் நல சங்கம் சார்பாக நெஞ்சார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

​தங்களது சிறப்பான வழிகாட்டுதலில் தமிழகப் பள்ளிக் கல்வித்துறை புதிய சிகரங்களைத் தொட்டு, மிகச்சிறந்து விளங்க வாழ்த்துகிறோம். துறையின் வளர்ச்சிக்கும், கல்வி மேம்பாட்டிற்கும் எங்களது சங்கத்தின் முழு ஒத்துழைப்பு என்றும் இருக்கும்! 👍
​ #ஒருங்கிணைந்தபள்ளிகல்வி #வாழ்த்துகள்

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு எமது சங்கத்தின் சார்பில் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்!​"மக்களுக்கு லஞ்சமற்ற, ஊழலற்ற,...
10/05/2026

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு எமது சங்கத்தின் சார்பில் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்!

​"மக்களுக்கு லஞ்சமற்ற, ஊழலற்ற, சமூக நீதியுடன் கூடிய நல்லாட்சி" அமையும் என்ற நம்பிக்கையுடன் பொறுப்பேற்கும் மாண்புமிகு தமிழக முதல்வர் Chief Minister of Tamil Nadu திரு. சி. ஜோசப் விஜய் அவர்களை வாழ்த்தி மகிழ்கிறோம். 🤝

​எங்களது முக்கிய வேண்டுகோள்:

​✅ சம வேலைக்கு சம ஊதியம்!
✅ தொகுப்பூதிய பணியாளர்களின் பணிப் பாதுகாப்பு!
​புதிய ஆட்சியில் பல ஆண்டுகளாக உழைத்து வரும் தொகுப்பூதிய பணியாளர்களின் வாழ்வில் ஒளிவீசட்டும்! ✨

​இப்படிக்கு,

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி தொகுப்பூதிய பணியாளர் நலச் சங்கம் (SSCSWA).

தமிழக வெற்றி கழக அரசுக்கு வாழ்த்துகள்!​தமிழக சட்டமன்றத் தேர்தலில் மகத்தான வெற்றி பெற்று, புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்...
05/05/2026

தமிழக வெற்றி கழக அரசுக்கு வாழ்த்துகள்!

​தமிழக சட்டமன்றத் தேர்தலில் மகத்தான வெற்றி பெற்று, புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்கவுள்ள திரு. சி. ஜோசப் விஜய் அவர்களுக்கு எமது ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி தொகுப்பூதிய பணியாளர் நலச் சங்கத்தின் சார்பில் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
​மக்களுக்கு நேர்மையான, லஞ்சமற்ற ஆட்சியை வழங்குவீர்கள் என்ற நம்பிக்கையுடன், எங்களின் நீண்ட காலக் கோரிக்கையான "சம வேலைக்கு சம ஊதியம்" மற்றும் "தற்காலிகப் பணியாளர்களின் பணி பாதுகாப்பு" ஆகியவற்றை புதிய அரசு முன்னெடுத்து நிறைவேற்ற வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

​புதிய ஆட்சியில் பணியாளர் வாழ்வு சிறக்க வாழ்த்துகள்!
💛❤️💛

உழைப்பாளர் தின வாழ்த்துகளும்... தமிழக தொகுப்பூதியப் பணியாளர்களின் தீராத வலிகளும்!​உலகெங்கும் உழைப்பின் மேன்மையைப் போற்று...
30/04/2026

உழைப்பாளர் தின வாழ்த்துகளும்...
தமிழக தொகுப்பூதியப் பணியாளர்களின் தீராத வலிகளும்!

​உலகெங்கும் உழைப்பின் மேன்மையைப் போற்றும் இந்த இனிய மே தினத்தில், வியர்வை சிந்தி உழைக்கும் அனைத்துத் தொழிலாளர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால், இந்த உழைப்பாளர் தின கொண்டாட்டங்கள் தமிழகப் பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றும் தொகுப்பூதியப் பணியாளர்களுக்கு மட்டும் எட்டாக்கனியாகவே உள்ளது.

​நீடிக்கும் உழைப்புச் சுரண்டல்:

தமிழகத்தை மாறி மாறி ஆட்சி செய்யும் திராவிடக் கட்சிகள், குறிப்பாகப் பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றும் தற்காலிக மற்றும் தொகுப்பூதியப் பணியாளர்களுக்கு ஒரு நிறைவான வாழ்வாதாரத்தை இதுவரை அமைத்துத் தரவில்லை. ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தின் கீழ் (Samagra Shiksha) பணியாற்றும் 20,000-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் இன்று நவீன கால "உழைப்புச் சுரண்டலுக்கு" ஆளாகியுள்ளனர். அரசு நிர்ணயித்துள்ள சொற்ப ஊதியத்தில், பணிப் பாதுகாப்பு ஏதுமின்றி உழைக்கும் எங்களைப் போன்ற பணியாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது.

​வாக்குறுதியும் ஏமாற்றமும்:

கடந்த தேர்தலின் போது "பணி நிரந்தரம் செய்வோம்" என்ற வாக்குறுதியை நம்பி வாக்களித்த பணியாளர்களுக்கு, இன்று ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. தேர்தல் வாக்குறுதிகள் வெறும் அறிவிப்புகளோடு முடங்கிவிட்டன. ஐந்து ஆண்டுகள் நிறைவடையும் நிலையிலும், தொகுப்பூதியப் பணியாளர்களின் வாழ்வில் எந்த ஒளியும் ஏற்றப்படவில்லை.

​அகவிலைப்படி vs 5% ஊதிய உயர்வு:

ஒரே திட்டத்தில், ஒரே அலுவலகத்தில் பணிபுரியும் ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அரசு அவ்வப்போது அகவிலைப்படியை (DA) உயர்த்தி வழங்கி, அவர்களின் பொருளாதாரப் பாதுகாப்பை உறுதி செய்கிறது. ஆனால், அதே திட்டத்தில் அடிமட்ட நிலையில் பணியாற்றும் தொகுப்பூதியப் பணியாளர்களுக்கு மட்டும் வெறும் 5% ஊதிய உயர்வு என்பது எந்த வகையில் நியாயம்? மத்திய அரசு நிதி வழங்கவில்லை என்ற ஒற்றைக் காரணத்தைச் சொல்லி, எங்களின் வாழ்வாதாரத்தைச் சீரழிப்பதை அரசு நிறுத்த வேண்டும். எங்களுக்குத் தேவை வெறும் சதவீத உயர்வு அல்ல; "சம வேலைக்குச் சம ஊதியம்" அல்லது கௌரவமான ஒரு "நிலையான ஊதிய நிர்ணயம்" மட்டுமே!

​சங்கங்கள் முடக்கமும் சாபமும்:

தொகுப்பூதிய பணியாளர்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கும் சங்கக் கட்டமைப்புகள் திட்டமிட்டுச் சிதைக்கப்படுவது வேதனைக்குரியது.
குறிப்பாக, எனது மாவட்டத்தில் சிறப்பாகச் செயல்பட்டு வந்த சங்கத்தை முடக்கும் வகையில், முறையான கலந்தாய்வு இன்றி வெளிமாவட்டப் பணியாளர்களைக் கொண்டு வந்து, உள்ளூர் பணியாளர்களின் உரிமைகளைப் பறித்து, சங்கத்தையே கலைக்கச் செய்த அதிகாரிகளின் போக்கு கண்டிக்கத்தக்கது.

​எங்கள் மாவட்ட சங்கத்தை முடக்கம் செய்பவர்களுக்கு ஒன்று மட்டும் சொல்லிக் கொள்கிறோம்: எங்களின் சாபம் உங்களுக்குக் காலம் முழுவதும் வருத்தத்தை அளிக்கப் போகிறது! நசுக்கப்படும் உழைப்பாளர்களின் கண்ணீருக்கு காலம் பதில் சொல்லும்.

இறுதியில் :

ஆட்சி மாறினாலும் எங்களின் அவலநிலை மட்டும் மாறவில்லை.

இந்த மே தினத்தில் நாம் விடுக்கும் கோரிக்கை இதுதான்:

உழைப்பினைச் சுரண்டுவதை நிறுத்திவிட்டு, உழைப்பிற்கேற்ற சமமான ஊதியமும், பணிப் பாதுகாப்பும் வழங்க அரசு முன்வர வேண்டும்!

​உழைப்பவர்களுக்கே உலகம் சொந்தம்!
அனைவருக்கும் இனிய
மே தின வாழ்த்துகள்!


.

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி (Samagra Shiksha) - கடலூர் மாவட்ட நிர்வாகத்தின் பாரபட்சமான போக்கு!​கடலூர் மாவட்ட ஒருங்கிணைந்த...
20/03/2026

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி (Samagra Shiksha) - கடலூர் மாவட்ட நிர்வாகத்தின் பாரபட்சமான போக்கு!

​கடலூர் மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தில், தொகுப்பூதியத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கான சமீபத்திய கலந்தாய்வில் (Counseling) அரங்கேறியுள்ள குளறுபடிகள் மிகுந்த வேதனை அளிக்கிறது.

​📍 நடந்தது என்ன?

கடலூர் மாவட்டத்தில் கணினி விவரப் பதிவாளர்களுக்கு (Data Entry Operators) மட்டுமே கலந்தாய்வு நடத்தப்பட்டுள்ளது. ஆனால், அதே திட்டத்தின் கீழ் பணியாற்றும் கணக்காளர்களுக்கு (Accountants) இந்த வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. மேலும், வெளி மாவட்டங்களில் இருந்து பணி மாறுதல் (Transfer) மூலம் வந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ள நிலையில், இங்குள்ள கணக்காளர்களின் கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டுள்ளன.

​✊ பழிவாங்கும் நடவடிக்கையா?

கடந்த 5 ஆண்டுகளாகச் சங்க ரீதியாகத் திரண்டு, பணியாளர்களின் நலனுக்காகவும் உரிமைகளுக்காகவும் சமரசம் இன்றிப் போராடிய காரணத்தினால், தற்போது திட்டமிட்டே எங்களது உரிமைகள் பறிக்கப்படுகின்றன. இது தனிப்பட்ட நபர்களுக்கு எதிரான நடவடிக்கை மட்டுமல்ல, ஒட்டுமொத்த உழைப்பையும் கொச்சைப்படுத்தும் பழிவாங்கும் செயலாகும்.

​⚠️ மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு:

மற்ற மாவட்டங்கள் மௌனம் காக்கலாம், ஆனால் கடலூர் மாவட்டப் பணியாளர்களின் பங்களிப்பின்றி எந்தவொரு இலக்கையும் எட்ட முடியாது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

கலந்தாய்வு எங்களது அடிப்படை வாழ்வாதாரக் கோரிக்கைகளில் விளையாடுவது கண்டனத்திற்குரியது.
​எங்கள் உழைப்புக்கு மரியாதை கொடுங்கள்!

பாரபட்சமான போக்கைக் கைவிடுங்கள்! உரிமைகள் கிடைக்கும் வரை எங்களது குரல் ஓயாது.

​ #கடலூர் #ஒருங்கிணைந்தபள்ளிக்கல்வி #உரிமைப்போராட்டம்
சிகரம் சதிஷ் Anbil Mahesh Poyyamozhi Chief Minister of Tamil Nadu

ஏன் இந்த போராட்டம் ஆர்ப்பாட்டம். இதுவரை போராட்டம் ஆர்ப்பாட்டத்தில் இவர்கள் 20 வருடங்களாக சாதித்தது என்ன ?பணி நிரந்தரத்தி...
29/01/2026

ஏன் இந்த போராட்டம் ஆர்ப்பாட்டம்.

இதுவரை போராட்டம் ஆர்ப்பாட்டத்தில் இவர்கள் 20 வருடங்களாக சாதித்தது என்ன ?

பணி நிரந்தரத்திற்காக ஏன் இதுவரை இவர்கள் முழு மூச்சில் எதுவும் செயல்படவில்லை .

யாருடைய சுயநலத்திற்காக இவர்கள் அனைவரையும் அடிமைகளாக வைத்துள்ளார்கள் .

1000 குடும்பங்களை வீணடித்து இவர்கள் சாதிக்கப் போவது தங்கள் குடும்பத்திற்கு என்ன செய்யப் போகிறார்கள் என்பது தெரியவில்லை .

ஏன் சட்ட ஆலோசனைகள் மற்றும் சட்ட நுணுக்கங்களை ஒருபோதும் இவர்கள் அணுக மாட்டுகின்றார்கள்.

இவை அனைத்தும் அந்த சாடிஸ்டிகளுக்கு மட்டுமே தெரியும்.

29/01/2026

ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தில் பணி புரியும் தொகுப்பூதிய பணியாளர்களுக்கு சிறப்பு தேர்வு நடத்தி பணி வரன்முறை செய்ய கோரிக்கை வைக்க வேண்டும் ஏன்என்றால் ஏற்க்கனவே மாவட்ட வேலை வாய்ப்பு துறையின் தற்காலிகத் அடிப்படையில் பணிபுரிந்த தட்டச்சர்களுக்கு தமிழ்நாடு அரசு தேர்வாணையம் TNPSC மூலமாக சிறப்பு தேர்வு வைக்க பணி வரன்முறை செய்த அரசாணை வந்துள்ளது (தமிழ்நாடு பணியாளர்கள் தேர்வு ஆணையம் அறிவிக்கை 18/2024 நாள் ; 25.11.2024 அதனை அடிப்படையாக வைத்து நாமும் அரசிடம் எங்களுக்கும் சிறப்பு தேர்வு நடத்தி பணி வரன்முறை செய்ய கோரிக்கை வைக்க வேண்டும்.

ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்திட்டத்தில் பணிபுரியும் தொகுப்பூய மிக குறைந்த ஊதியமே பெற்று வருகிறார்கள் கணக்காளர்கள், கணினி விவர பதிவாளர், ஏனைய பணியாளர்கள் போன்ற பெரும்பான்மையான பணியாளர்களுக்கு 5% சதவீதம் ஊதியம் உயர்வு கிடைத்தால் 800 ரூபாய் இருந்து ரூபாய் 1000 வரை மட்டுமே எந்த பயனும் இல்லை ஆனால் அதிகம் ஊதியம் பெறும் பணியாளர்களுக்கு குறிப்பிட்ட ஊதிய உயர்வு கிடைக்கும்.

தற்பொழுது பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு ரூபாய். 2500 வழங்கியது போல நமக்கும் அனைவருக்கும் ரூபாய் 2500 சமமான ஊதிய உயர்வு வழங்கினால் அனைவரும் பயன்பெறலாம்.

24/08/2025

ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மயிலாடுதுறை மாவட்ட கணக்கு மற்றும் தணிக்கை மேலாளர் (பொறுப்பு) பணியாற்றிய
திரு கா.மோகன் அவர்கள் இன்று மாலை இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கின்றோம் அவரை இழந்து தவிக்கும் குடும்பதத்திற்கு அனைவரின் சார்பில் ஆழ்ந்த இரங்கல்கள் வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
😢😢

ஒருங்கிணைந்த கல்வி தொகுப்பூதிய பணியாளர்கள் நலச் சங்கம் - Sscswa

Address

3rd Street
Cuddalore
607001

Alerts

Be the first to know and let us send you an email when ஒருங்கிணைந்த கல்வி தொகுப்பூதிய பணியாளர்கள் நலச் சங்கம் - Sscswa posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to ஒருங்கிணைந்த கல்வி தொகுப்பூதிய பணியாளர்கள் நலச் சங்கம் - Sscswa:

Shortcuts

Share