மக்கள் அதிகாரக் கழகம்

மக்கள் அதிகாரக் கழகம் மக்கள் அதிகாரக் கழகம்
(1)

05/09/2026

நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் பரிந்துரையை குப்பையில் போட்டு வீசப்பட்டுவிட்டது !

தோழர் தாளமுத்து செல்வா
தூத்துக்குடி மாவட்டச் செயலாளர்
மக்கள் அதிகாரக் கழகம்

ஆசிரியர்கள், விவசாயிகள் மீதான போராட்ட வழக்குகள் ரத்து: அனைத்து காலகட்ட போராட்ட காலகட்ட போராட்ட வழக்குகளையும் ரத்து செய்ய...
05/09/2026

ஆசிரியர்கள், விவசாயிகள் மீதான போராட்ட வழக்குகள் ரத்து: அனைத்து காலகட்ட போராட்ட காலகட்ட போராட்ட வழக்குகளையும் ரத்து செய்ய வேண்டும் - மக்கள் அதிகாரக் கழகம்

05/09/2026

புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுகாவில் உள்ள வெள்ளனூர் ஊராட்சிக்குட்பட்ட ரங்கம்மாள் சத்திரம் கிராம பழங்குடியின நரிக்குறவர் மாணவிகளை சாதி ரீதியாக ஒடுக்குமுறை பேருந்தில் இருந்து கீழே தள்ளிவிட்ட 8ம் நம்பர் அரசு பேருந்து ஓட்டுநர் நடத்துனர் மீது எஸ்சி எஸ்டி சாதிய வன்கொடுமை வழக்குப் பதிவு செய்.

தோழர் டங்ஸ்டன் பிரகாஷ்
மாவட்டச் செயலாளர்
மக்கள் அதிகாரக் கழகம்
மதுரை கிழக்கு மாவட்டம்

04/09/2026

மக்கள் அதிகாரக் கழகம் - நெல்லை மக்கள் அதிகாரக் கழகம்

04/09/2026

புதிய ஜனநாயகம் – செப்டம்பர் 2026 | அச்சு இதழ்

புதிய ஜனநாயகத்தின் செப்டம்பர் 2026 மாத அச்சு இதழ் வெளிவந்துள்ளது. வாசகர்களும் தோழர்களும் வாங்கிப் படித்து ஆதரவு தருமாறு கேட்டுக் கொள்கிறோம்..

சந்தா பற்றிய விவரம் :
ஓராண்டு சந்தா – ரூ.360
இரண்டாண்டு சந்தா – ரூ.720
ஐந்தாண்டு சந்தா – ரூ.1,800

புதிய ஜனநாயகம் – செப்டம்பர் 2026 இதழின் அச்சுப் பிரதியைப் பெற கீழே குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும்.

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல்: [email protected]

அச்சு இதழ் விலை: ரூ.30 + தபால் செலவு
G-Pay மூலம் பணம் செலுத்த: 94446 32561

வங்கி மூலம் செலுத்த:
Bank : State Bank of India
Branch: Kodambakkam
Account Name: PUTHIYA JANANAYAGAM
Account No: 10710430715
IFS Code: SBIN0001444

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

தலையங்கம்: சட்டமன்றமா? வெட்டி அரட்டை மடமா?
முடிவுகள் எடுக்கப்படுவது எங்கே?

விஜய்யின் துரோக ஆட்சி!
நூறு நாட்களே சாட்சி!

பெருகிவரும் போதைக் கலாச்சாரம்:
பறிபோகும் உயிர்களும் த.வெ.க. அரசின் வெற்று விளம்பரங்களும்

மேகமலை மக்களை அகதிகளாக்கும் உச்சநீதிமன்றத் தீர்ப்பு:
தமிழ்நாட்டின் காடு-மலைகளை கார்ப்பரேட்டுகளுக்குத் தாரைவார்க்கும் சதி!

ஆறு வயதுக் குழந்தையைக் கண்டு அஞ்சும் பாசிஸ்டுகளின் ஆட்சி!
இனியும் நீடிக்க அருகதை உண்டா?

ஜார்க்கண்ட் அரசைப் பணியவைத்த மாணவர் போராட்டம்!

தேசிய பணமயமாக்கல் திட்டம் 2.0:
அம்பானி – அதானிகளிடம் அடகு வைக்கப்படும் இந்தியா

வரலாறு காணாத சர்க்கரை விலையேற்றம்:
பின்னால் ஒளிந்திருக்கும் பதுக்கலும் எத்தனால் கொள்ளையும்!

எஸ்.சி/எஸ்.டி. சட்டத்தை ஒழித்துக்கட்டத் துடிக்கும் உச்சநீதிமன்றம்

கோத்தகிரி அம்பாள் நகர் மக்களின் உரிமை முழக்கம் மலையெங்கும் எதிரொலிக்கட்டும்!

வெளிநாடுகளில் 37,000 இந்திய தொழிலாளர்கள் உயிரிழப்பு:
வேடிக்கை பார்க்கும் மோடி அரசு!

செங்கல்பட்டு: வர்க்க ஏற்றத்தாழ்வால் ஆணவப்படுகொலை செய்யப்பட்ட தலித் இளைஞர்!

அசாம் வெள்ளப் பேரழிவு: கனிமவளக் கொள்ளையும் பறிபோகும் உயிர்களும்!

நான்கு மாவட்டங்களில் மக்கள் அதிகாரக் கழகத்தின் புதிய கிளைகள் உதயம்!

தோழமையுடன்
நிர்வாகி,
புதிய ஜனநாயகம்.

04/09/2026
04/09/2026

கோத்தகிரி அம்பாள் நகர் மக்களின் உரிமை முழக்கம் மலையெங்கும் எதிரொலிக்கட்டும்!

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி வட்டம், கெங்கரை ஊராட்சியில் உள்ள அம்பாள் நகர் மலைக் கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. ஆதிதிராவிடர் மற்றும் அருந்ததியர் சாதியைச் சேர்ந்த இம்மக்கள் தங்களின் குடியிருப்பிலிருந்து முதன்மைச் சாலைக்கு செல்ல சாலை அமைத்துத் தரக்கோரி 40 ஆண்டுகளுக்கும் மேலாகப் பல கட்டப் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். கடந்த ஓராண்டாக மக்கள் அதிகாரக் கழகத்துடன் இணைந்து போராடி வருகின்றனர்.

இந்நிலையில், அம்பாள் நகர் மக்களுக்கு சாலை அமைத்துத்தரக் கோரி மக்கள் அதிகாரக் கழகம் சார்பாக கடந்த ஆகஸ்ட் 27 அன்று முதல் தொடர் உண்ணாநிலை, தொடர் முழக்கப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இப்போராட்டத்தில் மக்கள் அதிகாரக் கழகத்தின் மாநில இணைச் செயலாளர் தோழர் மாறன் மற்றும் கோத்தகிரி கிளைச் செயலாளர் தோழர் சண்முகநாதன் இருவரும் உண்ணாநிலை போராட்டத்தை மேற்கொண்டனர்.

இப்போராட்டப் பந்தலில் அம்பாள் நகரின் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என ஒட்டுமொத்த ஊர்மக்களும் இரவு பகலாகப் போராடினர். கோத்தகிரி பகுதியைச் சார்ந்த ஜனநாயக சக்திகள் இப்போராட்டத்திற்கு நேரடியாக வந்து ஆதரவளித்தனர். மக்கள் அதிகாரக் கழகம், பு.மா.இ.மு. உள்ளிட்ட புரட்சிகர அமைப்புகளைச் சார்ந்த தோழர்கள் போராட்டத்தை விளக்கி காணொளி பதிவிட்டு இப்போராட்டத்தை மக்களிடம் கொண்டுசென்றனர்.

இப்போராட்டமானது அதிகார வர்க்கத்திற்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது. எனவே, போராட்டத்தின் நான்காவது நாளான கடந்த ஆகஸ்ட் 30 அன்று உண்ணாநிலை போராட்டத்தில் ஈடுபட்டுவந்த இரு தோழர்களையும் அவர்களின் உடல்நிலையைக் காரணம்காட்டி மருத்துவமனையில் அனுமதித்தது. எனினும், தோழர்கள் இருவரும் மருத்துவமனையிலும் தங்களின் உண்ணாநிலை போராட்டத்தைத் தொடர்ந்தனர்.

மேலும், போலீசின் இந்நடவடிக்கை போராட்டத்தை எந்தவகையிலும் வலுவிழக்கச் செய்யவில்லை. தோழர்கள் அழைத்துச்செல்லப்பட்ட உடனேயே கோத்தகிரி கிளை இணைச் செயலாளர் தோழர் ஆறுமுகம், தோழர் அருணாச்சலம், தோழர் மோகன்ராஜ் மூவரும் போராட்டப் பந்தலில் உண்ணாநிலை போராட்டத்தைத் தொடங்கினர். இருவரின் உண்ணாநிலை போராட்டம் ஐவரின் போராட்டமாக வலுவடைந்தது! மேலும், தங்களின் கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால் மொத்த ஊர்மக்களும் உண்ணாநிலைப் போராட்டத்தை முன்னெடுப்போம் என்று மக்கள் அரசுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.

போராட்டத்தின் ஐந்தாவது நாளான ஆகஸ்ட் 31 அன்று மதியம் கோத்தகிரி அனைத்து கட்சிகள்-இயக்கங்கள் சார்பில் அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்பட்டு, மக்கள் கோரிக்கையை நிறைவேற்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது; வட்டாட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. இதனையடுத்து, மக்கள் போராட்டத்திற்கு பணிந்து, அம்பாள் நகர் மக்களுக்கு சாலை அமைத்துத் தருவதாக வட்டாட்சியர் கையொப்பமிட்டுக் கொடுத்தார். இது இப்போராட்டத்தின் முதல் கட்ட வெற்றியாகும். இதனை தொடர்ந்து மக்கள் அதிகாரக் கழகத் தோழர்கள் ஐவரும் தங்களின் உண்ணாநிலை போராட்டத்தை நிறைவு செய்தனர்.

கோத்தகிரி மக்களுடன் இணைந்து மக்கள் அதிகாரக் கழகம் முன்னெடுத்துவரும் இப்போராட்டமும் அதற்கு கிடைத்துள்ள முதல் கட்ட வெற்றியும் அம்பாள் நகர் மக்களுக்கானது மட்டுமல்ல. சுதந்திரம் பெற்றுவிட்டதாகச் சொல்லப்படுகின்ற இந்திய நாட்டில் சாலை வசதியின்றி கர்ப்பிணிப் பெண்களை தொட்டில் கட்டித் தூக்கிச் செல்லும் ஒவ்வொரு மலைக் கிராம மக்களுக்குமானது. சுடுகாடும் சுடுகாட்டுப் பாதையுமின்றி இறந்தவர்களின் உடலை சேற்றிலும் சகதியிலும் எடுத்துச்செல்லும் தலித் மக்களுக்குக்கானது. குடிநீர் வசதி, மின்சார வசதியின்றி இன்றி அல்லல்படும் அத்தனை உழைக்கும் மக்களுக்குமானது.

கோத்தகிரியின் அம்பாள் நகர் மக்களின் உரிமை முழக்கம் மலையெங்கும் எதிரொலிக்கட்டும்! செங்கொடி ஏந்திய மக்கள் போராட்டங்கள் நீலகிரி மலைகளெங்கும் பரவட்டும்!

ஆசிரியர் குழு, புதிய ஜனநாயகம்.

(புதிய ஜனநாயகம் – செப்டம்பர் 2026 இதழ்)

03/09/2026

ஆசிரியர்கள் மற்றும் விவசாயிகள் மீதான போராட்ட வழக்குகள் ரத்து என முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!

‎முந்தைய ஆட்சி காலங்களில் போடப்பட்ட போராட்ட வழக்குகள் அனைத்தும் ரத்து செய்யப்பட வேண்டும்!
மக்கள் அதிகாரக் கழகம் கோரிக்கை

பத்திரிகைச் செய்தி

03.09.2026

‎நேற்றைய நாள் (செப்டம்பர் 02, 2026) சட்டமன்றக் கூட்டத்தொடரில் விதி 110-இன் கீழ் முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவையில் வெளியிட்ட அறிவிப்பில், “கடந்த 2021 மே முதல் 2026 ஏப்ரல் வரை, தங்களது வாழ்வாதாரம், உரிமைகள் மற்றும் நியாயமான கோரிக்கைகளுக்காக அமைதியான முறையில் போராடிய விவசாயிகள் மற்றும் ஆசிரியர்கள் மீது பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளும் திரும்பப் பெறப்படும்” என்று அறிவித்தார்.

‎கடந்த ஐந்து ஆண்டுகால ஆட்சியில் வாழ்வாதார உரிமைகள் மற்றும் நியாயமான கோரிக்கைகளுக்காகப் போராடிய விவசாயிகள், ஆசிரியர்கள் மீதான வழக்குகள் மட்டும் ரத்து செய்யப்படுவதாக விஜய் தெரிவித்துள்ளார். ஆனால், கடந்த ஆட்சி காலம், அதற்கு முந்தைய ஆட்சி காலம் ஆகியவற்றில் மக்களுடைய பிரச்சினைகளுக்காகப் போராடியவர்கள் மீதான வழக்குகள் ரத்து செய்யப்படவில்லை. அதிலும், கடந்த ஐந்தாண்டு கால ஆட்சியில் போராடிய விவசாயிகள் மற்றும் ஆசிரியர்கள் மீதான வழக்குகள் மட்டுமே ரத்து செய்யப்படுகின்றன.

‎இதே போலவே கடந்த ஆட்சியின் போது அப்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுமார் 5,000 வழக்குகளை திரும்பப் பெறுவதாக அறிவித்தார். அறிவித்த போதும் கூட பல வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கின்றன. அதைப்போலவே முதலமைச்சர் விஜய்யும் தற்பொழுது பொதுவாக அறிவித்திருக்கிறார். முதலமைச்சர் விஜய் மேற்கண்ட அறிவிப்பினை கூட சட்டமன்றத்தில் யாரும் விவாதிக்க முடியாத வகையிலான விதி 110-இன் கீழ் அறிவித்துள்ளார் என்பது கண்டிக்கத்தக்கதாகும்.

‎ஒவ்வொரு ஆட்சியாளர்களும் ஆட்சிக்கு வந்த பின்னர் குறிப்பான சில வழக்குகளை மட்டும் ரத்து செய்துவிட்டு, தங்களுடைய ஆட்சியில் போராடுகின்ற மக்கள் மீது அதைவிட பல மடங்கு வழக்கு போடுவதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். கடந்த ஆட்சி காலத்தில் போராடிய ஆசிரியர்கள், விவசாயிகள் மீதான வழக்குகளை ரத்து செய்வதாக அறிவித்துள்ள விஜய் அரசு, கடந்த மூன்று மாதங்களில் பதியப்பட்டபோராட்ட வழக்குகள் எதையும் ரத்து செய்வதாக அறிவிக்காதது குறிப்பிடத்தக்கது.

‎கடந்த மற்றும் அதற்கு முந்தைய ஆட்சிக் காலங்களில் பொதுமக்கள் பிரச்சினைகளுக்காக, குறிப்பாக டாஸ்மாக் எதிர்ப்பு போராட்டம், ஹைட்ரோ கார்பன் எதிர்ப்பு போராட்டம், தூத்துக்குடி ஸ்டெர்லைட்-க்கு எதிரான போராட்டம், மீத்தேன் எதிர்ப்பு போராட்டம், சமச்சீர் கல்விக்கான போராட்டம் உள்ளிட்ட பொதுமக்களின் போராட்டங்கள், மக்களுடைய அடிப்படைத் தேவைகளுக்கான போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் மீது தொடர்ந்து பல வழக்குகள் போடப்பட்டன. அப்போராட்டங்களுக்கு தலைமை தாங்கியவர்கள் மீது பொய்யாகப் பதியப்பட்ட குண்டர் சட்டத்தின் அடிப்படையில் அவர்களை கைது செய்வது மற்றும் போக்கிரி தாளில் பராமரிப்பது போன்ற அராஜக நடவடிக்கைகளை போலீசு இப்போது வரை மேற்கொண்டு வருகிறது.

மக்கள் அதிகாரக் கழகத்தின் கடலூர் மாவட்டச் செயலாளர் தோழர் முருகானந்தம் மற்றும் தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் தோழர் செல்வம் ஆகியோர் மீதும் பொய்யாகப் போக்கிரித்தாள் பராமரிக்கப்பட்டு வருகிறது. மேலும், மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி, வெல்ஃபேர் கட்சியின் துணைத் தலைவர் தோழர் கௌஸ் ஆகியோர் மீதும் போக்கிரித்தாள் பொய்யாகப் பராமரிக்கப்பட்டு வருகிறது. மக்களுக்காகப் போராடுகின்ற தலைவர்களை ரவுடிகளாக காட்டும் போலீசின் இந்நடவடிக்கை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். இதற்கு எதிராக தொடர்ந்து மக்கள் அதிகாரக் கழகம் குரல் கொடுத்து வருகிறது. மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முதலமைச்சர் விஜய்க்கு கழக வழக்கறிஞர் அணி சார்பாக ஏற்கெனவே கோரிக்கை மனு கொடுக்கப்பட்டுள்ளது.

‎ஆகவே, கடந்த மற்றும் அதற்கு முந்தைய ஆட்சி காலங்களில் பொதுமக்களுடைய அடிப்படை பிரச்சினைகள், தமிழ்நாட்டின் அரசியல் உரிமை பிரச்சினைகள், நாட்டின் பொருளாதாரப் பிரச்சினைகள், சமூகப் பிரச்சினைகளுக்காகப் போராடிய மக்கள், தலைவர்கள் மீதான அனைத்து வழக்குகளையும் அரசு தள்ளுபடி செய்ய வேண்டும்; பொதுமக்களின் பிரச்சினைகளுக்காகப் போராடியவர்கள் மீது பொய்யாகப் புனையப்பட்டுள்ள போக்கிரித்தாள் பராமரிப்பு என்ற அராஜக நடவடிக்கையை உடனடியாகக் கைவிட வேண்டும் என்று மக்கள் அதிகாரக் கழகம் கேட்டுக்கொள்கிறது.


தோழமையுடன்
தோழர் சி. வெற்றிவேல் செழியன்,
மாநிலப் பொதுச் செயலாளர்,
மக்கள் அதிகாரக் கழகம்,
தமிழ்நாடு – புதுவை.
9962366321

Address

Cuddalore

Alerts

Be the first to know and let us send you an email when மக்கள் அதிகாரக் கழகம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to மக்கள் அதிகாரக் கழகம்:

Shortcuts

Share