14/06/2026
சமையல் எரிவாயு விலை உயர்வு: ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வாழ்வாதாரத்தின் மீது மேலும் ஒரு தாக்குதல்! - SDPI மகளிரணி கடும் கண்டனம்...
இதுதொடர்பாக SDPI கட்சி மகளிரணி மாநில தலைவர் K. பாத்திமா கனி அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மத்திய அரசு வீட்டு உபயோக சமையல் எரிவாயு (LPG) சிலிண்டர் விலையை மீண்டும் ₹29 உயர்த்தியிருப்பதை SDPI கட்சி மகளிரணி விமன் இந்தியா மூவ்மெண்ட் கடுமையாக கண்டிக்கிறது. கடந்த மூன்று மாதங்களில் இது இரண்டாவது விலை உயர்வாகும். ஏற்கனவே அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு, மின்கட்டண உயர்வு, போக்குவரத்து செலவு உயர்வு போன்ற காரணங்களால் மக்கள் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் நிலையில், இந்த விலை உயர்வு மக்களின் தலையில் மேலும் ஒரு சுமையை ஏற்றியுள்ளது.
குறிப்பாக குடும்பப் பொருளாதாரத்தை சுமந்து செல்லும் பெண்கள், இல்லத்தரசிகள், தினசரி சமையல் செலவுகளை சமாளிக்க பெரும் சிரமத்தை எதிர்கொள்ள வேண்டிய நிலை உருவாகியுள்ளது. ஏழை மற்றும் நடுத்தர வர்க்க மக்களின் அடிப்படை வாழ்வாதாரத்தையே பாதிக்கும் இந்த முடிவு முற்றிலும் மக்கள் விரோதமானதாகும்.
சர்வதேச சந்தை நிலவரங்களை காரணம் காட்டி மக்களின் மீது தொடர்ந்து சுமைகளை திணிப்பதை மத்திய அரசு நிறுத்த வேண்டும். மக்களின் நலனை முன்னிறுத்தி உடனடியாக இந்த விலை உயர்வை திரும்பப் பெறுவதோடு, சமையல் எரிவாயுவிற்கு போதுமான மானியத்தை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என SDPI கட்சி மகளிரணி சார்பாக உறுதியாக வலியுறுத்துகிறோம்.
இவ்வாறு அவர் தனது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளார்.