23/11/2017
#விருப்பாச்சி_வரலாறு (virupatchi)
ஊமைத்துரையை சிறை மீட்டது, ஆங்கில அரசுக்கு எதிராக "தீபகற்ப கூட்டு" என்ற என்ற பெயரில் பல நடவடிக்கைகள் ஆங்கில அரசுக்கு எதிராக விருப்பாச்சி பாளையம் ஈடுபட்டது, முக்கியமாக திண்டுக்கல் கோட்டையில் கூட்டு படையினர் ஆங்கிலேயரை விரட்டி ஆயுத குடோன்களை அழித்தது போன்ற செயல்களால் கடுப்பானா கும்பினி அரசு லெப்டினட் கின்னஸ் தலைமையில் #விருப்பாச்சி நோக்கி படையெடுத்தது. விருப்பாச்சி, #நங்காஞ்சியாறு , #சத்திரப்பட்டி போன்ற இடங்களில் சண்டை நடந்தது. இதில் #கோபால்_நாயக்கரின் மூத்த மகன் #முத்துவேல் நாயக்கர் கொல்லபட்டார். பின் தாக்கு பிடிக்க முடியாமல் கோபால் நாயக்கர் சுரங்கப்பாதை வழியாக கருமலை காட்டில் ஓடி மறைந்தார். அவருடைய மனைவி பாப்பம்மாள், ஊனமுற்ற இளைய மகன் 14 வயது பொன்னப்ப நாயக்கர், மூத்தமகன் முத்துவேல்நாயக்கரின் மகள்கள் பொன்னம்மாள், வெள்ளையம்மாள் ஆகியோர் உட்பட 22 பேரை கைது செய்து திண்டுக்கல் கோட்டையில் சிறைவைத்தது ஆங்கில அரசு. காட்டில் மறைந்த #கோபால்_நாயகரை கண்டிபிடித்து தருவோருக்கு 20,000, அவரின் தளபதி, துமச்சி நாயக்கர், பெரியபட்டி நாகம நாயக்கர், சோமன்துரை, சோமநாத சேர்வை ஆகியோரின் தலைகளுக்கு தலா 5000 என பணம் அறிவித்தது கும்பினி அரசு. மேலும் அத்தோடு #விருப்பாச்சி_அரண்மனையை_தரைமட்டமாக்கியது. அப்படி தரை மட்டம் செய்தும் தப்பி நின்றது இந்த #யானை_கட்டும்_கல். படத்தில் உள்ள இந்த யானை கட்டும் கற்கள் எத்துனை இருந்ததோ தெரியாது ஆனால் தற்காலம் வரை #எஞ்சியது 3 மட்டுமே. அதிலும் 2 கற்கள் சிறிது காலத்திற்கு முன்பு தோண்டப்பட்டு அழிக்கப்பட்டதாம். தற்சமயம் ஒன்றே ஒன்று மட்டும் #சாட்சி கூறி நிற்கிறது. வெளியே நடுகல் போல நிற்கும் இந்த யானைகட்டும் கல் மண்ணிற்குள் மிக அகண்ட பாறையாக இருக்கிறது. அற்புதமான படைப்பு இது.
Oddanchatram உங்களை அன்புடன் வரவேற்கிறது