Virupatchi historical place

Virupatchi historical place It is a Village which is located in Dindigul District, Tamil Nadu India

It is 200 Years older Village,

Oddanchatram cycling whatsapp group. Welcome s you all to join hands. To make helthy future.
13/12/2021

Oddanchatram cycling whatsapp group. Welcome s you all to join hands. To make helthy future.

14/08/2020
Celebration begins..  after 16 years..
08/07/2019

Celebration begins.. after 16 years..

ஒட்டன்சத்திரம் வரலாற்றில் விருப்பாட்சி அரபுக்காரச்சி  மாளிகை :ஒட்டன்சத்திரம் பழனி செல்லும் சாலையில் விருப்பாட்சி வரும் ம...
06/06/2018

ஒட்டன்சத்திரம் வரலாற்றில் விருப்பாட்சி அரபுக்காரச்சி மாளிகை :

ஒட்டன்சத்திரம் பழனி செல்லும் சாலையில் விருப்பாட்சி வரும் முன் சாலையின் இடது புறம் உள்ளது இந்த அரபுக்காரச்சி சதிலமடைந்த மாளிகை.

விருப்பாட்சிபுரம் ஆண்ட பாளையக்கார்களிள் ஒருவரான கோபால் நாயக்கர் ஒரு முறை அரேபிய பிரதேசம் சென்றபோது அரேபிய பெண் ஒருவருடன் நட்பு ஏற்பட்டு தன்னுடன் அழைத்து வந்து இம்மாளிகையை அமைத்துக் கொடுத்து தன்னுடைய ஆசைநாயகியாக வைத்துக்கொண்டார் என்றும் ஒரு தரப்பினர் கருதுகிறார்கள்

மற்றொரு தரப்பினர் இவர் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட காலகட்டத்தில் திப்புசுல்தான்னிடம் நட்பு ஏற்பட்டது.

அதன், காரணமாக இந்த அரபுக்கார அழகியை திப்புசுல்தான் பரிசாக வழங்கினார் என்ற இரு வேறு கருத்துக்கள் இப்பகுதி மக்களால் பேசப்படுகின்றது .

எது எப்படியோ இதை வரலாற்று ஆய்வாளர்களிடம் விட்டுவிடுவோம்.

ஆனால் இங்கே அரபுக்கார பெண்மணி வாழ்ந்தது மட்டும் உண்மை.

குடமுழுக்கு திருவிழா விருப்பாட்சி
26/04/2018

குடமுழுக்கு திருவிழா விருப்பாட்சி

23/11/2017
23/11/2017

#விருப்பாச்சி_வரலாறு (virupatchi)

ஊமைத்துரையை சிறை மீட்டது, ஆங்கில அரசுக்கு எதிராக "தீபகற்ப கூட்டு" என்ற என்ற பெயரில் பல நடவடிக்கைகள் ஆங்கில அரசுக்கு எதிராக விருப்பாச்சி பாளையம் ஈடுபட்டது, முக்கியமாக திண்டுக்கல் கோட்டையில் கூட்டு படையினர் ஆங்கிலேயரை விரட்டி ஆயுத குடோன்களை அழித்தது போன்ற செயல்களால் கடுப்பானா கும்பினி அரசு லெப்டினட் கின்னஸ் தலைமையில் #விருப்பாச்சி நோக்கி படையெடுத்தது. விருப்பாச்சி, #நங்காஞ்சியாறு , #சத்திரப்பட்டி போன்ற இடங்களில் சண்டை நடந்தது. இதில் #கோபால்_நாயக்கரின் மூத்த மகன் #முத்துவேல் நாயக்கர் கொல்லபட்டார். பின் தாக்கு பிடிக்க முடியாமல் கோபால் நாயக்கர் சுரங்கப்பாதை வழியாக கருமலை காட்டில் ஓடி மறைந்தார். அவருடைய மனைவி பாப்பம்மாள், ஊனமுற்ற இளைய மகன் 14 வயது பொன்னப்ப நாயக்கர், மூத்தமகன் முத்துவேல்நாயக்கரின் மகள்கள் பொன்னம்மாள், வெள்ளையம்மாள் ஆகியோர் உட்பட 22 பேரை கைது செய்து திண்டுக்கல் கோட்டையில் சிறைவைத்தது ஆங்கில அரசு. காட்டில் மறைந்த #கோபால்_நாயகரை கண்டிபிடித்து தருவோருக்கு 20,000, அவரின் தளபதி, துமச்சி நாயக்கர், பெரியபட்டி நாகம நாயக்கர், சோமன்துரை, சோமநாத சேர்வை ஆகியோரின் தலைகளுக்கு தலா 5000 என பணம் அறிவித்தது கும்பினி அரசு. மேலும் அத்தோடு #விருப்பாச்சி_அரண்மனையை_தரைமட்டமாக்கியது. அப்படி தரை மட்டம் செய்தும் தப்பி நின்றது இந்த #யானை_கட்டும்_கல். படத்தில் உள்ள இந்த யானை கட்டும் கற்கள் எத்துனை இருந்ததோ தெரியாது ஆனால் தற்காலம் வரை #எஞ்சியது 3 மட்டுமே. அதிலும் 2 கற்கள் சிறிது காலத்திற்கு முன்பு தோண்டப்பட்டு அழிக்கப்பட்டதாம். தற்சமயம் ஒன்றே ஒன்று மட்டும் #சாட்சி கூறி நிற்கிறது. வெளியே நடுகல் போல நிற்கும் இந்த யானைகட்டும் கல் மண்ணிற்குள் மிக அகண்ட பாறையாக இருக்கிறது. அற்புதமான படைப்பு இது.

Oddanchatram உங்களை அன்புடன் வரவேற்கிறது

23/11/2017

#விருப்பாச்சி_வரலாறு (virupatchi)

பாளையக்காரர்கள் காலத்தில் ஊர் மக்களுக்கு செய்திகள் சொல்லுவதற்க்காக முரசு அறைதல் அல்லது தப்பட்டம் அடித்தல் உண்டுங்க .. படத்தில் இருப்பதுதான் "தப்பட்டான் பாறை" என சொல்லப்படும் பகுதிங்க.. அரசின் முக்கிய செய்திகள். மற்றும் அவசர கால அறிவிப்புகள் - உயரமான இடத்தில் உள்ள இந்த #தப்பட்டாம்_பாறையிலிருந்தே அறிவிக்கப்படும். இங்கிருந்து #விருப்பாச்சி எல்லை முழுவதையும் காணலாம். எனவே இது காவல் புரியும் இடமாக கூட இருந்துள்ளது.

Oddanchatram உங்களை அன்புடன் வரவேற்கிறது

23/11/2017

#விருப்பாச்சி_வரலாறு(virupatchi)

கட்டபொம்முவை தூக்கிலிட்ட பின்னர் ஊமைத்துரை மற்றும் பலரையும் கைது செய்து பாளையங்கோட்டையில் சிறை வைத்தது கும்பினி அரசு... அவர்களை மீட்க #விருப்பாச்சி பாளையக்காரர் #கோபால்_நாயக்கரும் மருது சகோதர்களும் திட்டம் தீட்டினர். தமது படையினர் அனைவருடனும் திருசெந்தூர் முருகன் கோவிலுக்கு காவடி எடுப்பதுபோல வேடம்பூண்டு சென்று பாளையங்கோட்டை சிறையிலிருந்த ஊமைத்துரை , துரைசிங்கம், அவர்களுடன் இருந்த 15 பேர்களையும் மீட்டு விருப்பாச்சிக்கு அழைத்து வந்தனர். பின் ஊமைத்துரைக்கு 6000 படைகளையும் தந்து பாஞ்சாலங்குறிச்சிக்கு மீண்டும் பாளையக்காராராக ஊமைத்துரையை நியமித்தார் #கோபால்நாயக்கர். ஆனால் கும்பினிய அரசிடம் தாக்குபிடிக்க முடியாமல் ஊமைத்துரை மீண்டும் கைது செய்யப்பட்டு பாஞ்சாலங்குறிச்சி பீரங்கி மேட்டில் தூக்கிலிடப்பட்டார். #படத்தில் பாளையக்காரர்கள் காலத்தில் விளைந்த நெற்பயிர்களை அடிக்கும் களம் . #விருப்பாச்சி_நல்காசி_ஆற்றின் (நங்காஞ்சி) கரையில் உள்ளது . இந்த களத்தில் #யானைகள்தான் போர் அடிக்குமாம் ...

Oddanchatram உங்களை அன்புடன் வரவேற்கிறது

23/11/2017

#விருப்பாச்சி_வரலாறு (virupatchi) - பதிவு -8.
பெருமாள் கோவில் பின்புறம் #தலையில்லாத_இந்த_சிலை உள்ளது. இடையில் குத்துவாள் செருகி வணங்கிய நிலையில் இருப்பதால் இந்த சிலை இப்பகுதியை ஆட்சி செய்த மன்னருடையதாகவோ அல்லது பாளையப்பட்டாக #விருப்பாச்சி அறிவிக்கப்பட்ட பின்னர், #விருப்பாச்சி பாளையத்தை ஆட்சி செய்த நாயகர்களின் சிலையாக இருக்கலாம். இதே போல சிலையின் உடம்பு பகுதிகள் முழுவதும் வெட்டப்பட்டு கால் பாதங்கள் மட்டுமே உள்ள இரண்டு சிலைகளின் பீடங்கள் இருக்கின்றன. எங்களைப் பொறுத்தவரை இது #விருப்பாச்சி பாளையக்காரர்களின் உருவங்களாக இருக்க வேண்டும் , ஆங்கிலேயரால் இந்த சிலைகள் சிதறடிக்கப்பட்டு இருக்க வேண்டும்.

Oddanchatram உங்களை அன்புடன் வரவேற்கிறது

23/11/2017

ஒட்டன்சத்திரம்

Address

East Street
Dindigul
624614

Telephone

9159166008

Website

Alerts

Be the first to know and let us send you an email when Virupatchi historical place posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share