நாடாளும் மக்கள் கட்சி - Naadaalum Makkal Katchi

  • Home
  • India
  • George Town
  • நாடாளும் மக்கள் கட்சி - Naadaalum Makkal Katchi

நாடாளும் மக்கள் கட்சி - Naadaalum Makkal Katchi Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from நாடாளும் மக்கள் கட்சி - Naadaalum Makkal Katchi, Political organisation, Vanier Street, George Town.

இது,
நாடாளும் மக்கள் கட்சியின்
அதிகாரப்பூர்வ
முகநூல் பக்கம்.

ஜெ.அக்னி செல்வராசு, M.Sc., M.L.,
நிறுவனத்தலைவர்,
நாடாளும் மக்கள் கட்சி
&
வழக்கறிஞர் & உறுதிமொழி ஆணையர்,
உயர்நீதிமன்றம், சென்னை,

கட்சியில் இணைய தொடர்புக்கு:-
9176-345-468. நாடாளும் மக்கள் கட்சி - Naadaalum Makkal Katchi (NMK)
----------------------------------------------------------------------
யாதும் ஊரே! யாவரும் கேளிர்!
---

--------------------------------------
நாடாளும் மக்கள் கட்சியின், நிறுவனத் தலைவரும், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞருமான
ஜெ.அக்னி செல்வராசு, M.Sc., M.L.,
பள்ளிப் பருவத்திலிருந்தே பல்வேறு சமூக நலப்பணிகளைச் செய்ததுடன், மாணவர்களின் நலனுக்காகப் பல்வேறு நலப்பணிகளைச் செய்துள்ளார்.

கடந்த 2001-2004ஆம் ஆண்டு, சென்னை மாநிலக்கல்லூரியில், தமிழ் இலக்கியம் படித்தபொழுது, பல்வேறு சமூக நல அமைப்புகளில் இணைந்து, சமூக நலப்பணிகளையும், மக்கள் நலப்பணிகளையும் செய்துள்ளார்.

கடந்த 2003ஆம் ஆண்டு, “இந்த இமயத்தின் சிகரங்கள்”என்ற முதல் கவிதை நூல் வெளியிட்டு, புரட்சிக்கவிஞராய் எழுத்துலகில் தனி முத்திரை பதித்தார்.

கன்னித்தமிழ்க் கவிஞர் (கவிஞர் சுரதா அவர்களால் வழங்கப்பட்டது), கவிமாலுமி, கவிராஜன், கவிமுகில், கவியருவி, இளம்பெரியார், எழுச்சிக்கவிஞர், வாழும் காந்தி, கவித்திலகம், அக்னி அரசன், இந்தியச்சிற்பி, சத்யாக்ரகி போன்ற விருதுகள் மற்றும் சிறப்பு பெயர்களை கற்றறிந்த பெரியோர்கள், தமிழ்ச் சங்கங்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வழங்கி கெளரவித்துள்ளனர்.

கடந்த 2005ஆம் ஆண்டு, கோயம்புத்துார், அரசு சட்டக்கல்லூரியில் இளங்கலை சட்டம் பயின்ற பொழுது, அக்னி மாணவர் நலச்சங்கத்தை நிறுவி, மாணவர்களின் நலனுக்காகவும், முன்னேற்றத்திற்காகவும் பல்வேறு போராட்டங்களைத் தலைமை ஏற்று நடத்தி, வெற்றி பெற்றுள்ளார்.

கடந்த 12.01.2008ஆம் ஆண்டு, அக்னி பொதுநலச்சங்கத்தை நிறுவி, பல்வேறு மக்கள் நலம் மற்றும் சமூக நலப்பணிகளைச் செய்துள்ளார்.

நாடாளும் மக்கள் கட்சியின், நிறுவனத் தலைவர்
"ஜெ.அக்னி செல்வராசு" அவர்கள்,
சிறந்த விவசாயி, கவிஞர், எழுத்தாளர், கதாசிரியர், நாடகக் கலைஞர், பேச்சாளர், சட்ட ஆலோசகர், சமூக சேவகர், கோயம்புத்தூர் மற்றும் சென்னை வானொலி நிலையங்கள், FM ரெயின்போ & FM கோல்டு ஆகிய பண்பலைகளில் முன்னால் அறிவிப்பாளர், முன்னால் சிற்றிதழ் பத்திரிகை துணை ஆசிரியர், தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்பாளர், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் மற்றும் உறுதிமொழி ஆணையர் (Advocate & Commissioner of Oaths) என பன்முகத் திறமைகள் கொண்டவர்.

அரசியல் பயணத்தின் முதல் முயற்சியாக, சென்னை, டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக்கல்லுாரில் முதுகலை சட்டம் பயின்ற பொழுது, “அகண்ட பாரதம் மக்களுக்கே” என்ற உயர்ந்த இலட்சியத்தில், “தேசபக்தி” என்ற இயக்கம் ஆரம்பித்து, கடந்த 2009ஆம் ஆண்டு நடைபெற்ற, நாடாளுமன்றத் தேர்தலில், கள்ளக்குறிச்சி மற்றும் திருவண்ணாமலை ஆகிய இரண்டு பாராளுமன்றத் தொகுதிகளில் போட்டியிட்டு, 7,012 மற்றும் 490 வாக்குகளைப் பெற்று, மிகப்பெரிய அரசியல் அனுபவம் பெற்றார்.

மீண்டும், 2011ஆம் ஆண்டு, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தலில், ரிஷிவந்தியம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு, 1860 வாக்குகளைப் பெற்றார். “மக்கள் சக்தி” உட்பட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த இளைஞர்களுடன் இணைந்து, தமிழ்நாட்டில் 35 இடங்களில் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.

தமிழக மக்களின் பேராதரவுடன், தொடர்ந்து மாண்பமை சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் அதன் கீழமை நீதிமன்றங்களில் வழக்கறிஞராகப் பணி செய்து கொண்டே, பல்வேறு மக்கள் நலப்பணிகளையும், சமூக நலப்பணிகளையும் செய்து வருகின்றார்.

மாணவர்களின் நலனுக்காகவும், மக்கள் நலனுக்காகவும், ஊழல் ஒழிப்பிற்காகவும் (அண்ணா ஹசாரேவின் ஜன்லோக்பால் நிறைவேற்றக்கோரியும்), இலங்கைத் தமிழர் நலனுக்காகவும், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்கக்கோரி என்று இதுவரை 25 நாட்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியுள்ளார்.

“அரசியல் மாற்றம், நேர்மையான இளைஞர்களால் மட்டுமே ஏற்படும்” என்ற உயர்ந்த நோக்கத்தில், ஆயிரக்கணக்கான இளைஞர்களை ஒன்றிணைத்து, ஊழல் மற்றும் இலஞ்சத்தை ஒழிக்கவும், இயற்கை வளங்களைப் பாதுகாக்கவும், நாட்டில் நல்ல வளர்ச்சியை ஏற்படுத்தவும், கடந்த 23.11.2020ஆம் தேதி, தன்னம்பிக்கையும், தைரியமும், நேர்மையும் மிக்க துடிப்பான மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களால் "நாடாளும் மக்கள் கட்சி" ஆரம்பிக்கப்பட்டு, இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டு (பதிவு எண்.56/194/2020-2021),
கடந்த 2021 – தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தலில் திருவண்ணாமலை, நாகப்பட்டினம், திருவொற்றியூர், திருக்கோவிலூர், ரிஷிவந்தியம், மாதவரம், விக்கிரவாண்டி, நாமக்கல் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிட்டு, முதல் தேர்தல் அரசியல் களம் கண்டது.

நாடாளும் மக்கள் கட்சி, தொடர்ச்சியாக ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தல்களில் போட்டியிட்டு, ஜனநாயகக் கடமையினை ஆற்றி வருகிறது.

அத்துடன், கடந்த 2023-ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டு, 324 வாக்குகள் பெற்று, கட்சிகள் வரிசையில் ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

2024-நாடாளுமன்றத் தேர்தலில், தமிழ்நாட்டில் அதிக இடங்களில் போட்டியிட்ட கட்சிகளான,
நாம் தமிழர் கட்சி (39), பகுஜன் சமாஜ் கட்சி (39),
அதிமுக, பாஜக, திமுக ஆகிய ஐந்து கட்சிகளுக்கு,
அடுத்த நிலையில், 6வது இடத்தில்
நாடாளும் மக்கள் கட்சி (12+1)...

நாட்டில் மிகப்பெரிய அரசியல் மாற்றத்தை
உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்...
இளைய சமுதாயமே...! வாருங்கள்...!
வரலாறு படைப்போம்...!
தலைவனைத் தேடாதே...!
நீ தலைவனாக மாறு...!

தற்பொழுது, தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் கட்சியை வலுப்படுத்தி வருவதுடன், தொடர்ந்து ஆக்கப்பூர்வமான மக்கள் பணி செய்து வருகின்றது.

சமுதாய மாற்றம்
மற்றும்
அரசியல் மாற்றம்
விரும்பும் மாணவர்களே...!
இளைஞர்களே...!
சமூக ஆர்வலர்களே...!

வாருங்கள்..!
ஒன்றிணைவோம்..!
வென்று காட்டுவோம்..!

ஜெ.அக்னி செல்வராசு, M.Sc., M.L.,
நிறுவனத்தலைவர்,
நாடாளும் மக்கள் கட்சி,
&
வழக்கறிஞர் & உறுதிமொழி ஆணையர்,
உயர்நீதிமன்றம், சென்னை.

கட்சியில் இணைய தொடர்புக்கு:- 938000-6542, 89738-22898.

 #என்_மீது_ஒரு_ஆயுதம்_ஏவினால்,  #இந்தப்_பிரபஞ்சம் #உங்கள்_மீது  #ஆயிரக்கணக்கான  #ஆயுதங்கள்_ஏவும். #ஓ...  #இந்தியாவே...! ...
20/07/2026

#என்_மீது_ஒரு_ஆயுதம்_ஏவினால்,
#இந்தப்_பிரபஞ்சம்
#உங்கள்_மீது
#ஆயிரக்கணக்கான
#ஆயுதங்கள்_ஏவும்.

#ஓ... #இந்தியாவே...!
#நம்பிக்கையோடு_இரு...
#உலகைத்_தலைமைத்தாங்கும்
#காலம்_வந்துவிட்டது.

ஊழலை ஒழிக்க
எழுவோம்...
எரிமலைகளாய்...
வீழ்வது நாமாக இருந்தாலும்,
வெல்வது நாடாக இருக்கட்டும்..

#அக்னி_செல்வராசு_ஜெ
#நிறுவனர்_தேசியத்தலைவர்
#நாடாளும்_மக்கள்_கட்சி





| #நாமக l l l |
l l l
l l
l l
|
|
l

 #தமிழ்நாட்டின்_முதலமைச்சராகப் பொறுப்பேற்றிருக்கும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் மாண்புமிகு  ோசப்_விஜய் அவர்களுக்கு, நா...
11/05/2026

#தமிழ்நாட்டின்_முதலமைச்சராகப் பொறுப்பேற்றிருக்கும்
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் மாண்புமிகு ோசப்_விஜய் அவர்களுக்கு, நாடாளும் மக்கள் கட்சி சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

தமிழ்நாட்டில், இலஞ்சம், ஊழல், கொலை, கொள்ளை, கற்பழிப்பு, போதைப்பழக்கம், கனிம வளக் கொள்ளை போன்றவைகளைத் தடுத்து, #நல்லாட்சி வழங்க வேண்டும் என நாடாளும் மக்கள் கட்சி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

அத்துடன், முதற்கட்டமாக,
சமுதாய நலனுக்காகப் பாடுபட்ட #சமூக_ஆர்வலர்கள் மற்றும்
சமூக செயல்பாட்டாளர்களுக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்ட அனைத்து #பொய்_வழக்குகளையும், #அரசியல்_சார்ந்த_வழக்குகளையும்,
திரும்பப் பெற்று, சமூகப் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், சமூக ஆர்வலர்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்கவும், தலைசிறந்த தமிழ்நாட்டை உருவாக்கவும் நாடாளும் மக்கள் கட்சி சார்பாக அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

#அக்னி_செல்வராசு_ஜெ
#நிறுவனர்_தேசியத்தலைவர்
#நாடாளும்_மக்கள்_கட்சி





| #நாமக l l l | l l l
l l
l l
|
|
l

 #நாடாளும்_மக்கள்_கட்சிக்கு, #வாக்களித்த_அனைவருக்கும்  #மனமார்ந்த_நன்றியைத்  #தெரிவித்துக்கொள்கிறேன். #அக்னி_செல்வராசு_ஜ...
05/05/2026

#நாடாளும்_மக்கள்_கட்சிக்கு,
#வாக்களித்த_அனைவருக்கும்
#மனமார்ந்த_நன்றியைத்
#தெரிவித்துக்கொள்கிறேன்.

#அக்னி_செல்வராசு_ஜெ
#நிறுவனர்_தேசியத்தலைவர்
#நாடாளும்_மக்கள்_கட்சி





| #நாமக | |
| |
| | |
| |
| |
|
|
|

 #நாடாளும்_மக்கள்_கட்சிக்கு, #வாக்களித்த_அனைவருக்கும்  #மனமார்ந்த_நன்றியைத்  #தெரிவித்துக்கொள்கிறேன். #அக்னி_செல்வராசு_ஜ...
04/05/2026

#நாடாளும்_மக்கள்_கட்சிக்கு,
#வாக்களித்த_அனைவருக்கும் #மனமார்ந்த_நன்றியைத் #தெரிவித்துக்கொள்கிறேன்.

#அக்னி_செல்வராசு_ஜெ
#நிறுவனர்_தேசியத்தலைவர்
#நாடாளும்_மக்கள்_கட்சி





| #நாமக l l l | l l l
l l
l l
|
|
l

21/04/2026

#நாடாளும்_மக்கள்_கட்சி
#பேனாமுனை_சின்னம்

#மக்களாட்சிக்_கூட்டணி

ஊழலை ஒழிக்க
இயற்கை வளம் பாதுகாக்க
ஒன்றிணைவோம்...
மாற்றம் நம்மிலிருந்து
துவங்கப்படும்...

நாடாளும் மக்கள் கட்சியின்,
நிறுவனர் & தேசியத்தலைவர்,
சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்
ஜெ.அக்னி செல்வராசு, M.Sc., M.L.,
#ஆலந்தூர் மற்றும் #மதுரவாயல் ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகின்றார்.

2026 – தமிழ்நாடு மாநில சட்டமன்றத் தேர்தலில்,
நாடாளும் மக்கள் கட்சி மற்றும் கூட்டணிக் கட்சிகள் சார்பில்,
ஏழு கதிர்களுடன் கூடிய "பேனா முனை" சின்னத்தில் போட்டியிடும்
22 தொகுதிகளின் வேட்பாளர் பட்டியல்:-

ஆலந்தூர்- ஜெ.அக்னி செல்வராசு,

மதுரவாயல்- ஜெ.அக்னி செல்வராசு,

மாதவரம்- திரு.ரஃபீக்,

பல்லாவரம்- திருமதி ராஜேஸ்வரி,

திருவண்ணாமலை- திரு.விஜயகுமார்,

கலசபாக்கம்- திருமதி சத்யா,

ஜோலார்பேட்டை- திரு.செந்தமிழ்செல்வன்,

ரிஷிவந்தியம்- ஜெ.வெங்கட்ராமன்,

தருமபுரி- திரு.மாது,

பாலக்கோடு- திரு.ரமேஷ்,

பெண்ணாகரம்- திரு.திருமுருகன்,

அரூர்- திருமதி கருத்தம்மாள்,

பாப்பிரெட்டிப்பட்டி- திருமதி ஜமுனா ராணி,

வீரபாண்டி- சக்திவேல்,

கிருஷ்ணராயபுரம்- திரு.பால்சாமி @ கண்ணன்,

மேட்டுப்பாளையம்- திருமதி சங்கீதா,

அரியலூர்- திரு.தங்க.சண்முக சுந்தரம்,

ஜெயங்கொண்டம்- திரு.ராவணன்,

குன்னம்- திரு.இளங்கோவன்,

ஆத்தூர் (திண்டுக்கல் மாவட்டம்)- திரு.சங்கர்,

முதுகுளத்தூர்- திரு.இருளாண்டி,

நாகர்கோவில்- திரு.டினோ.

ஊழலில்லாத, இலஞ்சம் இல்லாத, நேர்மையான சமுதாயம் படைக்க,
"பேனா முனை" (ஏழு கதிர்களுடன் கூடிய பேனா முனை) சின்னத்தில் வாக்களியுங்கள்..

நமது சின்னம் பேனா முனை.
மாற்றத்திற்கான சின்னம் பேனா முனை.
ஊழலை ஒழிக்கப் போகும் சின்னம்
பேனாமுனை.
தொடர்புக்கு: 9176-345-468, 98841-31733,
www.naadaalummakkalkatchi.in
www.nmk.ind.in

#அக்னி_செல்வராசு_ஜெ
#நிறுவனர்_தேசியத்தலைவர்
#நாடாளும்_மக்கள்_கட்சி





#சட்டமன்றத்தேர்தல்_2026 l
l
| #நாமக l l l
l l | l
|
|
l l

Address

Vanier Street
George Town
600001

Alerts

Be the first to know and let us send you an email when நாடாளும் மக்கள் கட்சி - Naadaalum Makkal Katchi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to நாடாளும் மக்கள் கட்சி - Naadaalum Makkal Katchi:

Shortcuts

Share