03/03/2024
#பள்ளிவாசல்_திறப்பு_விழா.!
இன்று (03/03/2024) கிருஷ்ணகிரி தொகுதிக்கு உட்பட்ட காவேரிப்பட்டணம் ஒன்றியத்தில் எர்ரஹள்ளி பஞ்சாயத்து, அண்ணா நகரில் புதியதாக புரணமைக்கப்பட்ட பள்ளிவாசல் திறப்பு விழா நடந்தது.
இஸ்லாமிய சகோதரர்களின் அழைப்பின் பேரில் அந்த பள்ளிவாசல் திறப்பு விழாவில் கழகத் துணை பொதுச் செயலாளரும், வேப்பனப்பள்ளி சட்டமன்ற உறுப்பினருமான அண்ணன் திரு ுனுசாமி அவர்கள் கலந்து கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் கழகத் துணைப் பொதுச் செயலாளர் அண்ணன் ுனுசாமி_BABL_MLA அவர்கள் பேசிய போது
"வேர்வையை சிந்துவதற்கு முன் கூலியை கொடுத்துவிடு என்று சொன்ன நபிகள் நாயகம் சொன்னதை பேசிவிட்டு, "நாங்கள் இஸ்லாமியர்களோடு எந்த ஒரு வேறுபாடும் இல்லாமல் இணக்கமாகவே இருக்கிறோம். சான்றாக சொல்ல வேண்டும் என்று சொன்னால் கிருஷ்ணகிரி சட்டமன்ற உறுப்பினர் திரு #அசோக்குமார் அவர்கள். சட்டசபையில் உங்களுக்காக பேசி #உருதுபள்ளி கொண்டு வந்திருக்கிறார். மேலும் கிருஷ்ணகிரி சுற்றுவட்டாரத்தில் உள்ள பள்ளிவாசல்களுக்கென சில நலத்திட்டங்களையும் செய்து இருக்கிறார் " என்று நினைவுகூர்ந்து பேசினார்.
அதேபோல கிருஷ்ணகிரி சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் திரு #அசோக்குமார்_MLA அவர்கள் பேசும்போது, "நாங்கள் எந்தவித ஜாதி, மத வேறுபாடின்றி அனைத்து சமுதாயத்தினரிடமும் சகோதரத்துவமாகத்தான் இருக்கிறோம்" எங்களால் முடிந்த உதவியை அனைவருக்கும் பாகுபாடின்றி செய்வோம் என்று பேசினார்.
இந்த நிகழ்ச்சி காவேரிப்பட்டினம் மேற்கு ஒன்றிய கழக துணைச் செயலாளர் திரு #விக்ரம்குமார் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்றது.
மேலும் இந்நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி மாவட்ட / ஒன்றிய / பேரூர் கழகச் செயலாளர்கள், கிளை கழகச் செயலாளர்கள் மற்றும் இஸ்லாமிய சகோதரர்கள், பொதுமக்கள் என அனைவரும் கலந்து கொண்டார்கள்.