14/03/2026
மரம் வளர்ப்போம்
புவிவெப்பமயமாதலைத் தடுப்போம்
பருவம் தவறிய மழை,கடுமையான வெப்பம்,காலநிலை மாற்றம் என மனித குலம் சந்திந்து வரும் இந்த பேராபத்திலிருந்து மீள மரங்கள் நடுவதே சிறந்த தீர்வாக இருக்கும்.
ஆண்டுதோறும் மக்கள் தொகை பெருகிகொண்டே செல்கிறது.
மக்கள் தொகைக்கேற்ற மரங்கள் இம்மண்ணில் இருக்கிறதா என்ற கேள்விக்கு இல்லை என்பதே பதிலாகும்.
எல்லோருக்கும் பணத் தேவையும், வேலையும்,பொருளாதார நெருக்கடியும் இருக்கத் தான் செய்கிறது.எல்லோரும் அதை பூர்த்திசெய்யவே ஓடிக்கொண்டு உழைத்துக்கொண்டு இருக்கிறோம்.அவை எல்லாமே நம் அடுத்த வாரிசுகளுக்காவும்,சந்ததிகளுக்குமானது.
ஆனால் இதையும் தாண்டி அவர்களுக்கு நாம் உருவாக்கி தர வேண்டிய ஒரு சொத்து தான் இயற்கை வளங்களும்,மரங்களும்,காற்றும்,தூய நீரும்.
அவர்கள் வாழ ஏதுவான நிலப்பரப்பை உருவாக்குவது நம் ஒவ்வொருவரின் கடமையாகும்.
நேரடியாகவோ,மறைமுகமாகவோ இந்த இயற்கையின் சமநிலையில்லா தன்மையினால் நாம் பாதிக்கப்படலாம் வரும் காலங்களின்.
இயற்கையோடு இணைந்த வாழ்வை வாழும் எந்த உயிரினங்களுக்கும் நோய் என்பதே வருவது கிடையாது.
ஆனால் இயற்கையை பற்றிய புரிதல் இல்லாமலும் தான் மட்டும்,தன் சுய வாழ்வு மட்டும் என வாழ்ந்து பொதுநலத்தை,மரங்களை,இயற்கையை எண்ணிப்பார்க்காத மனித இனம் தினம் தினம் புது நோய்களுடன் போராடி வருகிறது.
அனைவரும் தாங்கள் சார்ந்த பகுதிகளில் அதிக அளவிளான மரங்களை நட்டு வளர்த்து,தூய்மையான சுகாதாரமான இயற்கை சூழல்,பறவைகள் நிறைந்த கிராமங்களை உருவாக்க முயற்சி எடுப்போம்.
#மரம்வளர்ப்போம்
#மழைபெறுவோம்
#மண்காப்போம்