இந்திய தேசிய காங்கிரஸ் நாகர்கோயில் 42வது வார்டு வேதநகர்

  • Home
  • India
  • Kanyakumari (North Part)
  • இந்திய தேசிய காங்கிரஸ் நாகர்கோயில் 42வது வார்டு வேதநகர்

இந்திய தேசிய காங்கிரஸ் நாகர்கோயில் 42வது வார்டு வேதநகர் Official page for காங்கிரஸ் நாகர்கோயில் மாநகராட்சி 42வது வார்டு வேதநகர்

🕊️ இறைவனடி சேர்ந்தார் 🕊️திரு. A. பெல்லார்மின் Ex.MC (வயது 78),🕯️ அன்னாரின் நல்லடக்கம்:📅 25.08.2026 — செவ்வாய்க்கிழமைஅன்ன...
25/08/2026

🕊️ இறைவனடி சேர்ந்தார் 🕊️

திரு. A. பெல்லார்மின் Ex.MC (வயது 78),

🕯️ அன்னாரின் நல்லடக்கம்:
📅 25.08.2026 — செவ்வாய்க்கிழமை

அன்னாரின் மறைவுக்கு நாகர்கோவில் மாநகர 42வது வேதநகர் காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.

நகர்ப்புறங்களை மேம்படுத்தும் ‘Better Cities’ பிரச்சாரம் – இளைஞர் காங்கிரஸ் நாகர்கோவில், ஆக.19,கன்னியாகுமரி மாவட்டம் நாகர...
19/08/2026

நகர்ப்புறங்களை மேம்படுத்தும் ‘Better Cities’ பிரச்சாரம் – இளைஞர் காங்கிரஸ்

நாகர்கோவில், ஆக.19,

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் மாநகர இளைஞர் காங்கிரஸ் சார்பாக நகர் புறங்களை மேம்படுத்தும் பிரச்சாரம் குறித்து கூட்டம் நாகர்கோவில் மாநகர இளைஞர் காங்கிரஸ் தலைவர் டைசன் தலைமையில் நடைபெற்றது.

இக் கூட்டத்தில் நாகர்கோவில் மாநகர இளைஞர் காங்கிரஸ் தலைவர் டைசன் செய்தியாளர் சந்திப்பின் போது கூறியதாவது :-

இந்திய இளைஞர் காங்கிரஸ் சார்பில் “IYC Better Cities – Urban City Campaign” என்ற பெயரில் நகர்ப்புறங்களை மேம்படுத்துவதற்கான பிரச்சாரம் முன்னெடுக்கப்படுகிறது.

நகர்ப்புறங்களில் பொதுமக்கள் மற்றும் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகளை கண்டறிந்து, அவற்றை மக்கள் கவனத்திற்கும் அரசின் கவனத்திற்கும் கொண்டு செல்வதே இப்பிரச்சாரத்தின் முக்கிய நோக்கமாகும்.

சாலைகள் மற்றும் போக்குவரத்து வசதி, குடிநீர், தூய்மை மற்றும் குப்பை மேலாண்மை, கழிவுநீர் வசதி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நகர்ப்புற தொழிலாளர்களின் வாழ்வாதாரம் உள்ளிட்ட அடிப்படை பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் அளித்து, சிறந்த மற்றும் மக்கள் வாழ்வதற்கு ஏற்ற நகரங்களை உருவாக்கும் நோக்கில் இந்தப் பிரச்சாரம் செயல்படுத்தப்படுகிறது.

“Better Cities” என்பதன் பொருள் “சிறந்த நகரங்கள்” அல்லது “மேம்பட்ட நகரங்கள்” என்பதாகும். நகரங்களில் வசிக்கும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தி, அனைவருக்கும் தேவையான அடிப்படை வசதிகள் கிடைக்கச் செய்வதே இந்த இயக்கத்தின் நோக்கமாக வலியுறுத்தப்படுகிறது.

நகர்ப்புற சமூகங்கள் மற்றும் தொழிலாளர்களின் பிரச்சினைகளை ஒருங்கிணைத்து, “சிறந்த நகரங்களை ஒன்றிணைந்து உருவாக்குவோம்” என்ற கருத்தை முன்னிறுத்தி இந்திய இளைஞர் காங்கிரஸ் இந்தப் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறது என்றும் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் பெரும் பங்கு ஆற்ற வேண்டும் என்றும் இளைஞர்கள் இதில் அதிகம் வரும் போதுதான் சிறந்த ஆட்சியை கொடுக்க முடியும் என்று மாநகர இளைஞர் காங்கிரஸ் தலைவர் டைசன் செய்தியாளர் சந்திப்பின் போது கூறினார்.

18/08/2026

கர்நாடகாவில் தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.

கர்நாடக மாநிலம், காவிரி வனவிலங்கு சரணாலயப் பகுதியில் மூன்று தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.

எந்த சூழ்நிலையிலும் மனித உயிர்களை பறிக்கும் அதிகார அத்துமீறல்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை. சட்டத்தை பாதுகாக்க வேண்டிய அரசு அதிகாரிகளே துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டு உயிரிழப்பு ஏற்பட்டிருப்பது தொடர்பாக முழுமையான, வெளிப்படையான மற்றும் சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும்.

உயிரிழந்த மூன்று தமிழர்களின் குடும்பங்களுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும். அவர்களின் குடும்பங்களுக்கு போதுமான இழப்பீடும், தேவையான அனைத்து அரசு உதவிகளும் வழங்கப்பட வேண்டும்.

இந்தச் சம்பவத்தில் உண்மை நிலையை முழுமையாக வெளிக்கொண்டு வந்து, தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

தமிழர்களின் உயிருக்கும், உரிமைக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டியது அரசுகளின் கடமை. இந்தச் சம்பவத்தை அரசியல் கண்ணோட்டத்தில் அணுகாமல், மனிதநேயத்துடனும் சட்டத்தின் அடிப்படையிலும் அணுக வேண்டும்.

கர்நாடகாவில் தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு காங்கிரஸ் நாகர்கோவில் மாநகரம் சார்பாக எங்களது ஆழ்ந்த கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.

நீதி கிடைக்கும் வரை குரல் கொடுப்போம்!
தமிழர்களின் உரிமைக்கும் பாதுகாப்பிற்கும் தொடர்ந்து துணை நிற்போம்!

காங்கிரஸ் நாகர்கோவில் மாநகரம் 42ஆவது வார்டு

Iyc- Indian National Youth Congress
Indian National Congress - Tamil Nadu

🌹 வருக! வருக!! வருக!!! 🌹கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ்‌ கமிட்டியின் தலைவராக பொறுப்பேற்று, நாளை குமரி மண்ணிற்கு வர...
15/08/2026

🌹 வருக! வருக!! வருக!!! 🌹

கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ்‌ கமிட்டியின் தலைவராக பொறுப்பேற்று, நாளை குமரி மண்ணிற்கு வருகை தரும்

🔥 இளைஞர்களின் எழுச்சி நாயகன் 🔥
திரு. R. லாறன்ஸ் அவர்களை அன்புடனும், உற்சாகத்துடனும் வரவேற்கிறோம்! ❤️🤝

K.R. டைசன்
மாவட்டத் தலைவர்
இளைஞர் காங்கிரஸ்
நாகர்கோயில் மாநகரம்

#வருகவருக ாறன்ஸ் #கன்னியாகுமரிகாங்கிரஸ் #இளைஞர்காங்கிரஸ் #நாகர்கோயில்

கல்விக்கு வித்திட்டு, ஏழை எளியோரின் வாழ்வில் ஒளியேற்றியபெருந்தலைவர் கர்மவீரர் காமராஜர் அவர்களின்பிறந்தநாளில் எங்கள் இதயம...
14/07/2026

கல்விக்கு வித்திட்டு, ஏழை எளியோரின் வாழ்வில் ஒளியேற்றிய
பெருந்தலைவர் கர்மவீரர் காமராஜர் அவர்களின்
பிறந்தநாளில் எங்கள் இதயம் கனிந்த நல்வாழ்த்துகள்!

-- நாகர்கோவில் மாநகர 42வது காங்கிரஸ் கமிட்டி

இன்று (10.07.2026) கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் மாநகர இளைஞர் காங்கிரஸ் சார்பில், வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில...
10/07/2026

இன்று (10.07.2026) கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் மாநகர இளைஞர் காங்கிரஸ் சார்பில், வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் சேவை செய்யும் தலைவர்களை உருவாக்கும் உயரிய நோக்கத்துடன் "மக்கள் சேவகன்" என்ற திட்டம் சிறப்பாக தொடங்கப்பட்டது.

இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக இந்திய இளைஞர் காங்கிரஸ் செயலாளர் Jinshad Jinnas அவர்கள் கலந்து கொண்டு திட்டத்தை தொடங்கி வைத்தார்.

மேலும், நாகர்கோயில் மாநகர இளைஞர் காங்கிரஸ் தலைவர் திரு.டைசன், நாகர்கோவில் சட்டமன்றத் தொகுதி தலைவர் திரு.விக்னேஷ், கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதி தலைவர் திரு.சாம் சுந்தர் மற்றும் ஏராளமான இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்த அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். 💐காங்கிரஸ் கமிட்டி நாகர்கோயில் மாநக...
07/07/2026

வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்த அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். 💐

காங்கிரஸ் கமிட்டி நாகர்கோயில் மாநகரம்
42வது வார்டு

கல்வியே சிறந்த செல்வம் – மாணவர்களின் எதிர்காலத்திற்கு இளைஞர் காங்கிரஸின் அன்புப் பரிசு!- நாகர்கோவில் மாநகர காங்கிரஸ் கமி...
06/07/2026

கல்வியே சிறந்த செல்வம் – மாணவர்களின் எதிர்காலத்திற்கு இளைஞர் காங்கிரஸின் அன்புப் பரிசு!

- நாகர்கோவில் மாநகர காங்கிரஸ் கமிட்டி 42 ஆவது வார்டு

Address

Nagercoil
Kanyakumari (North Part)
629002

Alerts

Be the first to know and let us send you an email when இந்திய தேசிய காங்கிரஸ் நாகர்கோயில் 42வது வார்டு வேதநகர் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share