18/08/2026
பத்திரிகைச் செய்தி
காரைக்கால், ஆக. 14:
80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு எஸ்டிபிஐ கட்சி காரைக்கால் மாவட்டத்தின் சார்பில் மாணவ, மாணவியர்களுக்கான பேச்சுப்போட்டி காரைக்காலில் உள்ள முஹையித்தீன் பள்ளி சமூகநலக் கூடத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு எஸ்டிபிஐ கட்சி காரைக்கால் மாவட்டத் தலைவர் MYS.H. முஹம்மது பிலால் தலைமை வகித்தார்.
மாவட்ட செயற்குழு உறுப்பினர் M
ஹாஜா நஜ்முதீன் வரவேற்புரை ஆற்றினார்.
விம் மாவட்டத் தலைவி நசீரா பேகம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக புதுச்சேரி மாநில பொதுச் செயலாளர்
Z. சுல்தான் கெளஸ், அவர்களும்
புதுச்சேரி ஹஜ் கமிட்டி செயலாளர் A. சுல்தான் அப்துல் காதர், அவர்களும்
முஸ்லிம் வித்தியா சங்கத் தலைவர் ஆடிட்டர் சாகுல் ஹமீது, அவர்களும்
மருத்துவர் Dr. A. முபாரக் அலி (M.B.B.S., PGDRSM.), அவர்களும்
காரைக்கால் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் A.M. ரஞ்சித், அவர்களும்
முஹையித்தீன் பள்ளி ஜாமியா மஸ்ஜித் தலைமை இமாம் மௌலானா மௌலவி அல்ஹாபில் காரி முஹம்மது ரியாஸ் மிஸ்பாஹி, அவர்களும்
வாழ்வியல் வழிகாட்டி மைய நிறுவனத் தலைவர் Dr. M. செய்யது அஹமது (D(Acu)., R.M.P.(AA)., C.A.Y.T., S.M.P., D.S.M.) அவர்களும்
மற்றும் Er. ஷராஃபத் (High Rise Infra) அவர்களும் கலந்து கொண்டு மாணவர்களை ஊக்குவித்தனர்.
பேச்சுப்போட்டிக்கான நடுவர்களாக அவ்வையார் அரசு மகளிர் கல்லூரி தமிழ் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் இரா. அசோக்குமார்,
எஸ்டிபிஐ கட்சி மாநில பொதுச் செயலாளர் Z. சுல்தான் கெளஸ்
மற்றும் தமிழ்ச்சுடர் J. நுஸ்ரத் பாத்திமா (B.Sc., B.Ed.) ஆகியோர் செயல்பட்டனர்.
போட்டியில் கலந்து கொண்ட மாணவ, மாணவியர்கள்
“பெற்ற சுதந்திரத்தைப் பேணிக் காப்போம்”,
“சுதந்திரப் போராட்ட வீரர்களின் கனவுகளை நினைவாக்குவோம்”,
“சுதந்திரம் பெற்ற இந்தியா அன்று முதல் இன்று வரை”
உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் சிறப்பாக உரையாற்றி தங்களது பேச்சுத் திறமையையும் தேசப்பற்றையும் வெளிப்படுத்தினர்.
நிகழ்ச்சியின் நிறைவில் மாவட்ட துணைத் தலைவர்
அப்துல் ரகுமான்
நன்றியுரை ஆற்றினார். மாணவர்களின் உற்சாகமான பங்கேற்புடன் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.