Al Ansaar Charitable Trust, Lalpettai.

Al Ansaar Charitable Trust, Lalpettai. Caring Hand - Caring People

ஈத்துல் ஃபித்ர்(நோன்பு பெருநாள்) என்னும் இத் திருநாளில்  அண்ட சராசரங்களை படைத்த ரப்பிடத்தில் கை ஏந்தியவனாக உங்களுக்கும் ...
30/03/2025

ஈத்துல் ஃபித்ர்(நோன்பு பெருநாள்) என்னும் இத் திருநாளில் அண்ட சராசரங்களை படைத்த ரப்பிடத்தில் கை ஏந்தியவனாக

உங்களுக்கும் /உங்களின் குடும்பத்தாருக்கும் எனக்கும் / என்னுடைய குடும்பத்தாருக்கும் அல்லாஹ் தஆலா ஈருலகிலும் நற்பாக்கியங்களை வாரி வழங்குவனாக என்றும்,

நமது சமுதாயத்திற்கு மத்தியில் ஒற்றுமையையும், இணைப்பையும் ஏற்படுத்துவானாக என்றும்,

நம் அனைவரின் கஷ்டங்களையும் போக்கி ஒருவருக்கு ஒருவர் பரஸ்பரம் அன்பையையும் பாசத்தையையும் வெளிபடுத்துபவர்களாக ஆக்க வேண்டும் என்றும், இம்மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் இவ் வேளையில் *பாலஸ்தீன மக்களின் அமைதிக்கும்/ நமது இஸ்லாமிய சமூகத்தின்

அனைத்து தேவைகளையும் அறிந்து அதனை நிவர்த்தி செய்ய கூடிய வல்லமை மிக்க அந்த உயர்ந்தொனிடத்தில் மன்றாடியவானாக / பிரார்த்தனை செய்தவனாக!!!

உங்கள் அனைவருக்கும் என்னுடைய சார்பாகவும், நமது அல் அன்சார் அறக்கட்டளை சார்பாகவும் ஈத்துல் ஃபித்ர் (நோன்பு பெருநாள்) நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.

தகப்பல்லல்லாஹூ மின்னா வ மின்கும் அமலன் ஸாலிஹா

பொருள்:- உங்களிடமிருந்தும்,என்னிடமிருந்தும் நல் அமல்களை அல்லாஹ் ஏற்றுக் கொள்வானாக!

அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் பெயரால் (ஓதுகிறேன்).அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ! மேன்மையான புகழ் யாவும் ...
21/03/2025

அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் பெயரால் (ஓதுகிறேன்).

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ! மேன்மையான புகழ் யாவும் வல்ல ரஹ்மான் அல்லாஹ் ஒருவனுக்கே!!

அனுப்புதல்,

அல் அன்சார் அறக்கட்டளை,
லால்பேட்டை.

பெறுதல்,

தலைவர், நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள்,
லால்பேட்டை துபாய் ஜமாத்.

கண்ணியத்திற்கும் மதிப்பிற்கும் உரிய லால்பேட்டை துபாய் ஜமாத்திற்க்கு அல் அன்சார் அறக்கட்டளை எழுதிக் கொள்வது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை (16-03-25) துபாயில் நடந்து முடிந்த லால்பேட்டை துபாய் ஜமாத்தின் 37-ம் ஆண்டு விழா மற்றும் 24-ம் ஆண்டு இஃப்தார் நிகழ்வில் நமது ஊரில் உள்ள பொது அறக்கட்டளைகளுக்கு அவர்களின் சேவைகளைப் பாராட்டி அவர்களை ஊக்குவிக்கும் விதமாக தங்கள் ஜமாத் சார்பாக பாராட்டிய நிகழ்வின், நமது அல் அன்சார் அறக்கட்டளை கௌரவித்தமைக்கு நன்றிகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

வல்ல ரஹ்மான் நமது லால்பேட்டை துபாய் ஜமாத் மற்றும் நம் ஊரில் இயக்கி வரும் பல பைத்துல்மால், அறக்கட்டளை சேவைகளை பொருந்திக்கொண்டு மேன்மேலும் வளர்ச்சிப் பாதையில் கியாம நாள் வரை பயணிக்கவும், இதனைச் செம்மையுடன் நடத்தி வரும் இதன் பொறுப்புதாரிளுக்கு இம்மை மற்றும் மறுமையில் அதன் கூலியை அபிவிருத்தி செய்வானாக என்று வல்ல ரஹ்மான் அல்லாஹ்வை பிரார்த்திக்கின்றோம்.

இப்படிக்கு
அல் அன்சார் அறக்கட்டளை
லால்பேட்டை.

தவிர்க்க முடியாத சில காரணங்களால் நமது அல் அன்சார் அறக்கட்டளை ரமலான் இஃப்தார் விநியோகம் சிறிது தாமதம் ஆகி தற்போது நமது நி...
06/03/2025

தவிர்க்க முடியாத சில காரணங்களால் நமது அல் அன்சார் அறக்கட்டளை ரமலான் இஃப்தார் விநியோகம் சிறிது தாமதம் ஆகி தற்போது நமது நிர்வாகிகளால் மக்களுக்கு இஃப்தார் பொருள் விநியோகம் செய்யத் தயார் செய்யப்படுகிறது..

இன்ஷா அல்லாஹ் இன்னும் ஒரு இரு நாளில் பயனாளிகளுக்குச் சென்றடையும்...

உங்களுடைய ஆதரவு மற்றும் பொருளாதார உதவியைத் தொடர்ந்து வழங்கி எங்களுடைய இந்த பணியில் நீங்களும் பங்கு பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்..

24/02/2025
அல்லாஹ்வின் மாபெரும் உதவியாலும் உங்களின் துஆ மற்றும் பொருளாதார ஆதரவாலும் கடந்த சில ஆண்டுகளாக நமது லால்பேட்டை நகரில் ஏழை ...
07/02/2025

அல்லாஹ்வின் மாபெரும் உதவியாலும் உங்களின் துஆ மற்றும் பொருளாதார ஆதரவாலும் கடந்த சில ஆண்டுகளாக நமது லால்பேட்டை நகரில் ஏழை எளிய மக்களுக்கு மருத்துவம் போன்ற சில உதவிகளுடன் ஒவ்வொரு ரமளானில் நோன்பு திறப்பு (இஃப்தார்) க்கு தேவையான பொருள்கள் வழங்கி வருகிறோம் என்பது தாங்கள் அறிந்ததே,

அதே போல் இந்த (2025) ஆண்டும் இஃப்தார் கிட் வழங்க இருக்கிறோம். இத்தனை ஆண்டுகளாக நீங்கள் வழங்கிய ஆதரவை இந்த ஆண்டும் தொடர்ந்து வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

வங்கி மூலமாக பொருளாதர உதவி செய்யும் உதவியாளர்கள் நமது அன் அன்சார் அறக்கட்டளை நிர்வாகிகளுக்கு பணம் அனுப்பிய நகளை வாட்ஸ்அப் மூலமாக தெரியப்படுத்தவும்.

14/01/2025

رَبَّنَا لَا تُزِغْ قُلُوْبَنَا بَعْدَ اِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِنْ لَّدُنْكَ رَحْمَةً ‌ اِنَّكَ اَنْتَ الْوَهَّابُ‏ 
“எங்கள் இறைவனே! நீ எங்களுக்கு நேர் வழியைக் காட்டியபின் எங்கள் இதயங்களை (அதிலிருந்து) தவறுமாறு செய்து விடாதே! இன்னும் நீ உன் புறத்திலிருந்து எங்களுக்கு (ரஹ்மத் என்னும்) நல்லருளை அளிப்பாயாக! நிச்சயமாக நீயே பெருங் கொடையாளியாவாய்!” (அல்குர்ஆன் : 3:8)

அல்ஹம்துலில்லாஹ்..அல்லாஹ்வின் மாபெரும் உதவியாலும் உங்களின் நல் ஆதரவுடன் நமது லால்பேட்டை அல்-அன்சார் அறக்கட்டளை  2025 ரமல...
05/01/2025

அல்ஹம்துலில்லாஹ்..

அல்லாஹ்வின் மாபெரும் உதவியாலும் உங்களின் நல் ஆதரவுடன் நமது லால்பேட்டை அல்-அன்சார் அறக்கட்டளை 2025 ரமலான் மாதத்தில் பத்தாம் ஆண்டில் தனது சேவையில் அடியெடுத்து வைக்கிறது..

இதுவரை நீங்கள் அளித்த நல் ஆதரவை இனிவரும் காலங்களிலும் தொடர்ந்து தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

நமது அல்-அன்சார் தொடர்ந்து செயல்பட உங்களுடைய நல் ஆலோசனைகளையும் ஆதரவையும் தாருங்கள்.

இப்படிக்கு
அல்-அன்சார் அறக்கட்டளை
லால்பேட்டை.

18/11/2024

குடும்ப சிக்கல்கள், நோய்கள்,பொருளாதார நெருக்கடிகள், சமூக அரசியல் சூழ்ச்சிகள், அடையாளம் மற்றும் மார்க்கத்தின் மீதான வெறுப்புப் பிரச்சாரங்கள் என காலம் முழுவதும் நெருக்கடிகளிலும் மனஉளைச்சல்களிலும் உழன்று கொண்டிருக்கும் முஸ்லிம் உம்மத்திற்கு....
...அடிப்படைத் தீர்வாக எளிமையான பரிகாரமாக அல்லாஹ்வால் முன்வைக்கப்பட்டுள்ள அதிகாலை எழுதல் தொழுதல் மனதின் சுமைகளையெல்லாம் கொட்டித் தீர்த்து அழுது புலம்பி மன்றாடி பாவமன்னிப்பு கேட்டு அவனது உதவிகளைப் பெறுதலில் அலட்சியம் காட்டும் நிலையில்.....

ஈடுஇணையற்ற இந்த வணக்கத்துக்கு பரிசாக மனஅமைதியும் அருள்வளங்களும் அளவின்றி வழங்கப்படும் அதிகாலைப் பொழுதில் அதிகமான ஆண்களும் பெண்களும் பிள்ளைகளும் உறக்கத்தில் இருக்கும் சமூகத்தில்....
....எவ்வளவு கல்வியறிவைப் பெற்றாலும்,எத்தனை விழுக்காடு இடஒதுக்கீடு கிடைத்தாலும், எவ்வளவு பெரிய தொழில் முன்னெடுப்புகளாலும்,கோடிகளில் செல்வம் குவித்தாலும் முஸ்லிம் உம்மத்தின் நெருக்கடி நிலையில் எந்த மாற்றங்களும் வந்துவிடப் போவதில்லை.

ஃபஜ்ர் தொழுகையில் பள்ளிவாசல்கள் நிரம்ப நிரம்ப...
பெண்களின் தொழுகையால் வீடுகள் உயிர்பெற உயிர்பெற...
..அல்லாஹ்வின் உதவிகளும் அதனூடாக உம்மத்தின் கண்ணியமும் பாதுகாப்பும் உயர்ந்து கொண்டே செல்லும். சமூகப் பொருளாதார அரசியல் அதிகாரங்கள் விரிவடைந்து கொண்டே செல்லும்.

இது அல்லாஹ்வின் வாக்கு.

உம்மத்தை தொழுகையோடு பிணைப்பது தான் சமூகப் பணிகளின் ஆதாரமானப் பணியும் முதன்மை செயல்திட்டமும் ஆகும். இதைத் தாண்டிய வேறு தீர்வு எதுவும் இருந்ததும் இல்லை இருக்கப் போவதும் இல்லை.

- CMN Saleem

Address

Al-Ansaar Charitable Trust
Kattumannarkoil
608303

Opening Hours

Monday 6am - 10pm
Tuesday 6am - 10pm
Wednesday 6am - 10pm
Thursday 6am - 10pm
Friday 6am - 10pm
Saturday 6am - 12pm
Sunday 5am - 11pm

Telephone

+917418148990

Alerts

Be the first to know and let us send you an email when Al Ansaar Charitable Trust, Lalpettai. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Al Ansaar Charitable Trust, Lalpettai.:

Share