Vanakkam Kovilpatti

Vanakkam Kovilpatti Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Vanakkam Kovilpatti, Social service, muthanandhapuram 1st Street, Kovilpatti.

வணக்கம் கோவில்பட்டி

நமது கோவில்பட்டி ஊரின் பெருமைகள், செய்திகள் மற்றும் தகவல்களுக்கு நமது பக்கத்தினை பின்தொடருங்கள்.

🔮 இன்றைய ராசிபலன் & பஞ்சாங்கம் | 05.09.2026 🕉️இன்றைய பஞ்சாங்கம், முக்கிய நேரங்கள், 12 ராசிகளுக்கான ராசிபலன் மற்றும் சதுர...
05/09/2026

🔮 இன்றைய ராசிபலன் & பஞ்சாங்கம் | 05.09.2026 🕉️

இன்றைய பஞ்சாங்கம், முக்கிய நேரங்கள், 12 ராசிகளுக்கான ராசிபலன் மற்றும் சதுர்த்தி தின சிறப்பு தகவல்களை ஒரே பதிவில் தெரிந்துகொள்ளுங்கள். 🙏✨

📍 வணக்கம் கோவில்பட்டி
உள்ளூர் செய்திகள், தினசரி ராசிபலன், பஞ்சாங்கம் மற்றும் முக்கிய தகவல்களுக்கு எங்களுடன் இணைந்திருங்கள்.

#வணக்கம்_கோவில்பட்டி #இன்றைய_ராசிபலன் #ராசிபலன் #பஞ்சாங்கம் #இன்றைய_பஞ்சாங்கம் #சதுர்த்தி #விநாயகர் #விநாயகர்_வழிபாடு #தமிழ்_பஞ்சாங்கம் #கோவில்பட்டி

மனைவி சமையல் பணியில் இருந்து நீக்கப்பட்டதால் பழி வாங்குவதற்காக பள்ளிக் குழந்தைகளுக்கான காலை உணவில் விஷம் கலந்த நபர்பள்ளி...
04/09/2026

மனைவி சமையல் பணியில் இருந்து நீக்கப்பட்டதால் பழி வாங்குவதற்காக பள்ளிக் குழந்தைகளுக்கான காலை உணவில் விஷம் கலந்த நபர்

பள்ளி உணவில் விஷம் கலந்த நபர் கைது

📍. சத்தியமங்கலம் அருகே அரசுப் பள்ளியின் சமையல் பணியில் இருந்து தனது மனைவியை நீக்கியதால் பழி தீர்க்க, குழந்தைகளுக்கான காலை உணவு │சாம்பாரில் விஷம் கலந்த ஆறுமுகம் என்பவர் கைது

சாம்பாரை ருசி பார்த்த ஆசிரியை கசப்பை உணர்ந்து, அதை சாப்பிட வழங்காததால் 51 குழந்தைகளின் உயிர் தப்பியது.

போலீஸ் விசாரணையில், சாம்பாரில் தரை மொழுகும் கெமிக்கல் பவுடர் கலந்திருப்பது தெரியவந்தது.

VS ENTERPRISES லேசர் கட்டிங்+91 73589 70898
04/09/2026

VS ENTERPRISES லேசர் கட்டிங்

+91 73589 70898

கோவில்பட்டி SMD TRAVELS- ன் இனிய கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துக்கள்
04/09/2026

கோவில்பட்டி SMD TRAVELS- ன் இனிய கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துக்கள்

🔮 இன்றைய ராசிபலன் & பஞ்சாங்கம் | 04.09.2026 🕉️இன்றைய பஞ்சாங்கம், முக்கிய நேரங்கள், 12 ராசிகளுக்கான ராசிபலன் மற்றும் சதுர...
04/09/2026

🔮 இன்றைய ராசிபலன் & பஞ்சாங்கம் | 04.09.2026 🕉️

இன்றைய பஞ்சாங்கம், முக்கிய நேரங்கள், 12 ராசிகளுக்கான ராசிபலன் மற்றும் சதுர்த்தி தின சிறப்பு தகவல்களை ஒரே பதிவில் தெரிந்துகொள்ளுங்கள். 🙏✨

📍 வணக்கம் கோவில்பட்டி
உள்ளூர் செய்திகள், தினசரி ராசிபலன், பஞ்சாங்கம் மற்றும் முக்கிய தகவல்களுக்கு எங்களுடன் இணைந்திருங்கள்.

#வணக்கம்_கோவில்பட்டி #இன்றைய_ராசிபலன் #ராசிபலன் #பஞ்சாங்கம் #இன்றைய_பஞ்சாங்கம் #சதுர்த்தி #விநாயகர் #விநாயகர்_வழிபாடு #தமிழ்_பஞ்சாங்கம் #கோவில்பட்டி

🚨 பள்ளியில் 8-ஆம் வகுப்பு மாணவனுக்கு  துன்புறுத்தல் – 9 மாணவர்கள் கைது!தூத்துக்குடி அருகே தருவைகுளம் அரசு மேல்நிலைப் பள்...
03/09/2026

🚨 பள்ளியில் 8-ஆம் வகுப்பு மாணவனுக்கு துன்புறுத்தல் – 9 மாணவர்கள் கைது!

தூத்துக்குடி அருகே தருவைகுளம் அரசு மேல்நிலைப் பள்ளியில், 8-ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் பள்ளி நூலக அறையில் இருந்தபோது, சக மாணவர்கள் 9 பேர் அவருக்கு பா*லியல் துன்புறுத்தல் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மேலும், மாணவரின் பிறப்புறுப்பில் மிளகாய்ப் பொடி தூவப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்து தகவல் அறிந்த குளத்தூர் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில், குற்றஞ்சாட்டப்பட்ட 9 மாணவர்கள் மீதும் போக்ஸோ சட்டம் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட 9 மாணவர்களும் தூத்துக்குடி இளஞ்சிறார் நீதிக்குழுமம் முன்பு ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், திருநெல்வேலி சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் சேர்க்கப்பட்டனர்.

இதையடுத்து கல்வித்துறை அதிகாரிகளும் பள்ளிக்குச் சென்று தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்களிடம் சுமார் 5 மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

📌 குறிப்பு: சிறார்களைப் பாதுகாக்கும் வகையில் அவர்களின் அடையாளங்களை வெளியிடாமல் செய்தியைப் பகிர்வது அவசியம்.

#தூத்துக்குடி #தருவைகுளம் #போக்ஸோ #பள்ளிசெய்தி #தமிழ்செய்திகள் #குழந்தைகள்பாதுகாப்பு

தூத்துக்குடி வ.உ.சி துறைமுகம் பசுமை மாற்றத்தின் முதன்மை மையம்: ஐசிசிடி (ICCT) கொள்கை அறிக்கை வெளியீடு!புதுடெல்லியில் நடை...
03/09/2026

தூத்துக்குடி வ.உ.சி துறைமுகம் பசுமை மாற்றத்தின் முதன்மை மையம்: ஐசிசிடி (ICCT) கொள்கை அறிக்கை வெளியீடு!
புதுடெல்லியில் நடைபெற்ற 'இந்தியத் தூய்மைப் போக்குவரத்து உச்சிமாநாடு 2026'-இல், இந்தியாவின் பசுமை கடல்சார் மாற்றத்தை விரைவுபடுத்தும் நோக்கில் பன்னாட்டுத் தூய்மைப் போக்குவரத்து கவுன்சில் (ICCT) தயாரித்துள்ள "கடல்சார் கார்பன் குறைப்பில் வ.உ. சிதம்பரனார் துறைமுகத்தின் பங்கு" என்ற கொள்கை அறிக்கை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

முக்கிய அம்சங்கள்:
* முதல் பசுமை ஹைட்ரஜன் மையம்: தேசிய பசுமை ஹைட்ரஜன் திட்டத்தின் கீழ் இந்தியாவின் முதல் பசுமை ஹைட்ரஜன் மையமாக தூத்துக்குடி வ.உ.சி துறைமுகம் உருவெடுத்துள்ளது. இங்கு 3 மெகாவாட் (3 MW) பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது.
* புதிய உள்கட்டமைப்புகள்: 2 × 750 கன மீட்டர் அளவிலான பசுமை மெத்தனால் சேமிப்புக் கிடங்கு, பசுமை அமோனியாவிற்கான பிரத்யேகப் படகுத் துறை மற்றும் கப்பல்களுக்குக் கரையில் இருந்தே மின்சாரம் வழங்கும் (Shore-to-Ship power) நவீன வசதிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.

* ரூ.41,860 கோடி முதலீடு: பசுமை எரிபொருள் உற்பத்தியாளர்களுக்காக துறைமுக வளாகத்தில் 501 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டு, இதன் மூலம் ரூ.41,860 கோடி மதிப்பிலான மாபெரும் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன.

* பூஜ்ய உமிழ்வு இலக்கு: மத்திய அரசின் 'ஹரித் சாகர்' வழிகாட்டுதலின் படியும், 2070-ஆம் ஆண்டிற்குள் 'பூஜ்ய உமிழ்வு' (Net Zero) என்ற பிரதமரின் இலக்கின் படியும் வ.உ.சி துறைமுகம் தொடர்ந்து பசுமைத் திட்டங்களை முன்னெடுத்து வருவதாக துறைமுகச் சேர்மன் சுசாந்த குமார் புரோஹித் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டத்தில் இன்று (03.09.2026) மாவட்ட ஆட்சியர் திரு.விஷு மகாஜன், இ.ஆ.ப., அவர்கள் பல...
03/09/2026

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டத்தில் இன்று (03.09.2026) மாவட்ட
ஆட்சியர் திரு.விஷு மகாஜன், இ.ஆ.ப., அவர்கள் பல்வேறு துறையின் கீழ்
செயல்படுத்தப்படும் திட்டப்பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் கூட்டம் நடைபெற்றது
03/09/2026

மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் கூட்டம் நடைபெற்றது

சிந்தலக்கரை வெட்காளியம்மன் கோயிலில் ஆனி மகா வேள்வி பூஜை​:தூத்துக்குடி மாவட்டம் சிந்தலக்கரை வெட்காளியம்மன் காளிபராசக்தி ப...
03/09/2026

சிந்தலக்கரை வெட்காளியம்மன் கோயிலில் ஆனி மகா வேள்வி பூஜை
​:
தூத்துக்குடி மாவட்டம் சிந்தலக்கரை வெட்காளியம்மன் காளிபராசக்தி பீடத்தில் ஆனி மாத வேள்வி பூஜை, சக்தி மாலை இருமுடி விழா மற்றும் மகாயாகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த மகாயாகத்தில் பல்வேறு பொருட்கள் யாக குண்டத்தில் செலுத்தப்பட்டு சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது. 42 அடி உயர அம்மன் சிலைக்கு 108 லிட்டர் பாலாபிஷேகம் மற்றும் 18 கிலோ எலுமிச்சை மாலை அணிவித்து சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. மேலும், பல மாவட்டங்களில் இருந்து 1,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் இருமுடி ஏந்தி வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்

Address

Muthanandhapuram 1st Street
Kovilpatti
628501

Website

Alerts

Be the first to know and let us send you an email when Vanakkam Kovilpatti posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category