20/05/2026
பெட்ரோல்,டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து கோவில்பட்டியில் இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டம்!
ஒன்றிய மோடி அரசின் பெட்ரோல்,டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்தும், விலை உயர்வை திரும்ப பெற வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்)
ஆகிய இடதுசாரி கட்சிகள் சார்பில் #கோவில்பட்டி பழைய பேருந்து நிலையம் முன்பு இன்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
ஆர்ப்பாட்டத்திற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகர செயலாளர் சீனிவாசன் தலைமை வகித்தார். நகர குழு உறுப்பினர் அந்தோணி செல்வம்,இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட துணைச் செயலாளர் பாபு, நகர செயலாளர் செந்தில் ஆறுமுகம், மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியின் மாவட்ட நிர்வாகி சண்முக பெருமாள் ஆகியோர். உரையாற்றினார். இறுதியாக,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் அர்ஜுனன் கண்டன உரையாற்றி நிறைவு செய்தார்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரவீந்திரன் மாவட்ட குழு உறுப்பினர்கள் கிருஷ்ணவேணி,மணி மற்றும் நகர,ஒன்றிய, தாலுகா குழுவின் நிர்வாகிகள்,தோழர்கள் பலர் கலந்து கொண்டனர்.