22/08/2026
🚆 மதுரை – தஞ்சாவூர் நேரடி ரயில் பாதை: 4 மாவட்ட மக்களின் நீண்ட நாள் கனவு! 🙏✨
மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் ஆகிய 4 மாவட்டங்களை நேரடியாக இணைக்கும் புதிய ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் வலுப்பெற்றுள்ளது. 🚆
📍 முன்மொழியப்படும் வழித்தடம்:
கூடல் நகர் (மதுரை) ➝ மேலூர் ➝ திருப்பத்தூர் ➝ திருமயம் ➝ புதுக்கோட்டை ➝ கந்தர்வக்கோட்டை ➝ தஞ்சாவூர்
🛕 சுற்றுலா & ஆன்மிக வளர்ச்சி: பிள்ளையார்பட்டி, குன்றக்குடி, பட்டமங்கலம், திருக்கோஷ்டியூர், திருமயம் கோட்டை, மதுரை மற்றும் தஞ்சாவூர் கோயில்களுக்கு நேரடி ரயில் இணைப்பு கிடைக்கும்.
⏱️ பயண நேரம் குறையும்: மதுரை – சென்னை பயணத்தில் சுமார் 44 கி.மீ தூரம் குறையும் வாய்ப்பு உள்ளது.
🚌 சாலை நெரிசல் குறையும்: மதுரை–தஞ்சாவூர் சாலையில் அதிகரித்து வரும் பேருந்து மற்றும் சரக்கு போக்குவரத்துக்கு மாற்று வாய்ப்பு உருவாகும்.
🌾 விவசாயம் & வணிகம் வளர்ச்சி: 4 மாவட்டங்களுக்கிடையே மக்கள், விவசாய விளைபொருட்கள் மற்றும் சரக்கு போக்குவரத்து மேலும் எளிதாகும்.
🔍 தற்போதைய நிலை: 2012-ல் தஞ்சாவூர்–புதுக்கோட்டை இடையேயான 71 கி.மீ ரயில் பாதைக்கு சர்வே மேற்கொள்ளப்பட்ட நிலையில், திட்டம் பின்னர் கிடப்பில் போடப்பட்டது. தற்போது பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்து அதிகரித்துள்ளதால், புதிய Engineering & Traffic Survey மேற்கொண்டு திட்டத்தை மீண்டும் பரிசீலிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
📢 4 மாவட்டங்களின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றிணைந்து, ஒன்றிய ரயில்வே அமைச்சகத்திடம் இந்த திட்டத்திற்கான புதிய சர்வே மற்றும் நிதி ஒதுக்கீட்டை வலியுறுத்த வேண்டும்.
மதுரை – புதுக்கோட்டை – தஞ்சாவூர் இணையும் இந்த ரயில் பாதை, தென் மற்றும் மத்திய தமிழகத்தின் வளர்ச்சிக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும். 🚆❤️
👉 இந்த கோரிக்கை நிறைவேற வேண்டும் என நினைத்தால் பதிவை பகிர்ந்து ஆதரவு தெரிவியுங்கள்!