CPM - Jaihindpuram Madurai

CPM - Jaihindpuram Madurai இந்திய கம்யுனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)
மதுரை மேற்கு 2ஆம் பகுதிக்குழு

*தவெக வின் தலைவர் விஜய் அவர்கள் நாணயமானவர் தானா?*சமீபத்தில் தனது கொடியையும் கொள்கையும் அறிமுகம் செய்ய ஒரு மாநாடு நடத்தி ...
31/10/2024

*தவெக வின் தலைவர் விஜய் அவர்கள் நாணயமானவர் தானா?*

சமீபத்தில் தனது கொடியையும் கொள்கையும் அறிமுகம் செய்ய ஒரு மாநாடு நடத்தி நிறைய வசனங்களை பேசினார்.

அந்த வசனங்களில் ஒன்று ஊழல் ஒழிப்பு மற்றும் பாசிசத்தை நீர்த்துப்போக செய்யும் அளவுக்கு பாயாசம் என்றும் பன்ச் டயலாக் எல்லாம் அடித்தார். ஒரு பக்கம் பெரியார், அம்பேத்கார் இன்னொரு பக்கம் பகவத் கீதை என்றெல்லாம் காட்சி படுத்தி இருந்தார்.

தெளிவான புரிதல் இல்லாமல் வசனகர்த்தா எழுதிக்கொடுத்ததை ஒருவித நடிப்புடன் ஒப்புவித்தார் என்று கூட சொல்லலாம்.

இவரது வீட்டில் வருமான வரித்துறையின் மூலம் சோதனை நடத்தப்பட்டது என்பது அனைவரும் அறிவோம். அந்த வருமான வரித்துறை சோதனையின் போது அவரது வீட்டில் இருந்து கோடிக்கணக்கான பணத்தை கைப்பற்றினர் என்பது வெளியே கசிய விடாமல் பார்த்துக்கொண்டனர் பாஜகவினர்.

இறுதியில் அவர் மீது போடப்பட்ட வழக்கில், விஜய் சுயமாக தனது வருமானத்தை 15 கோடி குறைத்து காட்டியதாக பிரமாண வாக்குமூலமும் கொடுத்து இருக்கிறார்.

உங்கள் பார்வைக்காக அந்த வழக்கின் முழு தீர்ப்பு

https://itat.gov.in/public/files/upload/1653045118-C%20ITA%203345%20of%2019-GM.pdf

இரண்டாம் பக்கத்திலே அவர் தெரிவித்த ஒப்புக்கொண்ட கருப்பு பணம்.

அரசுக்கு வருமான வரி கட்டாமல் இப்படி கருப்புப்பணம் வைத்து இருக்கும் விஜய் தான் இப்போது ஊழலை ஒழிக்க வந்தவராக பரிணமிக்கிறார்.

சீமானை விட அதிகமாக அறிவிலிகளை உருவாக்கி வைத்திருக்கும் விஜய், இன்னும் என்ன எல்லாம் சொல்ல போகிறாரோ? நாமும் நம் கணக்கிற்கு இன்னும் விபரங்களை சேகரித்து அவர் யார் எந்த அளவுக்கு நல்லவர் என்று பரப்புரை செய்வோமாக.

ஆர் எம் பாபு

*சாம்சங் தொழிலாளர் போராட்டமும் தற்குறிகளின் விமர்சனமும்*உலக தொழிலாளர்களே ஒன்று சேருங்கள் என்ற முறையில் தான் அரசியல் சார்...
13/10/2024

*சாம்சங் தொழிலாளர் போராட்டமும் தற்குறிகளின் விமர்சனமும்*

உலக தொழிலாளர்களே ஒன்று சேருங்கள் என்ற முறையில் தான் அரசியல் சார்பு எதிர் நிலைகள் இருந்தாலும் தொழிலாளர் நலம் சார்ந்து கடந்த காலங்களில் போராடி வெற்றி பெற்ற நிகழ்வுகள் வரலாறு முழுக்க இறைந்து கிடக்கிறது.

12 மணி நேர வேலை திட்டத்தை ஆளும் அரசாங்கம் கொண்டுவந்தது. அதை அரசியலுக்கு அப்பாற்பட்டு தொமுச உள்ளிட்ட அனைவருமே ஒன்றுபட்டு எதிர்த்த நிலையில் ஆளும் கட்சியும் அதை புரிந்து கொண்டு வாபஸ் வாங்கியது.

ஏற்கனவே தொழிலாளர் விரோத போக்கிலே, தமிழ்நாட்டில் கட்டுமானத் தொழிலாளர் நல வாரியம் மற்றும் உடல் உழைப்புத் தொழிலாளர் நல வாரியத்தில் இதுவரை பதிவு செய்து வைத்திருந்த சுமார் 70 லட்சம் தொழி லாளர்களின் தரவுகள் கணினி சேமிப்பகத்தில் இருந்து முழுவதும் அழிந்து விட்டதாக தகவல் வந்த போதும் கூட பேச்சுவார்த்தை நடத்தி அதை சரி செய்ய கோரிக்கொண்டு தான் இருக்கிறது.

இப்படி தொழிலாளர்களுக்காக ஒன்றுபட்டு போராடியது தான் சாம்சங் தொழிலாளர்களின் போராட்டமும்.

அந்த நிறுவனத்தில் 17 ஆண்டுகளாக தொழிலாளர் சட்டங்களை மதிக்காமல் அவர்களை மிரட்டி பணிவாங்கியது என்று அந்த நிறுவன தொழிலாளர்கள் கூறியதை அடுத்து சட்டபூர்வமாக அங்கே இருக்கும் தொழிலாளர்கள் பல்வேறு கட்டங்களாக போராடிய பின்னரும் அவற்றை கண்டுகொள்ளாமல் இருந்ததால் தனியாக அமைப்பு ரீதியாக போராடாவிட்டால் தீர்வு இல்லை என்று கருதி அந்த பகுதியில் 77 பன்னாட்டு நிறுவனங்களில் சங்கம் வைத்து தொழிலாளர் கோரிக்கைகளை பெற்றுக்கொடுத்த CITU வை அணுகிய நிலையில் இந்த சங்கமும், இங்கே தொழிற்சங்கம் அமைப்பதற்காக தொழிலாளர் நலத்துறை பதிவாளரிடம் சாம்சங் இந்தியா தொழிலாளர் யூனியன் (SIWU) சங்கத்தை பதிவு செய்ய தொழிலாளர்கள் முன்மொழிவு செய்த மனுவை 02-07-2024 அன்று கொடுக்கிறார்கள். இப்படி யார் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம்.

இந்த மனு 2 மாத காலம் கடந்த பின்னரும் அதை அரசாங்கம் பதிவு செய்யவில்லை என்ற வகையிலும், நிர்வாகம் மேலும் மேலும் தீவிர போக்கை கடைபிடித்து வந்த நிலையில் 02-09-2024 அன்று காலவரையற்ற போராட்டத்தில் இறங்குகிறார்கள். போராட்டம் தொடர்ந்த நிலையில் 18-09-2024 அன்று அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் சங்கப்பதிவை செய்து தர கோரி ஓர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். கைது, விடுதலை நடந்தது.

அதன் பின்னர் 30-09-2014 அன்று நீதிமன்றத்தை நாடி தொழிற்சங்கம் பதிவு செய்ய உத்தரவிட கோரி வழக்கு பதிவு செய்யப்படுகிறது. இந்த வழக்கு சாதரணமாக காவல் நிலையம் சென்று புகார் கொடுத்து அதை காவல் துறை FIR போடாவிட்டால் நீதிமன்றம் சென்று நாம் அந்த காவல்துறைக்கு உத்தரவிட கோரி வழக்கு தொடுப்பது போலான ஒரு வழக்கு. வழக்கு விசாரணையில் இருக்கும் காலத்திலேயே கூட காவல் துறை புகாரை பதிவுசெய்துவிட்டால் வழக்கு நீர்த்து போகும். அவ்வாறான வழக்கு தான் CITU நீதிமன்றத்தில் போட்ட வழக்கும் கூட.

இந்த நிலையில் நீதிமன்றத்தில் ஆஜரான சாம்சங் தரப்பு, சாம்சங் என்ற பெயரில் யூனியன் அமைக்க மறுப்பு தெரிவித்ததோடு தங்களையும் இந்த வழக்கில் இணைத்துக்கொள்ளவேண்டும் என்ற கோரிக்கையை வைத்து இருக்கிறது

தொழிற்சங்க பதிவு என்பது அவசியமான ஒன்று என்றாலும் பதிவு செய்யப்படாத சங்கங்கள் செயல்படலாம். அப்படி இந்த சங்கமும் செயல்பட்டுக்கொண்டு தான் இருக்கிறது. அதற்கு உதாரணமாக சான்றாக இருப்பது தான் இந்த தொடர் போராட்டங்கள். போராட்டங்களை அந்த ஊழியர்கள் ஒற்றுமையாக நடத்தி வருகிறார்கள்.
ஒரு மாத கால போராட்டத்திற்கு பின்னர் தமிழக முதல்வர் சாம்சங் நிறுவன தொழிலாளர் பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண மூன்று அமைச்சர்களை அனுப்புகிறார்.
அவர்கள் சென்று சாம்சங் நிர்வாகத்திடம் பேசிவிட்டு வெற்று தாளில் அவர்களாகவே கோரிக்கையை தயாரித்து அந்த கோரிக்கையை ஒப்புக்கொண்டதாக கையெழுத்திட்ட ஒப்பந்தத்தை பத்திரிக்கைகளுக்கு கொடுக்கிறார்கள்.

• நிர்வாகம் தொழிற்சங்கம் அமைப்பதை தவிர அனைத்து கோரிக்கைகளையும் ஏற்றுக்கொண்டது.

• போராடுபவர்கள் பணிக்கு திரும்ப வேண்டும்.

• வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் அது Subjudice.

• காவல்துறையின் அத்துமீறிய கைது நடவடிக்கை

இந்த 4 செயல்களும் தவறானவை.

நான் 18 ஆண்டு கால வெளிநாட்டில் பன்னாட்டு நிறுவனங்களில், CEO, MD, CFO என்ற உயர் நிர்வாக பொறுப்புகளில் இருந்தவன் எனும் அனுபவத்திலும் சர்வதேச சட்டங்கள் தெரிந்தவன் எனும் முறையிலும் இந்த விவகாரத்தில் அரசாங்கம் நிர்வாகத்திற்கு ஆதரவாக இவ்வளவு தூரம் இறங்கி செல்லவேண்டிய அவசியம் இல்லை. இந்த செயல்கள் தொழிலாளர்களுக்கு எதிராக, தொழிற்சங்கத்திற்கு எதிராக என்ற பிம்பத்தை கட்டமைத்து விட்டது என்பதை மறுக்க முடியாது.

இந்த நிறுவனம் இந்தியாவிற்கு வந்து 17 ஆண்டுகள் ஆகிவிட்டது. எந்த ஒரு நாட்டு நிறுவனமும் இன்னொரு நாட்டில் முதலீடு இடுவதற்கு முன்பாகவே அந்த நாட்டில் இருக்கும் தொழிலாளர் சட்டங்கள், வருமான வரி சட்டங்கள் ஆகியவற்றை நன்கு அறிந்து திட்ட அறிக்கை தயார் செய்து தான் முதலீட்டுக்கு வருவார்கள்.

இந்த நிறுவனமானது பல்வேறு நாடுகளில் இருக்கிறது என்றும் அவர்களுக்கான சில வரம்புகள் இருப்பதால் தான் தொழிற்சங்கத்தை அங்கீகரிக்க முடியாது என்பது போன்ற விளக்கத்தை கொடுக்கும் அளவுக்கு அமைச்சர்கள் இறங்கி பேசுவது என்பது அவர்கள் நம் நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தை இழிவுசெய்வதற்கு சமமானது என்பதாக தான் படுகிறது.

தொழிலாளர் நலத்துறை தொழிற்சங்கம் பதிவை செய்திருந்தால் மிக அமைதியாக மற்ற தொழிற்சங்கம் போன்று கடந்து போய் இருக்கும். அதை செய்ய தவறிய அந்த ஆணையர் மேல் நடவடிக்கை எடுத்திருந்தால் அமைதியாக கடந்து சென்று இருக்க கூடும்.

பேச்சுவார்த்தைக்கு சென்றவர்கள் போராடும் தொழிலாளர்களையும் அழைத்து பேசி ஒரு முடிவுக்கு வந்திருக்கலாம். அமைதியாக கடந்து சென்று இருக்கும்.
இப்பொழுதும் அந்த தொழிற்சங்கம் என்பது பதிவு செய்யப்பட்டது அல்லது பதிவுசெய்யப்படாதது என்பதில் எந்த வேறுபாடும் இல்லை. நாளையே நீதிமன்றம் அவர்களுக்கு பதிவு செய்துவிட உத்தரவு இடக்கூடும். அதன் பின்னர் பதிவுசெய்யப்பட்ட சங்கத்தை அந்த நிறுவனம் அழைத்து பேசி தான் ஆகவேண்டும். அது தான் சட்ட வழிமுறையும் கூட.

நடந்த அத்தனை தவறுகளையும் திருத்திக்கொள்ள வேண்டுமென்றால் சங்கத்தை பதிவு செய்து, நிர்வாகத்தை சங்கத்துடன் பேச்சுவார்த்தை செய்து பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் அதை விடுத்து சட்ட விரோதமாக சட்டத்திற்கு எதிராக ஆட்சியாளர்கள் நடந்துகொண்டால் பிரச்சினை இன்னும் தீவிரமடையும்.

ஆர் எம் பாபு

12/10/2024
துணை முதல்வர் கொடுத்த அறிக்கை.  எப்படியோ அரசின் செவியை அறைந்து பேச வைத்து இருக்கிறது.இது சாம்சங் இந்தியாவிற்குள் வரும்போ...
10/10/2024

துணை முதல்வர் கொடுத்த அறிக்கை. எப்படியோ அரசின் செவியை அறைந்து பேச வைத்து இருக்கிறது.

இது சாம்சங் இந்தியாவிற்குள் வரும்போது அவர்கள் எடுத்த சத்திய பிரமாணம்.

இதை துணை முதல்வர் உதய நிதி படிக்காமல் தான் பகிர்ந்தாரா? நம் வயதை ஒத்த உதயநிதி, நம்மை போன்று கூட படிக்கமாட்டாரா?

தனது தரத்தை குறைத்துக்கொண்டு வருகிறாரா?

ஆர் எம் பாபு

https://www.youtube.com/watch?v=s6IAX8USWnQVsnavamani MaranJeevabharathy Kவரலாற்றை மிகவும் ஆதாரங்களுடன் பதிவிட்டு இருக்க...
07/10/2024

https://www.youtube.com/watch?v=s6IAX8USWnQ

Vsnavamani Maran
Jeevabharathy K

வரலாற்றை மிகவும் ஆதாரங்களுடன் பதிவிட்டு இருக்கிறார் தோழர்.

வாழ்த்துக்கள்

பாண்டியர் வரலாறு பற்றி சீமான் தவறாக பேசுகிறார் திரு வி எஸ் நவமணி அகில இந்திய பார்வர்டு பிளாக் #தேவேந்திரர் ...

05/10/2024

சந்திர பாபு நாயுடு & பவன் கல்யாண் - உங்களின் ஆந்திர மாநில அரசியல் லாபத்திற்காக இந்த இரண்டு மாநிலத்திலும் வாழ்ந்துவரும் தமிழர்களை, தெலுங்கர்களை பலிகடா ஆக்காதீர்கள் - ஆர் எம் பாபு

இந்திய பாராளுமன்ற தேர்தலோடு நடந்த ஆந்திரபிரதேச தேர்தலில் வெற்றி பெற்ற சந்திரபாபு நாயுடு தலைமையிலான அரசின் தமிழர்களுக்கு எதிரான வன்மம் அதிகமாகி வருகிறது.

குறிப்பாக தமிழகத்தை சேர்ந்த பால் தயாரிக்கும் ஏ.ஆர்.புட்ஸ் (ராஜ் பால் நிறுவனம்) மீது திருப்பதி லட்டு தயாரிப்பிற்கான நெய் வழங்கிய நிலையில் அந்த நெய்யில் மாட்டு கொழுப்பு பன்றி கொழுப்பு இருந்ததாக ஆய்வு அறிக்கைக்கு முன்பே அந்த மாநிலத்தின் முதல்வர் சந்திர பாபு நாயுடு அறிவித்தார். அரசியலுக்காக அதை செய்தது ஜெகன் மோகன் ரெட்டி அரசு என்று பேசினார்.

அதற்கு மறுப்பு தெரிவித்து அந்த ஏ.ஆர்.புட்ஸ் நிறுவனம் பல்வேறு விதமான அறிக்கைகளை ஆதாரங்களுடன் பதிவிட்டு வந்தது.

இவற்றை எல்லாம் மீறி ஆதாரம் இன்றி கூறப்பட்ட குற்றச்சாட்டுக்கு திருப்பதி திருமலா தேவஸ்தானம் உள்ளிட்ட அமைப்புகள் மறுப்பு தெரிவித்து வந்தன. இந்த நிலையிலும் கூட மூடத்தனமாக ஆந்திராவின் துணை முதல்வரும் நடிகரும் சிரஞ்சீவி அவர்களின் தம்பியுமான பவன் கல்யான் புனிதப்படுத்துவதற்காக விரதம் இருந்து திருப்பதியில் இருந்து திருமலை வரை பாத யாத்திரை செய்வதாக அறிவித்து அதை விளம்பரப்படுத்தி வந்தார்.

ஜெகன் மோகன் ரெட்டி தன் மீது அவதூறு பழி போடுவதாக உச்ச நீதிமன்றத்தை அணுகி வாதிட்டு சந்திரபாபு நாயுடுவுக்கும் பவன் கல்யாணுக்கும் குட்டு வைத்து, ஆதாரம் இல்லாத கருத்துக்களை இப்படி பொறுப்பு இன்றி பதிவிடுவது அபத்தம் என்று கூறியது.

இப்போதைய ஆய்வறிக்கையில் தமிழகத்தை சேர்ந்த நிறுவனம் விநியோகித்த நெய்யில் எந்த பிரச்சினையும் இல்லை என்றும் ஆந்திராவை சேர்ந்த குண்டூரில் இருக்கும் நிறுவனம் விநியோகித்ததில் தான் இப்படி இருந்தது என்று இன்னும் உறுதிபடுத்தாத அறிக்கை வெளியிடப்பட்டு இருக்கிறது.

இந்த பிரச்சினை ஒரு பக்கம் இருக்க அடுத்ததாக சனாதனம் குறித்த சர்ச்சையை தமிழகம் நோக்கி கிழப்பி இருக்கிறார். தமிழகத்தை சேர்ந்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சனாதனத்தை வைரஸ் போன்று அழித்துவிடுவேன் என்று அறிவித்து இருக்கிறார். நாங்கள் சும்மா விடமாட்டோம். இப்படி பேசுபவர்கள் அழிந்து போவார்கள் என்று பேசி வருகிறார்.

ஆந்திரத்தின் துணை முதலமைச்சர் பவன் கல்யான் அவர்கள் நாக்கை அடக்கி பேச வேண்டும். இரு மாநிலங்களுக்கு உள்ளே அமைதியை கெடுத்து குந்தகம் செய்யும் அளவுக்கு பேசி இன்னும் அசிங்கப்படாதீர்கள்.

நீங்கள் ஒரு நடிகர் என்பதை நாடு அறியும். ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பு, 2018-19 இடதுசாரி சித்தாந்தங்களை கூறி தோழர் கே.பாலகோபால் போன்ற உரிமை ஆர்வலர்களின் பெயர்களைக் கூறி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) (சிபிஐ) ஆகியவற்றுடன் இணைந்து பணியாற்றினீர்கள். பகுஜன் சமாஜ் கட்சியுடன் இனைந்து (பிஎஸ்பி). கியூபப் புரட்சியாளர் சே குவேராவுக்கு சிறப்பு இடமளிக்கும் வகையில், உங்கள் தேர்தல் பிரச்சாரம் சிவப்பு மற்றும் நீல நிறச் சின்னங்களால் சூழப்பட்டது. இவரது ரசிகர்களும் கொரில்லா போன்ற சொற்களை உதிர்ப்பார்கள். அவர்களின் வாகனங்கள் சேகுவேராவின் படங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன,

இப்போது அப்படியே முழுக்க முழுக்க ஒரு சங்கியாக நின்று உங்கள் சங்கித்தனத்தை ஆந்திர மாநிலத்தில் பயன்படுத்துவதிலே எங்களுக்கு ஆட்சேபனை இல்லை. வீணாக இரண்டு மாநிலத்திலும் தமிழர்கள் தெலுங்கர்கள் என்று வாழ்ந்து வரும் சூழலில் உங்கள் அரசியல் ஆதாயத்திற்காக அவதூறு பரப்பி அமைதியை கெடுக்கும் பணியை இத்தோடு நிறுத்துங்கள் என்பது நம் வேண்டுகோள்.

ஆர் எம் பாபு

இடியாப்ப சிக்கலில் சிக்க போகிறாரா தோழர் தொல்.திருமாவளவன்ஆர் எம் பாபுதோழர் திருமா அவர்களுக்குவணக்கம். “இந்தியா முழுவதும் ...
25/09/2024

இடியாப்ப சிக்கலில் சிக்க போகிறாரா தோழர் தொல்.திருமாவளவன்
ஆர் எம் பாபு

தோழர் திருமா அவர்களுக்கு

வணக்கம். “இந்தியா முழுவதும் உள்ள ரிசர்வ் தொகுதிகளில் வெற்றி பெற பாசிச பாஜகவை வீழ்த்த தோழர் திருமா தலைமையில் கூட்டியக்கம் துவங்கிட வேண்டும்” https://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/43849-2022-06-13-03-20-26 என்று எழுதிய நான் தான் இப்போது இந்த கடிதத்தையும் எழுதுகிறேன்.

பாசிச சக்திகளும் மதவாத சக்திகளும் பல்வேறு விதமான வலைகளை விரித்து உங்களை வீழ்த்த நினைத்த போதெல்லாம் அவர்களோடு எந்தவித சமரசமும் இல்லாமல் போராடி உங்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சியை காப்பாற்றி கட்டுக்கோப்பாக நடத்தி வந்தீர்கள் என்பதை நினைத்து பெருமை படுகிறேன்.

ஆனால் சமீப காலமாக குறிப்பாக உங்களது மாநாடுக்கும் பின்னர் அந்த மாநாட்டை நடத்த நிதி உதவி அளித்த ஆதவ அர்ஜுனா ரெட்டி அவர்களது வருகைக்கு பின்னர், அவருக்கு வந்த உடனே துணை பொதுச்செயலாளர் பதவி கொடுத்த பின்னர் பல்வேறு வித குழப்பமான சூழலுக்கு உள்ளாகி இருப்பதை பார்க்க முடிகிறது.

ஆதவ அர்ஜுன ரெட்டி என்பவர் லாட்டரி மார்டின் அவர்களின் மருமகன் என்பது உங்களுக்கு தெரியாதது அல்ல. லாட்டரி மார்டின், அவரது மனைவி இருவருமே பாஜகவில் பொறுப்பில் இருக்கிறார்கள் என்பதுவும், பாஜகவிற்கு தேர்தல் பத்திரம் மூலம் ரூ. 100 கோடி கொடுத்ததுவும், அதற்கு பிரதி உபகாரமாக ஆளுநர் லாட்டரி தடை சட்டத்தில் கையெழுத்து போடாததுவும், லாட்டரி மார்ட்டின் நிறுவனத்திற்கே கோவை – ஷ்ரிடி ரயிலை தாரை வார்த்து கொடுத்து இருப்பதும் தாங்கள் அறிந்ததே.

இதுவரை பாஜகவின் B டீமாக இருந்துகொண்டு, குறிப்பாக உங்களிடம் இருக்கும் தலித் வாக்கு வங்கியை உடைப்பதற்காக களமிறங்கிய இயக்குனர் ரஞ்சித்தின் நீலம் அமைப்பு, டாக்டர் கிருஷ்ணசாமி, ஆகியோர்களின் தோல்விக்கு பின்னர், இறுதியாக உங்களது கட்சியை கபளீகரம் செய்ய பாசிச பாஜகவால் அனுப்பப்பட்டவர் தான் ஆதவ அர்ஜுன ரெட்டி என்பதை தாங்கள் எச்சரிக்கையோடு கையாள வேண்டும். அவர் உங்கள் கட்சியை ஹைஜாக் செய்துவிட்டாரோ என்ற அளவில் பல்வேறு புதிர் விளையாட்டுக்கள் நடந்து கொண்டு இருக்கிறது.

இப்போது புலிவால் பிடித்த கதையாக ஆதவ அர்ஜுன ரெட்டியை உங்கள் கட்சியில் வைத்து இருக்கிறீர்கள். அவரிடம் நன்கொடை பெற்றும் இருக்கிறீர்கள். எதோ காரணத்தினால் அவரை கட்சியை விட்டு நீக்கினால் இது அமலாக்கத்துரையின் PMLA வழக்காக கூட மாறக்கூடும் என்பதால் மிகவும் கவனமாக கையாண்டு, யார் எந்த புற்றிலிருந்து வருகிறார்கள் என்பதை அறிந்து களம் காணுங்கள்.

அருந்ததியர் உள் ஒதுக்கீடுக்கு எதிரான நிலைப்பாடு என்பது சங்கிகளின் நிலைப்பாடு. உங்களோடு தோளோடு துணை நின்று அனைத்து போராட்டங்களிலும் முன் வரிசையில் அமர்ந்து கொண்ட அந்த அருந்ததியர்களுக்கு எதிராக உங்கள் கட்சியை நிறுத்தி இருப்பது ஒரு பக்கம் வருத்தமானது.

உயர் சாதியில் EWS என்ற உள் ஒதுக்கீடு எப்படி இருக்கிறதோ, பிற்பட்ட வகுப்பில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என்ற உள் ஒதுக்கீடு எப்படி இருக்கிறதோ அதே போல பட்டியலினத்தில் மிகவும் பின்தங்கியவர்களுக்கு ஓர் உள் ஒதுக்கீடு என்ற புரிதல் இல்லாத நிலையை நினைத்து நான் வருந்துகிறேன்.

"துணை நடிகர் துணை முதல்வராகலாம்" என்ற வார்த்தைகளில் ஏளனம் அதிகமாக இருக்கிறது. துணை நடிகர் என்பவரும் கூட ஒரு வாக்காளர் தானே. வாக்காளராக இருக்கும் யாரும் தேர்தலில் போட்டியிடலாம். வெற்றி பெற்றால் துணை முதல்வர் அல்ல முதல்வராக கூட ஆகலாமே.

இப்போது மது ஒழிப்பு மாநாடு நடத்துகிறீர்கள். அது கூட விஜய் நடத்த இருக்கும் மாநாடு பேசு பொருள் ஆகிவிடாமல் இருப்பதற்காக நீங்கள் நடத்தும் மாநாட்டை பேசு பொருளாக்க முற்பட்டதாக தான் அரசியல் புரிந்தவர்கள் புரிந்து கொண்டார்கள்.

நீங்கள் உங்களது கட்சியானது அமைப்பாக இருந்த காலத்திலிருந்து உங்களோடு துணை நின்று அத்தனை இன்னல்களையும் சுமந்து உங்களோடு பயணிப்பவர்களின் அபிப்பிராயத்தை கேட்டு பயணியுங்கள். நேற்று வந்தவர்களின் நோக்கங்களை புரிந்துகொண்டு எச்சரிக்கை உணர்வுடன் இருக்கவேண்டிய அவசியம் இருக்கிறது.

எண்ணித்துணிக கருமம், துணிந்தபின்
எண்ணுவது என்பது இழுக்கு

நன்றி

ஆர் எம் பாபு

சமூக, அரசியல் இணைய இதழ்

https://www.youtube.com/watch?v=fqBP4H62MtI
24/09/2024

https://www.youtube.com/watch?v=fqBP4H62MtI

Sitaram Yechury | மறைந்த சீதாராம் யெச்சூரி படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் நிகழ்ச்சி Subscribe to Sun News Channel to stay upd...

இன்று மதுரை மேற்கு 2ஆம் பகுதிக்குழு, 78 வது வார்டு, ஜீவா நகர் 2வது தெரு கிளையின் மாநாடு சிறப்பாக, மாநிலக்குழு உறுப்பினர்...
15/09/2024

இன்று மதுரை மேற்கு 2ஆம் பகுதிக்குழு, 78 வது வார்டு, ஜீவா நகர் 2வது தெரு கிளையின் மாநாடு சிறப்பாக, மாநிலக்குழு உறுப்பினர் தோழர் ஆர் விஜயராஜன், பகுதிக்குழு உறுப்பினர்கள் S.R.பாலாஜி, R. சக்தி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

கீழ்க்கண்ட தீர்மானங்களை நிறைவேற்றியது.

சாக்கடை கழிவுகள் கலந்து சாக்கடை நதியாக செல்லும் கிருதுமால் நதியை சுத்தம் செய்திட

சுந்தரராஜபுரம் பூங்காவில் புதிய 25 லட்சம் லிட்டர் டேங்க் கட்டியதால் புதிதாக அந்த பகுதியில் இருக்கும் மாநகராட்சி இடத்தில் பூங்கா அமைத்து கொடுத்திட

சொக்கு கொத்தன் ஊருணியில் உடற்பயிற்சி கூடம் & நீச்சல் குளம் அமைத்து கொடுத்திட

பாதாள சாக்கடை, பழுதடைந்த சாலைகளை சீரமைத்திட

மகளிர் உரிமை தொகை கிடைக்காதவர்களுக்கு உடனடியாக வழங்கிட

வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

புதிய கிளை செயலாளராக தோழர் ஆர் பாண்டியராஜன் அவர்கள் தேர்வு செய்யப்பட்டார்.

புரட்சிகர வாழ்த்துக்கள்

Address

Madurai
625011

Alerts

Be the first to know and let us send you an email when CPM - Jaihindpuram Madurai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to CPM - Jaihindpuram Madurai:

Share

Category