Thangam Thenarasu

Thangam Thenarasu Member of the Legislative Assembly - Tiruchuli | Belongs to the Dravidian stock

நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர் - திருச்சுழி சட்டமன்ற தொகுதி

ஈட்டிய பொருளை ஏழைகளுக்கும், சுற்றத்தாருக்கும் இன்முகத்தோடு வழங்கி மகிழும் ஈகை குணத்தையும், மனிதநேயத்தையும் பறைசாற்றும் த...
28/05/2026

ஈட்டிய பொருளை ஏழைகளுக்கும், சுற்றத்தாருக்கும் இன்முகத்தோடு வழங்கி மகிழும் ஈகை குணத்தையும், மனிதநேயத்தையும் பறைசாற்றும் தியாகத் திருநாளாம் பக்ரீத் பெருநாளைக் கொண்டாடும் இஸ்லாமிய சகோதர சகோதரிகள் அனைவருக்கும் எனது இனிய பக்ரீத் பெருநாள் நல்வாழ்த்துகள்!

தூத்துக்குடி மாவட்டத்தின் வரலாற்றுப் பக்கங்களையும், கல்வெட்டுகளையும் ஆவணப்படுத்திய மாபெரும் தமிழறிஞரும், வரலாற்று ஆய்வாள...
27/05/2026

தூத்துக்குடி மாவட்டத்தின் வரலாற்றுப் பக்கங்களையும், கல்வெட்டுகளையும் ஆவணப்படுத்திய மாபெரும் தமிழறிஞரும், வரலாற்று ஆய்வாளருமான திரு. தவசிமுத்து மாறன் அவர்கள் மறைவெய்திய செய்தி பேரதிர்ச்சியை அளிக்கிறது.

அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், தொல்லியல் துறையினருக்கும், வரலாற்று ஆர்வலர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

களம் கண்ட போர்களிலெல்லாம் தோல்வியையே அறியாத மாவீரர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் வீரத்தைப் போற்றுவோம்!தனித்துவமான வ...
23/05/2026

களம் கண்ட போர்களிலெல்லாம் தோல்வியையே அறியாத மாவீரர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் வீரத்தைப் போற்றுவோம்!

தனித்துவமான வீரத்தோடு தமிழ் மொழியின் மேன்மையைக் காத்த அந்தப் பேரரசரின் வழியில் பயணித்து, சமூகநீதி தழைக்கும் இந்நிலத்தில் நாம் அனைவரும் ஒரு தாய் மக்களாக ஒன்றிணைந்து சமத்துவத்தையும், சகோதரத்துவத்தையும் கட்டிக்காப்போம்!

22/05/2026

நேற்று விருதுநகர் மாவட்டம், திருச்சுழித் தொகுதிக்கு உட்பட்ட காரியாபட்டி மற்றும் மல்லாங்கிணறு பகுதிகளில் பொதுமக்களைச் சந்தித்து மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டேன்.

மக்கள் நலனுக்காக நாம் மேற்கொண்ட பணிகளுக்கு மதிப்பளித்து, நம் மீதும் நம் கழகத்தின் மீதும் நம்பிக்கை வைத்து வெற்றிபெறச் செய்த தொகுதி மக்களின் அன்பிற்கு என்றும் கடமைப்பட்டவனாக இருப்பேன். மக்கள் வைத்துள்ள அசைக்க முடியாத நம்பிக்கையைக் காப்பாற்றும் வகையில், நமது மக்கள் நலப்பணிகள் இன்னும் வேகத்துடன் தொடரும்!

இன்று, திருச்சுழித் தொகுதிக்கு உட்பட்ட காரியாபட்டி மற்றும் மல்லாங்கிணறு பகுதிகளில் வாக்காளர் பெருமக்களைச் சந்தித்து எனது...
21/05/2026

இன்று, திருச்சுழித் தொகுதிக்கு உட்பட்ட காரியாபட்டி மற்றும் மல்லாங்கிணறு பகுதிகளில் வாக்காளர் பெருமக்களைச் சந்தித்து எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டேன். மக்களின் அடிப்படைத் தேவைகளையும் கோரிக்கைகளையும் சட்டமன்றத்தில் ஒலிக்கச் செய்து, நமது திருச்சுழித் தொகுதியை முன்மாதிரித் தொகுதியாக மாற்ற அனைத்து வழிகளிலும் அயராது உழைப்பேன் என மக்களிடம் உறுதியளித்தேன்!

"எந்தச் சூழ்நிலையிலும் மக்களுடன் நின்று, மக்களுக்காகவே பணியாற்ற வேண்டும்" என்பதே நம் திராவிட முன்னேற்றக் கழகமும், நம் கழகத் தலைமையும் நமக்குக் கற்பித்த அரசியல் பாடம். அந்த வழியிலேயே நம் மக்கள் நலப்பயணம் என்றும் தொய்வின்றித் தொடரும்!

21/05/2026

நேற்று விருதுநகர் மாவட்டம், திருச்சுழித் தொகுதி, திருச்சுழி ஒன்றியப் பகுதிகளில் வாக்காளர் பெருமக்களை நேரில் சந்தித்து எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டேன்.

மக்கள் என் மீது வைத்துள்ள நம்பிக்கையைக் காக்கும் வகையிலும், கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றும் வகையிலும், திருச்சுழித் தொகுதியின் ஒட்டுமொத்த முன்னேற்றத்திற்காகவும், அடித்தட்டு மக்களின் உரிமைகளுக்காகவும் என்றும் சட்டமன்றத்தில் சாமானியரின் குரலாய் ஒலிப்பேன் என உறுதியளிக்கிறேன்!

21/05/2026

நேற்று விருதுநகர் தெற்கு மாவட்டத் தி.மு.கழகக் கூட்டத்தில் அண்ணன் திரு. கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன் அவர்களுடன் இணைந்து பங்கேற்றேன்.

2026 தேர்தல் முடிவுகள் குறித்தும், அதனையொட்டி கழகத் தலைவர் அண்ணன் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும், கழகத் தலைவரின் கரங்களை வலுப்படுத்தக் கழகத் தோழர்கள் முன்னெடுக்க வேண்டிய களப்பணிகள் குறித்தும் உரையாற்றினேன்.

இன்று விருதுநகர் மாவட்டம், திருச்சுழித் தொகுதியில் திருச்சுழி ஒன்றியப் பகுதிகளில் வாக்காளர் பெருமக்களைச் சந்தித்து நன்றி...
20/05/2026

இன்று விருதுநகர் மாவட்டம், திருச்சுழித் தொகுதியில் திருச்சுழி ஒன்றியப் பகுதிகளில் வாக்காளர் பெருமக்களைச் சந்தித்து நன்றியைத் தெரிவித்தோம். திருச்சுழித் தொகுதி மக்களின் நம்பிக்கைக்கு உரிய வகையில், வளர்ச்சித் திட்டங்களையும், வாக்குறுதிகளையும் நிறைவேற்றும் வண்ணம் பணிகளை முன்னெடுப்பேன் என உறுதியளித்தேன்.

தேர்தலில் மக்கள் தீர்ப்பைத் தலைவணங்கி ஏற்று, பேரறிஞர் அண்ணா காட்டிய பாதையில், தலைவர் கலைஞர் அவர்கள் கற்றுத் தந்த பாடத்தை நெஞ்சிலேந்தி, கழகத் தலைவர் அண்ணன் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களின் தலைமையில் வெற்றி, தோல்விகளைக் கடந்து என்றும் சாமானிய மக்களின் நல்வாழ்விற்காக உழைப்போம்; மக்களுடனே எப்போதும் இருப்போம்!

M. K. Stalin

20/05/2026

நேற்று விருதுநகர் மாவட்டம், திருச்சுழித் தொகுதிக்கு உட்பட்ட நரிக்குடி ஒன்றியப் பகுதிகளில் வாக்காளப் பெருமக்களை நேரில் சந்தித்து மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டோம்.

மக்களின் அன்பும் நம்பிக்கையும்தான் எங்களின் மிகப்பெரிய பலம். எங்கள் மீது நம்பிக்கை வைத்து மக்கள் தந்த இந்த மாபெரும் பொறுப்பினைத் தலைவணங்கி ஏற்கின்றோம்.

ஆளும் வரிசையில் இல்லாவிட்டாலும், எதிர்க்கட்சியின் பொறுப்புமிக்க சட்டமன்ற உறுப்பினராக, சற்றும் தொய்வின்றி மக்களின் குரலினை என்றும் ஒலிப்பேன் என உறுதியளிக்கிறேன். மக்கள் நலனே முதன்மை என்ற உறுதியுடன் தொடர்ந்து பயணிப்போம்!

'திராவிடப் பேரொளி' அயோத்திதாசப் பண்டிதர் அவர்களின் புகழைப் போற்றுவோம்!'திராவிடன்', 'தமிழன்' ஆகிய சொற்களை அரசியல் தளத்தில...
20/05/2026

'திராவிடப் பேரொளி' அயோத்திதாசப் பண்டிதர் அவர்களின் புகழைப் போற்றுவோம்!

'திராவிடன்', 'தமிழன்' ஆகிய சொற்களை அரசியல் தளத்தில் அடையாளச் சொற்களாக மாற்றியவர் அயோத்திதாசர். "அந்நியப் பொருட்களை விடச் சாதிப் பெருமையைப் புறக்கணிப்பதே முதன்மையானது" என்ற அவரின் முழக்கமும் பகுத்தறிவுச் சிந்தனைகளும், தமிழ்ச் சமுதாயத்தை என்றும் வழிநடத்தும் ஒளியாகத் திகழட்டும்.

அறியாமை இருளை நீக்கி, தமிழர்களிடையே சுயமரியாதை உணர்வை விதைத்த பண்டிதரின் முற்போக்குச் சிந்தனைகளைப் போற்றுவோம்.அவர் புகழ் ஓங்குக!

Address

மல்லாங்கிணர்
Madurai
626109

Alerts

Be the first to know and let us send you an email when Thangam Thenarasu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share