20/05/2026
இன்று விருதுநகர் மாவட்டம், திருச்சுழித் தொகுதியில் திருச்சுழி ஒன்றியப் பகுதிகளில் வாக்காளர் பெருமக்களைச் சந்தித்து நன்றியைத் தெரிவித்தோம். திருச்சுழித் தொகுதி மக்களின் நம்பிக்கைக்கு உரிய வகையில், வளர்ச்சித் திட்டங்களையும், வாக்குறுதிகளையும் நிறைவேற்றும் வண்ணம் பணிகளை முன்னெடுப்பேன் என உறுதியளித்தேன்.
தேர்தலில் மக்கள் தீர்ப்பைத் தலைவணங்கி ஏற்று, பேரறிஞர் அண்ணா காட்டிய பாதையில், தலைவர் கலைஞர் அவர்கள் கற்றுத் தந்த பாடத்தை நெஞ்சிலேந்தி, கழகத் தலைவர் அண்ணன் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களின் தலைமையில் வெற்றி, தோல்விகளைக் கடந்து என்றும் சாமானிய மக்களின் நல்வாழ்விற்காக உழைப்போம்; மக்களுடனே எப்போதும் இருப்போம்!
M. K. Stalin