20/08/2026
விருதுநகர் மாவட்டம், சிவகாசி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சட்டத்திற்கு உட்பட்டு இயங்கும் பட்டாசு ஆலைகளில் 'திடீர் ஆய்வு' என்ற பெயரில் நடைபெறும் கெடுபிடிகளைச் சட்டப்பேரவையில் 55-ஆம் விதியின் கீழ் அவையின் கவனத்திற்குக் கொண்டு வந்தேன்.
சட்டத்திற்குப் புறம்பாக இயங்கும் பட்டாசுத் தொழிற்சாலைகள் மற்றும் விற்பனையகங்களில் ஆய்வு மேற்கொள்வதில் யாருக்கும் மாற்றுக் கருத்தில்லை. மாறாக, முறையான விதிகளின்படி செயல்பட்டு வரும் ஆலைகள் மற்றும் சில்லறை விற்பனையகங்களில் 'ஆய்வு' என்ற பெயரில் நடைபெறும் தொடர் சோதனைகளால் லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.
உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்களின் கோரிக்கையை ஏற்று, அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் மாண்புமிகு கழகத் தலைவர் திரு M. K. Stalin அவர்களின் அறிவுறுத்தலின்படி, சிவகாசியில் தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தினோம். பொது அமைப்புகளும், தொழிலாளர்களும்கூடத் தொடர்ந்து இந்த ஆய்வுகளுக்கு எதிராகப் போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.
இந்நிலையில், "இந்த ஆர்ப்பாட்டங்களெல்லாம் அரசியல் காரணங்களுக்காக நடத்தப்பட்டவை" என்ற மாண்புமிகு தொழில்துறை அமைச்சர் அவர்களின் குற்றச்சாட்டுக்குப் பேரவையில் தகுந்த பதிலளித்தேன். தொழிலாளர்களின் வாழ்வாதாரப் போராட்டம் ஒருபோதும் அரசியலாகாது!