26/06/2026
அற்ப மகிழ்ச்சிக்கும்,ஆழமான மகிழ்ச்சிக்கும் இடைப்பட்ட வேறுபாடுகளை அகமுடையார்கள் உணர வேண்டும்!!!
உலக இன்பங்களிலேயே உயர்ந்தது,அடுத்தவரை மகிழ்வித்து அதை பார்த்து நாம் மகிழ்வது தான்.
ஆனால் நம் அகமுடையார் பேரின இளைஞர்களில் சிலருக்கு அது தெரிவதில்லை,உண்மையை கூற வேண்டும் என்றால் அவர்களை இறுதி வரை உணரவிடாமல் தங்களது கைபாவையாக அரசியல்வாதிகள் பயன்படுத்திக் கொள்கின்றனர்.
முதல் படம் : மருதிருவர் கல்வி மையம்,
இரண்டாம் படம் : குருபூஜைக்கு செல்லும் இளைஞர்கள்.
மற்றவர்கள் நம்மை பார்த்து முகம் சுளிக்க வைக்க வேண்டும் எனில் நொடி பொழுது போதும்,ஆனால் அவர்களே நம்மை பாராட்ட வேண்டும் எனில் ஒரு யுகமே தேவைப்படும்.
குருபூஜைக்கு செல்லும் தருணத்தில் போக்குவரத்து விதிமீறல்கள் செய்து,உயிருக்கு ஆபத்தான நிலையில் பயணிப்பது,சாலையில் பயணிக்கும் வாகனங்களுக்கு இடைஞ்சல் செய்வது,அதிக சத்தத்தை ஏற்படுத்தி ஒலி மாசு ஏற்படுத்துவது என பொது மக்கள் நம்மை வெறுக்க பல காரணங்கள் கொட்டிக் கிடக்கின்றன.
அதேநேரத்தில் நம்மை அவர்கள் ஆதரிக்க வேண்டுமெனில் இதுபோன்று கல்வி மையங்கள் நடத்துவது அல்லது கல்வி மையங்களை நடத்துபவர்களுக்கு இயன்ற உதவி புரிவது,மரம் நடுவது,குருதி கொடை அளிப்பது,அன்னதானங்கள் வழங்குவது,ஏழை எளிய மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்குவது மூலமே அவர்களின் அன்பையும்,ஆதரவையும் நாம் பெற முடியும்.
குருபூஜை நாட்களில் நாம் செய்யும் நிகழ்வுகள் சில வாரங்களுக்கு மட்டுமே மக்கள் மனதில் நிற்கும்,ஆனால் மேற்கண்ட அற செயல்கள் புரிவதன் மூலம் நம் மறைவுக்குப் பின்னரும் நம்மை மக்கள் தங்கள் மனதில் ஒரு அறையில் என்றென்றும் பாதுகாத்து வைப்பார்கள் உறவுகளே.
#அகமுடையார்
#அகமுடையார்_பேரினம்
#மாமன்னர்_மருது_பாண்டியர்கள்
#மருதுபாண்டிய_மன்னர்கள்
#கொடை_வள்ளல்_பச்சையப்ப_முதலியார்
#போர்க்குடி_அகமுடையார்
#போர்க்குடி_அகம்படியர்