14/01/2015
காலில்
விழுந்து விவசாயி கதறல்...சகாயத்திடம்
புகார் செய்ததால் துப்பாக்கி முனையில்
போலீஸ் மிரட்டல்பதிவு செய்த
நேரம்:2015-01-10 01:01:16மதுரை:
குவாரி முறைகேடு தொடர்பான
உண்மைகளைக் கூறியதால்
என்னை அடித்து, துப்பாக்கியால் மிரட்டி,
என் தம்பி மகன் மீதுபொய் வழக்குப்
போட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர்,
எஸ்ஐயிடமிருந்து
குடும்பத்தை காப்பாற்றுங்கள்‘ எனக்
கூறி ஐஏஎஸ் அதிகாரி சகாயத்தின் காலில்
விழுந்து விவசாயி கதறி அழுததால்
பரபரப்பு ஏற்பட்டது. கிரானைட்
முறைகேடு தொடர்பாக நான்காம் கட்ட
விசாரணையை நேற்றுமுன்தினம்
துவக்கிய ஐஏஎஸ் அதிகாரி சகாயம்,
மேலூர் பகுதியில்
நேற்று ஆய்வு செய்தார். எரிச்சியூரில்
மணியன் கண்மாயையும்,
கண்மாய்க்கு வரும் வரத்துக்
கால்வாயையும் தனியார்
குவாரி நிறுவனத்தினர் முற்றிலும் அழித்
திருப்பது கண்டு சகாயம் அதிர்ச்சியடைந்த
ார். இதன் விபரங்களைக் கேட்டறிந்தார்.அ
ப்போது இப்பகுதியில் உள்ள
வாச்சம்பட்டியைச் சேர்ந்த அய்யங்காளை,
Ôஇதுகுறித்து நாங்கள் பல புகார்கள்
கொடுத்தும், எந்த அதிகாரியும்
நடவடிக்கை எடுக்கவில்லைÕ
என்று சகாயத்திடம் தெரிவித்தார். மேலும்,
Ô‘கடந்த 30ம் தேதி நீங்கள் இப்பகுதியில்
ஆய்வு செய்தபோது பிஆர்பி நிறுவனத்தினரின்
ஆக்கிரமிப்பு குறித்து ஆதாரத்துடன்
தெரிவித்தேன். அன்று மாலை மேலூர்
போலீஸ் இன்ஸ்பெக்டர் கழனியப்பன்,
எஸ்ஐ அய்யனார் ஆகியோர் என்னிடம்
பிஆர்பி பற்றி புகார் கூறக்கூடாது.
மீறினால் உன் மொத்த குடும்பத்தையும்
அழிப்போம் என்று மிரட்டினர்.மறுநாள்
அதிகாலை 4 மணிக்கு போலீசார் என்
வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து,
எனது தம்பி மகன்
கருப்பணனை இ.மலம்பட்டியில் உள்ள
பிஆர்பி கிரானைட்
நிறுவனத்திற்கு கொண்டு சென்று,
காலைக் கட்டி தலைகீழாக தொங்க
விட்டு அடித்தனர்.
அங்கு சென்று கெஞ்சிய என்னை நோக்கி,
இன்ஸ்பெக்டர் தனது துப்பாக்கி காட்டி,
சுட்டு விடுவேன்
என்று மிரட்டி விரட்டினார். போலீஸ்
அடித்து காயப்படுத்திய என் தம்பி மகன்
மீது, ஆடு திருடியதாக போலீஸ் பொய்
வழக்குப் போட்டது. சம்பந்தப்பட்ட
போலீசார் மீது எஸ்பியிடம் புகார் தெரிவித்
தும், நடவடிக்கை இல்லை.கிரானைட்
தொடர்பாக நான் பொய் சொல்லி இருந்தால்
என்னை தூக்கில் போடுங்கள்
இல்லாவிட்டால், என்னையும், என்
குடும்பத்தையும் காப்பாற்றுங்கள்,‘‘
என்று கூறியபடியே, திடீரென சகாயத்தின்
கால்களை கட்டிப் பிடித்துக்
கொண்டு அய்யங்காளை கதறி அழுதது பரபரப்பை ஏற்படுத்தியது.
Ôஎன்னிடம் பெட்டிசன் கொடுத்ததற்காக
இதுபோன்ற நடவடிக்கைகளில் இறங்கிய
போலீசார்
மீது உடனே நடவடிக்கை எடுங்கள்Õ
என்று ஆர்டிஓவிடம் சகாயம் கூறினார்.
இச்சம்பவத்தால் ஆய்வுக்குச்சென்ற
அதிகாரிகள் மட்டுமல்லாது பொதுமக்கள்,
பத்திரிகையாளர்கள்
அனைவருமே அதிர்ச்சியடைந்த
னர்.அப்பகுதி பிள்ளையார்
கண்மாயை குவாரிதாரர்கள்
ஆக்கிரமித்து அழித்ததாக முத்துச்சாமி,
கருப்பணன் போன்ற விவசாயிகள் புகார்
தெரிவித்தனர். இங்குள்ள மணிமுத்தாறும்
ஆக்கிரமிப்பில் சிக்கி இருந்தது. 150
அடி அகலம் உள்ள இந்த ஆற்றின்
நடுவே கிரானைட்
கழிவு கற்களை கொட்டி பெரிய
கரை ஏற்படுத்தி, அதன் மூலம்
பாதி ஆற்றை ஆக்கிரமிப்பு செய்து கிரானைட்
கற்கள் வெட்டி இருப்பதை சகாயம்
கண்டுபிடித்தார்.இந்த
ஆறு எங்கிருந்து வருகிறது அதன்
போக்கு தெரியுமா என அதிகாரிகளிடம்
கேட்டபோது சரியாக சொல்ல
முடியவில்லை. அப்போதுஅப்பகுதி மக்கள்
இது, திண்டுக்கல் மாவட்டம்
கரந்தமலையில் துவங்கி மதுரை,
சிவகங்கை, கல்லல், தேவகோட்டை,
ராமநாதபுரம்
கண்மாயை சென்று அடைவதாக கூறினர்.
இந்த ஆற்றை அழித்தவர்கள்
மீது வருவாய்த்துறையினர் ஏன்
நடவடிக்கை எடுக்கவில்லை என்று சகாயம்
கடிந்து கொண்டார். மேலும்
கொணப்பகோன் கண்மாய், இடையன்
கண்மாய் ஆக்கிரமிப்புகளையும் சகாயம்
பார்த்தார். மணிமுத்தாற்றின் கரையில்
இருந்த சுடுகாட்டின் ஒரு பகுதியையும்
குவாரிதாரர்கள் ஆக்கிரமித்ததைக்
கண்டு வேதனையடைந்தார்.புகார்
செய்யாதது ஏன்? அதிகாரிகளிடம்
கிடுக்கிப்பிடி;இப்பகுதியில் கண்மாய்
மற்றும் கால்வாய்
போன்றவற்றை அழித்தது தொடர்பாக ஊர்த்
தலையாரி, விஏஓ, புகார்
கொடுத்துள்ளனரா?அல்லது வருவாய்
ஆய்வாளர், துணை தாசில்தார்
ஆகியோரிடம் புகார் மனுக்கள் கொடுத்து,
ஆர்டிஓவிற்கு பரிந்துரை செய்து, அவர்
மூலமாக கலெக்டர்
பார்வைக்கு விசாரணைக்கு இந்த மீறல்கள்
கொண்டு செல்லப்பட்டுள்ளதா? என
ஆர்டிஓ செந்தில்குமாரியிடம் சகாயம்
கேட்டார். கடந்த 2012 வரை எந்த புகாரும்
வரவில்லை. அதன்பிறகே புகார்கள்
வந்தன என்று ஆர்டிஓ தெரிவித்தார்.
பிறகு தலையாரி காந்தியை அழைத்து உங்கள்
ஊரில் இந்த
அளவிற்கு முறைகேடு நடந்து முழு கண்மாய்,
கால்வாய் அழிக்கப்பட்டிரு
ப்பது குறித்து அதிகாரிகளுக்கு ஏன்
தகவல் தெரிவிக்கவில்லை
என்று கண்டித்தார். இதற்கு பதில் சொல்ல
முடியாமல் தலையாரி திணறினார்.பொதுப
்பணித்துறை அதிகாரிகளிடம், உங்கள்
துறைக்கு புகார்கள் வந்ததா? ஏன் எந்த
தடுப்பு நடவடிக்கைகளும்
எடுக்கவில்லை? எனக் கேட்டார். அவர்கள்,
2007ல் ஒரு புகார் வந்தது, ஆனால் அதன்
மீது நடவடிக்கை எடுக்கமுடியவில்
லை என்றனர். குற்றம் செய்ய
பொதுப்பணித்துறையும்,
வருவாய்த்துறையுமே மூல காரணம் என
சகாயம் குற்றம் சாட்டினார்.போலீ
சுக்கு பயந்து புகார்
தரவில்லை:இவ்வளவு பெரிய
முறைகேடுகள் நடந்தும் ஏன் கடந்த
காலங்களில் யாரும் புகார்
தெரிவிக்கவில்லை என மக்களிடம் சகாயம்
கேட்டார். அப்போது விவசாயி முருகன்,
‘இந்த பகுதியில்
குவாரி அமைத்து வெடி போட்டதில்
எங்கள் வீடு விழுந்து நொறுங்கியது.
இதுகுறித்து புகார் தெரிவித்த, எங்கள்
மீதே போலீசார் வழக்குப் போட்டனர்.
இதனால்தான் போலீசுக்கு பயந்து யாரும்
புகார்கள் கொடுக்கவில்லைÕ என்றார்.
இதே கருத்தை அங்கிருந்த பலரும்
தெரிவித்தனர்.ஆய்வில் வருவாய்த்துறையி
னர் 1986க்கு முன்புள்ள
வரைபடத்தை காட்டினர்.
அப்போது கண்மாய் கரையை அவர்களால்
சரியாக காட்டத் தெரியவில்லை. அடுத்த
முறை சம்பந்தப்பட்ட
கண்மாய்களை கலரில் வரைந்து வட்டம்
செய்து காட்ட வேண்டும். எந்த
கண்மாய்க்கு செல்கிறோமோ அங்கு கரை தெரியும்படி கொடியுடன்
கண்மாய் எல்லையில் நிற்கவேண்டும்.
ஆர்டிஒ இதற்கு நடவடிக்கை எடுக்க
வேண்டும் என சகாயம் உத்தரவிட்டார்.