தமிழர் செங்கோன்மை இயக்கம்

  • Home
  • India
  • Marthandam
  • தமிழர் செங்கோன்மை இயக்கம்

தமிழர் செங்கோன்மை இயக்கம் ஜாதி,மத,அரசியல் கடந்து ஒன்றிணைவோம்�

19/01/2026
வருகின்ற 18 ம் தேதி நமது இயக்கத்தின் பொங்கல்விழா, 7வது ஆண்டுவிழா மற்றும் மதநல்லிணக்க மாநாடு  S.H. திருமண மண்டபத்தில் நடை...
10/01/2026

வருகின்ற 18 ம் தேதி நமது இயக்கத்தின் பொங்கல்விழா, 7வது ஆண்டுவிழா மற்றும் மதநல்லிணக்க மாநாடு S.H. திருமண மண்டபத்தில் நடைபெறவிருக்கிறது.. இதில் திமுக, அதிமுக, நாதக, தேமுதிக, கம்யூனிஸ்ட், தவெக, காங்கிரஸ் போன்ற கட்சிகளின் முக்கிய நிர்வாகிகளும், கடையாலுமூடு மும்மத தலைவர்களும் பங்குகொண்டு சிறப்பிக்க உள்ளனர்... சிறுவர்கள் முதல் இளைஞர்களுக்கான விளையாட்டு மற்றும் கலைப்போட்டிகளும் நடைபெறவிருக்கின்றன... தமிழர் பாரம்பரிய பறை இசை நிகழ்ச்சியும், வீரகலைகள் நிகழ்ச்சியும் இடம்பெறவுள்ளன...எனவே உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் பங்குகொண்டு, அவரவர் முடிந்த உதவிகளைச் செய்து, விழாவினை மேலும் சிறப்பிக்க வேண்டுகிறேன்... நமது ஊரில் நிகழும் இந்நிகழ்வில் அனைவரும் தமிழ் உணர்வுடன் ஒன்றிணைந்து பொங்கல்விழாவை கொண்டாடி மகிழ்வோம்...
ஜாதி, மத, அரசியல்,கடந்து மனிதத்தால் ஒன்றிணைவோம்..

நன்றி....

-சுனில்.சு
செயலாளர்
தமிழர் செங்கோன்மை இயக்கம்...

இந்திய விடுதலைப் போராட்டம் உச்சகட்டத்தில் நடந்து கொண்டிருந்த சமயம், 1940களில் ஒரு வடமாநில இளைஞன் ஆங்கிலேய நீதிமன்றத்தில்...
29/12/2025

இந்திய விடுதலைப் போராட்டம் உச்சகட்டத்தில் நடந்து கொண்டிருந்த சமயம், 1940களில் ஒரு வடமாநில இளைஞன் ஆங்கிலேய நீதிமன்றத்தில் நிறுத்தப்படுகிறான்.

சுதந்திரம் கேட்டுப் போராடினாயா" நீதிபதி கேட்கிறார். "இல்லை நான் போராடவில்லை...என்னை விட்டுவிடுங்கள் " என்று சொன்னவன் அத்தோடு நிற்கவில்லை.. இவர்கள்தான் போராடினார்கள் என்று போராளிகளையும் காட்டிக்கொடுக்கிறார்!

அதே காலகட்டத்தில் தெற்கே தமிழகத்தில் விடுதலைப் போரில் பங்கேற்ற ஒரு இளைஞனை காவல்துறை கைது செய்கிறது!
சிறையில் வைத்து சித்ரவதை செய்கிறார்கள். எத்தனையோ கொடுமைகளுக்குப் பிறகும் அவனிடமிருந்து எதையும் பெற முடியவில்லை. போராளிகள் ஒருவரைக்கூட அவன் காட்டிக்கொடுக்கவில்லை!

கோபத்தின் உச்சத்தில் அதிகாரி ஒருவன் அந்த இளைஞனின் மீசையை தன் கையிலிருந்த சிகெரெட்டால் சுட்டுக் கருக்குகிறான். அந்த இளைஞனின் நெஞ்சுறுதியை குலைக்க முடியவில்லை.
தண்டனை வாங்கிக் கொண்டு, விடுதலை கனல் நெஞ்சில் எறிய சிறை புகுகிறான் அந்த இளைஞன்!

நாடு விடுதலை அடைகிறது...!

50 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தமண்ணில் தேர்தல் நடக்கிறது. அன்று காட்டிக் கொடுத்த அந்த வடநாட்டு இளைஞன் இந்தியாவின் பிரதமர் ஆகிறார். சித்ரவதைகளை அனுபவித்து சிறைவாசம் கண்ட தமிழ்நாட்டு இளைஞன் ஒரு சாதாரண சின்னப் பையனிடம் தேர்தலில் தோற்றுப் போகிறான்!

அந்த வடநாட்டு இளைஞன் வாழ்வின் எல்லா வசதிகளையும் அனுபவிக்கிறான். இவனோ, துறவி போல மக்கள் நல அரசியலை முன்னெடுத்துப் போராடுகிறான்.

அவன், ஒரு குறிப்பிட்ட வயதோடு அரசியல் போதும் என்று ஓய்வெடுத்துக் கொள்ளப் போகிறான். இவனோ, மரணிக்கும் வரையும் ஓய்வு கிடையாது என்று சொல்லி, மண்ணின் வளம் கொள்ளை போவதையும், நதிகளை மீட்கவும் காலம் பார்க்காமல் உழைக்கிறான்!

90 வயது முடியும் போது, ஓய்வில் இருக்கும் அந்த வடநாட்டு இளைஞனுக்கு "பாரத ரத்னா" விருது கிடைக்கிறது! இந்த தமிழ்நாட்டு இளைஞனுக்கு பிழைக்கத் தெரியாதவன் என்னும் பழிச்சொல் பரிசாகக் கிடைக்கிறது!

இதுதான் இந்தியாவின் அரசியல்! தர்மம் வெல்லும்... உண்மை வெல்லும் என்று சொல்வதெல்லாம் நமது அரசியலுக்குப் பொருந்தாது என்கிற எண்ணமே மேலோங்குகிறது!

1924 டிசம்பர் 25ஆம் நாள் பிறந்தவர் அந்த வடநாட்டு இளைஞர். 1925 டிசம்பர் 26ஆம் நாள் பிறந்தவர் இந்தத் தென்னாட்டு இளைஞர்.

அவர் அடல் பிகாரி வாஜ்பேயி.
இவர் அருமை அய்யா நல்லகண்ணு!!!

அன்று அவர் தேசத் துரோகி, இவர் விடுதலைப் போராட்ட தியாகி.
இன்று அவர் தேசபக்தர்... இவர் தேச விரோதி!!!

பாரத் மாதாகி ஜே!!!

// தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்
தீரா இடும்பை தரும். //

"ஏன் தனியாகப் போராடுகிறீர்கள்? தனியாகப் போராடி எதையும் சாதிக்க முடியாது. ஆகவே ஏதாவது ஒரு கட்சியில் சேர்ந்து போராடுங்கள்"...
29/12/2025

"ஏன் தனியாகப் போராடுகிறீர்கள்? தனியாகப் போராடி எதையும் சாதிக்க முடியாது. ஆகவே ஏதாவது ஒரு கட்சியில் சேர்ந்து போராடுங்கள்"-

என்று சிலர் எங்களுக்கு அறிவுரை கூறுகிறார்கள்.

அவர்களுக்கு சொல்லிக் கொள்வது..

EVM ஐ ஒழித்து ஜனநாயகத்தை காக்க வேண்டும்..

RSS- ஐ ஒழித்து இந்தியாவை காக்க வேண்டும்..

இதுதான் எங்களது போராட்டத்தின் இலக்கு.

Ban EVM- Ban RSS என்ற இலக்கை முன்வைத்து மக்களைத் திரட்டிப் போராடும் ஏதாவது ஒரு அரசியல் கட்சியைக் காட்டுங்கள்.
அக்கட்சியில் நாங்களும்
இணைந்து போராடுகிறோம்.

-நந்தினி ஆனந்தன்,
ஒருங்கிணைப்பாளர்,
மக்களுக்காகப் போராடும் கட்சி.

ஜாதி , மத , அரசியல் வேறுபாடுகள் களைந்து ஒன்றிணைவோம்....
18/12/2025

ஜாதி , மத , அரசியல் வேறுபாடுகள் களைந்து ஒன்றிணைவோம்....

17/12/2025

கல்வி என்றால் என்ன…
அதனால் பெறும் அறிவு என்றால் என்ன என்று 1%கூட தெரியாத சாணி சங்கி கூட்டம் ஒன்றியத்தின் அதிகாரத்தில் இருந்து கொண்டு யார் படிக்கவேண்டும்? என்ன படிக்க வேண்டும்? எப்படி படிக்க வேண்டும்? என்றெல்லாம் முடிவு எடுத்து சமூக சம நீதியை குலைக்க அனைத்தும் செய்து கொண்டிருக்கிறது.

கல்வியை முழுவதுமாக முடித்து வைக்க முடிவு செய்துவிட்டார்கள். மாநில அரசின் உரிமைகள் நேரடியாக பறிக்கப்படுவது உறுதி.

கல்வி அறிவு இல்லாத பாசிச வெறிபிடித்த சங்கிகளுக்கு
இது புரியவா போகுது?
-JH

Address

Kadayalumoodu
Marthandam
629101

Website

Alerts

Be the first to know and let us send you an email when தமிழர் செங்கோன்மை இயக்கம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share