28/02/2026
பாராளுமன்றத்தில் ஒலிக்கும் ஒரு சாதாரண சத்தமல்ல இது — நம்மில் ஒவ்வொருவரின் (ஆம் ஆத்மி ) குரல்!
அரசியல் குற்றச்சாட்டுகளும் எதிர்க்குற்றச்சாட்டுகளும் காரணமாக சபை பரபரப்பாகும் நேரங்களிலும், பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையில் எரியும் பிரச்சினைகளை தெளிவாக முன்வைக்கும் ஒருவருண்டு — பஞ்சாப் மாநில ஆம் ஆத்மி Raghav Chadha ( ராஜ்யசபா மந்திரி ) ஒரு மக்கள் பிரதிநிதி எப்படியிருக்க வேண்டும் என்பதற்கான சிறந்த எடுத்துக்காட்டு அவரது பாராளுமன்ற தலையீடுகள்.
நாம் தினமும் அனுபவிப்பதாயினும், யாரும் கேட்கத் தயங்கும் சில விஷயங்களை அவர் சபையில் முன்வைத்துள்ளார்:
விமானம் தாமதமானால் யார் பதில் சொல்வார்கள்?
சிறிது கூடுதல் பாரம் இருந்தாலே அபராதம் வசூலிக்கும் விமான நிறுவனங்கள், பல மணி நேரம் தாமதமானால் பயணிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டாமா? ஒவ்வொரு மணி நேர தாமதத்திற்கும் பணம் திருப்பி வழங்க வேண்டும் என்ற அவரது கோரிக்கை, இலட்சக்கணக்கான பயணிகளின் எதிர்பார்ப்பாகும்.
தொலைபேசி சேவைகளில் இரட்டை நிலைப்பாடு:
ரீசார்ஜ் செய்யாவிட்டால் அவுட்கோயிங் நிறுத்துவது புரிகிறது. ஆனால் இன்கமிங் கால் கூட தடை செய்வது எந்த நீதி? இதற்கெதிராகவும் அவர் வலுவாக பேசியுள்ளார்.
10 நிமிட டெலிவரி தேவையா?
உணவு கொண்டு வரும் டெலிவரி பணியாளர்கள் ரோபோட்கள் அல்லர். 10 நிமிடங்களில் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற அழுத்தம், அவர்களின் உயிரையே ஆபத்துக்கு உள்ளாக்குகிறது. இப்படியான ஆபத்தான போட்டியை நிறுத்த வேண்டும் என அவர் வலியுறுத்துகிறார்.
தலைவர்களுக்கும் தேர்வு வேண்டாமா?
ஒரு சாதாரண அரசு வேலைக்கே கடினமான தேர்வுகள் எழுத வேண்டியிருக்கையில், நாட்டை வழிநடத்துபவர்களுக்கு குறைந்தபட்ச தகுதி தேர்வு இருக்கக்கூடாதா? கல்வியறிவு மற்றும் திறமை கொண்டவர்கள் தலைமையில் வர வேண்டும் என்ற புரட்சிகரமான யோசனையாக இது பார்க்கப்படுகிறது.
Right to Recall (மீள அழைக்கும் உரிமை):
தேர்ந்தெடுக்கப்பட்ட பின் மக்களை மறக்கும் பிரதிநிதிகளை மீண்டும் அழைக்கும் அதிகாரம் வாக்காளர்களுக்கு இருக்க வேண்டும். பணியாற்றாதவர்களை பதவியில் இருந்து நீக்க மக்களுக்கு உரிமை கிடைக்க வேண்டும்.
வங்கி கட்டணங்களில் பகல் கொள்ளை:
குறைந்தபட்ச இருப்பு இல்லை என்றால் அபராதம், ATM கட்டணம், SMS கட்டணம் — இப்படி பொதுமக்களின் பணத்தை சுரண்டும் விதிமுறைகளுக்கு எதிராகவும் அவர் குரல் எழுப்புகிறார்.
தேர்வு கட்டணத்தை திருப்பி வழங்க வேண்டும்:
லட்சக்கணக்கான விண்ணப்பதாரர்களிடம் கோடிகள் வசூலித்து, ஒருவருக்கே வேலை வழங்கும்போது, தேர்ச்சி பெறாத ஏழை மாணவர்களுக்கு குறைந்தபட்சம் கட்டணத்தை திருப்பி வழங்க முடியாதா என்ற கேள்வி மிகவும் பொருத்தமானது.
பட்ஜெட்டில் புறக்கணிக்கப்படும் நடுத்தர வர்க்க மக்களின் பிரச்சினைகள், டோல் கட்டணங்கள், மருத்துவ வசதிகள், GST போன்ற பல விஷயங்களிலும் அவரது தலையீடுகள் பாராட்டத்தக்கவை. விமான நிலையங்களில் தேநீர் மற்றும் தண்ணீரின் விலை குறைய காரணமானதுமே அவரது தொடர்ச்சியான கேள்விகள்தான் என கூறப்படுகிறது.
விமர்சனங்களையும் அரசியல் மோதல்களையும் தாண்டி, பொதுமக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த விரும்பும் இப்படிப்பட்ட நபர் தான் தேவை இளம் வயதில் (37) ஆம் ஆத்மி கட்சியின் ராஜ்யசபா மந்திரி ஆகிய இவரைப்போல தான் மக்கள் பிரதிநிதிகள்தான் நமக்கு தேவை.
💔🔥 சல்யூட் 🙋🏻
உத்தாணி வினேத்குமார்.
ஆம் ஆத்மி கட்சி
மாவட்ட தலைவர்
திருவாரூர்