We The Leaders - Mudukulathur

We The Leaders - Mudukulathur அறம் செய்ய விரும்பு.

முதுகுளத்தூர் சட்டமன்ற மக்களின் மாற்றத்திற்கான தளம்.

16/08/2026

காவிரி…

தலைமுறைகளாக நமது தாகத்தை தீர்த்து, வயல்களை வளப்படுத்தி, எண்ணற்ற உயிர்களுக்கு வாழ்வாதாரமாக இருந்து வருகிறது.

இன்று அந்த காவிரியின் கரைகள் மனிதர்களின் அலட்சியத்தால் மாசடைந்து கிடக்கின்றன.

இந்த நிலையை மாற்றும் சிறிய முயற்சியாக, பரமத்தி வேலூரில் “அன்னை காவிரி – தூய்மைத் திட்டம்” தொடங்கப்பட்டுள்ளது.

இது ஒரு தூய்மைப் பணி மட்டுமல்ல; நமக்கு வாழ்வு தந்து வரும் காவிரிக்குச் செலுத்தும் நன்றியின் வெளிப்பாடு.

காவிரி கரையோரத்தில் வாழும் ஒவ்வொருவரும், ஒவ்வொரு அமைப்பும், ஒவ்வொரு தலைவரும் இந்த இயக்கத்தில் இணைந்து தங்கள் பகுதி காவிரியை பாதுகாக்க முன்வர வேண்டும்.

காவிரி நம் பொறுப்பு. காவிரியை பாதுகாப்பது நம் கடமை.

K.Annamalai We The Leaders Foundation We The Leaders Ramanathapuram

80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு  தலைமை சேவகர் K.அண்ணாமலை Ex.IPS  அவர்களின் வழிகாட்டுதல்படி இன்று முதுகுளத்தூர் சட்டமன...
15/08/2026

80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தலைமை சேவகர் K.அண்ணாமலை Ex.IPS அவர்களின் வழிகாட்டுதல்படி இன்று முதுகுளத்தூர் சட்டமன்ற தன்னார்வளர்களின் வீடு மற்றும் வணிக நிறுவனங்களில் தேசியக் கொடி ஏற்றப்பட்டது.

K.Annamalai We The Leaders Foundation We The Leaders Ramanathapuram

14/08/2026

வரும் ஆகஸ்ட் 15 அன்று, கிராம சபையில் நமது குரல் ஒலிக்கட்டும்.

கருத்துகளை முன்வைப்போம். தீர்வுகளை உருவாக்குவோம். கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்போம். நமது கிராமத்தின் வளர்ச்சிக்குப் பணியாற்றுவோம்.

நமது கிராமம், நமது பொறுப்பு!

- தலைமை சேவகர் K.Annamalai அவர்கள்.

14/08/2026

நம் மண், நம் நீர், நம் காற்று இவை அனைத்தும் நமது அடுத்த தலைமுறைக்கு நாம் பாதுகாத்து வழங்க வேண்டிய பொக்கிஷங்கள். நம் தலைமுறையையும், வருங்கால தலைமுறையையும் பாதுகாக்க வேண்டிய மிக முக்கிய பொறுப்பு நமக்கு இருக்கிறது.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை முன்னெடுத்துச் செல்லும் வகையில், வரும் ஆகஸ்ட் 16, 2026 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 3.00 மணிக்கு, சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகில் நடைபெறும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணியில், அனைவரும் பெருந்திரளாக பங்கேற்க வேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

மரங்களை வளர்ப்போம், நீர்நிலைகளைப் பாதுகாப்போம். நமது செயல்களால் ஒரு பசுமையான தமிழகத்தை உருவாக்குவோம். சுற்றுச்சூழல் பாதுகாப்பை மக்கள் இயக்கமாக மாற்றுவோம்.

மாறுவோம். மாற்றுவோம்.

-தலைமை சேவகர் K.Annamalai Ex.IPS அவர்கள்.

12/08/2026

நமது We The Leaders Foundation அமைப்பின் சார்பில், சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் 50 லட்சம் மரக்கன்றுகளை நாடும் இலக்கோடு மாபெரும் பசுமை இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இதில் முதற்கட்டமாக ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 20 லட்சம் மரக்கன்றுகளை நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் தொலைநோக்கு பார்வையையும், சின்ன கலைவாணர் விவேக் அவர்களின் இயற்கை சேவையையும் நெஞ்சில் ஏந்தி இந்த பசுமைப் பயணத்தை நாம் முன்னெடுக்கிறோம்.

ஒவ்வொரு தன்னார்வலரும் குறைந்தபட்சம் ஒரு மரக்கன்றையாவது நட்டு, பராமரித்து வளர்க்க முன்வர வேண்டும்.

மரம் நடுவோம்! இயற்கையை காப்போம்!

முதுகுளத்தூர் தன்னார்வளர்கள் சார்பாக வாழ்த்துக்கள்....
09/08/2026

முதுகுளத்தூர் தன்னார்வளர்கள் சார்பாக வாழ்த்துக்கள்....

Address

Mudukulathur

Website

Alerts

Be the first to know and let us send you an email when We The Leaders - Mudukulathur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category