Thingalnager

Thingalnager Thingalnager (MondayMarket)
Neyyoor PO
629802
Nagercoil
Kanyakumari Dist
Tamilnadu

சிறுபான்மையினர் போர்வையில் தொடர்கதையாய் நடைபெறும் சில்லறைத்தனம்.தமிழகத்தில் அதிலும் குறிப்பாக குமரியில் கிறிஸ்துவ மெசினர...
05/07/2026

சிறுபான்மையினர் போர்வையில் தொடர்கதையாய் நடைபெறும் சில்லறைத்தனம்.
தமிழகத்தில் அதிலும் குறிப்பாக குமரியில் கிறிஸ்துவ மெசினரிகளின் பங்கு மிகப்பெரியது ஆனால் இன்று இதுபோன்ற கீழ்த்தரமான செயல்கள் காரணமாக சந்தி சிரிக்கும் நிலைக்கு வந்துள்ளது. இத்தகைய பிரச்சினைகளுக்கு இந்த மருத்துவமனையில் கமிஷனுக்காக சம்பளம் இல்லாமல் வேலை பார்க்கும் உத்தமர் தான் காரணம் என்று கூறப்படுகிறது. தமிழக அரசு இதுகுறித்து தகுந்த நடவடிக்கை எடுக்குமா? Chief Minister of Tamil Nadu

இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள் ரவுடி அண்ணே Bruno Herald வரும் நாட்களில் உங்கள் மனைவிக்கும் நல்ல மதிப்பளித்து அவர்கள் ...
02/07/2026

இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள் ரவுடி அண்ணே Bruno Herald வரும் நாட்களில் உங்கள் மனைவிக்கும் நல்ல மதிப்பளித்து அவர்கள் அறிவுரை படி மது விருந்து கந்து வட்டி, ரவுடிசம், கட்டபஞ்சாயத்து, கள்ள பத்திரம் தயாரித்தல் , கள்ள பட்டா தயாரித்தல், வெட்டுக்கத்தியுடன் கொலைமிரட்டல் விடுவது போன்ற செயல்களை களைந்து, மனம் திருந்தி தலையில் டைய் அடித்து என்றும் இளமையும் வழமையுடன் நல்வாழ்க்கை வாழ வாழ்த்துக்கள்.
குறிப்பு : ஓய் அண்ணா இண்ணைக்கி சில எச்சிலை பொறுக்கி பயலுக பார்ட்டி கேப்பானுவ குடுக்காதையும்

சந்திப்பாரா? செவிகொடுப்பாரா ஆயர்? , மனமாறுமா மறைமாவட்டம்? கல்லுக்கூட்டத்தில் பல இலச்சம் இலஞ்சம் கொடுத்து நிலையில்லா தீர்...
23/06/2026

சந்திப்பாரா? செவிகொடுப்பாரா ஆயர்? , மனமாறுமா மறைமாவட்டம்? கல்லுக்கூட்டத்தில் பல இலச்சம் இலஞ்சம் கொடுத்து நிலையில்லா தீர்வு வேண்டுமா... Bruno Herald

23/06/2026

மறுபக்கம் ஓர் பார்வை

19/06/2026

கன்னியாகுமரி மாவட்டம் திங்கள் நகரை அடுத்த கல்லுக்கூட்டத்தில் அரசு அனுமதிக்கு மீறிய கட்டுமானம் மற்றும் தனியார் நிலத்தை ஆக்கிரமித்து ஆலய நிர்வாகிகள் செய்த இளிச்செயலை திருத்துமாறு குழித்துறை மறைமாவட்ட ஆயர் கூறியும் அதனை மறுத்ததை பந்தாவாக கூறும் ரவுடி திரு Bruno Herald குழித்துறை மறைமாவட்டம் மற்றும் தமிழக அரசு இதுபோன்ற ரவுடிகளுக்கு அடிபணிவதன் காரணம் என்ன? இவர்கள் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா? Chief Minister of Tamil Nadu Collector Kanniyakumari Arappor - அறப்போர் இயக்கம் Amit Shah DMK - Dravida Munnetra Kazhagam Vikatan EMagazine

17/04/2026

எங்கள் வாக்கு - எங்கள் உரிமை —விழிப்புணர்வு அடைந்த மண்டைக்காடு புதூர் மக்கள். இது ஒரு எதிர்ப்பல்ல, இது ஒரு ஜனநாயக விழிப்பு.
பொதுவாக தேர்தல் காலம் என்றாலே யாருக்கு சிறப்போ இல்லையோ மத குருமார்களுக்கு மிக சிறப்பு தான். பொதுவாக அனைத்து கட்சியினரும் மரியாதை நிமித்தமாக சந்திப்பதில் துவங்கி அரசியல் சார்ந்த முக்கிய இரகசிய கூட்டங்கள் வரை அனைத்து நாட்களும் திருவிழா நாட்கள் போன்றது தான். என்ன தான் ஆயர் பேரவை மூலம் குறிப்பிட்ட கட்சியினர் பல கோடிகளை கொடுத்து தமக்கான ஆதரவை திட்டினாலும் அதனை தமக்கெனறும் தமது குடும்பத்தினருக்கென்றும் சுருட்டிக்கொள்ளும் ஆயர் மற்றும் அவரை சுற்றி இருக்கும் சில நபர்களால் பலருக்கு பங்கு கிடைக்கவில்லையாம். இதில் தற்போது ஒரு அரசியல் கட்சி ரூ8000 கூப்பண் அறிவித்துள்ள நிலையில் இந்த கூப்பண் முறை இந்த பாதிரிகளுக்கு பல ஆண்டுகளுக்கு முன்பே அறிமுகப்படுத்தப்பட்டதாம். சில ஆண்டுகளுக்கு முன்பு போகும் இடமெல்லாம் அடிதடிக்கு நடத்துவதில் புகழ் பெற்ற பாதிரி ஒருவர் மறைமாவட்டத்தை எதிர்த்து மாற்று கட்சிக்கு ஆதரவு திரட்டி ஒரு கார் வாங்கினார் என்பது பலரும் அறிந்த ஒன்று. சிலர் பல இலச்சம் மதிப்பீட்டில் தமக்கென தமது குடும்பத்தினர் பெயர்களில் நிலங்கள் வாங்கியும் உள்ளனர். இது தவிர சமீபத்தில் பியூஸ் புடுங்கப்பட்ட அரசியல்வாதி ஏற்பாட்டில் மாம்பழத்தாறு ஆணை அருகே உள்ள கெஸ்ட் ஹவுஸ் மற்றும் சில இரகசிய இடங்களில் நடக்கும் சிறப்பு விருந்துகளில் பங்கெடுப்பதும் வளக்கம்.

இந்த நிலையில் குமரி மாவட்டத்தில் உள்ள மக்கள் கனிமவள கடத்தல் லாரிகளால் ஏற்படும் விபத்துகள். வெப்பநிலை அதிகரிப்பு எங்கும் எதிலும் லஞ்சமும் ஊழலும் அதிகரித்து மாணவர்களிடயே போதை கலாசாரமும் பாலியல் அத்துமீறல்களும் அதிகரித்துள்ள நிலையில் இதில் எந்தவித பாதிப்புக்குள்ளாகாமல் மக்கள் பணத்தில் ஒய்யாரமாக வாழும் பாதிரியார்கள் அவர்களின் சுயலாபத்துக்காக மக்களின் வாக்குகளை அடமானம் வைத்து குறிப்பிட்ட கட்சிக்கு வாக்களிக்க கூறியது மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் குழித்துறை மாவட்டத்தில் பெரும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் இந்த தேர்தலிலும் இதே நிலை தொடர்வதால் அவர்கள் திருந்தாத பட்சத்தில் சில பாதிரியார்களின் லீலைகளின் வீடியேக்களை வெளியிடவும் அவர்களுக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுக்கும் பொதுமக்கள் தயாராகி வருகிறார்கள்.

இந்த நிலையில் எங்கள் வாக்கு - எங்கள் உரிமை —என்ற விழிப்புணர்வுடன் மீனவ மக்கள் எழுந்துள்ளனர். குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கு வாக்களிக்க சொல்லி கோட்டார் மறை மாவட்ட ஆயரும் அருள் பணியாளரும் வாக்கு சேகரித்ததை மக்கள் எதிர்த்து எங்கள் ஓட்டு எங்கள் உரிமை என்று போராடினார்கள்
இந்த உணர்வு ஒவ்வொரு கிராமத்திலும் பரவ வேண்டும்; ஒவ்வொரு வாக்காளரும் தன் சுயமரியாதையை பாதுகாக்க வேண்டும். இந்த புரட்சியை ஏற்படுத்திய மண்டைக்காடு புதூர் கிராமத்தை சேர்ந்த மீனவ சொந்தங்களுக்கு பாராட்டுக்கள் புரட்சியின் தொடக்கம் குமரி மாவட்டம் புதூர் ஊரிலிருந்து துவங்குகிறது 🔥 #நாம்தமிழர்

வாகனம் ஓட்டும் அனைவருக்கும் குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வேண்டுகோள்!!1. இந்த பூமியில் மீண்டும் பிறக்க நம் தாயின் வய...
16/04/2026

வாகனம் ஓட்டும் அனைவருக்கும் குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வேண்டுகோள்!!

1. இந்த பூமியில் மீண்டும் பிறக்க நம் தாயின் வயிற்றில் 9 மாதங்கள் காத்திருக்க வேண்டும்.

2. நடக்க 2 ஆண்டுகள்.

3. பள்ளிக்குச் செல்ல 3 ஆண்டுகள்,

4. வாக்களிக்க 18 ஆண்டுகள்,

5. வேலை கிடைக்க 25 ஆண்டுகள்,

6. திருமணம் செய்து கொள்ள 25 முதல் 30 ஆண்டுகள்...
பல சந்தர்ப்பங்களில் நாம் காத்திருக்கிறோம் (காத்திருக்கிறோம்).

ஆனால்....

வாகனங்களை முந்திச் செல்லும்போது... வாகனம் ஓட்டும்போது, ​​30 வினாடிகள் கூட நிறுத்த முடியாது.

நாம் தவறு செய்து விபத்தில் சிக்கினால், மணிக்கணக்கில், நாட்கள், வாரங்கள், மாதங்கள், தேவைப்பட்டால் ஆண்டுகள் மருத்துவமனையில் இருப்போம்.

சில வினாடிகள் கவனக்குறைவால் ஏற்படும் பயங்கரமான விளைவுகளைப் பற்றி யோசித்துப் பாருங்கள்.

முன்னால் இருப்பவர்கள் செல்லட்டும்... பின்னால் இருப்பவர்கள் வசதியாக செல்லட்டும்....

போக்குவரத்து விதிகளை சரியான வேகத்தில், சரியான திசையில் பின்பற்றுங்கள்... தலைக்கவசம் அணியுங்கள்... வாகனங்களை கட்டுப்பாட்டில் வைத்திருங்கள். மேலும் உங்கள் இலக்கை பாதுகாப்பாக அடையுங்கள்.

உங்கள் குடும்ப உறுப்பினர்களும் குழந்தைகளும் உங்களுக்காக உங்கள் வீட்டில் காத்திருக்கிறார்கள் என்பதை மறந்துவிடாதீர்கள்......

கவனமாக இருங்கள்... இனிய பயணம்
❤️💜💜🙏🏻🙏🙏 Arappor - அறப்போர் இயக்கம் Collector Kanniyakumari The Times of India Vikatan EMagazine Polimer News Behindwoods News18 India Today NDTV

இதில் நீங்கள் யார்?உங்கள் விலை என்ன?நீங்கள் விலை போகிறீர்களா இல்லை பிறர் உங்களை விலை பேச உடன்படுகிறீர்களா? Chief Ministe...
15/04/2026

இதில் நீங்கள் யார்?
உங்கள் விலை என்ன?
நீங்கள் விலை போகிறீர்களா இல்லை பிறர் உங்களை விலை பேச உடன்படுகிறீர்களா? Chief Minister of Tamil Nadu DMK - Dravida Munnetra Kazhagam Arappor - அறப்போர் இயக்கம் Collector Kanniyakumari Amit Shah Behindwoods Vikatan EMagazine News7Tamil

ஊரை ஏமாற்றி உலையில் போடுவதை கேள்விப்பட்டிருப்போம். ஆனால் இங்கு பல ஊர் மக்களை ஏமாற்றி உலையில் போட்டிருக்கிறார்கள் கல்லுக்...
07/04/2026

ஊரை ஏமாற்றி உலையில் போடுவதை கேள்விப்பட்டிருப்போம். ஆனால் இங்கு பல ஊர் மக்களை ஏமாற்றி உலையில் போட்டிருக்கிறார்கள் கல்லுக்கூட்டம் தூய பாத்திமா அன்னை ஆலய நிர்வாகத்தினர்.

கல்லுக்கூட்டம் தூய பாத்திமா அன்னை ஆலய நிர்வாகத்தினர் அரசையும் பொதுமக்களையும் ஏமாற்றி செய்து வரும் முறைகேடுகள் குறித்து சமீப காலமாக நாம் வெளிக்கொண்டு வந்துள்ளோம். இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ளது. அரசு அனுமதிக்கு மீறி கட்டப்பட்டு வரும் ஆலயத்திற்கு நிதி திரட்டுவது என்ற பெயரில் குலுக்கல் நடத்தத் திட்டமிட்டு, அதில் முக்கிய பரிசுகளாக கார், புல்லட் மோட்டார் சைக்கிள், ஸ்கூட்டர் என அறிவித்து, ஒரு புத்தகத்திற்கு பத்தாயிரம் ரூபாய் என்ற அளவில் ஆயிரக்கணக்கான புத்தகங்களை அச்சிட்டு, குமரி மாவட்டம் மட்டுமின்றி சில வெளி மாவட்டங்களிலும் வெளி நாடுகளிலும் விற்பனை செய்து ஆலய நிர்வாகத்தினர் கோடிகளைத் திரட்டியுள்ளார்கள்.

இதில் சிலர் கார் பரிசு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் பல லட்சங்களுக்கு சீட்டு வாங்கி இன்று தலையில் துண்டைப் போட்டுக்கொண்டு இருப்பவர்களும் உண்டு. இப்படி இருக்கையில் வினோதம் என்னவென்றால், முக்கிய மூன்று பரிசுகளும் பங்கு பேரவை நிர்வாகத்தினரைச் சார்ந்த நபர்களுக்கு கிடைத்திருப்பது தான் பலரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இது பங்கு பேரவை நிர்வாகத்தினர் மீது உள்ள நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கியுள்ளது.
இதைப் பற்றி ஏமாற்றப்பட்ட மக்களிடம் பேசுகையில், “எங்களை ஏமாற்றி பிழைப்பதற்கு ஒரு காரோ பைக்கோ வேண்டும் என்று கேட்டிருந்தால் நாங்கள் பணம் திரட்டி வாங்கிக் கொடுத்திருப்போமே! இப்படி ஏமாற்றி பிழைக்க வேண்டுமா?” என்று சிலர் கூறுகின்றனர்.
“இந்த நபர்கள் செய்யும் தவறுகளுக்கு தூய பாத்திமா அன்னை தக்க சன்மானம் கொடுப்பார்கள்” என்று சிலரும்,
வேறு சிலர் “பிறரை ஏமாற்றுபவர்கள் குறித்து அல்வா கொடுப்பதாக பேச்சு வழக்கில் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் இங்கு எங்களுக்கு அல்வா துண்டு ஒன்றாவது வாங்கிக் கொடுத்திருக்கலாம்” என்றும் கூறுகின்றனர்.

09/03/2026

திங்கள் நகரை அடுத்த கல்லுக்கூட்டம் தூய பாத்திமா அன்னை ஆலய இடிப்பு சர்ச்சை: புனித சின்னங்களுக்கு அவமதிப்பு – மத உணர்வுகள் புண்படுத்தப்பட்டதா?

குழித்துறை மறைமாவட்டத்திற்கு உட்பட்ட கல்லுக்கூட்டம் தூய பாத்திமா அன்னை ஆலயத்தில் பழைய ஆலயக் கட்டடத்தை இடித்து புதிய ஆலயம் கட்டும் பணி நடைபெற்றபோது, **திருச்சிலுவை** மற்றும் **ஆலய மணி** ஆகிய புனித சின்னங்கள் கீழே விழுந்து சிதறிய வகையில் அவமதிக்கப்பட்டதாக பங்குத்தந்தை மற்றும் பங்கு பேரவை நிர்வாகிகள் மீது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இச்சம்பவம் கிறிஸ்தவ விசுவாசிகளிடையே பெரும் அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

பங்குத்தந்தை அருட்திரு. சுனில் கனகராஜ் அவர்களும், பங்கு பேரவை நிர்வாகிகளும் இந்த இடிப்புப் பணியை மேற்பார்வையிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விசுவாசிகளின் கூற்றுப்படி, பழைய கோபுரத்தின் உச்சியில் இருந்த திருச்சிலுவையும் ஆலய மணியும் முறையாகக் கழற்றி பாதுகாக்கப்படாமல், முழு கட்டடமும் மிருகத்தனமாக இடிக்கப்பட்டதால் அவை கீழே விழுந்து சேதமடைந்தன. மேலும், இச்சம்பவத்தை சில அருட்பணியாளர்கள் உள்ளிட்ட நபர்கள் வீடியோ எடுத்து சமூக ஊடகங்களில் பகிர்ந்து மகிழ்ச்சி தெரிவித்ததுடன், இதற்காக சிறப்பு விருந்துகள் நடத்தியதாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளன.

கிறிஸ்தவ மரபில் திருச்சிலுவை என்பது இயேசு கிறிஸ்துவின் பாடுகள், மீட்பு மற்றும் வெற்றியின் உச்சகட்ட சின்னமாகும். திருவிவிலியத்தில் “சிலுவைப் பற்றிய செய்தி... நமக்கோ அது கடவுளின் ஆற்றல்” (1 கொரிந்தியர் 1:18) என்று கூறப்பட்டுள்ளது. புனித பவுல் “நான் சிலுவையில் அறையப்பட்ட என் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவைத் தவிர வேறெதிலும் பெருமை கொள்ள மாட்டேன்” (கலாத்தியர் 6:14) என்று அறிவித்தார். புனிதர்களான புனித பிரான்சிஸ் அசிசி, புனித ஜான் ஆஃப் தி கிராஸ் போன்றோர் சிலுவையை ஆன்மீக வாழ்வின் மையமாகக் கொண்டனர்.

ஆலய மணி இறைவனின் அழைப்பு, திருப்பலி அறிவிப்பு, ஆறுதல் மற்றும் எச்சரிப்பின் சின்னமாக விளங்குகிறது. இவ்விரு சின்னங்களும் நூற்றாண்டுகளாக விசுவாச சமூகத்தின் இதயத் துடிப்பாக இருந்து வந்துள்ளன.

இதேபோல், இந்து மதத்தில் கோயில் கோபுரத்தில் உள்ள சிகரம் அல்லது கலசம் புனிதமானது; அதை அவமதிப்பது பெரும் பாவமாகக் கருதப்படுகிறது. இஸ்லாம் மதத்தில் மசூதியின் மினாரிலிருந்து அழான் ஒலிக்கும் புனிதத்தை அவமதிப்பது மிகக் கடுமையான குற்றமாகப் பார்க்கப்படுகிறது. பௌத்தம் மற்றும் சீக்கிய மதங்களிலும் தங்கள் வழிபாட்டுத் தலங்களின் சின்னங்கள் (ஸ்தூபி, நிசான் சாஹிப் போன்றவை) மிகுந்த மதிப்புடன் காப்பாற்றப்படுகின்றன.

இத்தகைய பின்னணியில், கிறிஸ்தவ ஆலயத்தின் மீட்பின் சின்னங்களை இவ்வாறு நடத்தியது மத உணர்வுகளைப் புண்படுத்திய செயலாகும் என்று பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். “ஆலயம் புதுப்பிக்கப்படுவது தேவைதான்; ஆனால் புனித சின்னங்களை மதிக்காமல், அவற்றை சிதற வைத்து கொண்டாடுவது எந்த மத அடிப்படையிலும் ஏற்கத்தக்கதல்ல” என்று உள்ளூர் விசுவாசிகள் கோபம் தெரிவித்துள்ளனர். மேலும், “இறைநம்பிக்கையும் அடிப்படை அறிவும் பக்குவமற்ற பங்குத்தந்தை அருட்திரு. சுனில் கனகராஜ்” என்று குறிப்பிட்டு கடுமையான விமர்சனங்களும் எழுந்துள்ளன.

இச்சம்பவம் குறித்து அருட்திரு. சுனில் கனகராஜ் அல்லது பங்கு நிர்வாகத்தினரிடமிருந்து இதுவரை எவ்வித அதிகாரப்பூர்வ விளக்கமும் வெளியாகவில்லை. அவர்கள் ஆக்கிரமிப்பு செய்த தனியார் நிலங்களுக்கு போலி பட்டா, போலி பத்திரம் தயார் செய்வதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பான விசாரணையை மறைமாவட்ட ஆயர் முன்னெடுத்து, நியாயமான முறையில் விசாரணையும் நடவடிக்கையும் மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

மத சுதந்திரமும் புனித சின்னங்களின் மரியாதையும் அனைத்து சமூகங்களுக்கும் அடிப்படை உரிமையாகும். இச்சம்பவம் அனைத்து மதத்தினரும் சிந்திக்க வேண்டிய பாடமாக அமைந்துள்ளது. The Times of India Polimer News Vikatan EMagazine News18 NDTV News7Tamil Behindwoods BJP Tamilnadu Amit Shah India Today

Address

Nagercoil
629802

Website

Alerts

Be the first to know and let us send you an email when Thingalnager posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share