Kanniyakumari District Police

Kanniyakumari District Police Public of Kanniyakumari District are welcome to share the information/grievances

பொதுமக்களின் கவனத்திற்குஇன்றைய (01.09.2026) இரவு ரோந்து அதிகாரிகள்.உங்கள் பகுதிகளில் எந்த விதமான குற்ற சம்பவங்கள் நடந்தா...
01/09/2026

பொதுமக்களின் கவனத்திற்கு
இன்றைய (01.09.2026) இரவு ரோந்து அதிகாரிகள்.

உங்கள் பகுதிகளில் எந்த விதமான குற்ற சம்பவங்கள் நடந்தாலும் சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளின் எண்ணிற்கு உடனே அழையுங்கள்.



🚨*கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை சார்பில் 10 கி.மீ. மாரத்தான் – பொதுமக்களுக்கு அழைப்பு* பொதுமக்களிடையே உடல்நலம், சாலை பாத...
01/09/2026

🚨*கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை சார்பில் 10 கி.மீ. மாரத்தான் – பொதுமக்களுக்கு அழைப்பு*
பொதுமக்களிடையே உடல்நலம், சாலை பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை சார்பில் 10 கி.மீ. மாரத்தான் விழிப்புணர்வு ஓட்டம் நடைபெற உள்ளது.

கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் *டாக்டர் R. ஸ்டாலின், IPS* அவர்களின் வழிகாட்டுதலின்படி நடைபெறும் இந்நிகழ்வு, 04.09.2026 வெள்ளிக்கிழமை அதிகாலை 5.00 மணிக்கு, ஐயன் திருவள்ளுவர் வளைவு (Arch) பகுதியில் தொடங்குகிறது.

இந்த 10 கி.மீ. மாரத்தானில் பொதுமக்கள், இளைஞர்கள் மற்றும் ஓட்டப்பந்தய ஆர்வலர்கள் திரளாக பங்கேற்று, ஆரோக்கியமான வாழ்க்கை முறை, சாலை பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் இல்லாத சமூகத்தை உருவாக்குவதற்கான விழிப்புணர்வை வலுப்படுத்துமாறு கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மாரத்தானில் சிறப்பிடம் பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ₹10,000, இரண்டாம் பரிசாக ₹7,500, மூன்றாம் பரிசாக ₹5,000 வழங்கப்பட உள்ளது.

மேலும், நிகழ்வில் பங்கேற்க விரும்புவோருக்கு Spot Registration செய்யும் வசதி மட்டுமே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் விபரங்களுக்கு 6381681393, 94429 58266 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.




🚨 கன்னியாகுமரி மாவட்டத்தில் குற்றங்களை முன்கூட்டியே தடுத்து, பொதுமக்களுக்கு பாதுகாப்பு மற்றும் நம்பிக்கை உணர்வை ஏற்படுத்...
01/09/2026

🚨 கன்னியாகுமரி மாவட்டத்தில் குற்றங்களை முன்கூட்டியே தடுத்து, பொதுமக்களுக்கு பாதுகாப்பு மற்றும் நம்பிக்கை உணர்வை ஏற்படுத்தும் நோக்கில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் R. ஸ்டாலின் IPS அவர்களின் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் தீவிர நடைரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.




01/09/2026

*🚨மூதாட்டி கொலை வழக்கில் துரித புலனாய்வு. கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை அதிரடி*

இரண்டு குற்றவாளிகள் கைது – ரூ.35 லட்சம் மதிப்பிலான நகைகள் மீட்பு

கன்னியாகுமரி மாவட்டம், கோட்டார் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வடிவீஸ்வரம் கீழரதவீதியில் வசித்து வந்த சின்னம்மாள் (77) உயிரிழந்த சம்பவம் தொடர்பாக கோட்டார் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு தீவிர புலனாய்வு மேற்கொள்ளப்பட்டது.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். R. ஸ்டாலின், IPS அவர்களின் நேரடி வழிகாட்டுதலில், நாகர்கோவில் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு.இளஞ்செழியன் அவர்கள் மேற்பார்வையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு சம்பவ இடத்தைச் சுற்றியுள்ள சிசிடிவி காட்சிகள், தொழில்நுட்ப ஆதாரங்கள் மற்றும் கிடைத்த தடயங்கள் அனைத்தும் தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டன.

புலனாய்வின் போது, இறந்த மூதாட்டிக்கு அடிக்கடி உதவி செய்து வந்ததாக கூறப்பட்ட நபரின் நடவடிக்கைகளில் சந்தேகம் எழுந்தது. தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், சம்பவத்திற்குப் பிறகு வீட்டிலிருந்த நகைகள் மற்றும் பணம் காணாமல் போனது உறுதி செய்யப்பட்டது.

*இருவர் கைது*

தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட துரித நடவடிக்கையின் மூலம் வழக்கில் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்கள்:
🔹 வெயில் ராஜ் @ விக்னேஷ் (33)
🔹 அரவிந்த் (26)

இருவரும் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்தது. அவர்களிடமிருந்து,

- ரூ.35 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள்
- ரூ.25,000 ரொக்கப் பணம்

உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

*ஊர்க்காவல் கண்காணிப்பு திட்டம்*

சம்பவம் நடந்த குறுகிய காலத்திலேயே குற்றவாளிகளை அடையாளம் கண்டு கைது செய்து, திருடிச் செல்லப்பட்ட சொத்துக்களை மீட்டது கன்னியாகுமரி மாவட்ட காவல்துறையின் துரிதமான மற்றும் தொழில்நுட்ப ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்ட புலனாய்வின் வெற்றியாகும். இந்த விசாரணைக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் ஊர் காவல் கண்காணிப்பு திட்டத்தின் கீழ் நிறுவப்பட்ட சிசிடிவி கேமராக்கள் முக்கிய பங்கு வகித்தது என்பது குறிப்பிடத்தக்கது

*சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினருக்கு பாராட்டு*

இந்த வழக்கை விரைவாக துப்பறிந்து குற்றவாளிகளை கைது செய்த துணை காவல் கண்காணிப்பாளர்கள், ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் உள்ளிட்ட அனைத்து காவல்துறை அதிகாரிகளையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். R. ஸ்டாலின் IPS அவர்கள் வெகுவாக பாராட்டியுள்ளார்.




பொதுமக்களின் கவனத்திற்குஇன்றைய (31.08.2026) இரவு ரோந்து அதிகாரிகள்.உங்கள் பகுதிகளில் எந்த விதமான குற்ற சம்பவங்கள் நடந்தா...
31/08/2026

பொதுமக்களின் கவனத்திற்கு
இன்றைய (31.08.2026) இரவு ரோந்து அதிகாரிகள்.

உங்கள் பகுதிகளில் எந்த விதமான குற்ற சம்பவங்கள் நடந்தாலும் சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளின் எண்ணிற்கு உடனே அழையுங்கள்.



🚨 *POCSO வழக்கு குற்றவாளிக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 10,000 ரூபாய் அபராதம் விதித்து நாகர்கோவில் சிறப்பு POCSO ந...
31/08/2026

🚨 *POCSO வழக்கு குற்றவாளிக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 10,000 ரூபாய் அபராதம் விதித்து நாகர்கோவில் சிறப்பு POCSO நீதிமன்றம் தீர்ப்பு*

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற வழக்குகளில் விரைந்து புலன் விசாரணை மேற்கொண்டு, குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து, நீதிமன்ற வழக்கு விசாரணையை முறையாக கண்காணித்து, குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்றுத்தர வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் *டாக்டர். R. ஸ்டாலின் IPS* அவர்கள் அறிவுறுத்தி வருகிறார்கள்.

இந்நிலையில், மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட POCSO வழக்கில், சிறப்பான புலன் விசாரணையின் மூலம் குற்றவாளிக்கு நீதிமன்றத்தில் தண்டனை பெற்றுத்தரப்பட்டுள்ளது.

2019 ஆம் ஆண்டு , மறுதூர்குறிச்சி, கொல்லன்விளை பகுதியைச் சேர்ந்த அருள் தாஸ் என்பவரின் மகன் ஜஸ்லின் ராஜ்குமார் (32) ,பிளஸ்-2 படித்து வந்த 17 வயது மாணவியை , ஆசை வார்த்தைகள் கூறி சிறுமியை அழைத்துச் சென்றதாக புகார் அளிக்கப்பட்டது.

இது தொடர்பாக மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் Crime No.10/2019, U/S 366 IPC & 5(l), 6 OF POCSO Act ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையின் போது வழக்கு POCSO Act பிரிவுகள் 5(l), 6 ஆகியவை சேர்க்கப்பட்டு, குற்றப்பத்திரிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.இந்த வழக்கானது தக்கலை உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு.பார்த்திபன் அவர்களின் மேற்பார்வையில் நாகர்கோவில் POCSO சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

விசாரணையின் முடிவில், குற்றவாளி ஜஸ்லின் ராஜகுமாருக்கு, POCSO Act பிரிவுகள் 5(l), 6 – 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ₹5,000 அபராதம்
IPC பிரிவு 366 – 5 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை மற்றும் ₹5,000 அபராதம்
என தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

நீதிமன்ற வழக்கு விசாரணை மற்றும் சாட்சிகள் விசாரணை ஆகியவற்றில் சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கித் தர காரணமாக இருந்த வழக்கின் புலன் விசாரணை அதிகாரிகள், அரசு வழக்கறிஞர், நீதிமன்ற காவலர் இந்த வழக்கின் நீதிமன்ற விசாரணையை முறையாக கண்காணித்த தக்கலை உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர், மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.




31/08/2026

🚨*சிறுமியின் கவலைக்கு தீர்வு… தாய்க்கு மருத்துவ உதவி வழங்கிய நிமிர் குழுவினர்*

கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் *டாக்டர். R. ஸ்டாலின் IPS* அவர்களிடம், சாமித்தோப்பைச் சேர்ந்த 14 வயது சிறுமி தனது தந்தை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில் தாயார் உடல்நலக்குறைவால் ஆதரவின்றி இருப்பதாகவும், அவரை முதியோர் காப்பகத்தில் சேர்க்க உதவிடுமாறும் கோரிக்கை மனு அளித்தார்.

சிறுமியின் மனுவை பெற்றுக்கொண்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் அறிவுறுத்தலின்பேரில், நிமிர் குழுவினர் சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டு, அவரது குடும்பச் சூழ்நிலையை முழுமையாக அறிந்து கொண்டனர்.

தாயாருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு நடக்க முடியாத நிலையில், சாமித்தோப்பு கோயில் பகுதியில் ஆதரவின்றி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, நிமிர் குழுவினர் உடனடியாக தென்தாமரைகுளம் காவல் நிலையத்தில் CSR பதிவு செய்து ஆம்புலன்ஸ் உதவியுடன் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

மேலும், சிறுமிக்கு ஆறுதல் அளித்து, தற்போது தாயாரை மருத்துவமனையில் கவனித்துக்கொள், தொடர்ந்து தேவையான சமூகநல உதவிகளைப் பெற்று, முதியோர் காப்பகத்தில் சேர்ப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என நம்பிக்கை அளித்தனர்.




பொதுமக்களின் கவனத்திற்குஇன்றைய (30.08.2026) இரவு ரோந்து அதிகாரிகள்.உங்கள் பகுதிகளில் எந்த விதமான குற்ற சம்பவங்கள் நடந்தா...
30/08/2026

பொதுமக்களின் கவனத்திற்கு
இன்றைய (30.08.2026) இரவு ரோந்து அதிகாரிகள்.

உங்கள் பகுதிகளில் எந்த விதமான குற்ற சம்பவங்கள் நடந்தாலும் சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளின் எண்ணிற்கு உடனே அழையுங்கள்.



Address

District Police Office
Nagercoil
629001

Telephone

+917010363173

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kanniyakumari District Police posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share