Kanniyakumari District Police

Kanniyakumari District Police Public of Kanniyakumari District are welcome to share the information/grievances
(1)

🚨 போதைப்பொருட்களுக்கு எதிரான அதிரடி நடவடிக்கை – இரண்டு வாரங்களில் 44 பேர் கைது; மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் தன...
01/06/2026

🚨 போதைப்பொருட்களுக்கு எதிரான அதிரடி நடவடிக்கை – இரண்டு வாரங்களில் 44 பேர் கைது; மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் தனிப்படைகளின் தீவிர வேட்டை தொடர்கிறது

🔹 கன்னியாகுமரி மாவட்டத்தில் போதைப்பொருட்களின் நடமாட்டத்தை முற்றிலுமாக ஒழித்து, இளைஞர்கள் மற்றும் பொதுமக்களை போதைப்பழக்கத்தின் பாதிப்பிலிருந்து பாதுகாக்கும் நோக்கில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். R. ஸ்டாலின், IPS அவர்களின் உத்தரவின்பேரில் கடந்த மே 13ஆம் தேதி ஐந்து சிறப்பு தனிப்படைகள் அமைக்கப்பட்டு மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

🔹 மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் தொலைநோக்கு பார்வை, துல்லியமான திட்டமிடல் மற்றும் உறுதியான தலைமையின் காரணமாக, கடந்த இரண்டு வாரங்களில் தனிப்படைகள் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கைகளில் 18 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 6 கிலோ 750 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவ்வழக்குகளில் தொடர்புடைய 27 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

🔹 அதேபோல், 17 குட்கா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 253 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவ்வழக்குகளில் 17 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

🔹 இதன்மூலம், கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் 35 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 44 நபர்கள் கைது செய்யப்பட்டதுடன், கணிசமான அளவிலான போதைப்பொருட்கள் மற்றும் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

🔹 “போதைப்பொருட்கள் இல்லாத கன்னியாகுமரியை உருவாக்குவது காவல்துறையின் முக்கிய இலக்காகும். போதைப்பொருள் விற்பனை, கடத்தல் மற்றும் பயன்பாட்டில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்படும்” என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உறுதியளித்துள்ளார்.

🚔 போதைப்பொருட்களுக்கு எதிரான இந்த தொடர் நடவடிக்கைகள் மேலும் தீவிரப்படுத்தப்பட்டு, பாதுகாப்பான மற்றும் போதைப்பொருட்கள் இல்லாத கன்னியாகுமரியை உருவாக்க காவல்துறை உறுதியுடன் செயல்பட்டு வருகிறது.




பொதுமக்களின் கவனத்திற்குஇன்றைய (31.05.2026) இரவு ரோந்து அதிகாரிகள்.உங்கள் பகுதிகளில் எந்த விதமான குற்ற சம்பவங்கள் நடந்தா...
31/05/2026

பொதுமக்களின் கவனத்திற்கு
இன்றைய (31.05.2026) இரவு ரோந்து அதிகாரிகள்.

உங்கள் பகுதிகளில் எந்த விதமான குற்ற சம்பவங்கள் நடந்தாலும் சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளின் எண்ணிற்கு உடனே அழையுங்கள்.



🚨கன்னியாகுமரி மாவட்ட காவல்துறையின் போதை பொருட்களுக்கு எதிரான தொடர் நடவடிக்கைகள்விற்பனைக்காக  வைத்திருந்த 100 கிராம் கஞ்ச...
31/05/2026

🚨கன்னியாகுமரி மாவட்ட காவல்துறையின் போதை பொருட்களுக்கு எதிரான தொடர் நடவடிக்கைகள்

விற்பனைக்காக வைத்திருந்த 100 கிராம் கஞ்சா பறிமுதல் 3 பேர் கைது...

மே 31 2026

✨ கன்னியாகுமரி மாவட்டத்தில் கஞ்சா, குட்கா, புகையிலை உள்ளிட்ட போதைப்பொருட்கள் முற்றிலும் ஒழிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் *டாக்டர். R. ஸ்டாலின் IPS* அவர்கள் தலைமையில் காவல்துறையினர் கண்காணிப்பு மற்றும் தொடர்ச்சியான அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

✨ அதன் தொடர்ச்சியாக ஆரல்வாய்மொழி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

✨ மேற்கொண்ட சோதனையில் கோட்டார் பீச் ரோடு பெரியவிளை பகுதி சேர்ந்த சுரேஷ் என்பவரின் மகன் உதயசாகர் (22), ராஜாக்கமங்கலம் குருசடி பகுதி சேர்ந்த பவுலின் பீட்டர் என்பவரின் மகன் லெஃபானியோ (26) மற்றும் கொட்டாரம் மலை மாதா குருசடி பகுதியை சேர்ந்த மணிகண்ட பிரபு என்பவரின் மகன் சக்தி (20) ஆகிய மூன்று பேரையும் கைது செய்த காவல்துறையினர் அவர்களிடமிருந்து விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 100 கிராம் அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா பறிமுதல் செய்து நிலைய குற்ற எண் 186/2026 U/S 8(c) r/w 20(b)(II)(A)NDPS Act சட்டப் பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.

✨ கன்னியாகுமரி மாவட்டத்தில் போதைப்பொருள் விற்பனை மற்றும் பயன்பாட்டில் ஈடுபடுபவர்கள் மீது இதுபோன்ற அதிரடி நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும். சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.




🚨காவல்துறையின் அதிரடி வேட்டையில் 1.200 கிலோ கிராம் கஞ்சா பறிமுதல் – மூன்று பேர் கைதுமே 31, 2026✨ கன்னியாகுமரி மாவட்டத்தி...
31/05/2026

🚨காவல்துறையின் அதிரடி வேட்டையில் 1.200 கிலோ கிராம் கஞ்சா பறிமுதல் – மூன்று பேர் கைது

மே 31, 2026

✨ கன்னியாகுமரி மாவட்டத்தில் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் போதைப்பொருள் பழக்கத்திலிருந்து பாதுகாக்கும் நோக்கில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் *டாக்டர் R. ஸ்டாலின் IPS* அவர்களின் உத்தரவின்பேரில் காவல்துறையினர் மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்பு மற்றும் தொடர் அதிரடி சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

✨ கஞ்சா, குட்கா, புகையிலை உள்ளிட்ட அரசால் தடை செய்யப்பட்ட போதைப்பொருட்களின் விற்பனை மற்றும் கடத்தலை முற்றிலும் தடுக்க “போதை இல்லா குமரி” என்ற இலக்குடன் காவல்துறை உறுதியுடன் செயல்பட்டு வருகிறது.

✨ இந்நிலையில் சுசீந்திரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

✨ அப்போது சந்தேகத்திற்கிடமாக இருந்த மூன்று பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில்,
ராஜாக்கமங்கலம் துறை, சுனாமி காலணியை சேர்ந்த அன்னை மரியான் என்பவரது மகன் கிராஸ் சாரதி (18) , தெற்கு சூரங்குடி, வடலி காட்டு விளையை சேர்ந்த ராஜ பூபதி என்பவரது மகன் நந்தகுமார் (20) மற்றும் தூத்துக்குடி , தர்மபுரி காலனி, கீழ ராமசாமியார் புரத்தை சேர்ந்த மகேந்திரன் என்பவரது மகன் தமிழரசு (19) ஆகியோர்கள் விற்பனைக்காக கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

✨ தொடர்ந்து காவல்துறையினர் மேற்கொண்ட சோதனையில் அவர்களிடமிருந்து சுமார் 1.200 கிலோகிராம் அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு சுசீந்திரம் காவல் நிலைய குற்ற எண் 208/2026 uls 8 (C) 20(b) (ii) (B) NDPS Act இன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

✨ கன்னியாகுமரி மாவட்டத்தில் போதைப் பொருட்கள் விற்பனை, கடத்தல் மற்றும் பதுக்கலில் ஈடுபடுபவர்கள் மீது இனியும் கடுமையான சட்ட நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்படும் என காவல்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

✨ முதல் முறையே மறுப்போம் போதை பாதையை தவிர்ப்போம்...




*🚨 சுற்றுலா பயணி தவறவிட்ட செல்போனை மீட்டுக் கொடுத்த கன்னியாகுமரி போக்குவரத்து போலீசார்*May 30  2026கன்னியாகுமரிக்கு சுற்...
30/05/2026

*🚨 சுற்றுலா பயணி தவறவிட்ட செல்போனை மீட்டுக் கொடுத்த கன்னியாகுமரி போக்குவரத்து போலீசார்*

May 30 2026

கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்த ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த பிரின்ஸ் என்ற சுற்றுலா பயணி ஒருவர் தனது செல்போனை தவற விட்டுள்ளார் இதனை மீட்ட கன்னியாகுமரி போக்குவரத்து போலீசார் செல்போனை உரிய நபரிடம் ஒப்படைத்தார்கள்




பொதுமக்களின் கவனத்திற்குஇன்றைய (30.05.2026) இரவு ரோந்து அதிகாரிகள்.உங்கள் பகுதிகளில் எந்த விதமான குற்ற சம்பவங்கள் நடந்தா...
30/05/2026

பொதுமக்களின் கவனத்திற்கு
இன்றைய (30.05.2026) இரவு ரோந்து அதிகாரிகள்.

உங்கள் பகுதிகளில் எந்த விதமான குற்ற சம்பவங்கள் நடந்தாலும் சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளின் எண்ணிற்கு உடனே அழையுங்கள்.



பொதுமக்களின் கவனத்திற்குஇன்றைய (29.05.2026) இரவு ரோந்து அதிகாரிகள்.உங்கள் பகுதிகளில் எந்த விதமான குற்ற சம்பவங்கள் நடந்தா...
29/05/2026

பொதுமக்களின் கவனத்திற்கு
இன்றைய (29.05.2026) இரவு ரோந்து அதிகாரிகள்.

உங்கள் பகுதிகளில் எந்த விதமான குற்ற சம்பவங்கள் நடந்தாலும் சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளின் எண்ணிற்கு உடனே அழையுங்கள்.



பணி ஓய்வில் செல்ல இருக்கும் போலீசார் மற்றும் அமைச்சுப் பணியாளர்களை  நினைவு பரிசு வழங்கி வாழ்த்திய மாவட்ட காவல் கண்காணிப்...
29/05/2026

பணி ஓய்வில் செல்ல இருக்கும் போலீசார் மற்றும் அமைச்சுப் பணியாளர்களை நினைவு பரிசு வழங்கி வாழ்த்திய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். R. ஸ்டாலின் IPS அவர்கள்.

✨ காவல்துறையில் பணிபுரிந்து இந்த மாத இறுதியில் ஓய்வில் செல்லவிருக்கும் 3 உதவி ஆய்வாளர்கள்,15 சிறப்பு உதவி ஆய்வாளர்கள், 2 அமைச்சுப் பணியாளர்கள் மற்றும் அவர்களுடைய குடும்ப உறுப்பினர்களுடன் இன்று 29.05.2026 மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் *டாக்டர். R. ஸ்டாலின் IPS* அவர்களுடன் கலந்துரையாடினார்.

✨ அதன்படி பணியில் சிறப்பாக செயல்பட்டு தங்களது பணியை நிறைவு செய்யும் அனைவரையும் பாராட்டி சான்றிதழ் மற்றும் வாழ்த்து மடல்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் வழங்கி கௌரவித்தார்கள்.

*வாழ்த்து மடல்*

காவல்துறையில் நேர்மையுடனும், அர்ப்பணிப்புடனும் பணியாற்றி ஓய்வுபெறும் உங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள். பணி ஓய்விற்குப் பின், நீங்கள் உங்கள் குடும்பத்துடன் ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும், சகல வளங்களுடனும் வாழ என்னுடைய இதயப்பூர்வமான நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இப்படிக்கு,
மருத்துவர் இரா.ஸ்டாலின் இ.கா.ப.,
மாவட்ட காவல் கண்காணிப்பாளர்..




பொதுமக்களின் கவனத்திற்குஇன்றைய (28.05.2026) இரவு ரோந்து அதிகாரிகள்.உங்கள் பகுதிகளில் எந்த விதமான குற்ற சம்பவங்கள் நடந்தா...
28/05/2026

பொதுமக்களின் கவனத்திற்கு
இன்றைய (28.05.2026) இரவு ரோந்து அதிகாரிகள்.

உங்கள் பகுதிகளில் எந்த விதமான குற்ற சம்பவங்கள் நடந்தாலும் சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளின் எண்ணிற்கு உடனே அழையுங்கள்.



பொதுமக்களின் கவனத்திற்குஇன்றைய (27.05.2026) இரவு ரோந்து அதிகாரிகள்.உங்கள் பகுதிகளில் எந்த விதமான குற்ற சம்பவங்கள் நடந்தா...
27/05/2026

பொதுமக்களின் கவனத்திற்கு
இன்றைய (27.05.2026) இரவு ரோந்து அதிகாரிகள்.

உங்கள் பகுதிகளில் எந்த விதமான குற்ற சம்பவங்கள் நடந்தாலும் சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளின் எண்ணிற்கு உடனே அழையுங்கள்.



Address

District Police Office
Nagercoil
629001

Telephone

+917010363173

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kanniyakumari District Police posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share