SDPI Kanyakumari District

SDPI Kanyakumari District SDPI Kanyakumari District – Official
(1)

உயர்நீதிமன்றத்தின் பக்ரீத் குர்பானி கட்டுப்பாடு விவகாரம்:  தமிழக அரசின் மெத்தனப் போக்கு ஏற்புடையதல்ல! -  எஸ்டிபிஐசென்னை ...
03/06/2026

உயர்நீதிமன்றத்தின் பக்ரீத் குர்பானி கட்டுப்பாடு விவகாரம்: தமிழக அரசின் மெத்தனப் போக்கு ஏற்புடையதல்ல! - எஸ்டிபிஐ

சென்னை உயர் நீதிமன்றத்தில் பக்ரீத் பண்டிகை மற்றும் விலங்கு வதை தடுப்பு தொடர்பான வழக்கில், தமிழக காவல்துறை தாக்கல் செய்துள்ள செயல்பாட்டு அறிக்கை (Compliance Report) மற்றும் அதன் தொடர்ச்சியாக வழக்கு முடிக்கப்பட்ட விதம் ஆகியவை, தற்போதைய தமிழக அரசின் நிர்வாகத் திறமையின்மையையும், சிறுபான்மையின மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் நிலவும் மெத்தனப் போக்கையுமே வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. மக்களின் அடிப்படை உரிமைகளை நிலைநாட்ட இந்த அரசு தவறிவிட்டதோ என்ற நியாயமான சந்தேகம் இதன் மூலம் எழுகிறது என்று எஸ்டிபிஐ கட்சியின் மாநில பொதுச்செயலாளர் அகமது நவவி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

பக்ரீத் பண்டிகையின் போதோ அல்லது வேறு எந்த நாட்களிலோ தமிழகத்திற்குள் பசு, எருது, காளை அல்லது கன்றுகள் வதைக்கப்படுவதில்லை என்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. மேலும், அங்கீகரிக்கப்பட்ட மற்றும் உரிமம் பெற்ற இறைச்சிக் கூடங்களைத் (Slaughterhouse) தவிர, வேறு எந்தப் பொது இடங்களிலும் விலங்குகளை வதைக்கக் கூடாது என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது. இந்த உத்தரவின் அடிப்படையில், தமிழ்நாடு காவல்துறை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள செயல்பாட்டு அறிக்கையில்; சிறப்புப் படைகள் குவிப்பு, உளவுத்துறை கண்காணிப்பு மற்றும் தீவிர ரோந்துப் பணிகள் மூலம் நீதிமன்ற உத்தரவு கண்காணிக்கப்பட்டதாகவும், விதிகளை மீறியவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

ஒருபுறம் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்துத் தமிழக அரசு மேல்முறையீடு செய்யும் என்று சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் மாண்புமிகு திரு. ஷாஜஹான் அவர்கள் நேற்று முன்தினம்தான் ஊடகங்கள் வாயிலாக உறுதி அளித்தார். ஆனால், அதற்குள்ளாகவே தமிழக காவல்துறை நீதிமன்றத்தில் செயல்பாட்டு அறிக்கையைத் தாக்கல் செய்து, வழக்கை முடிவுக்குக் கொண்டு வந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

அரசாங்கத்தின் கொள்கை முடிவிற்கும், காவல்துறையின் செயல்பாட்டிற்கும் இடையே எந்தவொரு ஒருங்கிணைப்பும் இல்லையா? அல்லது உரிய நேரத்தில் மேல்முறையீடு செய்யாமல், சிறுபான்மையின மக்களை ஏமாற்றுவதற்காகவே அமைச்சர் அவ்வாறு வெற்று அறிக்கை விட்டாரா? என்கிற பலத்த கேள்வி தற்போது எழுகிறது.

ஒரு ஜனநாயக மற்றும் மக்கள் நல அரசின் முதன்மைக் கடமை என்பது, இந்திய அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதாகும். குறிப்பாக, அரசமைப்புச் சட்டப் பிரிவு 25 வழங்கியுள்ள மத சுதந்திரம் மற்றும் குடிமக்களின் உணவு உரிமைகளைப் பாதுகாப்பதில் தற்போதைய அரசு அசாத்திய வேகத்துடன் செயல்பட்டிருக்க வேண்டும். போதிய உள்கட்டமைப்புடன் கூடிய இறைச்சிக் கூடங்கள் தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் இல்லாத சூழலில், பல நூற்றாண்டுகளாக நடைபெறும் குர்பானி பலியிடலுக்கு எதிரான இத்தகைய உத்தரவு மக்களின் இயல்பு வாழ்வையும், மத வழிபாட்டுச் சுதந்திரத்தையும் பெருமளவில் பாதிக்கும் என்பதை அரசு நீதிமன்றத்திற்குச் சட்ட ரீதியாக விளக்கத் தவறிவிட்டது என்றே கருத வேண்டியுள்ளது.

மேலும், இந்த விவகாரம் ஏதோ ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு அல்லது பக்ரீத் பண்டிகைக்கு மட்டும் எதிரானது அல்ல. தமிழகத்தில் தொன்றுதொட்டு வாழும் பல்வேறு சமூக மக்களிடமும் நிலவி வரும் 'விலங்கு பலியிடுதல்' மற்றும் 'நேர்த்திக்கடன் செலுத்துதல்' என்ற வாழ்வியல் மற்றும் வழிபாட்டு நம்பிக்கை சார்ந்தது என்பதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.

கடந்த காலங்களில், முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களின் ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட 'விலங்கு பலியிடுதல் தடைச் சட்டம்', மக்களின் கடுமையான ஜனநாயக ரீதியான எதிர்ப்பு காரணமாகப் பின்னர் திரும்பப் பெறப்பட்டது. தற்போதைய நீதிமன்ற உத்தரவை அரசு கையாண்ட விதத்தைப் பார்க்கும்போது, அதே போன்றதொரு தடைச் சட்டம் மறைமுகமாகத் தமிழகத்தில் திணிக்கப்படுகிறதோ என்ற அச்சம் மக்களிடையே எழுந்துள்ளது.

எனவே, தமிழக அரசு இந்த விவகாரத்தில் மிகுந்த அக்கறையுடனும் பொறுப்புடனும் செயல்பட்டு, சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து உடனடியாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும். அதோடு, நீதிமன்ற நடைமுறைகளுக்கு உட்பட்டு, மக்களின் பாரம்பரிய மத மற்றும் உணவு உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில், தேவையான சட்டப்பூர்வ திருத்தங்களையோ அல்லது புதிய அரசாணையையோ தமிழக அரசு உடனடியாகப் பிறப்பிக்க வேண்டும். சிறுபான்மையினர் மற்றும் ஒடுக்கப்பட்ட சமூகங்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, அவர்களின் உரிமைகளை நிலைநாட்ட இந்த அரசு தார்மீகப் பொறுப்பேற்று அடுத்தகட்ட சட்டப் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு எஸ்டிபிஐ கட்சியின் மாநில பொதுச்செயலாளர் அகமது நவவி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

72% விசாரணைக் கைதிகள்:இந்திய நீதித்துறையில் ஒரு நெருக்கடி!இந்தியாவின் சமீபத்திய சிறை புள்ளிவிவர அறிக்கை  (Prison Statist...
02/06/2026

72% விசாரணைக் கைதிகள்:
இந்திய நீதித்துறையில் ஒரு நெருக்கடி!

இந்தியாவின் சமீபத்திய சிறை புள்ளிவிவர அறிக்கை (Prison Statistics India report), நம் நாட்டு சிறைத்துறையில் இருக்கும் கடுமையான நெருக்கடியை மீண்டும் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. நாடு முழுவதும் உள்ள சிறைகள் தங்களின் கொள்ளளவை மீறி கைதிகளை அடைத்து வைத்திருப்பது பெரும் கவலையளிக்கிறது. அதைவிட முக்கியமாக, சிறையில் இருக்கும் பெரும்பாலான கைதிகள் நீதிமன்றத்தால் இன்னும் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்படாத வெறும் விசாரணைக்கைதிகள் (undertrials) ஆவர். 2024-ஆம் ஆண்டு கணக்கின்படி, இந்திய சிறைகளின் கொள்ளளவு 112.7% ஆக உயர்ந்துள்ளதுடன், சிறையில் இருக்கும் மொத்த கைதிகளில் 72.6% பேர் விசாரணைக் கைதிகளாகவே உள்ளனர் என்பதை அந்த அறிக்கை காட்டுகிறது.

இந்தச் சூழ்நிலை வெறும் நிர்வாக குறைபாடு மட்டுமல்ல; இது மனித கண்ணியம், அரசியலமைப்பு உரிமைகள் மற்றும் நீதியின் அடிப்படைக் கோட்பாடுகளுக்கே விடுக்கப்பட்டுள்ள கடுமையான சவாலாகும். சிறைகளில் உள்ள அதிகப்படியான நெருக்கடி, விசாரணை என்ற பெயரில் கைதிகள் நீண்ட காலம் சிறையிலேயே முடக்கப்படுவது, போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாமை மற்றும் கடுமையான பணியாளர் பற்றாக்குறை ஆகிய அனைத்தும், நீதித்துறையிலும் சிறைத்துறையிலும் உடனடியாக விரிவான சீர்திருத்தங்கள் தேவை என்பதை உணர்த்துகின்றன. நீதி தாமதிக்கப்படுவது, அது மறுக்கப்படுவதற்குச் சமம் என்று 'யங் டெமாக்ரட்ஸ்' (Young Democrats) நம்புகிறது.

பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் பின்தங்கிய பின்னணியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான எளிய மக்கள், தங்களின் விசாரணை எப்போது முடியும் என்று தெரியாமல் சிறைகளில் தொடர்ந்து வாடுகின்றனர். இந்த நிலையை மாற்ற மத்திய மற்றும் மாநில அரசுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.

ஏழை மக்களுக்கான இலவச சட்ட உதவி திட்டங்களை வலுப்படுத்தவும், நீதிமன்ற தாமதங்களைக் குறைக்கவும், சிறைத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பவும், சிறை வசதிகள் மற்றும் கைதிகளுக்கான மறுவாழ்வு மையங்களை மேம்படுத்தவும் அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஒரு ஜனநாயக சமூகம், அது அதிகாரமிக்கவர்களை எவ்வாறு நடத்துகிறது என்பதை வைத்து மட்டுமல்ல, அதன் காவலில் உள்ளவர்களை எவ்வாறு நடத்துகிறது என்பதை வைத்தும் மதிப்பிடப்பட வேண்டும். இந்தியாவின் சிறைகள் தொடர்ந்து அதிக நெருக்கடியுடன் இருக்கும்போதும், ஆயிரக்கணக்கான மக்கள் சரியான நேரத்தில் சட்ட நடைமுறைகளை அணுக முடியாமல் தவித்து வரும்போதும், இந்தியா நீதியை நிலைநிறுத்துவதாகக் கோர முடியாது.

-வழக்கறிஞர் ஹஸ்ஸான் ஃபைஸி
தேசிய ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர் - யங் டெமாக்ரட்ஸ்

MK Faizy, National President of the Social Democratic Party of India, inaugurates the Leaders Conclave held at Ahmedabad...
02/06/2026

MK Faizy, National President of the Social Democratic Party of India, inaugurates the Leaders Conclave held at Ahmedabad, Gujarat.

காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட முயலும் கர்நாடக அரசைக் கண்டித்து, மதிமுக பொதுச்செயலாளர் திரு. வைகோ அவர்கள் தலைமையில...
02/06/2026

காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட முயலும் கர்நாடக அரசைக் கண்டித்து, மதிமுக பொதுச்செயலாளர் திரு. வைகோ அவர்கள் தலைமையில் இன்று சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் SDPI கட்சியின் மாநிலப் பொதுச்செயலாளர் வழக்கறிஞர் ஏ.கே. கரீம் அவர்கள் கலந்துகொண்டு, "தமிழகத்தின் வாழ்வாதார உரிமைக்காக SDPI என்றென்றும் சமரசமின்றி களத்தில் நிற்கும்" என கண்டன உரையாற்றினார்.

இப்போராட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். SDPI கட்சியின் மத்திய சென்னை மாவட்டத் துணைத்தலைவர் எஸ்.வி. ராஜா, மாவட்டச் செயலாளர் ஜுனைத் அன்சாரி, வடசென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர்கள் அப்துல் ரகுமான், அசாருதீன் உள்ளிட்ட நிர்வாகிகளும் திரளாகப் பங்கேற்றனர்.

"யார் அந்த மேலிடம்?" -தமிழ்நாடு அரசுக்கு SDPI மாநில தலைவர் முகம்மது முபாரக் கேள்வி  |   |
02/06/2026

"யார் அந்த மேலிடம்?" -தமிழ்நாடு அரசுக்கு SDPI மாநில தலைவர் முகம்மது முபாரக் கேள்வி

| |

தஞ்சையில் பயிர்க்கடன்களை முழுமையாக ரத்து செய்ய வலியுறுத்தி ஜனநாயக வழியில் போராடிய விவசாயிகள் மீதான காவல்துறை அத்துமீறல் ...
01/06/2026

தஞ்சையில் பயிர்க்கடன்களை முழுமையாக ரத்து செய்ய வலியுறுத்தி ஜனநாயக வழியில் போராடிய விவசாயிகள் மீதான காவல்துறை அத்துமீறல் கண்டிக்கத்தக்கது! - எஸ்டிபிஐ

இது தொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில செயலாளர் பாஸ்டர் மார்க் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தஞ்சையில் தங்களின் வாழ்வாதார உரிமைக்காகவும், பயிர்க்கடன் தள்ளுபடி வாக்குறுதியை நிறைவேற்றக் கோரியும் ஜனநாயக வழியில் அமைதியான முறையில் போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது காவல்துறை மேற்கொண்ட அத்துமீறல்களும், கைது நடவடிக்கைகளும் கடும் கண்டனத்திற்குரியவை.

தேர்தல் களத்தில், "விவசாயிகளின் அனைத்து பயிர்க்கடன்களும் முழுமையாக ரத்து செய்யப்படும்" என வாக்குறுதி அளித்துவிட்டு, ஆட்சிக்கட்டிலில் அமர்ந்த பிறகு ஒட்டுமொத்த விவசாயிகளையும் ஏமாற்றும் வகையில் அரசு கடன் தள்ளுபடி அறிவிப்பை வெளியிட்டிருப்பது ஏற்புடையதல்ல.

விவசாயிகளைத் தரம் பிரித்து, விகிதாச்சார அடிப்படையில் கடன் தள்ளுபடி செய்திருப்பது ஒட்டுமொத்த விவசாய சமூகத்தையும் ஏமாற்றும் செயலாகும். 50 ஆயிரம் ரூபாய் வரை கடன் பெற்ற குறு விவசாயிகளுக்கு மட்டுமே முழுமையான தள்ளுபடி என்றும், அதற்கு மேல் கடன் பெற்றவர்களுக்கு விகிதாச்சார முறை என்றும் அரசு அறிவித்திருப்பதை விவசாயிகள் ஏற்கவில்லை. தேர்தல் வாக்குறுதியின்படி அனைத்துக் கடன்களையும் முழுமையாக ரத்து செய்திட வேண்டும் என வலியுறுத்தி தமிழகம் முழுவதும் விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

ஜனநாயக ரீதியில் போராடும் விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளுக்குச் செவிசாய்க்காமல், காவல்துறையைக் கொண்டு அவர்களின் குரலை ஒடுக்க நினைப்பது ஒரு மக்கள் நல அரசுக்கு அழகல்ல.

எனவே, நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி அறவழியில் போராடும் விவசாயிகள் மீதான அடக்குமுறை நடவடிக்கைகளைத் தமிழ்நாடு அரசு உடனடியாகக் கைவிட வேண்டும். மேலும், தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதியை எவ்வித நிபந்தனையுமின்றி நிறைவேற்றும் வகையில், அனைத்து விவசாயிகளின் பயிர்க்கடன்களையும் உடனடியாக, முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

01/06/2026

புதுக்கோட்டையில் சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தும் ஆவணப்படத் திரையிடலைத் தடுத்த காவல்துறை நடவடிக்கை கண்டனத்திற்குரியது!


புதுக்கோட்டையில் சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தும் 'திருப்பரங்குன்றம் ஃபைல்ஸ்' ஆவணப்படத் திரையிடலை, "மேலிடத்து உத்தரவு" என்ற ஒற்றை வார்த்தையைக் கூறி காவல்துறை தடுத்து நிறுத்தியுள்ளதற்கு, எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் எனது கடும் கண்டனங்களைப் பதிவு செய்கிறேன்.

மக்களிடையே ஒற்றுமையையும் மத நல்லிணக்கத்தையும் வளர்க்கும் நோக்கில், ஊடகவியலாளர்களால் மிக நேர்த்தியாக உருவாக்கப்பட்டு, ஏற்கனவே இணையதளத்தில் பல்லாயிரக்கணக்கான மக்களால் பார்க்கப்பட்ட ஒரு படைப்பைத் திரையிடக் கூடாது என காவல்துறை முட்டுக்கட்டை போட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

தனியார் அரங்குகளில் முறையான அனுமதியோடு நடத்தப்படும் ஒரு நிகழ்வை, எந்தவித எழுத்துப்பூர்வமான காரணமும் இன்றி, அதிகார அத்துமீறல் மூலம் தடுத்து நிறுத்துவது ஜனநாயகத்திற்கு எதிரானது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளான பேச்சுரிமை, கருத்துரிமை மற்றும் மதச்சார்பின்மையைப் பாதுகாக்கும் கடமை ஆகியவற்றைச் சிதைக்கும் நோக்கில் காவல்துறையின் இந்த நடவடிக்கை அமைந்துள்ளது.

ஏற்கனவே பலமுறை எவ்விதப் புகாருமின்றி அமைதியாகத் திரையிடப்பட்ட ஓர் ஆவணப்படத்திற்கு, தற்போது திடீரெனத் தடை விதிப்பதன் பின்னணியில் இருக்கும் அந்த "மேலிடம்" யார் என்பதைத் தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும். நல்லிணக்கத்தைப் பேசும் படைப்புகளுக்கே இந்நிலை என்றால், தமிழகத்தில் கருத்துரிமையின் நிலை என்ன என்ற கேள்வி எழுகிறது.

ஜனநாயக விரோதமான இதுபோன்ற காவல்துறை நடவடிக்கைகளை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே, கருத்துரிமையைப் பறிக்கும் வகையில் செயல்பட்ட காவல்துறை அதிகாரிகள் மீது தமிழக அரசு உரிய விசாரணை நடத்த வேண்டும்; இதுபோன்ற நிகழ்வுகள் மீண்டும் தொடராமல் இருப்பதை அரசு உடனடியாக உறுதி செய்ய வேண்டும் என எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

-முகம்மது முபாரக்,
தலைவர், எஸ்டிபிஐ கட்சி தமிழ்நாடு.

சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவக் கல்வி - அரசு மருத்துவர்களுக்கான 50% உள் இடஒதுக்கீடு பறிபோகும் ஆபத்து!தமிழகத்தின் உரிமையை...
01/06/2026

சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவக் கல்வி - அரசு மருத்துவர்களுக்கான 50% உள் இடஒதுக்கீடு பறிபோகும் ஆபத்து!

தமிழகத்தின் உரிமையையும், ஏழை மக்களின் பொது சுகாதாரத்தையும் காக்க உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வீரியமாகப் போராட எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தல்!

இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில துணைத் தலைவர் அச.உமர் பாரூக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள் வெறும் கட்டிடங்கள் அல்ல; அவை பல கோடி ஏழை, எளிய மக்களின் உயிரைக் காக்கும் உன்னத இடங்கள் ஆகும். இருதய அறுவை சிகிச்சை, நரம்பியல், சிறுநீரகம், குழந்தை மருத்துவ அறுவை சிகிச்சை போன்ற மிக முக்கியமான, உயர்தர மருத்துவப் படிப்புகளில் (Super Speciality), தமிழக அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்களுக்கென 50% உள் இடஒதுக்கீடு நடைமுறையில் உள்ளது. ஆறு ஆண்டுகளுக்கு முன்பு உச்ச நீதிமன்றத்தில் நீண்ட சட்டப் போராட்டம் நடத்திப் பெற்ற இந்த உரிமை, இன்று தமிழக அரசின் மெத்தனப்போக்கால் பறிபோகும் ஆபத்தான நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இந்த ஆண்டு தமிழக அரசு மருத்துவர்களுக்காக ஒதுக்கப்பட்ட 215 இடங்களில், கடுமையான தகுதி மதிப்பெண் (Cut-off) நிபந்தனைகளால் தற்போது வரை 74 இடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன. மீதமுள்ள காலியிடங்களை ஒன்றிய அரசின் ‘அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு’ (All India Quota) தாரை வார்ப்பதற்கான வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகின்றன.

வழக்கமாக இது போன்ற சூழல்களில் தகுதி மதிப்பெண்ணைக் குறைத்து, முதலில் தமிழக மருத்துவர்களைக் கொண்டுதான் இந்த இடங்களை நிரப்ப வேண்டும். ஆனால், தமிழக அரசின் பலவீனமான வாதத்தாலும், தவறான அணுகுமுறையாலும் நமது மாநில இடங்கள் வெளிமாநிலத்தவருக்குச் செல்லும் அவல நிலை உருவாகியுள்ளது.

இந்தக் காலி இடங்களை அகில இந்திய ஒதுக்கீட்டிற்குத் தாரை வார்ப்பது ஏழை, எளிய பொதுமக்களைக் கடுமையாகப் பாதிக்கும். இதனால் அரசு மருத்துவமனைகளில் உயிர்காக்கும் உயர் சிகிச்சை நிபுணர்களின் எண்ணிக்கை பெருமளவு குறையும். இதன் விளைவாக, சிக்கலான மற்றும் உயிருக்கு ஆபத்தான நோய்களுக்கான சிகிச்சைகளுக்கு ஏழை நோயாளிகள் தங்களின் வாழ்நாள் சேமிப்பை இழந்து, தனியார் மருத்துவமனைகளை நாட வேண்டிய கட்டாயம் ஏற்படும். இது தமிழக பொது சுகாதாரத் துறையையே ஒட்டுமொத்தமாக முடக்கிவிடும் அபாயம் உள்ளது.

அகில இந்திய ஒதுக்கீட்டில் ஒன்றிய அரசு தகுதி மதிப்பெண்களைக் குறைக்கும் போதெல்லாம், அதே சலுகையைத் தமிழக அரசு மருத்துவர்களுக்கும் நீட்டித்து, காலி இடங்களை நமது மாநில மருத்துவர்களுக்கே வழங்க வேண்டும். கடந்த காலங்களைப் போல உச்ச நீதிமன்றத்தில் வலுவான, வீரியமிக்க சட்டப் போராட்டத்தை நடத்தி தமிழகத்தின் உரிமையையும், ஏழை மக்களின் பொது சுகாதாரத்தையும் தமிழக அரசு உடனே பாதுகாக்க வேண்டும்.

ஆகவே, தமிழக மருத்துவர்களின் உரிமையையும், ஏழை எளிய மக்களின் இலவச உயர் சிகிச்சைக்கான உரிமையையும் நிலைநாட்ட, சட்டப் போராட்டம் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளையும் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் என எஸ்டிபிஐ கட்சி சார்பாக தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அன்பிற்கினிய சகோதரரும் சமூக ஊடகச் செயல்பாட்டாளருமான ஜனாப் குளச்சல் அஸீம் அவர்களின் இல்லத் திருமண விழாவில், எஸ்டிபிஐ (SDP...
31/05/2026

அன்பிற்கினிய சகோதரரும் சமூக ஊடகச் செயல்பாட்டாளருமான ஜனாப் குளச்சல் அஸீம் அவர்களின் இல்லத் திருமண விழாவில், எஸ்டிபிஐ (SDPI) கட்சியின் மாவட்டத் தலைவர் ஏ. சுல்பிக்கர் அலி அவர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். இத்திருமண விழாவில் எஸ்டிபிஐ கட்சியின் மாவட்டச் செயலாளர் நாஞ்சில் செய்யது அலி அவர்களும் உடனிருந்தார்.

-எஸ் டி பி ஐ கட்சி, கன்னியாகுமரி மாவட்டம்

UNMASK THE MUNDRA CO***NE KINGPINSThe seizure of approximately 115 kilograms of co***ne worth around Rs 1,150 crore near...
31/05/2026

UNMASK THE MUNDRA CO***NE KINGPINS

The seizure of approximately 115 kilograms of co***ne worth around Rs 1,150 crore near Mundra Port in Gujarat is deeply alarming and raises serious questions about the country's security and surveillance systems. SDPI Gujarat demands a fair, transparent, and high level investigation into the case. The public has a right to know how such a large quantity of narcotics entered the country, who is behind this illegal trade, and under whose protection these networks are operating.

It is unfortunate that while ordinary youth and poor people are often implicated swiftly in minor cases, the identities of major players involved in drug trafficking worth thousands of crores frequently remain undisclosed. SDPI Gujarat demands the identification of the kingpins and the entire network behind this racket, strict legal action against all those involved, and stronger measures to protect the youth from drug addiction. Such crimes must be addressed firmly, impartially, and without political influence.

M***i Abdullah
State President
SDPI Gujarat

Address

Nagercoil

Alerts

Be the first to know and let us send you an email when SDPI Kanyakumari District posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to SDPI Kanyakumari District:

Share