05/09/2026
இரங்கல் செய்தி..!
கன்னியாகுமரி மாவட்டம் SDPI மகளிரணி (WIM) மாவட்டத் தலைவரும், நெல்லை மண்டல SDPI மகளிரணி (WIM) IT Wing தலைவருமான சகோதரி றம்லத் ஷிஹாப் அவர்களின் அன்புத் தந்தையும், SDPI வேளாண் அணியின் மாவட்டத் தலைவர் சிகாப்தீன் அவர்களின் மாமனாருமாகிய நூகுக்கண் (76) அவர்கள் இன்று இறைவனடி சேர்ந்த செய்தி அறிந்து மிகுந்த வேதனையடைகிறேன்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
எல்லாம் வல்ல இறைவன் அன்னாரின் பிழைகளைப் பொறுத்து, அவருக்கு ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயரிய சொர்க்கப் பதவியை அளித்தருள வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்.
மேலும், அவரது பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் இப்பேரிழப்பைத் தாங்கும் ஸப்ரன் ஜமீலா எனும் அழகிய பொறுமையை வழங்க இறைவனிடம் வேண்டுகிறேன்.
-A. சுல்பிக்கர் அலி,
மாவட்ட தலைவர், கன்னியாகுமரி மாவட்டம், SDPI கட்சி