நமது பாதை கிராமத்தின் வளர்ச்சி

  • Home
  • India
  • Nannilam
  • நமது பாதை கிராமத்தின் வளர்ச்சி

நமது பாதை கிராமத்தின் வளர்ச்சி Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from நமது பாதை கிராமத்தின் வளர்ச்சி, Social service, Nannilam.

🚨 காப்பீட்டு அட்டை இல்லாவிட்டாலும் சிகிச்சை மறுக்க முடியாது – மருத்துவம் மக்களின் உரிமை!தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில...
15/07/2026

🚨 காப்பீட்டு அட்டை இல்லாவிட்டாலும் சிகிச்சை மறுக்க முடியாது – மருத்துவம் மக்களின் உரிமை!

தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் காப்பீட்டு அட்டை (CMCHIS Card) இல்லாததைக் காரணமாகக் கொண்டு எந்த நோயாளிக்கும் சிகிச்சை மறுக்கக் கூடாது என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் ஆருண்ராஜ் வலியுறுத்தியுள்ளார்.

மருத்துவம் என்பது ஒவ்வொரு குடிமகனின் அடிப்படை உரிமை என்பதால், அவசர மற்றும் அத்தியாவசிய சிகிச்சைகள் எந்த சூழ்நிலையிலும் மறுக்கப்படக் கூடாது என்று அவர் தெரிவித்தார்.

அதேபோல், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை வழங்குவதற்காக யாரேனும் பணம் கேட்டால், பொதுமக்கள் 104 என்ற மருத்துவ உதவி எண்ணில் 10 நாட்களுக்குள் புகார் அளிக்கலாம் என்றும், அத்தகைய புகார்களின் மீது உடனடி விசாரணை நடத்தி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் உறுதியளித்தார்.

மேலும், நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம், கழிவறை பராமரிப்பு, கூடுதல் வார்டு வசதிகள், அடிப்படை மருத்துவ உள்கட்டமைப்பு உள்ளிட்ட அனைத்து சேவைகளும் மேம்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

முக்கிய அம்சங்கள்:

✅ காப்பீட்டு அட்டை இல்லாவிட்டாலும் சிகிச்சை மறுக்கக் கூடாது.

✅ மருத்துவம் என்பது மக்களின் அடிப்படை உரிமை.

✅ அரசு மருத்துவமனையில் பணம் கேட்டால் 104-ல் 10 நாட்களுக்குள் புகார் அளிக்கலாம்.

✅ புகார்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.

✅ நோயாளிகளுக்கான உணவு, கழிவறை மற்றும் வார்டு வசதிகள் மேம்படுத்தப்படும்.

"எழுத்துத் தேர்வு இல்லாமல் நேரடி நியமனம்" என்று பரப்பப்படும் TANTRANSCO ஆட்சேர்ப்பு குறித்த இந்த அறிவிப்பு முற்றிலும் போ...
17/06/2026

"எழுத்துத் தேர்வு இல்லாமல் நேரடி நியமனம்" என்று பரப்பப்படும் TANTRANSCO ஆட்சேர்ப்பு குறித்த இந்த அறிவிப்பு முற்றிலும் போலியானது மற்றும் மோசடியானது ஆகும்.

இத்தகைய எந்தவொரு விளம்பரத்தையும் TANTRANSCO வெளியிடவில்லை. தகுதியான மற்றும் உண்மையான வேலைவாய்ப்பு அறிவிப்புகள் அனைத்தும் எங்களது அதிகாரப்பூர்வ இணையதளமான www.tnpdcl.org பக்கத்தில் மட்டுமே வெளியிடப்படும்.

பொதுமக்கள் யாரும் இதுபோன்ற போலி வேலைவாய்ப்பு அறிவிப்புகளை நம்பி ஏமாறவோ அல்லது பணம் செலுத்தவோ வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

சிறப்பு விரைவு ரயில்சென்னை எழும்பூர் செங்கோட்டை தாம்பரம் இடையே வாரமிருமுறை சிறப்பு விரைவு ரயில் விழுப்புரம் மயிலாடுதுறை ...
17/06/2026

சிறப்பு விரைவு ரயில்

சென்னை எழும்பூர் செங்கோட்டை தாம்பரம் இடையே வாரமிருமுறை சிறப்பு விரைவு ரயில் விழுப்புரம் மயிலாடுதுறை திருவாரூர் காரைக்குடி மானாமதுரை விருதுநகர் தென்காசி வழியாக

வண்டி எண் 06183 சென்னை எழும்பூர் செங்கோட்டை சிறப்பு விரைவு ரயில் எழும்பூரில் இருந்து இம்மாதம் 19,20,26,27 தேதிகளில் மட்டும் இரவு 7.00 மணி

வண்டி எண் 06184 செங்கோட்டை தாம்பரம் சிறப்பு விரைவு ரயில் செங்கோட்டையில் இருந்து 20,21,27,28 தேதிகளில் மட்டும் மாலை 5.30 மணி

நிற்கும் இடங்கள் :

தாம்பரம்
செங்கல்பட்டு
விழுப்புரம்
திருப்பாதிரிப்புலியூர்
சிதம்பரம்
மயிலாடுதுறை
திருவாரூர்
திருத்துறைப்பூண்டி
முத்துப்பேட்டை
பட்டுக்கோட்டை
பேராவூரணி
அறந்தாங்கி
காரைக்குடி
சிவகங்கை
அருப்புக்கோட்டை
விருதுநகர்
சிவகாசி
திருவில்லிபுத்தூர்
ராஜபாளையம்
சங்கரன்கோவில்
கடையநல்லூர்
தென்காசி

கூட்டுறவு வங்கிகளின் மூலம் ரூ.75,000/- வரை பயிர்க்கடன் பெற்ற குறு, சிறு மற்றும் இதர பெரு விவசாயிகளுக்கு 100 சதவீதம் முழு...
16/06/2026

கூட்டுறவு வங்கிகளின் மூலம் ரூ.75,000/- வரை பயிர்க்கடன் பெற்ற குறு, சிறு மற்றும் இதர பெரு விவசாயிகளுக்கு 100 சதவீதம் முழுமையாக பயிர்க்கடன் தள்ளுபடி செய்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்கள் அறிவிப்பு

📢⚖️ போலி ஆவணங்கள் மூலம் பதிவு செய்யப்பட்ட பத்திரங்களை பதிவுச் சட்டம், 1908 – பிரிவு 83 (Section 83 of the Registration A...
14/06/2026

📢⚖️ போலி ஆவணங்கள் மூலம் பதிவு செய்யப்பட்ட பத்திரங்களை பதிவுச் சட்டம், 1908 – பிரிவு 83 (Section 83 of the Registration Act)-ன் கீழ் முழுமையான விசாரணை நடத்த மாவட்ட பதிவாளருக்கு அதிகாரம் உள்ளது – மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு!

போலி ஆவணங்கள், உண்மைகளை மறைத்தல் மற்றும் மோசடி மூலம் பதிவு செய்யப்பட்ட செட்டில்மென்ட் பத்திரம், திருத்தப் பத்திரம் மற்றும் விடுவிப்பு பத்திரத்தை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், மாவட்ட பதிவாளர் சட்டப்படி விசாரணை நடத்தி முடிவு எடுக்க வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

W.P.(MD) No.19918 of 2025
N. Muhammed Ashfaq Vs. District Registrar & Others
தீர்ப்பு நாள்: 22.07.2025

📝வழக்கின் சுருக்கம்:

மனுதாரர் முகமது அஷ்பக், எதிர்மனுதாரர்கள் 3 முதல் 5 வரை போலி ஆவணங்கள் மற்றும் உண்மைகளை மறைத்து,

✅ Gift Settlement Deed – ஆவண எண் 210/2024
✅ Amendment Deed – ஆவண எண் 275/2024
✅ Release Deed – ஆவண எண் 2177/2024

ஆகிய பத்திரங்களை பதிவு செய்துள்ளதாக குற்றம்சாட்டி, அவற்றை ரத்து செய்ய மாவட்ட பதிவாளர் மற்றும் சார்பதிவாளருக்கு மனு அளித்திருந்தார். அதன்பேரில் நடவடிக்கை எடுக்காததால் உயர்நீதிமன்றத்தை அணுகினார்.

🔥 உயர்நீதிமன்றத்தின் முக்கிய உத்தரவு:

மாண்புமிகு நீதிபதி S. ஸ்ரீமதி அவர்கள்,

👉 மாவட்ட பதிவாளர், மனுதாரர் மற்றும் எதிர்மனுதாரர்கள் 3 முதல் 5 வரை அனைவருக்கும் நோட்டீஸ் வழங்க வேண்டும்.

👉 பதிவுச் சட்டம், 1908 – பிரிவு 83 (Section 83 of the Registration Act)-ன் கீழ் முழுமையான விசாரணை நடத்த வேண்டும்.

👉 விசாரணை முடிவில் தகுந்த உத்தரவை 8 வாரங்களுக்குள் பிறப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

⚖️ சட்ட முக்கியத்துவம்:

📌 போலி ஆவணங்கள், ஆள்மாறாட்டம், கள்ள கையெழுத்து அல்லது மோசடி மூலம் பதிவு செய்யப்பட்ட பத்திரங்கள் தொடர்பாக பாதிக்கப்பட்ட நபர்கள் மாவட்ட பதிவாளரிடம் புகார் அளிக்கலாம்.

📌 மாவட்ட பதிவாளர் விசாரணை நடத்த மறுக்க முடியாது.

📌 பதிவு செய்யப்பட்டதால் மட்டும் ஒரு ஆவணம் சட்டபூர்வமானதாகிவிடாது; மோசடி நிரூபிக்கப்பட்டால் பதிவு ரத்து செய்யும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படலாம்.

📌 பதிவு அலுவலகங்களில் நடைபெறும் மோசடி பதிவுகளுக்கு எதிராக பொதுமக்களுக்கு இந்த தீர்ப்பு முக்கிய பாதுகாப்பாக அமைகிறது.

1/6/2026 முதல் அரசு ஊழியர்கள் முக அடையாள (பயோ மெட்ரிக்)வருகைப் பதிவேடு  கட்டாயமாகிறது
30/05/2026

1/6/2026 முதல் அரசு ஊழியர்கள் முக அடையாள (பயோ மெட்ரிக்)வருகைப் பதிவேடு கட்டாயமாகிறது

16/05/2026
மே 2026 மாதத்திற்கான கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் விரைவில் வரவு வைக்கப்படும் - மாண்புமிகு தமி...
14/05/2026

மே 2026 மாதத்திற்கான கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் விரைவில் வரவு வைக்கப்படும் - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் உத்தரவு

இலவச சட்ட உதவி பயன்படுத்திக்கொள்ள வழிமுறைகள்இலவச சட்ட உதவிக்கு 15100ஆண்டுக்கு சுமார் 40 கோடி ரூபாய் செலவில் உங்களுக்கு  ...
29/04/2026

இலவச சட்ட உதவி பயன்படுத்திக்கொள்ள வழிமுறைகள்
இலவச சட்ட உதவிக்கு 15100

ஆண்டுக்கு சுமார் 40 கோடி ரூபாய் செலவில் உங்களுக்கு இலவச சட்ட உதவியை இந்திய நீதித்துறை செய்கிறது பயன்படுத்த எளிய வழி

° இலவச தொலைபேசி எண் 15100 அழைக்கவும்

° பதிவு செய்யப்பட்ட குரல் ஒலிக்கும்

° காத்திருக்க வேண்டும் அல்லது

° அவசர உதவி என்றால் எமர்ஜென்சி என்று சொல்லுங்கள் அல்லது எண் 1 டைப் செய்ய வேண்டும்.

° காத்திருந்த நிலையில் உங்களுக்கு மீண்டும் பதிவு செய்த குரல் கேட்கும்
தமிழில் தொடர எண் 1
மற்ற மொழி என்றால் எண் 2
டைப் செய்ய வேண்டும்.

° மொழி தேர்வு செய்த பிறகு
1
2
3
4

° என்று உங்களுக்கு என்ன வகையான உதவி தேவை என்று பட்டியல் சொல்லும் பத்து ரூபாய் இயக்கம்

° உங்களுக்கு தேவையான விருப்பம் தேர்வு செய்து டைப் செய்தால் உங்களுக்கு உதவி வழிக்காட்டுதல் கிடைக்கும். கூடுதலாக உங்களுக்கு வக்கீல் வைத்து கேஸ் நடத்தி தீர்ப்பு வரை இலவசமாக வாங்கி கொடுக்கிறது இந்திய நீதித்துறை.

உங்களுடைய கோரிக்கை பதிவு செய்யப்பட்டு எண் வழங்கப்படும் மீண்டும் உங்கள் கோரிக்கை எண் மூலம் உங்கள் கோரிக்கையின் தற்போதைய நிலையை நீங்கள் அறிந்து கொள்ள முடியும்.

உள்ளூர் பிரச்சினை முதல் உச்ச நீதிமன்ற உதவி வரை இலவச போனில் இலவச ஆலோசனை மட்டும் அல்லாமல் இலவச வக்கீல் வரை சட்ட உதவிகள் யாவும் உங்களுக்கு முழுக்க முழுக்க இலவசமாகவே கிடைக்கும்

அவசர உதவி என்றால் எமர்ஜென்சி என்று சொல்லுங்கள் அல்லது எண் 1 டைப் செய்த நிலையில் இணைப்பு துண்டிக்கப்பட்டு பின்னர் தேசிய சட்ட பணிகள் ஆணைக்குழுவின் சட்ட வல்லுநர்கள் உங்களை தொடர்புக் கொள்வார்கள் அநேகமாக ஒரிரு வேலை நாட்கள் ஆகலாம் அவசர தேவை என்பதால் ஒரு நாளில் உங்களை அவர்களே தொடர்புக் கொள்வார்கள். நீதிமன்ற விடுமுறை நாட்களில் காலதாமதம் ஏற்படும் ஆனால் நிச்சயமாக அழைப்பார்கள்.

அவசரம் உங்களுக்கு தான் அவர்களுக்கு இல்லை

உங்களுடைய சட்ட உதவி செய்ய நீதிமன்றம் மூலம் வழக்கு தாக்கல் செய்ய வேண்டும் என்றால் வழக்கறிஞர்கள் கட்டணத்தை தேசிய சட்ட பணிகள் ஆணைக்குழு ஏற்றுக் கொண்டு உங்களுக்கு வழக்கறிஞரை ஏற்பாடு செய்து கொடுப்பார்கள். உங்களுக்கு தான் இலவச சேவை உங்களுக்கு நியமனம் செய்யப்பட்ட வழக்கறிஞருக்கு உரிய கட்டணத்தை நீதி துறையே செலுத்தி விடுகிறது. உங்களுக்கும் லாபம் வக்கீலுக்கும் வருமானம்.

சமூக ஆர்வலர்கள் நிறைய பேர் நல்ல முறையில் பயன்பெற்று உள்ளார்கள்
தேசிய சட்ட பணிகள் ஆணைக்குழுவின் சட்ட வல்லுநர்களிடம் வம்படிக்காமல் சண்டை இழுக்காமல் உங்களை வெற்றி பெற வைக்க நீங்களும் பயன்படுத்தி கொள்ளலாம்.

என்னிடம் தொடர்புக் கொள்வதை தவிர்த்து 15100 பயன்படுத்தி உங்களுக்கு கிடைத்த அனுபவத்தை 9445675801 ல் வாட்ஸ் அப்பில் எனக்கு அனுப்பி வையுங்கள்.

ஆண்டுக்கு சுமார் 40 கோடி ரூபாய் செலவில் உங்கள் இலவச சட்ட உதவியை நீதித்துறை செய்கிறது அதை பயன்படுத்திக் கொள்ளலாம்.

1. உங்களிடம் பேச
2. ஆலோசனை பெற
3. சட்ட ஆலோசனை பெற
4. வழக்கு போட
5. வழக்கு எதிர் நடத்த
6. நீதிமன்றம் செல்ல
7. சமரசமாக தீர்வு காண
8. நீதிமன்றத்திற்கு வெளியே பைசல் செய்ய
9. கூடுதல் சட்ட உதவிகள்

பொது நலனுக்காக போராடிக்கொண்டிருக்கும் சமூக ஆர்வலர்களுக்கு வழிகாட்டியாக செயல்படும் எங்களை சொந்த பிரச்சினைகளுக்கு பத்து ரூபாய் இயக்கம் உதவி செய்யவதில்லை என்று திட்டுகின்ற நண்பர்கள் இந்த பயனுள்ள பாதுகாப்பான நல்ல தரமான இலவச சேவைகளை பயன்படுத்தி கொல்லாம்.

28/04/2026

Address

Nannilam
610105

Website

Alerts

Be the first to know and let us send you an email when நமது பாதை கிராமத்தின் வளர்ச்சி posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category