தமிழ் செம்படை கழகம்

தமிழ் செம்படை கழகம் செங்குந்தர்களின் அரசியல் புரட்சி

தமிழக அமைச்சரவையில் சமூக பிரதிநிதித்துவம் குறித்து வெளியாகியுள்ள இந்த பட்டியல், சமூக நீதி என்ற சொல்லின் உண்மையான அர்த்தம...
21/05/2026

தமிழக அமைச்சரவையில் சமூக பிரதிநிதித்துவம் குறித்து வெளியாகியுள்ள இந்த பட்டியல், சமூக நீதி என்ற சொல்லின் உண்மையான அர்த்தம் இன்று எவ்வளவு சீரழிக்கப்பட்டுள்ளது என்பதை வெளிப்படையாக காட்டுகிறது.

தமிழகத்தில் சுமார் 80 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தொகையுடன் வாழ்ந்து வரும் செங்குந்த கைக்கோள முதலியார் சமூகத்திற்கு, தற்போதைய ஆளும் தமிழக வெற்றிக்கழக அரசு அமைச்சரவையில் ஒரு இடம் கூட வழங்கப்படாதது மிகப்பெரிய அரசியல் அநீதியாகும்.

ஈரோடு மேற்கு சட்டமன்றத் தொகுதியில் மட்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட்ட நிலையில், அந்த வேட்பாளர் மக்களின் பேராதரவுடன் அமோக வெற்றி பெற்றும் கூட, அந்த சமூகத்திற்கு அமைச்சரவைப் பொறுப்பில் எந்த அங்கீகாரமும் வழங்கப்படவில்லை என்பது திட்டமிட்ட புறக்கணிப்பாகவே பார்க்கப்படுகிறது.

தமிழக சட்டசபை வரலாற்றில், செங்குந்த கைக்கோள முதலியார் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரும் இடம்பெறாத அமைச்சரவை என்ற அவப்பெயரை தற்போதைய அமைச்சரவை பெற்றுள்ளது.

இது வெறும் ஒரு சமூகத்தின் வேதனை அல்ல.
இது சமூக நீதி என்ற கொள்கைக்கே எதிரான செயலாகும்.

சமூக நீதி என்பது சில சமூகங்களுக்கு மட்டும் அதிகாரம் வழங்கப்படுவது அல்ல.
ஒவ்வொரு சமூகத்திற்கும் அதன் மக்கள் தொகை, பங்களிப்பு, வரலாறு, அரசியல் பங்கு ஆகியவற்றின் அடிப்படையில் உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்படுவதே உண்மையான சமூக நீதி.

“எண்ணிக்கை ஏற்ற இடஒதுக்கீடு” மற்றும் “எண்ணிக்கை ஏற்ற அரசியல் பிரதிநிதித்துவம்” என்பதே தமிழ்ச் சமூகத்தின் எதிர்கால அரசியல் திசையாக இருக்க வேண்டும்.

நெசவு, தொழில், வர்த்தகம், கல்வி, தேசபற்று, தமிழ் வளர்ச்சி, பொருளாதாரம் போன்ற பல துறைகளில் தமிழகத்திற்கு அளவிட முடியாத பங்களிப்பை வழங்கிய செங்குந்த கைக்கோள முதலியார் சமூகத்தை தொடர்ந்து அரசியல் அதிகாரத்தில் இருந்து விலக்குவது ஏற்றுக்கொள்ள முடியாதது.

ஒரு சமூகத்தின் வாக்குகள் மட்டும் தேவையாகி, அதிகாரப் பகிர்வில் அந்த சமூகத்தை மறந்து விடும் அரசியல் இனி நீடிக்க முடியாது.

தமிழ் செம்படைக் கழகம் தெளிவாக கூறுகிறது:

அரசியலில் பங்கேற்பு இல்லாமல் எந்த சமூகத்திற்கும் பாதுகாப்பில்லை.
அதிகாரத்தில் இடமில்லாமல் எந்த சமூகத்திற்கும் மரியாதை இல்லை.
அரசியல் விழிப்புணர்வே சமூகத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் சக்தியாகும்.

எனவே செங்குந்த கைக்கோள முதலியார் சமூக இளைஞர்கள், தொழிலதிபர்கள், கல்வியாளர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் இனி அரசியல் பிரதிநிதித்துவத்தின் அவசியத்தை உணர்ந்து ஒன்றுபட்டு செயல்பட வேண்டிய காலம் வந்துவிட்டது.

சமூகத்தை எண்ணிக்கையில் பயன்படுத்தி, அதிகாரத்தில் புறக்கணிக்கும் அரசியலுக்கு எதிராக ஜனநாயக ரீதியில் குரல் கொடுப்போம்.

எங்கள் சமூகத்திற்கு உரிய அரசியல் அங்கீகாரமும், அமைச்சரவை பிரதிநிதித்துவமும் கிடைக்கும் வரை தமிழ் செம்படைக் கழகத்தின் குரல் தொடர்ந்து ஒலித்துக்கொண்டே இருக்கும்.

முத்துவேல் ராஜா
நிறுவனத் தலைவர்
தமிழ் செம்படைக் கழகம்
095979 11062

நெசவாளர்களின் கைகள் நின்றுவிட்டால், தமிழரின் பாரம்பரியமும் மங்கிவிடும்.கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதார...
12/05/2026

நெசவாளர்களின் கைகள் நின்றுவிட்டால், தமிழரின் பாரம்பரியமும் மங்கிவிடும்.

கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இலவச மின்சாரம், உயர்ந்த ஓய்வூதியம், நூல் மானியம், வட்டி இல்லா கடன், அரசாங்க கொள்முதல் உள்ளிட்ட திட்டங்கள் விரிவுபடுத்தப்பட வேண்டும்.

நெசவாளர்களை பாதுகாப்பது என்பது ஒரு தொழிலை காப்பாற்றுவது மட்டும் அல்ல; தமிழரின் அடையாளத்தையும் பாரம்பரியத்தையும் பாதுகாப்பதே!

முத்துவேல் ராஜா
நிறுவனத் தலைவர்
தமிழ் செம்படைக் கழகம்

www.tamilredarmy.in

*ஆனந்த் மோகன் அவர்களுக்கு அமைச்சரவை வாய்ப்பு வழங்க வேண்டும்*புதிதாக பொறுப்பேற்க உள்ள தமிழக வெற்றி கழக அரசுக்கு *தமிழ் செ...
06/05/2026

*ஆனந்த் மோகன் அவர்களுக்கு அமைச்சரவை வாய்ப்பு வழங்க வேண்டும்*

புதிதாக பொறுப்பேற்க உள்ள தமிழக வெற்றி கழக அரசுக்கு *தமிழ் செம்படைக் கழகம்* சார்பாக பணிவான வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

*சமூக நீதி, சமச்சீர் பிரதிநிதித்துவம்* மற்றும் *ஒவ்வொரு சமூகத்திற்கும் உரிய இடம்* வழங்கும் உயர்ந்த கொள்கைகளை முன்னிறுத்தி உருவாகும் இந்த அரசில், அமைச்சரவை அமைப்பில் அவை முழுமையாக பிரதிபலிக்க வேண்டும் என்பது எங்களது பணிவான கோரிக்கையாகும்.

தமிழகத்தின் பெரும்பான்மை சமூகங்களில் ஒன்றான *செங்குந்த கைக்கோள முதலியார்* சமூகத்திற்கு, இத்தேர்தலில் *தமிழக வெற்றிக் கழகம்* சார்பில் ஒற்றை வாய்ப்பு வழங்கப்பட்டு, *ஈரோடு மேற்கு தொகுதியில் போட்டியிட்டு *முன்னாள் அமைச்சர் திரு முத்துச்சாமி* அவர்களை வீழ்த்தி மக்கள் நம்பிக்கையை பெற்றுத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரு கே.கே. ஆனந்த் மோகன் அவர்கள், அந்த சமூகத்தின் ஒரே சட்டமன்ற பிரதிநிதியாக விளங்குகிறார்.

அவரது இந்த வெற்றியும், *சமூகத்தின் எதிர்பார்ப்பும்* கருதி, அமைச்சரவை அமைப்பில் அவருக்கு தகுந்த மற்றும் முக்கியமான பொறுப்பு வழங்கப்படுவது சமூக நீதி நோக்கில் மிகவும் பொருத்தமானதாக இருக்கும் என்று எங்களது கழகம் வலியுறுத்துகிறது.

இதன் மூலம், அனைத்து சமூகங்களுக்கும் சமமான வாய்ப்பு வழங்கும் அரசின் அர்ப்பணிப்பு மேலும் வலுப்பெறும் என்பதில் எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது.

எனவே, *தமிழ் செம்படைக் கழகம்* சார்பாக, *திரு கே.கே. ஆனந்த் மோகன்* அவர்களுக்கு *அமைச்சரவையில் தகுந்த இடம்* வழங்கி சமூக நீதி நிலைநாட்டுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.

*முத்துவேல் ராஜா*
*நிறுவனத் தலைவர்*
*தமிழ் செம்படை கழகம்*

மாநில சுயாட்சி, மொழி உரிமை, சமூக நீதி — இவை வெறும் அரசியல் சொற்கள் அல்ல; தமிழ்நாட்டின் அடையாளம், அதன் அரசியல் மரபு, அதன்...
05/05/2026

மாநில சுயாட்சி, மொழி உரிமை, சமூக நீதி — இவை வெறும் அரசியல் சொற்கள் அல்ல; தமிழ்நாட்டின் அடையாளம், அதன் அரசியல் மரபு, அதன் எதிர்கால திசை. ஆனால், இந்த மூன்று உன்னதக் கொள்கைகளின் அர்த்தமும் அவசியமும் தெரியாத வேட்பாளர்களும், அவற்றின் முக்கியத்துவத்தை உணராத வாக்காளர்களும் உருவாக்கும் அரசியல் சூழல் இன்று உருவாகியுள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை.

2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் இதற்கே பிரதிபலிப்பு. பல ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த முக்கிய அரசியல் கட்சிகள் — குறிப்பாக திமுக, அதிமுக — இந்த அடிப்படை அரசியல் விழிப்புணர்வை மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடம் உருவாக்குவதில் தவறிவிட்டன. பாடப் புத்தகங்கள் வாயிலாகவும், சமூக அரசியல் கல்வி மூலம் முறைப்படுத்தியும் இந்த கொள்கைகளை வலியுறுத்த வேண்டிய கடமையை அவர்கள் புறக்கணித்தனர்.

இதன் விளைவாக, அரசியல் விழிப்புணர்வு குறைந்த ஒரு தலைமுறை உருவாகியுள்ளது. கொள்கை அடிப்படையிலான அரசியல் இல்லாமல், சின்னங்கள், பிரபலங்கள், மற்றும் உடனடி நலன்கள் மட்டுமே தீர்மானிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இது ஜனநாயகத்தின் தரத்தையே பாதிக்கும் ஒரு ஆபத்தான நிலை.

ஆகையால், 2026 தேர்தல் முடிவுகளுக்கான பொறுப்பு வெறும் வாக்காளர்களிடமே இல்லை; பல ஆண்டுகளாக ஆட்சி செய்த இரு பெரிய கட்சிகளும் இந்த நிலைக்கு சமமான பொறுப்பு ஏற்க வேண்டும். அவர்கள் தவறிய இடத்தில், புதிய அரசியல் இயக்கங்கள் விழிப்புணர்வை உருவாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

தமிழ் செம்படை கழகம் இந்த மூன்று அடிப்படை கொள்கைகளின் மீளுருவாக்கத்தையே தனது முதன்மை இலக்காகக் கொண்டு செயல்படும். அரசியல் என்பது அதிகாரத்திற்காக அல்ல; சமூக மாற்றத்திற்காக என்பதை மீண்டும் நினைவூட்டும் நேரம் இது.

நன்றி.

✊ மாமன்னர் திருமலை நாயக்கர் சிலை – வரவேற்பு |✊ 34 சுதந்திரப் போராட்ட தியாகிகள் – புறக்கணிப்பு ஏன்?கோவில்பட்டியில் மாமன்ன...
02/02/2026

✊ மாமன்னர் திருமலை நாயக்கர் சிலை – வரவேற்பு |
✊ 34 சுதந்திரப் போராட்ட தியாகிகள் – புறக்கணிப்பு ஏன்?
கோவில்பட்டியில் மாமன்னர் திருமலை நாயக்கர் அவர்களின் 443வது பிறந்தநாள் விழாவில்,
மாமன்னர் திருமலை நாயக்கருக்கு திருவுருவச் சிலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று
மாநில அமைச்சர் திருமதி கீதா ஜீவன் அவர்கள் உறுதி அளித்திருப்பது
உண்மையில் மகிழ்ச்சியளிக்கக் கூடிய செய்தியாகும்.
ஒரு சமூகத்தின் நீண்ட நாள் கோரிக்கையை,
ஒரு மாநில அமைச்சர் நேரடியாக செவி சாய்த்து,
“செய்து கொடுப்போம்” என்று உறுதி அளித்திருப்பதை
👉 தமிழ் செம்படைக் கழகம் மனமார வரவேற்கிறது.
ஆனால் இதே நேரத்தில் ஒரு முக்கியமான, வலுவான கேள்வியும் முன்வைக்கிறோம்.
1942 ஆம் ஆண்டு,
காந்தியடிகள் அறிவித்த “வெள்ளையனே வெளியேறு” போராட்டத்தில்,
தூத்துக்குடி மாவட்டம் – கடலையூர் கிராமத்தில்,
👉 குண்டடிப்பட்டு, சிறை சென்று, உயிர் தியாகம் செய்த
34 சுதந்திரப் போராட்ட வீரர்கள் உள்ளனர்.
👉 அந்த 34 பேரும் ஒரே ஊரைச் சேர்ந்தவர்கள்
👉 ஒரே போராட்டத்தில் உயிர் தியாகம் செய்தவர்கள்
👉 ஒரே சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள்
👉 செங்குந்த கைக்கோள முதலியார் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள்
இந்திய வரலாற்றில்,
ஒரே ஊரில் – ஒரே போராட்டத்தில் –
ஒரே சமுதாயத்தைச் சேர்ந்த 34 பேர் உயிர் தியாகம் செய்த நிகழ்வு
எங்கும் இல்லை.
1942 முதல் 2026 வரை – 84 ஆண்டுகள் கடந்தும் :
❌ அரசு சார்பில் நினைவகம் இல்லை
❌ மணிமண்டபம் இல்லை
❌ அதிகாரபூர்வ அங்கீகாரம் இல்லை
👉 இது மறதி அல்ல
👉 இது தற்செயல் அல்ல
👉 இது தொடர்ச்சியான புறக்கணிப்பு
அவர்கள் செங்குந்த கைக்கோள முதலியார் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால்தானா
இந்த வரலாறு இன்றுவரை அங்கீகரிக்கப்படவில்லை?
மாமன்னர் திருமலை நாயக்கருக்கு சிலை அமைப்பதாக
உறுதி அளித்தது போல,
👉 இந்த 34 சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கும்,
👉 கடலையூர் கிராமத்தில்,
👉 மணிமண்டபத்துடன் கூடிய நினைவகம் அமைக்க,
தேர்தலுக்கு முன் உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும்
என்று
👉 தமிழ் செம்படைக் கழகம் இன்னும் நம்புகிறது.
எங்கள் மக்களின் வரலாறும்
எங்கள் தியாகங்களும்
இனிமேல் புறக்கணிக்கப்படக் கூடாது.
எங்களுக்கான அதிகாரத்தை
நாங்களே கட்டியமைப்பதற்காக
எழுந்து நிற்கும் அரசியல் அமைப்புதான்
👉 தமிழ் செம்படைக் கழகம்.
✊ எங்கள் மக்களுக்காக
✊ எங்கள் வரலாற்றுக்காக
✊ எங்கள் உரிமைகளுக்காக
தமிழ் செம்படைக் கழகம் எப்போதும் களத்தில் நிற்கும்.
🔖 Hashtags
#தமிழ்செம்படைக்கழகம்

#திருமலைநாயக்கர்




#1942

#34தியாகிகள்
#செங்குந்தகைக்கோளமுதலியார்


🟥🟥🟥  அரசியல் அறிக்கை  🟥🟥🟥✊ **புறக்கணிப்புக்கு எதிரான அரசியல் –  செங்குந்தர் (செங்குந்த கைக்கோள முதலியார்) சமூகத்தின்  அங...
23/01/2026

🟥🟥🟥 அரசியல் அறிக்கை 🟥🟥🟥

✊ **புறக்கணிப்புக்கு எதிரான அரசியல் –
செங்குந்தர் (செங்குந்த கைக்கோள முதலியார்) சமூகத்தின்
அங்கீகாரப் போராட்டம்**

தமிழக அரசியல் களத்தில்,
சில சமுதாயங்கள் வெளிப்படையாக “வாக்கு வங்கி” எனப் பேசப்படுகின்றன.
அவர்களுக்காக கூட்டணிகள் அமைக்கப்படுகின்றன,
அவர்களுக்காக அமைச்சர்கள் உருவாக்கப்படுகின்றனர்,
அவர்களுக்காக சீட் கணக்குகள் போடப்படுகின்றன.

**ஆனால், தமிழகமெங்கும் பரவலாக வாழும்,
உழைப்பின் அடையாளமான,
வரலாற்று பெருமை கொண்ட
👉 செங்குந்தர் (செங்குந்த கைக்கோள முதலியார்) சமூகத்தை
👉 திமுகவும், அதிமுகவும்
ஒரு பொருட்டாக கூட கருதவில்லை என்பதே
கசப்பான ஆனால் மறுக்க முடியாத அரசியல் உண்மை.**

இது குற்றச்சாட்டல்ல.
👉 **இது அரசியல் நிஜம்.**

எந்த பெரிய கட்சியும்,
- செங்குந்தர் சமூக வாக்குகளை தனியாகக் கணக்கில் எடுத்ததாக,
- இந்த சமூகத்தின் அரசியல் பிரதிநிதித்துவம் குறித்து
வெளிப்படையான திட்டம் அறிவித்ததாக,
- கல்வி, வேலைவாய்ப்பு, அதிகாரப் பங்கீடு குறித்து
தனிப்பட்ட கவனம் செலுத்தியதாக,

**இதுவரை எந்த அதிகாரப்பூர்வ நடவடிக்கையையும்
எடுத்ததில்லை.**

**வாக்கு போடும் உரிமை மட்டும் இருக்கிறது –
ஆனால் அரசியல் அங்கீகாரம் இல்லை.
இதுவே தொடர்ச்சியான புறக்கணிப்பு.**

🔥 **இந்த புறக்கணிப்பிற்கான பதில்தான் –
தமிழ் செம்படைக் கழகம்.**

தமிழ் செம்படைக் கழகம்,
- யாரிடமும் சீட் கேட்க உருவான இயக்கமல்ல,
- யாரிடமும் சலுகை கேட்க உருவான அமைப்புமல்ல.

👉 **அரசியல் அங்கீகாரம் கேட்கும் இயக்கம்.**
👉 **சமூக மரியாதை கோரும் அரசியல் சக்தி.**

இனி,
செங்குந்தர் சமுதாயத்தை
“எங்கே போனாலும் வாக்களிக்கும் சமூகமாக”
யாரும் நினைக்கக் கூடாது.

**நாம் வாக்கு வங்கி அல்ல.
👉 நாம் ஒரு அரசியல் சக்தி.**

✊ **அதற்காகத்தான்,**
👉 புறக்கணிக்கப்பட்ட சமூகங்களின் குரலாக,
👉 செங்குந்தர் சமூகத்தின் பிரதிநிதியாக,
👉 அரசியல் ரீதியான நெருக்கடியை உருவாக்கும் சக்தியாக,

**தமிழ் செம்படைக் கழகம் களத்தில் நிற்கிறது.**

🚩 **அழைப்பு**

செங்குந்தர் சமூகத்தைச் சேர்ந்த
ஒவ்வொரு இளைஞரும்,
ஒவ்வொரு பெண்ணும்,
ஒவ்வொரு உழைப்பாளியும்,

👉 **ஒன்றிணையுங்கள்.**
👉 **தமிழ் செம்படைக் கழகத்துடன் உடன் நிற்குங்கள்.**
👉 **உங்கள் அரசியல் அங்கீகாரத்திற்காக குரல் கொடுங்கள்.**

இனி,
நாம் யாருடைய பின்தொடரும் வாக்கு அல்ல.
👉 **நாமே அரசியல் அதிகாரத்தை உருவாக்கும் சக்தி.**

✊ **தமிழ் செம்படைக் கழகம் –
செங்குந்தர் சமூகத்தின் அரசியல் குரல்!**








பாராட்டும் ஆதரவு உரைசெங்குந்த கைக்கோள முதலியார் சமூகத்திற்கு உரிமைசார்ந்ததாகவும், வரலாற்று அடையாளங்களுடன் தொடர்புடையதாகவ...
20/01/2026

பாராட்டும் ஆதரவு உரை
செங்குந்த கைக்கோள முதலியார் சமூகத்திற்கு உரிமைசார்ந்ததாகவும், வரலாற்று அடையாளங்களுடன் தொடர்புடையதாகவும் இருக்கும் திருத்தணியைச் சுற்றியுள்ள பல்வேறு சொத்துக்கள் மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை மீட்டு, அவற்றை சமுதாயத்தின் பெயரில் ஒப்படைக்கும் உயரிய முயற்சியில் உறுதியுடன் செயல்பட்டு வரும் கோத்திர வகையறாக்கள் மற்றும் ஏனைய மீட்பு குழுவினருக்கு தமிழ் செம்படைக் கழகம் தனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறது.
பல ஆண்டுகளாக புறக்கணிக்கப்பட்ட சமூக உரிமைகளை சட்டபூர்வமாகவும், அமைதியான முறையிலும் மீட்டெடுக்க வேண்டும் என்ற தெளிவான நோக்கத்துடன் முன்னெடுக்கப்படும் இந்த முயற்சி, செங்குந்த கைக்கோள முதலியார் சமுதாயத்தின் எதிர்கால அரசியல், சமூக, பொருளாதார வலிமைக்கு அடித்தளமாக அமையும் வரலாற்று செயல்பாடாகும்.
இந்த முக்கியமான சமூகப் பணியில் ஈடுபட்டுள்ள அனைத்து கோத்திர பிரதிநிதிகளுக்கும், மீட்பு குழுவினருக்கும், ஒருங்கிணைப்பாளர்களுக்கும் தமிழ் செம்படைக் கழகம் என்றும் உறுதுணையாக இருந்து செயல்படும் என்பதைத் தெளிவாக அறிவிக்கிறோம்.
குறிப்பாக,
தமிழ் செம்படைக் கழகத்தின் நிறுவனத் தலைவர்
முத்துவேல் ராஜா அவர்களின் தலைமையில்,
இந்த சமூக உரிமை மீட்பு முயற்சிகளுக்கு
✔️ அரசியல் ஆதரவு
✔️ சமூக ஆதரவு
✔️ சட்ட ரீதியான வழிகாட்டல்
✔️ பொதுமக்கள் விழிப்புணர்வு
அனைத்துவிதமான ஆதரவும் வழங்கப்படும் என்பதை உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்நிலையில் நடைபெறவுள்ள இந்த ஆலோசனைக் கூட்டம், செங்குந்த கைக்கோள முதலியார் சமூகத்தின் உரிமை மீட்பு போராட்டத்திற்கு புதிய திசையையும், ஒருங்கிணைந்த செயல்பாட்டிற்கான வலுவான அடித்தளத்தையும் உருவாக்கும் என்பதில் எங்களுக்கு எவ்வித சந்தேகமும் இல்லை.
இந்த ஆலோசனைக் கூட்டம் வெற்றிகரமாக நடைபெற தமிழ் செம்படைக் கழகம் தனது முழுமையான ஆதரவையும், பாராட்டுகளையும் மீண்டும் ஒருமுறை தெரிவித்துக் கொள்கிறது.
சமுதாய உரிமை – ஒற்றுமை – சட்டபூர்வ மீட்பு
என்ற இலக்கோடு
தமிழ் செம்படைக் கழகம் என்றும் துணை நிற்கும்.

தேர்தல் களம் 2026 🔥  திராவிட அரசியல் ஆதிக்கத்திற்கிடையில்  **தீர்மானிக்கும் சக்திகளாக உருவெடுத்த சிறிய கட்சிகள்!**தமிழக ...
19/01/2026

தேர்தல் களம் 2026 🔥
திராவிட அரசியல் ஆதிக்கத்திற்கிடையில்
**தீர்மானிக்கும் சக்திகளாக உருவெடுத்த சிறிய கட்சிகள்!**

தமிழக அரசியல் வரலாறு தி.மு.க – அ.தி.மு.க என இரு பெரும் திராவிட கட்சிகளை மையமாகக் கொண்டிருந்தாலும்,
ஆட்சி அமைப்பதிலும்
வெற்றி–தோல்வியை தீர்மானிப்பதிலும்
**சிறிய கட்சிகளின் பங்கு எப்போதும் முக்கியமானதே.**

தமிழ் மாநில காங்கிரஸ்,
புதிய தமிழகம்,
தமிழக வாழ்வுரிமைக் கட்சி,
புதிய நீதிக் கட்சி,
மக்கள் நீதி மய்யம்,
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி போன்ற பல கட்சிகள்
ஆட்சியை பிடிக்காவிட்டாலும்
**வாக்கு வங்கியை தீர்மானிக்கும் “King Maker” சக்திகளாக** செயல்பட்டுள்ளன.

👉 2% – 5% வாக்குகளே
பல தொகுதிகளில்
பெரிய கட்சிகளின் வெற்றி–தோல்வியை மாற்றியமைத்துள்ள வரலாறும் நம்மிடம் உள்ளது.

🔔 **2026 தேர்தல் களம்**
4 முனை போட்டி,
புதிய அரசியல் சூழல்,
பிரதிநிதித்துவம் மறுக்கப்பட்ட சமூகங்களின் எழுச்சி
என முற்றிலும் புதிய கட்டத்தை நோக்கி நகர்கிறது.

🔥 அந்த அரசியல் இடைவெளியில்தான்
**செங்குந்த கைக்கோள முதலியார் சமூகத்தின் உரிமைக் குரலாக**,
**தமிழ் தேசிய அடையாள அரசியலை முன்னெடுக்கும் இயக்கமாக**,
**திரு. முத்துவேல் ராஜா தலைமையில்**
**தமிழ் செம்படைக் கழகம்** இன்று
ஒரு சிறிய அமைப்பாக அல்ல —
**தீர்மானிக்கும் அரசியல் சக்தியாக** உருவெடுத்து வருகிறது.

இது வெறும் தேர்தல் அரசியல் அல்ல…
✔ சமூக நீதி
✔ சமூக பிரதிநிதித்துவம்
✔ அரசியல் அதிகாரம்
என நீண்டகால இலக்குடன் முன்னேறும் இயக்கம்.

ஒருகாலத்தில்
“தி.மு.க வெல்லாது”
“அ.தி.மு.க நிலைக்காது”
என்று சொன்னார்கள்…
வரலாறு அதை மாற்றியது.

அதேபோல்,
**சமூக ஆதரவும் அரசியல் தெளிவும் இணைந்தால்**
தமிழ் செம்படைக் கழகம்
2026 தேர்தலில்
**கணக்கில் கொள்ள வேண்டிய சக்தியாக**
உறுதியாக மாறும்.

✊ இது ஆரம்பம் மட்டுமே…
✊ அரசியல் மாற்றம் தொடங்கியுள்ளது…

#தேர்தல்களம்2026
#தமிழகஅரசியல்
#சிறியகட்சிகளின்சக்தி

#தமிழ்செம்படைக்கழகம்

#செங்குந்தர்அரசியல்எழுச்சி
#சமூகநீதி
#தமிழ்தேசியஅரசியல்
#பிரதிநிதித்துவஅரசியல்

🌹 கல்லிடைக்குறிச்சி உறவுகளின் வரவேற்பு உரை 🌹தமிழ் செம்படைக் கழகத்தின்இளைஞர் எழுச்சி மாநாட்டிற்குசங்கரன்கோவில் மண்ணில் கூ...
18/01/2026

🌹 கல்லிடைக்குறிச்சி உறவுகளின் வரவேற்பு உரை 🌹

தமிழ் செம்படைக் கழகத்தின்
இளைஞர் எழுச்சி மாநாட்டிற்கு
சங்கரன்கோவில் மண்ணில் கூடும்
அனைத்து உறவுகளுக்கும்
கல்லிடைக்குறிச்சி உறவுகள் சார்பாக
எங்கள் இதயப்பூர்வமான
வணக்கமும் வரவேற்பும்…!

அன்பார்ந்த செங்குந்தர் உறவுகளே,
உழைப்பால் உயர்ந்த சமூகத்தின்
உயிரோட்டமாக இருக்கும்
எங்கள் இளைஞர்கள் இன்று
அரசியல் அதிகாரத்தை நோக்கி
ஒற்றுமையுடன் நடைபோட
இந்த மாநாடு ஒரு வரலாற்றுத் தொடக்கம்.

சமூக நீதி,
சமத்துவம்,
மொழி உரிமை,
மாநில சுயாட்சி,
மக்கள் பிரதிநிதித்துவம்
என்ற தெளிவான கொள்கைகளோடு
தமிழ் செம்படைக் கழகம்
தமிழ் அரசியல் களத்தில்
ஒரு புதிய நம்பிக்கையாக
உருவெடுத்துள்ளது.

புறக்கணிப்புக்கு பதிலாக
பங்கேற்பு,
அடிமைத்தனத்திற்கு பதிலாக
அதிகாரம்,
மௌனத்திற்கு பதிலாக
உரத்த குரல் –
இதுவே இளைஞர் எழுச்சி மாநாட்டின்
மூல நோக்கம்.

தமிழ் செம்படைக் கழகத்தின்
நிறுவனத் தலைவர்
அறிஞர்…
தமிழ் செம்படைக் கழகத்தின்
வழிகாட்டி…
தமிழ் செம்படைக் கழகம் 2026
இளைஞர் அரசியல் பயணத்தின்
தீப்பொறியாக விளங்கும்
டைகர் முத்துவேல் ராஜா
அவர்களை
கல்லிடைக்குறிச்சி உறவுகள் சார்பாக
மிகுந்த மரியாதையுடன்
வரவேற்கிறோம்…! 🌹

செங்குந்தர் சமூகத்தின்
அரசியல் அதிகாரம்
என்ற கனவு
இன்று உறுதியாக
நிஜமாகும் பாதையில்
இந்த மாநாடு ஒரு
முக்கிய மைல்கல்.

இந்த மாநாடு
ஒரு கூட்டமல்ல…
ஒரு கோஷமல்ல…
இது ஒரு தீர்மானம்!
இது ஒரு அரசியல் எழுச்சி!

செம்படை வாழ்க!
செங்குந்தர் எழுக!
தமிழ் அரசியல் மாற்றம் தொடங்குக!

— கல்லிடைக்குறிச்சி உறவுகள்

Address

APC NAGAR
Nellai

Alerts

Be the first to know and let us send you an email when தமிழ் செம்படை கழகம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share