04/09/2026
வ.உ.சி. 154-வது பிறந்த நாள் விழா – பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து திருநெல்வேலி சரக டிஐஜி ஆய்வு
திருநெல்வேலி சரக டிஐஜி முனைவர் இரா. திருநாவுக்கரசு, இ.கா.ப., அவர்கள், சுதந்திரப் போராட்டத் தியாகியும், கப்பலோட்டிய தமிழனுமான வ.உ. சிதம்பரனார் அவர்களின் 154-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, இன்று (04.09.2026) காலை தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரத்தில் அமைந்துள்ள வ.உ.சி. நினைவிடத்தை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது, உடனிருந்த கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. ஆறுமுகம், காவல் துணைக் கண்காணிப்பாளர் திரு. கண்ணன் மற்றும் ஓட்டப்பிடாரம் காவல் ஆய்வாளர் திரு. கார்த்திக் ஆகியோருக்கு, பிறந்த நாள் விழாவின்போது மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்துதல், போக்குவரத்தைச் சீர்செய்து ஒழுங்குபடுத்துதல், வாகன நிறுத்துமிடங்களை முறையாக நிர்வகித்தல் மற்றும் முக்கிய இடங்களில் காவலர்களைத் தகுந்த முறையில் பணியமர்த்துதல் உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தேவையான ஆலோசனைகள் மற்றும் அறிவுரைகளை வழங்கினார்.
#திருநெல்வேலிசரகம்