29/08/2026
பட்டுக்கோட்டை, அறந்தாங்கி வழியாக மதுரை, சென்னை, திருச்சிக்கு புதிய ரயில்களை இயக்க வேண்டும். ரயில் பயணிகள் சங்கங்கள் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளனர்.
அறந்தாங்கி கோட்ட ரயில் உபயோகிப்போர் சங்கத்தின் ஏற்பாட்டில் அறந்தாங்கியில் இன்று 29.08.2026 சனிக்கிழமை காலை ரயில் பயணிகள் சங்கங்களின் கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு அறந்தாங்கி கோட்ட ரயில் உபயோகிப்போர் சங்கத்தின் தலைவர் ஏ .பி. ராஜகுமார் தலைமை வகித்தார்.
காரைக்குடி தொழில் வணிக கழகத்தின் முதன்மை ஆலோசகர் சாமி .திராவிட மணி முன்னிலை வகித்தார்.
பட்டுக்கோட்டை ரயில் உபயோகிப்போர் சங்கத்தின் தலைவர் வ.விவேகானந்தம் வரவேற்புரை ஆற்றினார். கூட்டத்தில் மதுரை கோட்ட ரயில் உபயோகிப்போர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் ஏ .ஆழ்வார்ராஜா ரயில் தேவைகள், ரயில்வே துறை பணிகள் பற்றி சிறப்புரை ஆற்றினார்.
காரைக்குடி வட்ட ரயில் பயணிகள் நல சங்கத்தின் தலைவர் வி.ஆர் .ராமநாதன், காரைக்குடி தொழில் வணிக கழகத்தின் தலைவர் எஸ். கண்ணப்பன் செயலாளர் கே .என். சரவணன், பேராவூரணி ரயில் பயணிகள் நல சங்கத்தின் செயலாளர் ஆர் .பி. ராஜேந்திரன் பொருளாளர் எஸ். நாகராஜன், பட்டுக்கோட்டை ரயில் பொது நல சங்கத்தின் கௌரவ தலைவர் வழக்கறிஞர்
கே.விவேகானந்தன் பொருளாளர் ஆர். ரவிச்சந்திரன் நிர்வாக குழு உறுப்பினர் எம். செந்தில் குமார் பட்டுக்கோட்டை ரயில் உபயோகிப்போர் சங்கத்தின் செயலாளர் கு.முகேஷ், துணைத் தலைவர் வே. ராமலிங்கம்
அதிராம்பட்டினம் ரயில் பயணிகள் சங்கத்தின் நிர்வாக குழு உறுப்பினர்கள் எஸ்.எம்.ஏ சாகுல் ஹமீது,எஃப்.பாரூக் அப்துல்லா, தில்லை விளாகம் ரயில் பயணிகள் சங்கத்தின் தலைவர் ஜே தாகீர், நிர்வாக குழு உறுப்பினர்கள் தனுஷ்பாண்டியன், எம் .சாகுல் ஹமீது ஆகியோர் கலந்து கொண்டு ரயில் கோரிக்கைகள் பற்றி பேசினார்கள்.
கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.
காரைக்குடியில் இருந்து அறந்தாங்கி, பேராவூரணி, பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், திருவாரூர் , மயிலாடுதுறை வழியாக தாம்பரத்திற்கு தினசரி ரயில்களை இரு முனைகளில் இருந்தும் இயக்க வேண்டும்.
மயிலாடுதுறையிலிருந்து திருவாரூர், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, அறந்தாங்கி, காரைக்குடி, மானாமதுரை, சிவகங்கை வழியாக மதுரைக்கு தினசரி பயணிகள் ரயில்களை இருமுனைகளில் இருந்தும் இயக்க வேண்டும்.
திருவாரூர், திருத்துறைப்பூண்டி, தில்லைவிளாகம், முத்துப்பேட்டை, அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, பேராவூரணி, அறந்தாங்கி, காரைக்குடி, புதுக்கோட்டை, வழியாக திருச்சிக்கு இரு முனைகளில் இருந்து தினசரி பயணிகள் ரயில்களை இயக்க வேண்டும். போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ரயில் பயணிகள் சங்கங்களின் நிர்வாகிகள் விரைவில் மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்றித்தர தெற்கு ரயில்வே பொது மேலாளர், தலைமை பயணிகள் போக்குவரத்து மேலாளர் ,திருச்சி, மதுரை கோட்ட ரயில்வே மேலாளர்கள் ஆகியோரை நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்கள் அனுப்ப முடிவு செய்யப்பட்டது.
கூட்டத்தில் நிறைவாக பேராவூரணி ரயில் பயணிகள் நல சங்கத்தின் தலைவர் கே. எஸ். கௌதமன் நன்றியுரை ஆற்றினார்.
Murasoli Thanjai District Collector, Thanjavur Ministry of Railways, Government of India Southern Railway