02/06/2026
#உடையநாட்டில்_பட்டமளிப்பு_விழா!!
#பண்பாட்டை_பேணும்_பிள்ளைகளாக_வளர_வேண்டும்!!
ைவர்_மு_தமிமுன்_அன்சாரி_பேச்சு!!
ஜுன் :2
தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே உடைய நாடு கிராமத்தில் கடந்த பத்தாண்டுகளாக இயங்கி வரும் சுபைதா அம்மாள் பெண்கள் கல்லூரியின் பட்டமளிப்பு விழா இன்று சிறப்புடன் நடைபெற்றது.
8 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளி படிப்புடன், மதரசா கல்வியும் இணைந்து வழங்கப்படுகிறது.
மேலும் 3 ஆண்டு கால தொலைதூர டிகிரி பட்டப்படிப்பும் வழங்கப்படுகிறது.
விடுதி வசதியுடன் கூடிய ஒருங்கிணைந்த இந்த கல்வித் திட்டத்தில், உணவு உள்ளிட்ட அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகிறது.
மலேசிய தொழில் அதிபரும், சுபைதா குழுமங்களின் தலைவருமான டத்தோ அப்துல் அஜீஸ் அவர்கள் நடத்தி வரும் இந்த கல்வி நிறுவனம், அப்பகுதியில் கிழக்கு கடற்கரை சாலையில் (ECR) முதன்மையான பெண் கல்வி மையமாக திகழ்ந்து வருகிறது.
இன்று இதன் பத்தாம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினார்.
அவரது உரையிலிருந்து முக்கிய கருத்துகள் பின்வருமாறு ...
2016 ஆம் ஆண்டு இந்த கல்வி நிறுவனம் தொடங்கப்பட்டபோது, அப்போது நான் சட்டமன்ற உறுப்பினராக வருகை தந்து தொடக்க விழாவில் கலந்து கொண்டேன்.
தற்போது பத்தாம் ஆண்டு பட்டமளிப்பு விழாவிலும் சட்டமன்ற உறுப்பினராகவே கலந்து கொண்டுள்ளேன்.
முன் கூட்டியே இந்த நிகழ்ச்சிக்கு அழைக்கும் பொழுது, நீங்கள் சட்டமன்ற உறுப்பினராக எங்கள் சுபைதா அம்மாள் அரபி கல்லூரிக்கு வருவீர்கள்... என்று அண்ணன் டத்தோ அப்துல் அஜிஸ் அவர்கள் கூறினார்.
பொதுக்கல்வியும், மார்க்க கல்வியும் கூடிய ஒருங்கிணைந்த கல்வியை, எந்த எதிர்பார்ப்பும் இன்றி இலவசமாக இங்கு தருகிறார்கள்.
இங்கு பயில்பவர்கள் டீ , காபி குடிப்பதற்கு கூட, பாக்கெட் பாலை வாங்கி கொடுக்காமல்; கறவை மாடுகளை பராமரித்து அதன் மூலம் தூய பசும்பாலை கொடுத்து மகிழ்கிறார்கள்.
உணவுக்கு கூட நாட்டுக் கோழிகளை வளர்த்து கொடுக்கிறார்கள்.
இங்கு வரும் பிள்ளைகளை தங்கள் பிள்ளைகளைப் போல இவர்கள் கொண்டாடுகிறார்கள்.
நீங்கள் எல்லாம் இவர்களின் குடும்பத்தினருக்காகவும், இந்த கல்வி நிறுவனத்தின் எதிர்காலத்திற்காகவும் அதிகமாக பிரார்த்திக்க வேண்டும்.
இங்கு பட்டம் பெற்று செல்லும் நீங்கள் பாட புத்தகங்களை தாண்டியும் அறிவு இருக்கிறது என்பதை புரிந்து கொண்டு புத்தகங்களை தேடி வாசியுங்கள்.
நீங்கள் கற்றதை உங்கள் வீடுகளுக்கு சென்று உங்கள் பெற்றோர்களுக்கும், மற்றவர்களுக்கும் எடுத்துக் கூறுங்கள்.
கல்வி என்பது சுயநலத்துடன் சுருங்கி விடக்கூடாது.
நீங்கள் கற்ற கல்வி பிறருக்கும் பயன்பட வேண்டும் .
நீங்கள் கலாச்சாரங்களையும், பண்பாடுகளையும் பேணக் கூடியவர்களாக வளர வேண்டும்.
எல்லா துறைகளிலும் நீங்கள் சாதிக்க வேண்டும் என்ற மனநிலையை உருவாக்குங்கள்.
சவால்களை எதிர்கொள்ள பழகுங்கள்.
தோல்விகளை சகித்துக் கொள்ள தயாராகுங்கள்.
வெற்றியும், தோல்வியும் கலந்தது தான் வாழ்க்கை என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
IAS, IPS போன்ற எல்லா துறைகளுக்கும் பெண்கள் வர வேண்டும்.
எங்கு சென்றாலும் உங்களின் தனித்தன்மையை இழக்காமல், உங்களின் கண்ணியத்திற்கு பாதிப்பு வராமல் பணியாற்றுங்கள்.
அரசியலில் தெளிவு பெறுங்கள். நல்ல அரசியலை ஏற்று நீங்கள் விரும்பக்கூடிய கட்சிகளில் பணியாற்றலாம். ஆனால் கவர்ச்சி அரசியலுக்கு பலியாகி விடக்கூடாது.
இங்கு ஆசிரியைகளாக ஆலிமாக்கள் மட்டுமின்றி, இந்து, கிறிஸ்தவ சமூக ஆசிரியைகளும் பணியாற்றுகிறார்கள் என்பது மகிழ்ச்சியாக உள்ளது.
உங்களுக்குள் இருக்கும் நல்ல கலாச்சார பண்பாடுகளை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ளுங்கள்.
அது புரிதலுக்கும், ஒற்றுமைக்கும் வழி வகுக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்வில் மார்க்க அறிஞர்களும், சான்றோர்களும் முன்னிலை வகித்து சிறப்பித்தனர்.
அரங்கிற்கு வெளியே பட்டம் பெரும் மாணவிகளின் பெற்றோர்களும், உறவினர்களும் திரளாக வருகை தந்திருந்தனர்.
உடைய நாடு செல்லும் வழியில் அதிராம்பட்டினம் மற்றும் மல்லிப்பட்டினத்தில் மஜகவினர் சார்பில் தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
முன்னதாக 15க்கும் மேற்பட்ட கார்களில் மஜகவினர், தலைவர் அவர்களுடன் இந்நிகழ்ச்சிக்கு வருகை தந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதில் மஜக துணைப் பொதுச் செயலாளர் ராவுத்தர்ஷா, மாநில துணைச் செயலாளர் பேரா அப்துல் சலாம், பேராவூரணி தொகுதி பொறுப்பாளர் உடையநாடு சஃபிகான் , பேராவூரணி நகர பொறுப்பாளர்கள் அசாருதீன், அப்துல்லா, அருண்குமார், சித்திக், அன்வர் நகர நிர்வாகிகளும் பங்கேற்றனர்.
தகவல் :
்_தொழில்நுட்ப_அணி
#பேராவூரணி_சட்டமன்ற_தொகுதி.
02.06.2026.