24/06/2026
*அன்புடையீர் வணக்கம் 🙏*
வடசேரி கணகமூலம் சந்தை பகுதியில் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் முயற்சிகள் தொடர்பாக, சந்தை வியாபாரிகளின் நலன்கள் பாதிக்கப்படாத வகையில் புதிய பஸ் நிலையத்தின் திட்டம் அமைய வேண்டும் என்ற நோக்கில் பல்வேறு பேச்சுவார்த்தைகள் அரசு அதிகாரிகளுடன் நடைபெற்று வருகின்றது.
அதன் தொடர்ச்சியாக, *தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின்* கன்னியாகுமரி *கிழக்கு மாவட்டம்* சார்பில், *நாகர்கோயில் மாநகராட்சியில்* வைத்து
*மாநகர மேயர்* (பொ)
திருமதி மேரி பிரின்சி லதா அவர்கள், *மாநகர ஆணையர்*
திரு நிஷாந்த் கிருஷ்ணா IAS,
மாநகர தலைமைப் பொறியாளர் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகளுடன் முக்கிய கலந்தாலோசனைக் கூட்டம், கன்னியாகுமரி *கிழக்கு மாவட்டத் தலைவர்* திரு. *கே. பாபு* அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
வடசேரி கணகமூலம் சந்தை வியாபாரிகளுடன் முன்னதாக நடத்தப்பட்ட ஆலோசனைக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட கருத்துக்கள் மற்றும் கோரிக்கைகளை இக்கூட்டத்தில் மாநகராட்சி அதிகாரிகளுடன் விரிவாக எடுத்துரைக்க விவாதிக்கப்பட்டன.
மேலும் அடுத்தகட்ட முக்கிய முடிவுகளை எடுக்கும் வகையில், கணகமூலம் சந்தையின் அனைத்து வியாபாரிகளையும் உள்ளடக்கிய அடுத்தகட்ட ஆலோசனைக் கூட்டம் கனகமூல சந்தையில் வைத்து விரைவில் நடத்தப்பட உள்ளது. இதன் அடிப்படையாக தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகளுடன் மீண்டும் கலந்தாலோசனை மேற்கொண்டு வியாபாரிகளின் நலன்களுக்கு ஏற்ற நல்ல முடிவுகள் விரைவாக எட்டப்படும் என்று பேரமைப்பு சார்பாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பேரமைப்பின் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட பொருளார்
திரு *A ஆதி சிவன்* அவர்கள், கிழக்கு மாவட்ட துணைத் தலைவர் திரு.
*S. பைசல் நிசார்* அவர்கள் மற்றும் இளைஞரணி மாநகர அமைப்பாளர்
*Dr. B. பபிஷன் ஜெரீஷ்*
மாவட்ட செய்தி தொடர்பாளர் சபீக் மீரான் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நன்றி