INTJ PERNAMBUT

INTJ PERNAMBUT (INDIA TOWHEED JAMATH)
VELLOR DIST ,
PERNAMBUT TOWN ...

வேலூர் மாவட்டம் சார்பாக போதை ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.இந்திய தவ்ஹீத் ஜமாஅத் வேலூர் மாவட்டம் சார்பாக ந...
18/11/2024

வேலூர் மாவட்டம் சார்பாக போதை ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.

இந்திய தவ்ஹீத் ஜமாஅத் வேலூர் மாவட்டம் சார்பாக நேற்று ஞாயிற்றுக்கிழமை 17.11.2024 மாலை பேர்ணாம்பட் பகுதியில் இரண்டாம் கட்டமாக போதை ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் நான்கு கம்பம் பகுதியில் நடைபெற்றது..

மாவட்ட தலைவர் சர்பராஸ் அஹமத் தலைமை உரை நிகழ்த்தினார்.

சமூக ஆர்வலர் மார்க்க அறிஞர் நாட்டாம்கர் அக்பர் அவர்கள் போதை ஒழிப்பு குறித்து போதையால் ஏற்படும் தீமைகள் குறித்து உரையாற்றினார்..

மாவட்ட செயளாலர் ஆலியார் இர்பான் ,நகர நிர்வாகிகள் முன்னிலை : நகர செயளாலர் பைசுர்ரஹ்மான் ,நகர துணை செயளாலர் முஸ்தாக் அஹமத்,நகர பொருளாலர் அர்ஷத் அர்ஷு,நகர துணை செயளாலர் முகாரக் , ரஹமதாபாத் கிளை செயளாலர் இம்தியாஸ்,இர்ஷாத் இந்திய மாணவர் முண்ணனி மாவட்ட செயளாலர் முஜம்மில் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பொது மக்கள் அதிகம் கூடும் பகுதியில் நடைபெற்ற போதை ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் குறித்து சாலையில் போன பலர் நேரில் வந்து பாராட்டு தெரிவித்தனர்.

தொடர்ந்து போதைக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரத்தில் உள்ள சகோதரர்களுக்கு இறைவன் அருள் செய்வானாக..

அல்ஹம்துலில்லாஹ்.

* ிரிவு *

போதை ஒழிப்பு குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பொது மக்கள் கூடும் இடங்களில் பேனர் வைக்கும் வேலூர் ம...
29/08/2024

போதை ஒழிப்பு குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பொது மக்கள் கூடும் இடங்களில் பேனர் வைக்கும் வேலூர் மாவட்டம்.

இந்திய தவ்ஹீத் ஜமாஅத் வேலூர் மாவட்டம் சார்பாக போதை ஒழிப்பு குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தொடர் பிரச்சாரம் நடைபெற்று வருகிறது.

அதன் தொடர்ச்சியாக நேற்று வேலூர் மாவட்டம் பேர்ணாம் பட் நகர முழுவதும் பொது மக்கள் கூடும் இடங்களில் போதை ஒழிப்பு குறித்தும் போதையால் நடக்கும் சீரழிவு குறித்தும் விழிப்புணர்வு பேனர்கள் வைக்க பட்டது.

போதை பொருட்களை ஒழிப்போம்
போதை இல்லா சமுகத்தை உருவாக்குவோம்..

ிரிவு

என்றும் மக்கள் பணியில் (INTJ)💚🖤நேற்று (31/02/24) காலை CMC மருத்துவமனையில் கேரள மாநிலத்தை சேர்ந்த சகோதரர் ஒருவருக்கு  அவச...
01/02/2024

என்றும் மக்கள் பணியில் (INTJ)💚🖤

நேற்று (31/02/24) காலை CMC மருத்துவமனையில் கேரள மாநிலத்தை சேர்ந்த சகோதரர் ஒருவருக்கு அவசர சிகிச்சைக்கு 2 யூனிட் இரத்தம் தேவை என இந்திய தவ்ஹீத் ஜமாத்தினரிடம் கேட்டு கொண்டதின் பெயரில்…

இந்திய தவ்ஹீத் ஜமாத் வேலூர் மாவட்ட தலைவர் சர்பராஸ் அஹமத் அவர்களுன் அறிவுருத்தலின்படி ,பேரணாம்பட்டு நகர ஊடகப்பிரிவு செயளாலர் ரியாஸ் அஹமத் மற்றும ஜாகிர் ஆகியோர் இரத்த தானம் செய்தனர்…

🛑இரத்த தானம் செய்வோம்...
🛑இன்னுயிர் காப்போம்...

இவண்
இந்திய தவ்ஹீத் ஜமாத்
வேலூர் மாவட்டம்

உடல்நலம் பாதிக்கப்பட்டு  ஆதரவற்று சாலையோரம் இருந்த முதியோரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் மன...
13/12/2023

உடல்நலம் பாதிக்கப்பட்டு ஆதரவற்று சாலையோரம் இருந்த முதியோரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் மனிதநேயர்கள்!

வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு நகரம் சீமாட்டி வீதியில் ஆதரவற்ற முதியோர் ஒருவர் உடல்நிலை சரியில்லாமல் கிடப்பதாக பேர்ணாம்பட்டு நகர மருத்துவரணி செயளாலர் Mubarak Muba அவர்களுக்கு தகவல் கிடைத்தது.

அதனை தொடர்ந்து மாவட்ட தலைவர் Sarfaraz Ahmed Pbt அவர்களின் ஆலோசனை படி பேர்ணாம்பட்டு நகர மருத்துவரணி செயளாலர் முபாரக் மற்றும் மாவட்ட மருத்துவரணி செயளாலர் அர்ஷத் அஹ்மத், அஜர் அஹமத் ஆகியோர் விரைந்து சென்று அந்த முதியோரை பேர்ணாம்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர் சகோதரர் பரிபூரண நலம் பெற அனைவரும் பிரார்த்தனை செய்வோம்.

இந்த மனிதநேய பணியை பிரபல ஊடகங்கள், பொதுமக்கள் என பாராட்டுகளுடன், ஊக்கபடுத்தி வருகின்றனர்..

 #பேரணாம்பட்டில்_நாய்கள்_தொல்லை_அலரும்_பொதுமக்கள்.   வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு நகர பகுதியில் நாய்களின் தொல்லை அதிகரித...
12/12/2023

#பேரணாம்பட்டில்_நாய்கள்_தொல்லை_அலரும்_பொதுமக்கள். வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு நகர பகுதியில் நாய்களின் தொல்லை அதிகரித்து வருவதாகவும், தெருக்களில் நடந்து செல்லும் பொதுமக்களை விரட்டி விரட்டி கடிக்க வரும் சம்பவங்கள் தினமும் அரங்கேறி வருகிறது இது குறித்து பலமுறை நகராட்சி நிர்வாகத்திடம் அரசியல் கட்சிகளும்,அமைப்புகளும் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லை இந்நிலையில் நாய் கடித்துக் குதறியதில் பச்சிளங்குழந்தை உயிரிழப்பு.. நாய்க்கடியால் ரேபிஸ் நோய் தாக்கி மாணவி பலி.. நாய் குறுக்கே வந்ததால் பைக்கில் சென்றவர் தூக்கி வீசப்பட்டு பலி... இப்படி தெரு நாய்களால் அவ்வப்போது நிகழும் மரணங்களும், உடற்காயங்களும் என வரும் செய்திகள் மனித சமுதாயத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக மாறி உள்ளது. நாய்கள் நன்றியுள்ள பிராணியாகவும் காவலாளியாகவும் இருக்கிறது என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. அதேவேளையில் தெருநாய்களால் பொதுமக்களுக்கு ஏற்படும் அச்சுறுத்தலுக்கு தீர்வு காண்பது அவசியம். அண்மையில் தெருநாய்களின் பெருக்கம் குறித்து கருத்து தெரிவித்திருந்த உச்ச நீதிமன்றம், ‘’தெரு நாய்களின் மீது இரக்கம் காட்டலாம். அதே நேரத்தில் அவற்றை சமூகத்தின் அச்சுறுத்தலாக மாறிவிட அனுமதிக்கக்கூடாது. அத்தகைய நேரங்களைக் கையாள்வதில் சமநிலை தேவை’’ என்றது. நாய் என்பது அரிய வகை உயிரினம் கிடையாது. எனவே பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் தெருநாய்கள் விவகாரத்தில் அரசு அலட்சியம் காட்டாமல் சட்டத் திருத்தம் மேற்கொள்ள வேண்டும். விலைமதிப்பற்ற மனித உயிர் ஒரு நாயால் பறிபோகக் கூடாது என்பதே மக்களின் எதிர்பார்ப்பு. என்ன செய்யப்போகிறது அரசு? அதேபோன்று பேரணாம்பட்டு நகராட்சி நிர்வாகம் நாய்களுக்கான கருத்தடை திட்டத்தை செயல்படுத்தி, பெருகி வரும் நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த வேண்டும். தற்போது கால்நடைத்துறை சார்பில் நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி போடப்படுகிறது. இந்த தடுப்பூசி தெரு நாய்களுக்கு போடவும் தெரு நாய்களை கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் பேரணாம்பட்டு நகர அனைத்து தரப்பினரின் எதிர்பார்ப்பாகும்.

இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டன.இந்திய தவ்ஹீத் ஜமாஅத் வேலூர் மாவட்டம் பேர்ணாம் பட் நகரம் சார...
24/11/2023

இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டன.

இந்திய தவ்ஹீத் ஜமாஅத் வேலூர் மாவட்டம் பேர்ணாம் பட் நகரம் சார்பில் மாவட்ட தலைவர் சர்பராஸ் அஹமத் அவர்களின் அறிவுறுத்தளின்படி நகர பொருளாலர் அர்ஷத் அர்ஷு தலைமையில் இந்திய மாணவர் முண்ணனி வேலூர்மாவட்ட செயளாலர் அப்ரார் அஹமத் ரஹமதாபாத் கிளை துணை தலைவர் பேட்டு உவைஸ் ரஹமதாபாத் கிளை பொருளாலர் பாஷு அல்தாப் ஆகியோர்

ஆம்பூர்,உம்ராபாத் மற்றும் பேர்ணாம்பட்டு பகுதிகளில் வீடற்று சாலையோரம் வசிக்கும் சகோதரர்களுக்கு போர்வைகள் வழங்கபட்டது..

மற்றும் பேரணாம்பட்டு பங்களாமேடு பகுதியில் அமைந்துள்ள IELC பள்ளியில் மனநிலை பாதித்த 30 மேற்பட்ட குழந்தைகளுக்கு மாலை பொழுதில் கேக்,பிஸ்கெட் வழங்கி போர்வைகளை வழங்கினர்..

அல்ஹம்துலில்லாஹ்.

ிரிவு

All praises to Allah…!In the State Executive Committee meeting of India Tawheed Jamaat, Vellore district was presented w...
30/07/2023

All praises to Allah…!

In the State Executive Committee meeting of India Tawheed Jamaat, Vellore district was presented with a memorial shield for its vigorous efforts in emergency blood donation and many other social Works…

Alhamdulillah..🙌

வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டில் திங்கள் கிழமை மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.மணிப்பூரில் நடந்த கொடூரத்தை கண்டித்து வேலூர் ம...
23/07/2023

வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டில் திங்கள் கிழமை மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.

மணிப்பூரில் நடந்த கொடூரத்தை கண்டித்து வேலூர் மாவட்டம் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் பேர்ணாம்பட் நகரம் சார்பில் இன்ஷா அல்லாஹ் 24.07.2023 திங்கள் கிழமை மாலை 5:00 மணிக்கு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

அநீதிகளை எதிர்த்து குரல் கொடுக்க அணி திரள்வோம்.

*அழைக்கிறது*
*இந்திய தவ்ஹீத் ஜமாஅத்*
*பேர்ணாம்பட் நகரம்*
*வேலூர் மாவட்டம்..*

* ிரிவு *

03/06/2023
ஆலந்தூரில் பொது சிவில் சட்டத்தை எதிர்த்து இறைவன் அருளால் மிக சிறப்பாக நடைபெற்ற பொது கூட்டம்.(மாநாடு ). சிறப்பு தொகுப்பு....
06/02/2023

ஆலந்தூரில் பொது சிவில் சட்டத்தை எதிர்த்து இறைவன் அருளால் மிக சிறப்பாக நடைபெற்ற பொது கூட்டம்.

(மாநாடு ).

சிறப்பு தொகுப்பு.

இந்திய தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சிபுரம் மாவட்ட சார்பில் ஆலந்தூரில் பொது சிவில் சட்டத்தை எதிர்த்து மாபெரும் பொதுக்கூட்டம் மாநாடை மிஞ்சும் அளவிற்கு நேற்று 4ம்தேதி சனிக்கிழமை மாலை துணை தலைவர் முஹம்மது முனீர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

மாவட்ட தலைவர் அசன் அலி, மாவட்ட செயலாளர் அனஸ் ரஹ்மான், பொருளாளர் சதாம்,துணை தலைவர் முஹம்மது யூசுப் துணை செயலாளர் சுக்கு அலி மற்றும் மாவட்ட ஆலந்தூர் நகர நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

ஆரம்ப உரையாக இந்திய உலமா பிரண்ட் பொறுப்பாளர் கமாலுதீன் மன்பஈ அவர்கள் உரையாற்றினார்.

இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் எஸ் எம் பாக்கர் அவர்கள், பொது செயலாளர் முஹம்மது சித்திக், மாநில செயலாளர்கள் ஜாகிர் உசேன், சையது அலி உரையாற்றினார்கள்.

சிறப்பு உரையாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்பி அவர்கள், சிறுபான்மை ஆணைய தலைவர் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ், மே பதினேழு இயக்கம் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, சென்னை மக்கா மஸ்ஜித் பள்ளிவாசல் தலைமை இமாம் இஸ்லாமிய இயக்கங்கள் கட்சிகள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் மெளலவி மன்சூர் காஷ்பி அவர்கள், காங்கிரஸ் INTUC தேசிய பொது செயலாளர் டாக்டர் அமீர் கான், இஸ்லாமிய ஜனநாயக பேரவை செயலாளர் அப்துர் ரஹ்மான் என தலைவர்கள் உரையாற்றினார்கள்.

மாநில செயலாளர்கள் முஹம்மது யூசுப் மற்றும் யாசர் அராபத் பொது கூட்டம் தீர்மானங்களை வாசித்தார்கள்.

கலந்து கொண்ட சிறப்பு அழைப்பாளர் களுக் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சிபுரம் மாவட்ட சார்பில் நினைவு பரிசு வழங்கப்பட்டது.

இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மாநில பொருளாளர் பிர்தௌஸ் துணை பொது செயலாளர் முஹம்மது ஷிப்லி , மாநில செயலாளர்கள் இனாயத்துல்லாஹ் அபு பைசல் கலிமுல்லாஹ், தக்வா மொய்தீன் மற்றும் சென்னை மண்டல ஜமாஅத் உலமா செயலாளர் முஜிபுர் ரகுமான் பாக்கவி, இந்திய உலமா பிரண்ட் பொறுப்பாளர் அபூபக்கர் ரஷாதி அவர்கள் இந்திய மாணவர் முன்னணி பொறுப்பாளர்கள் முஸ்ஹப் மற்றும் பைசல் மற்றும்..

தென் சென்னை மாவட்ட தலைவர் ஜாகிர் உசேன், மாவட்ட செயலாளர் லாக் நகர் யூசுப், மற்றும் நிர்வாகிகள்,வட சென்னை மாவட்ட தலைவர் இஸ்மாயில், மாவட்ட செயலாளர் சாகுல், மற்றும் மாவட்ட நிர்வாகிகள், மத்திய சென்னை மாவட்ட தலைவர் அமீன், மாவட்ட செயலாளர் முஹம்மது சமீர் மற்றும் நிர்வாகிகள், திருவள்ளூர் மாவட்ட நிர்வாகி சுல்தான் மற்றும் நிர்வாகிகள், தேனி மாவட்ட செயலாளர் முபாரக் அலி, திண்டுக்கல் மாவட்ட தலைவர் பாச

Address

Pernambut

Telephone

+916380319404

Website

Alerts

Be the first to know and let us send you an email when INTJ PERNAMBUT posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to INTJ PERNAMBUT:

Share

Category