13/03/2026
முதலியார்பேட்டை தொகுதிக்குட்பட்ட ஜெயமூர்த்தி ராஜா நகர் விரிவு, வேல்ராம்பட்டு, திருப்பூர் குமரன் நகர், இன்ஜினியர்ஸ் காலனி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நீண்டநாளாக நிலவி வந்த குடிநீர் பற்றாக்குறையை தீர்க்கும் நோக்கில் புதிய ஆழ்துளை கிணறு, குழாய் மின்னிறைப்பி மோட்டார் பம்ப் செட், மின்னாக்கி தொகுப்பு மற்றும் நீர் ஊந்து குழாய் அமைக்கும் பணிகளுக்கு ரூ.35,22,000 மதிப்பில் அரசாணை பெற்று பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
இதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி இன்று எனது தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், தொகுதி நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.