05/01/2024
புதுச்சேரி மாநில கழக அவைத் தலைவர் ஜி. அன்பானந்தம் அவர்கள் தலைமையில் மாநில அம்மா பேரவை செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர், மாநில துணைத்தலைவர் முன்னாள் எம்எல்ஏ ராஜாராமன் ஆகியோர் முன்னிலையில் இன்று ஒதியஞ்சாலை காவல் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தி அதிமுக நிர்வாகிகள் புகார் மனு அளித்தனர். பின்னர் முன்னாள் எம்எல்ஏ பாஸ்கர் மற்றும் நிர்வாகிகள் செய்தியாளர்களிடம் கூறியதாவது :
கடந்த 20ஆம் தேதி உப்பளம் தொகுதி பாதர் சாஹீப் வீதியில் மூடப்படாமல் இருந்த கழிவுநீர் செப்டிக் தொட்டியில் 6- வயது நிரம்பிய சிறுவன் தவறுதலாக விழுந்து விட்டான். அச்சிறுவனை காப்பாற்றி மூடப்படாமல் இருந்த செப்டி தொட்டியை அரசு அதிகாரியை கொண்டு கழக மாநில செயலாளர் அன்பழகன் அவர்கள் மூட செய்தார். அப்போது நடைபெற்ற நிகழ்வில் மாநில கழக செயலாளர் அன்பழகன் அவர்கள் மீது திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டப் பேரவை தலைவர் அவர்களிடமும், ஒதுஞ்சாலை காவல் நிலையத்திலும் பொய் புகார் அளித்தனர்.
திமுக சட்டமன்ற உறுப்பினர்களின் சட்ட விரோத செயல்களை அவ்வப்போது மக்கள் மத்தியில் எடுத்துரைக்கும் எங்கள் மாநில கழக செயலாளர் அன்பழகன் அவர்கள் மீது திட்டமிட்டு பொய் புகார் அளித்துள்ளனர். அவ்வாறு பொய் புகார் அளித்த திரு அனிபால்கென்னடி மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், எங்கள் மாநில கழக செயலாளர் அன்பழகன் அவர்கள் ஒதியஞ்சாலை காவல் நிலையத்தில் திரு அன்பால் கென்னடி மிது அளித்துள்ள புகார் மீது காவல் நிலைய ஆய்வாளர் உரிய நடவடிக்கை எடுக்க ஒதியஞ்சாலை காவல் நிலையத்திற்கு சென்று நியாயம் கேட்டோம். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.