Krishna digital studio and gifts

Krishna digital studio and gifts Devathanam is neighborhood village of Rajapalayam.It situated 14 km from rajapalayam.virudhunagar District.626121

18/01/2023

பழநி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் கும்பாபிஷேகத்தில் பங்கு பெறுவதற்கான இணையதள பதிவு தொடங்கியது.

|

https://youtu.be/T9V0PNCase0
16/01/2023

https://youtu.be/T9V0PNCase0

நேதாஜி சுபாஸ் இளைஞர் நற்பணி மன்றம் பொங்கல் விளையாட்டு போட்டிகள்....

இராஜபாளையம் பழைய பேருந்து நிலையம் வருகிற 18.01.23 புதன்கிழமை முதல் இயங்காது....மேம்படுத்தும் திட்டம் முடியும் வரை......
15/01/2023

இராஜபாளையம் பழைய பேருந்து நிலையம் வருகிற 18.01.23 புதன்கிழமை முதல் இயங்காது....மேம்படுத்தும் திட்டம் முடியும் வரை......

31/12/2022
28/12/2022

கணபதி பேருந்து இப்போது உள்ள மக்களுக்கு வெறும் பேருந்தாக மட்டுமே தெரியும்

ஆனால் நம் பெற்றோர் காலத்தில் இந்த பேருந்து மக்களோட வாழ்க்கையோடு ஒன்றினைந்தது

அரசு பேருந்து கூட செல்லாத பல குக்கிராமங்களுக்கும் இந்த பேருந்து சென்று பயணிகளை ஏற்றி வந்தது

அந்த காலத்துல ஒரு ஊர்ல இருந்து மற்றோரு ஊருக்கு ஏதாவது பொருள் அனுப்பனும்னா இந்த பேருந்தில் கொடுத்து விடுறது தான் வழக்கம் (இப்ப கொரியர்ல மிஸ் ஆகுற மாதிரிலாம் ஆகாது எவ்வளவு விலை உயர்ந்த பொருளையும் நம்பி அனுப்புவார்கள்)

இந்த பேருந்து நடத்துனர் மற்றும் ஓட்டுனர்களுக்கு பேருந்தில் பயணிக்கும் அனைவரின் பெயருமே தெரிந்திருக்கும் அந்த அளவுக்கு சொந்த பந்தம் போல பழகிருப்பார்கள்

வயல்ல வேலை செய்றவங்க கரை ஏறனும்னா கடிகாரத்தைலாம் பார்ப்பது இல்ல கணபதி பேருந்து போய் வர நேரத்த வச்சி தான் கரை ஏறுவாங்க அந்த கடிகாரம் கூட நேரம் தவறும் ஆனால் கணபதி பேருந்து சரியாண நேரத்திற்கு வந்து நிற்கும்

இளையரசநேந்தல் பகுதியில் தெருவிற்குள் அதிவேகமாக செல்லும் வாகனங்கள் வேண்டும் வேகத்தடை மற்றும் நடவடிக்கை எடுக்க வேண்டும் Di...
25/12/2022

இளையரசநேந்தல் பகுதியில் தெருவிற்குள் அதிவேகமாக செல்லும் வாகனங்கள் வேண்டும் வேகத்தடை மற்றும் நடவடிக்கை எடுக்க வேண்டும் Digital Kovilpatti

19/12/2022

விருதுநகர் மாவட்ட காவல் துறை இன்றைய 19.12.2022 இரவு ரோந்து பணி விவரம்.

19/12/2022
18/12/2022

Alert! 👍🏻

Address

NORTH DEVATHANAM
Rajapalayam
626121

Alerts

Be the first to know and let us send you an email when Krishna digital studio and gifts posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Krishna digital studio and gifts:

Share

Our Story

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் இருந்து 12 கி.மீ. தொலைவில் உள்ளது தேவ தானம். இங்கே உள்ள பெரிய கோயிலுக்கு, 1,000 ஏக்கர் நிலம் தானம் அளிக்கப்பட்டதால், இந்த ஊர் தேவதானம் என அழைக்கப்பட்டதாகச் சொல்கிறது ஸ்தல வரலாறு! தென் தமிழகத்தின் பஞ்சபூதத் தலங்களில், ஆகாயத் தலமாக திகழ்வது தேவதானம். சங்கரன்கோவில் (நிலம்), தாருகாபுரம் (நீர்), கரிவலம்வந்த நல்லூர் (நெருப்பு), தென்மலை (காற்று). மகா சிவராத்திரி நாளில், ஐந்து கோயில்களுக்கும் சென்று வழிபடுவது சிறப்பு என்று போற்றப்படுகிறது! தேவ தானம் திருத்தலத்தில், சரக்கொன்றை மரத்தடியில், ஈஸ்வரனை தியானித்து தவம் இருந்தாளாம் அம்பிகை. எனவே இந்தத் தலத்தின் அம்பாளுக்கு தவம் பெற்ற நாயகி எனும் திருநாமம் அமைந்ததாகச் சொல்வர்! அம்பிகையின் தவத்தில் மகிழ்ந்து போன ஈசன், திருக்காட்சி தந்தருளினார். எனவே சிவனாருக்கு அம்மையப்பன் எனப் பெயர் அமைந்தது. இன்னொரு திருநாமம் ஸ்ரீநச்சாடை தவிர்த்த லிங்கம்! பாண்டிய தேசத்தின் ஆளுகைக்கு உட்பட்ட மிகச் சிறிய ஊர் சேத்தூர். விக்கிரம சோழன் சேத்தூரின் மீது படையெடுத்தான். சோழப் படை¬ எதிர் கொள்ள முடியாமல் சேத்தூர் படையினர், தப்பி வந்து தேவதானம் பகுதிக்கு வந்தார்கள். அங்கே உள்ள பெரியகோயிலில் பதுங்கிக் கொண்டார்கள்! அன்று இரவு, சேத்தூர் மன்னனின் கனவில் தோன்றிய இறைவன், சோழப் படையை முற்றுகை இடுமாறும், சிவகணங்களுடன் தானும் போரில் கலந்து கொண்டு உங்களுக்கு உதவுவதாகவும் அருளினார். அதன்படி சோழர் படையை வென்றது சேத்தூர் படை!

இதையடுத்து, போரில் வெல்ல முடியாத மன்னனை சூழ்ச்சி யால் ஜெயிக்கத் திட்டமிட்டான் சோழ மன்னன். சேத்தூர் அரசர் தினமும் திருக்குளத்தில் நீராடி, நித்தியகோடி அதாவது தினந்தோறும் புதிய ஆடை அணிந்து சிவனாரை வழிபடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இதை தெரிந்து கொண்ட சோழ மன்னன், நித்திய கோடிக்கு பதிலாக நச்சு (விஷம்) தோய்ந்த ஆடையை அணியச் செய்து, சேத்தூர் மன்னனைக் கொல்லத் திட்டமிட்டான். அதற்கான ஏற்பாடுகளையும் செய்து வைத்திருந்தான்! இந்த நிலையில், அன்றிரவு, ‘நாளை காலை நித்தியகோடி அணியவேண்டாம். அந்த ஆடையை லிங்கத் திருமேனிக்கு அணிவிக்கவும்’ என அசரீரி கேட்டது. சேத்தூர் ராஜா விழித்துக் கொண்டார். அதன்படியே செய்ய., மன்னர் உயிர் பிழைத்தாராம்! நச்சு கலந்த ஆடையை ஈசன் அணிந்ததால், மன்னனை அணியாமல் அருளிச் செய்ததால், சிவப்பரம்பொருளுக்கு நச்சாடை தவிர்த்தார் எனும் பெயர் அமைந்தது! சேத்தூர் மன்னர் உயிர் பிழைத்த அதேநேரம், சோழ மன்னனின் பார்வை பறிபோனது. இதனால் வருந்திய சோழன் இறைவனிடம் வேண்டினான். ‘சேத்தூரில் ஆலயம் அமைத்து வழிபட்டால் ஒரு கண்ணும், தேவதானம் சென்று வழிபட்டால் மற்றொரு கண்ணும் கிடைக்கப் பெறுவாய்!’ என அருளினார் சிவனார்! அதன்படி... சேத்தூரில் திருக்கண்ணீஸ்வரர் ஆலயம் எழுப்பி வழிபட்டான். ஒரு கண்ணில் பார்வை பெற்றான். பிறகு, தேவதானம் வந்து வழிபட்டான். அடுத்த கண்ணிலும் பார்வை அடைந்தான் சோழ மன்னன்! அற்புதமான ஆலயம். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஏராளமான பக்தர்கள், வாழ்வில் ஏதேனும் தடங்கள் என்றால், பயமும் குழப்பமும் பீடித்திருக்கிறது என்றால், தேவதானம் வந்து, சிவனாரை வழிபட்டு வேண்டிச் செல்கின்றனர். சக்தி வாய்ந்த ஆலயம் என்று போற்றுகின்றனர்! இந்தத் தலத்தில் நிகழ்ந்த இன்னோர் அற்புதம். ‘சேத்தூர் தல வரலாறு’ எனும் தனது நூலை பெரியகோயிலில் அரங்கேற்றினார் புலவர் ஒருவர்.. அப்போது, ‘இந்த நூலில் குறை உள்ளது!’ என்று வாதிட்டார் கவிஞர் ஒருவர். ‘’இறைவ னின் அங்கீகாரம் இல்லாமல் நூலை ஏற்க முடியாது!’’ என்றார். அப்போது, தடதடவென பெருமழை பெய்தது. அப்படியொரு மழையை எவருமே எதிர்பார்க்கவில்லை. இதையே இறைவனின் அங்கீகாரமாக, கட்டளையாக ஏற்கலாம் என்று அவையாரும் ஊர்மக்களும் தெரிவித்தனர். ஆனால் அந்தக் கவிஞர் விடாப்பிடியாக இருந்தார். இதில் கலங்கித் தவித்த புலவர், சிவனாரின் சந்நிதிக்குச் சென்று அழுதார். நெஞ்சில் அடித்துக் கொண்டு வேண்டினார். சாஷ்டாங்கமாக நமஸ்கரித்தார். அப்போது, உமையவளின் சந்நிதியில் இருந்து கிளி ஒன்று, அம்பாளின் திருக்கரத்தில் இருந்த பூச்செண்டு மற்றும் அவளின் மோதிரம் ஆகியவற்றை தன் அலகால் கவ்வியபடி பறந்து வந்தது. புலவரிடம் கொடுத்துவிட்டு, ‘அப்படியே ஆகட்டும்’என்றதாம்! இதைக் கண்டு அனைவரும் வியந்தார்கள். சிலிர்த்துப் போன கவிஞர், புலவரது நூலை வாங்கி கண்களில் ஒற்றிக் கொண்டு, மன்னிப்புக் கேட்டார் என்கிறது ஸ்தல வரலாறு! கலைகளில் ஆர்வம் உள்ளவர்கள், மாணவர்கள், இங்கு வந்து அம்பாள் சந்நிதியிலும் சிவனாரின் சந்நிதியிலும் மனமுருகப் பிரார்த்தனை செய்து கொண்டால், நினைத்தபடியே கலைகளில் சிறந்து விளங்குவார்கள். மாணவர்கள், கல்வி கேள்விகளில் சிறந்து விளங்குவார்கள்!