13/10/2019
இந்திய பிரதமர் நரேந்திர மோடி மீது எனக்கு பெரிய அளவு உயர்வான எண்ணமும் இல்லை, அதே சமயம் அவர் மீது குறைவான மதிப்பும் இல்லை.
காங்கிரஸ் தலைமையை விட மோடியின் தலைமை மேலானது என்ற பெருவாரியான கருத்துடன் ஒத்துப்போகின்றவன் நான். இன்றைய சூழ்நிலையில் தி.மு.க.வை விட
அ.தி.மு.க. மேல் என்ற கருத்தைப்போல
தான் இதுவும்.
ஆனால் சீன அதிபரின் தமிழக வருகை என்னைப் போன்றவர்களின் அரசியல் பார்வையை சற்றே மாற்றிவிட்டிருக்கிறது.
மோடி நினைத்திருந்தால் சீன அதிபருடன் நடந்த சந்திப்பை வட மாநிலம் ஒன்றிற்கு திருப்பியிருக்கலாம். அவரது சிந்தனைக்கு தமிழக அரசும், தமிழக
பா.ஜ. கவும் ஈடு கொடுத்திருக்கிறதா என்றால் அது கேள்விக்குறி.
காங்கிரஸ் அரசில் இப்படி ஒரு சந்திப்பு நடந்திருந்தால் தொலைகாட்சி நேரடி ஒளிபரப்பை சன் டிவி மட்டுமே பயன்படுத்தி பல கோடி ரூபாய் வரவை பார்த்திருக்கும். தமிழகம் தப்பித்தது.
பொதிகை டிவியின் மேன்மை இப்போதுதான் நமக்கும் எட்டியிருக்கிறது. பிரதமரின் வழிகாட்டுதலை பொதிகை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
அநேகமாக பொதிகை ஒளிபரப்பை நீண்ட இடைவெளிக்குப்பின் இப்போது தான் பார்த்தது எனக்கு புது அனுபவம்.
மோடி இன்று காலை கடற்கரையில் குப்பைகளை சேகரித்ததை விமர்சனமாக ஏன் பார்க்க வேண்டும் ?
தன்னை விளம்பரம் செய்து கொள்ள அவருக்கு வழிமுறைகளா இல்லை ?
எத்தனை சொன்னாலும் நம்மையும் சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைத்துக்கொள்ள வக்கில்லாத இந்திய ஜென்மங்களல்லவா நாம் !
இன்று காலை ஹெலிகாப்டரில் சென்னை விமான நிலையம் வந்திறங்கிய பிரதமர் தனியாக வருவாரென்று பார்த்தால், அமைச்சர்
டி. ஜெயகுமார் உட்பட பெரும் அதிகாரிகள் பட்டாளமே பிரதமரோடு
சகஜமாக வருகின்றனர்.
சென்னையின் கொளுத்தும் வெயில் விமான ஓடுதளத்தில் எப்படி இருக்கும் என்று யூகித்துக்கொள்ளலாம். அதில் பிரதமர் வாகனம் எதுவும் பயன்படுத்தாமல், குடை பிடித்துக்கொள்ளாமல் நீண்ட தூரம் நடந்து சென்று வழியனுப்பும் நிகழ்ச்சியிலும் பங்கேற்ற பின் தனது விமானத்தில் ஏறி பயணிக்கிறார்.
நரேந்திர மோடி இயல்பாக செயல்படும்
(குறைகள் இருக்கலாம்) ஒரு பிரதமர்.
நடிகர் அல்ல என்பதை உணர்கிறேன்.
Photos from tv.
பிரபல பத்திரிக்கையாளர் இதயக்கனி விஜயனின் பதிவு