04/06/2026
சேலம் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டம் முழுவதும் நடை ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டது
சேலம் மாவட்ட காவல்துறையின் சார்பில் இன்று (04.06.2026) பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்தல், குற்றத் தடுப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தல், சமூக விரோத செயல்களை கண்காணித்தல் மற்றும் காவல்துறை – பொதுமக்கள் இடையேயான நல்லுறவை மேம்படுத்தும் நோக்கில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சிறப்பு கால்நடை ரோந்து (Foot Patrol) பணி மேற்கொள்ளப்பட்டது.
இந்த கால்நடை ரோந்து பணியின் போது காவல்துறையினர் முக்கிய சாலைகள், பேருந்து நிலையங்கள், வணிக வளாகங்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் குற்றச்சம்பவங்கள் ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளில் கண்காணிப்பு மேற்கொண்டனர். மேலும், பொதுமக்களுடன் நேரடியாக கலந்துரையாடி அவர்களின் குறைகள் மற்றும் பாதுகாப்பு தொடர்பான கருத்துக்களை கேட்டறிந்தனர்.
மல்லூர் பகுதியில் நடைபெற்ற கால்நடை ரோந்து பணியில் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. கௌதம் கோயல், இ.கா.ப., அவர்கள் நேரடியாக பங்கேற்று காவல்துறையினருக்கு தேவையான அறிவுரைகள் வழங்கினார்.
கால்நடை ரோந்து மூலம் குற்றச் செயல்களை முன்கூட்டியே தடுத்தல், சந்தேகத்திற்கிடமான நபர்கள் மற்றும் செயல்பாடுகளை கண்காணித்தல், சட்டம்-ஒழுங்கை பராமரித்தல், பெண்கள் மற்றும் முதியோர்களின் பாதுகாப்பை உறுதி செய்தல், சமூக நல்லிணக்கத்தை பேணுதல் மற்றும் பொதுமக்களின் நம்பிக்கையை அதிகரித்தல் ஆகிய நோக்கங்கள் நிறைவேற்றப்படுகின்றன.
சேலம் மாவட்ட காவல்துறை சார்பில் இதுபோன்ற கால்நடை ரோந்து பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு பொதுமக்களின் பாதுகாப்பு மேலும் உறுதி செய்யப்படும்.