SFI Tenkasi

SFI Tenkasi ★𝙄𝙣𝙙𝙚𝙥𝙚𝙣𝙙𝙚𝙣𝙘𝙚
★𝘿𝙚𝙢𝙤𝙘𝙧𝙖𝙘𝙮
★𝙎𝙤𝙘𝙞𝙖𝙡𝙞𝙨𝙖𝙢

தோழர் அருண் Arun Emp  போராட்டத்தின் முஸ்திகள்! ஒன்பதாம் வகுப்பு இந்திய மாணவர் சங்கத்தில் இணைந்து பத்தாம் வகுப்பில் இந்தி...
25/08/2025

தோழர் அருண் Arun Emp போராட்டத்தின் முஸ்திகள்!

ஒன்பதாம் வகுப்பு இந்திய மாணவர் சங்கத்தில் இணைந்து பத்தாம் வகுப்பில் இந்திய மாணவர் சங்கத்தின் பள்ளி மாணவர் மாநில உபக்குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு 11ஆம் வகுப்பில் அவரது தலைமையில் பள்ளிகள் முழுவதும் உள்ள மாணவர்களை கலைத்து 600க்கும் மேற்பட்ட மாணவர்களின் போராட்டங்களில் தலைமை ஏற்று வெற்றி பெற்றது அவரது முதல் போராட்டமாகும்.

அதனைத் தொடர்ந்து பன்னிரண்டாம் வகுப்பில் மாவட்ட செயற்குழுவிற்கு தேர்வு செய்யப்பட்ட கல்லூரியின் முதலாம் ஆண்டில் காலகட்டத்தில் நடைபெற்ற தென்காசி மாவட்ட பேரவையில் மாவட்ட துணைச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டு. பின்பு தென்காசியின் முதல் மாவட்ட செயலாளராக வரலாறு பெற்ற போராட்டங்களை தலைமையற்று நடத்தியவர்...

தென்காசி மாவட்டத்தில் தோழரின் கால்கள் பயணிக்காத கல்வி வளாகங்களை இல்லை, காவல்துறையின் நெருக்கடிகளையும் பொய் வழக்குகளையும் சிறைபிடிப்புகளையும் உடைத்து எறிந்து தனது இளங்கலை பட்டத்தை வெற்றியோடு பெற்று, மாநில செயற்குழு அளவில் தேர்வு செய்யப்பட்டு மாநில அளவிலான நிகழ்ச்சிகளிலும் திறம்பட செயலாற்றி தென்காசி அடுத்த தலைமுறைக்கு வழிகாட்டி, பயணித்தவர் இன்று 27 வது தமிழ் மாநில மாநாட்டில் மாநில செயற்குழுவில் இருந்து விடை பெற்றார்.

தோழரின் புரட்சி பயணம் தொடர்ந்து முன்னேற வாழ்த்துவோம்!
தோழர் செய்த தியாகங்கள் வீண்போகாது!

08/08/2025
*தென்காசி மாவட்டம்* இன்று ( 27.10.2024) இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட பேரவை தென்காசியில் நம்பிகிருஷ்ணன் மஹாலில்  நடைபெ...
27/10/2024

*தென்காசி மாவட்டம்*
இன்று ( 27.10.2024) இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட பேரவை தென்காசியில் நம்பிகிருஷ்ணன் மஹாலில் நடைபெற்றது. 110 மாணவர்கள் மாவட்ட முழுவதும் இருந்து பேரவையில் பங்கேற்றனர். தோழர்.மா.மதன் தலைமை ஏற்க. துவக்கஉரையாக SFI மாநிலத் தலைவர் தோழர். தெள. சம்சீர் அகமது . வாழ்த்தி பேச SFI முன்னாள் மாநில செயலாளர் பி. உச்சிமாகாளி மற்றும் SFI நெல்லை மாவட்ட செயலாளர் தோழர். சைலஸ் அருள்ராஜ் . அறிக்கை முன்மொழிவு மாவட்ட செயலாளர் தோழர் மா.அருண் முன்மொழிந்தார். அதன்பின் குழுவிவாதம் நடைபெற்றது. புதிய மாவட்ட குழு தேர்வு செய்யப்பட்டது. 17 பேர் கொண்ட மாவட்டக் குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. இதில் தேர்ந்தெடுக்கபட்ட இந்திய மாணவர் சங்கத்தின் தென்காசி மாவட்ட தலைவர் தோழர். உச்சிமாகாளி , மாவட்ட செயலாளர் தோழர் மா.மதன் , மாவட்ட துணை தலைவர்கள் தோழர்.நல்லசிவன், சுபாஷ், மாவட்ட இணை செயலாளர்கள் தோழர். ராம், மாதவன் ஆகியோர் மாவட்ட நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதன்பிறகு 11 மாவட்டக் குழு உறுப்பினர்கள் தேர்தெடுக்கபட்டனர். நிறைவுரையாக தோழர். ஜி.கே. மோகன் பேரவை நிறைவு செய்து பேசினார். இறுதியாக தென்காசி மாவட்டத்தின் மாவட்ட செயலாளராக பணிபுரிந்த தோழர். அருண் மாவட்ட குழு பொறுப்பில் இருந்து விடைபெற்றார். தோழருக்கு தென்காசி மாவட்ட குழு சார்பாக நினைவு பரிசு, இந்திய மாணவர் சங்கத்தின் மாநில தலைவர் தோழர்.சம்சீர் அகமது வழங்கினார். இறுதியாக மாவட்ட தலைவர் தோழர். உச்சிமாகாளி நன்றி கூறினார்.

இந்திய மாணவர் சங்கம்
தென்காசி மாவட்ட குழு

அன்புடையீர் வணக்கம்  நமது இந்திய நாடு சுதந்திரம் பெற்று 78 வது சுதந்திர தின விழாவை கொண்டாட இருக்கிறோம் ,நாம் சற்று யோசிக...
23/10/2024

அன்புடையீர் வணக்கம்
நமது இந்திய நாடு சுதந்திரம் பெற்று 78 வது சுதந்திர தின விழாவை கொண்டாட இருக்கிறோம் ,
நாம் சற்று யோசிக்க வேண்டி இருக்கிறது ..!
உண்மையிலேயே நாம் உண்மையான சுதந்திரத்தை பெற்று விட்டோமா.?
எது உண்மையான சுதந்திர இந்தியா
வேலை தேடாத இளைஞன்
கல்விக்கு ஏங்காத மாணவன்
பாலுக்காக அழாத குழந்தை -பகத்சிங் கண்ட சுதந்திர இந்தியா இதுவே


இந்திய நாட்டில் கல்வியில் வணிகமும்,காவியமும் தொடர்ந்து புகுத்தப்படுகிறது ஏழை எளிய மாணவர்களுக்கு கல்வி எதற்கு.?
என்ற சூழலை ஏற்படுத்தி உள்ளது. முன்பு ஜாதியை (CAST) குறிப்பிட்டு கல்வி மறுக்கப்பட்டது, இப்பொழுது பணத்தை (COST) குறிப்பிட்டு கல்வி மறுக்கப்படுகிறது.
மாணவர்களை ஜாதி, மதம் என பிளவு படுத்தி சிந்தனைகளை திசை திருப்பி மாணவன் நலனுக்கு எதிரான சட்டங்களை அமல்படுத்தி மாணவ சமுதாயத்தையே அழித்து வருகிறது,
உதாரணமாக நீட் தேர்வு, கியூட் தேர்வு புதிய கல்வி கொள்கை என பல வகையில் மாணவர்களை வஞ்சிக்கும் அரசாக நடந்து வருகிறது.

அனைவரும் சமம்..! அனைத்து வகையான மாணவர்களுக்கும் கல்வியை இலவசமாக கொண்டு சேர்க்க வேண்டும் என இந்திய மாணவர் சங்கம் சுதந்திர போராட்ட காலகட்டங்களில் இருந்து தொடர்ந்து மாணவர்களை ஜாதி,மதம் என கடந்து ஒன்று திரட்டி அடுத்த தலைமுறைக்கும் போராடி வருகிறது,

கோரிக்கை:
1. அரசு தலைமை மருத்துவக் கல்லூரி அமைத்திடு
2. அரசு சட்டக் கல்லூரி அமைத்திடு
3. மாவட்டத்தின் தலைநகரை (தென்காசி) மையப்படுத்தி அரசு கலை& அறிவியல் கல்லூரி அமைத்திடு
4.தனியார் கல்வி நிலையங்களில் நடைபெறும் கட்டண கொள்ளையை தடுத்து நிறுத்து,
5. புளியங்குடி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியை உடனடியாக சொந்த கட்டிடத்திற்கு மாற்றிடு

என பல கல்வி கோரிக்கைகளை முன்வைத்து
தென்காசி மாவட்ட மாணவர் சங்க மாவட்ட பேரவை நடக்க உள்ளது.

நாள் : 27-10-2024
இடம் : நம்பிகிருஷ்ணன் மஹால் ரயில் நிலையம் அருகில் தென்காசி

இந்திய மாணவர் சங்கத்தின்
தென்காசி மாவட்ட குழு

தமிழ்நாட்டில் மாணவர் பேரவை தேர்தல் நடத்திட - மனு கொடுக்கும் இயக்கம்தமிழ்நாட்டில் ஜனநாயக முறையில் மாணவர் பேரவை தேர்தல் நட...
22/10/2024

தமிழ்நாட்டில் மாணவர் பேரவை தேர்தல் நடத்திட - மனு கொடுக்கும் இயக்கம்

தமிழ்நாட்டில் ஜனநாயக முறையில் மாணவர் பேரவை தேர்தல் நடத்திட வலியுறுத்தி அக்டோபர் 22ம் தேதி அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் அரசு கல்லூரி முதல்வர்களிடம் கோரிக்கை மனு அளித்திட இந்திய மாணவர் சங்கம் தமிழ்நாடு மாநிலக்குழு அறைகூவல் விடுத்ததன் அடிப்படையில் தென்காசி மாவட்டம், ஆணைகுளம் சுரண்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் சங்கரன்கோவில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரிகளில் இந்திய மாணவர் சங்கம் சார்பாக மனு கொடுக்கபட்டது. இதில் மாணவர் சங்கத்தின் மாவட்ட இணை செயலாளர் மா
மதன், மாவட்டக்குழு உறுப்பினர் முத்துக்குமார், சஞ்சய், தனுஷ், சூர்யா ஆகியோர் கலந்து கொண்டனர்.

தென்காசி மாவட்டம்இன்று (20.10.2024) செங்கோட்டையில் இந்திய மாணவர் சங்கத்தின் வட்டார மாநாடு நடைபெற்றது. முதற்கட்டமாக மாநாட...
20/10/2024

தென்காசி மாவட்டம்
இன்று (20.10.2024) செங்கோட்டையில் இந்திய மாணவர் சங்கத்தின் வட்டார மாநாடு நடைபெற்றது. முதற்கட்டமாக மாநாட்டிற்கு SFI யின் ஸ்தாபன கொடியை தோழர். ஆஷிக் அலி ஏற்றி வைத்தார். மாநாட்டிற்கு தோழர். கண்ணன் தலைமை ஏற்றார். துவக்க உரையாக மாணவர் சங்கத்தின் மாவட்ட இணை செயலாளர் தோழர். மா. மதன் பேசினார். எதிர்கால பணிகள் குறித்து தோழர். ராம் பேசினார். வாழ்த்துரை: சுரேஷ்குமார் (நல்லாசிரியர் விருது பெற்றவர்) கொண்ட தோழர்களை வாழ்த்தி பேசினார் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க முன்னாள் மாவட்ட நிர்வாகி பழனி அவர்கள் மாணவர்களை வாழ்த்தி பேசினார்.புதிய வட்டார நிர்வாகிகளை அறிவித்து நிறைவு செய்து மாணவர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் தோழர்.மா. அருண் பேசினார். இறுதியாக மாணவர் சங்கத்தின் செங்கோட்டை வட்டார நிர்வாகி தோழர். முகேஷ் நன்றி சொல்லி மாநாட்டை நிறைவு செய்தார். இதில் புதிய செங்கோட்டை வட்டார தலைவராக தோழர். கண்ணன், வட்டாரச் செயலாளராக தோழர். ராம், துணைத் தலைவராக தோழர்.மோகன், இணை செயலாளராக தோழர். முகேஷ் ஆகியோர் செங்கோட்டையின் புதிய வட்டார நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். மாநாட்டில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்திய மாணவர் சங்கம்
செங்கோட்டை வட்டாரக்குழு.

இந்திய மாணவர் சங்கத்தின் செங்கோட்டை வட்டார மாநாடு 20-10-2024
19/10/2024

இந்திய மாணவர் சங்கத்தின் செங்கோட்டை வட்டார மாநாடு 20-10-2024

செங்கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்கள் போராட்டம் தென்காசி மாவட்டம் செங்கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள...
12/08/2024

செங்கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்கள் போராட்டம்

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 09/08/2024 அன்று பள்ளியில் உள்ள ஆய்வகக்கூடத்தில் ரசாயன பொருள் தவறி விழுந்ததன் அடிப்படையில் 15க்கும் மேற்பட்ட மாணவிகள் மயக்க நிலை அடைந்து தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்,

இந்த சம்பவம் நடைபெற்ற சமயத்தில் ஆசிரியர்களிடமும், தலைமை ஆசிரியரிடமும் தகவல் தெரிவித்த மாணவிகளிடம் அலட்சியமாக நடந்து கொண்டதும்
இதன் தொடர்பாக தலைமை ஆசிரியரிடம் விளக்கம் கேட்டபோது மாணவிகள் போதை பொருட்கள் பயன்படுத்தியதாக தவறான குற்றச்சாட்டு அளித்து மாணவிகளை மன உளைச்சலுக்கு உள்ளாக்கிய தலைமையாசிரியர் பிரேமா அவர்களை விசாரித்து உரிய துறைரீதியான நடவடிக்கை எடுக்கக்கோரியும் ,

எதிர்காலங்களில் இது போன்ற கவனக்குறைவான நிகழ்வுகள் பள்ளியில் நிகழக் கூடாது என்பதனை எச்சரித்தும் ,
மாணவிகளுக்கு போதுமான அடிப்படை வசதிகளை பள்ளி வளாகத்திற்குள் செய்து தரக்கோரியும்

மாணவிகள் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர் ,
பின்பு போராட்டம் நடைபெற்ற இடத்திற்கு வருகைதந்த கோட்டாட்சியர், அவருடன் ஏற்பட்ட பேச்சு வார்த்தையில் தலைமை ஆசிரியர் மீது துறைரீதியான நடவடிக்கை உறுதியாக எடுப்போம் எதிர்காலங்களில் இது போன்ற தவறுதலான கவனக்குறைவான நிகழ்வுகள் நடைபெறாது என உறுதி அளித்த பின் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

இதில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் அகில இந்திய துணைச் செயலாளர் தோழர் பி சுகந்தி மற்றும் மாவட்ட பொறுப்பாளர் ஆயிஷா பேகம்
இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட இணைச் செயலாளர் தோழர் எம் மதன் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்

இந்திய மாணவர் சங்கம்
தென்காசி மாவட்ட குழு

Address

114/3, உதயா காலணி, குத்துக்கல்வலசை, தென்காசி
Tenkasi

Telephone

+998925169344

Website

Alerts

Be the first to know and let us send you an email when SFI Tenkasi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share