08/07/2024
பாஜகவின் தமிழக மாநில தலைவர் அண்ணாமலை அவர்களை ஒரு டெக்னோகிராட் ஆக பயன்படுத்த பாஜக மேலிடம் விரும்பினால் அதை இப்போதே சொல்லிவிடலாம்.
நாமும் எதிர்பார்ப்புகளை குறைத்துகொண்டு நடப்பது எல்லாம் நன்மைக்கே என இருக்கலாம்.
டெக்னோகிராட் என்றால் தொழில்நுட்பம் அல்லது நுண்ணறிவு உடைய நிர்வாகிகள் என பொருள் படும்.
அதாவது நல்ல திறமையான அதே நேரத்திலே நுண்ணறீவும் தொழில்நுட்பமும் ஒருங்கே அமையப்பெற்றவர்களை வைத்து நாட்டையோ ஒரு நிறுவனத்தையோ நிர்வகிப்பார்கள்.
அந்த நிர்வாகி டெக்னோகிராட் என அழைக்கப்படுவார்.
மோடி அமைச்சரவையிலே
நிர்மலா சீதாராமன்
ஜெய்சங்கர்
அஸ்வினி வைஷ்ணவ்
அர்ஜூன் ராம் மேக்வால்
ஹர்தீப் சிங் புரி
என பலர் இப்படியான டெக்னோகிராட் ஆக இருக்கிறார்கள்.
இதிலே சட்ட அமைச்சர் மேக்வால் அவர்களை தவிர எல்லோருமே ராஜ்யசபாவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தான்.
நல்ல திறமைசாலிகள்
அறிவாளிகள்
அதி நுண்ணறிவு கொண்டவர்கள்
ஆனால் பாரதத்தின் கட்சி அரசியலுக்கு சரிவராதவர்கள்.
அப்படீன்னா அண்ணாமலைக்கும் அரசியல் வராது என சொல்கீறேனா? இல்லை.
அண்ணாமலைக்கு ஏன் முழு அதிகாரமும் கொடுக்கப்படவில்லை என கேள்வி கேட்கிறேன்.
இலங்கைக்கு போக அண்ணாமலை வேண்டும்
தொழில்நுட்ப விஷயங்களை பேச செயல்பட அண்ணாமலை வேண்டும்
பரப்புரைக்கு அண்ணாமலை வேண்டும்
ஆனால் மாநில கட்சியின் நிர்வாகத்திலே முழு அதிகாரமும் முழு சுதந்திரமும் கிடையாது என்றால் அது என்ன?
அதற்கு நேராகவே ஆமாம் ஒரு டெக்னோகிராட் ஆகவே மேலிடம் விரும்புகிறது.
அரசியல் அதிகாரம் அஜீஸ்மெண்ட் எல்லாம் வேறு ஒருவர் பார்த்துக்கொள்ளட்டும் என
நேரடியாகவோ
அல்லது
மறைமுகமாகவோ சொல்லிவிடலாமே?
எதற்கு இந்த நாடகம் எல்லாம்?
நேற்றைக்கு
இலங்கைக்கு போய் இலங்கை ஜனாதிபதியுடனும் மற்ற தலைவர்களுடனும் அமர்ந்து பேசிவிட்டு வந்திருக்கிறார்.
இலங்கைவாழ் தமிழர்களிடையே நல்லுறவுக்கு பெரும் முயற்சி எடுத்துவருகிறார்.
மேலிடத்தின் விருப்பத்தின்படியே உத்தரவின் படியே சென்றிருக்கிறார்.
வரவேற்கப்படவேண்டியது
பாராட்டப்படவேண்டியது
ஆனால் இங்கே தமிழகத்திலே கட்சி என்ன நிலையிலே இருக்கீறது?
ஏன் இப்படி
சாண் ஏறினால் முழம் சறுக்குகிறது எனும் நாடகம்?
இன்னும் எவ்வளவு நாளைக்கு?
தலைவராக வந்தவுடனே கூட்டணி வேண்டாம் என சொன்னதை மறுத்து கடைசிவரைக்கும் கூட்டணீ இருக்குமா என பார்த்தார்கள்.
டேபிளுக்கு கீழே பர்பி பொறுக்கின கூருப்பை 2021 தேர்தலிலேயே கழட்டி விட்டிருந்தால் அந்த பர்பி கூருப்புக்கு ஒரு எம் எல் ஏ கூட இருந்திருக்கமாட்டார்கள்.
பாஜக இங்கே வளர்ந்திருக்கும்.
அதைவிடுத்து உழைத்து அந்த ஆட்களுக்கு 60 எம் எல் ஏ இடங்களை கொடுத்து என்ன பலன்?
எவ்வளவுக்கு நாளைக்குத்தான் இப்படி சவ்வாக இழுத்துக்கொண்டு இருக்கப்போகிறார்கள்?
இங்கே நடக்கும் எந்த ஒரு விஷயத்தையும் அரசியல் செய்வதில்லை
ஆனால்....
சரி நம்முடைய எதிர்பார்ப்புகளை நாம் தான் குறைத்துக்கொள்ளவேண்டும்.
இதுக்கும் ஏதாச்சும் ராசதந்திரம் இருந்தாலும் இருக்கும்
எதுக்கு வம்பு?
படத்திலே நேற்று முன்தினம் இலங்கை தமிழரசு கட்சியின் தலைவரும் இலங்கை தேசிய தமிழ் கூட்டணியின் தலைவரும் இலங்கை நாடாளுமன்ற உறூப்பினருமான ரா சம்பந்தன் அவர்களின் மறைவுக்கு அஞ்சலி செலுத்திய போது
இலங்கை அதிபர் மற்றும் இலங்கையின் தேசிய மாநில தலைவர்களுடன்
அண்ணாமலை அவர்கள்.
Copy past...